பக்கங்கள்

சனி 04 2015

நாடாண்ட முதல் பிரதமரின் முதல் நம்பிக்கை துரோகம்...!!!


Bundesarchiv Bild 183-61849-0001, Indien, Otto Grotewohl bei Ministerpräsident Nehru cropped.jpg
நாடாண்ட முதல் இந்தியப் பிரதமர்
http://ta.wikipedia.org/s/72


தனது வாழ்நாளில் சோதிடத் சூதுகளையும், மதச் சடங்குகளையும் பழித்துரைத்து வந்தும்  மதச் சார்பற்ற அரசு பற்றி வாய் கிழிய பேசியும் வந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் இந்தியக் குழந்தைகளின் மாமாவாகவும் அழைக்கப்பட்டு வந்தவர் பண்டித  ஜவகர்லால் நேரு.

இந்த நேரு மாமா.. அதிகாரத்தை கையில் பெற்றவுடன் செய்த முதல் நம்பிக்கை துரோகம்தான் நேரு மாமாவின் பிரதமர் பதவி ஏற்பு விழா...

பார்ப்பன சோதிடர்கள் நல்ல நேரம் என்று குறித்து கொடுத்த காரணத்தால்தான். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 தேதியில் நட்ட நடு நிசியில் இந்து மத சடங்கு முறைப்படி, வேத மந்திரங்கள் ஓலமிட, பண்டித ஜவகர்லால் நேரு. இந்திய நாட்டின் முதல் பிரதமராக, நாடாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அன்று தொடங்கிய , நாடாளும் பிரதமர்களின் நம்பிக்கை துரோகம், வாழையடி வாழையாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

வியாழன் 02 2015

ஜனநாயக நாட்டில் குடி மக்களுக்கு என்ன உரிமை..???

படம்-www.luckylookonline.com

தமிழ்நாட்டை ஆண்ட
முன்னால் முதல்வர்கள்
செய்த  ஆட்சியின்
புண்ணியத்தால் குடி
மகனாக பரிணாமம்
பெற்ற தமிழ்குடி மகனுக்கு
தீராத  சந்தேகம்..............

அந்த தமிழ்குடி மகனின்
சந்தேகத்தை தீர்த்து
வைப்பவர்களுக்கு.
பொன்னும் பொருளும்
பரிசாக அளிக்கப்
படுவதற்கு மாறாக

ஒரு புல் பாட்டிலுடன்
சிக்கன் சிஸ்டி பைவ்
இணைத்து கூடவே
பில்டர் வில்ஸ் புகை
பாக்கெட்டும்- வழங்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டது.

 அறிவிப்பை கேட்டவுடன்
குடித்து புரண்டு
கட்டிய வேட்டியை
பறிகொடுத்த ஆனா
ஆணானபட்ட குடி
மகன்கள்கள் வரிசையில்
நின்று என்ன. என்னவோ
சொல்லியும் . தமிழ் குடி
மகனுக்கு போதை மயக்கம்
தெளியாத மாதிரி
சந்தேகம் தீர வில்லை..

வெகுண்டு எழுந்த
தமிழ்நாட்டு குடி மகனோ
கோபத்தில் குடி மக்கள்
நிறைந்த இந்த
நாட்டில் இந்த குடி
மகனின் சந்தேத்தை
தீர்க்க ஒரு நாதியில்லையா?
என்று கொப்பளித்த போது

எல்லோரையும் குடி
மகனாக்கும் வேலையில்
சோம பானத்தை வழங்கி
கல்லா கட்டி கல்லாவில்
அமர்திருந்தவன் சொன்னான்

அய்யா... தமிழ் நாட்டின்
பெருமை பெற்ற குடி
மகனாரே..... தங்கள்
சந்தேகத்தை நான்
தீர்த்து வைக்கிறேன் அய்யா...

ஆனால் ஒரு நிபந்தனை
தாங்கள் பரிசாக
அளிப்பதை எனக்கு
முன்கூட்டியே பணமாக
அளிக்க  வேண்டும்
சம்மதம் என்றால்
போட்டியில் கலந்து
கொள்கிறேன் என்றான்


தோ....தோ.....தோடரும்.......

புதன் 01 2015

அவர்கள் சொன்ன..பத்து பயன்கள்...........!!!!!!.

படம்-www.thamizhil.com

தமிழ் நியூஸ்.தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வெந்நீரில் உள்ள பயன்கனை அறிந்திருக்கின்றோமா?

1. அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் உணவுகள் மற்றும் இனிப்புப்பண்டங்கள் உண்ட பின் சிலருக்கு ஒருவாறு நெஞ்சு எரிச்சல் இருந்தக்கொண்டிருக்கும் அச்சமயத்தில் வெந்நீரை பருகினால் நெஞ்சு எரிச்சல் போய்விடுவதோடு மற்றும் உணவும் செரித்துவிடும்.

2. காலையிலேயே வெந்நீர் அருந்தினால் மலப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.

3. வெந்நீர் குடித்தால் உடலில் போடும் அதிகப்படி சதை குறைக்கலாம்.

4.உணவு உண்ட பின்பு வெந்நீரை பருகினால் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல் கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உண்டு.

5. பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள் வாரத்திற்கு ஒரு முறையேனும் தங்களின் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி கைகள் சுத்தமானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

6. உடம்பு அசதியாகவுள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்தால் நன்றாகத் தூக்கம் வருவதோடு வலியும் பறந்துவிடும்

7. வெளியில் சென்று அலைந்துவிட்டு வருபவர்கள் வெந்நீரில் உப்புக்கற்கள் சிறிதளவு இட்டு அதில் சிறிது நேரம் பாதத்தை வைத்து எடுத்தால் கால் வலி குறைவதோடு கால்களில் உள்ள அழுக்கு நீங்கி பாதமும் சுத்தமாகிவிடும்.

8. மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் முகத்தைக் காண்பித்தால் மூக்கடைப்பு குணமாகும்.

9. வெயிலில் அலைந்து விட்டு வருபவர்கள் குளிர்ந்த நீரை குடிப்பதை விட சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது தாகம் தீர்க்கும் நல்ல வழியாகும்.

10. ஆஸ்துமா போன்ற நோய் இருப்போர் தங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடித்து வர வேண்டும் மற்றும் தடிமன், காய்ச்சல் இருப்பவர்கள் வெந்நீர் குடித்து வந்தால் இதமாக இருப்பதோடு விரைவில் குணமாகி விடும்.

செவ்வாய் 31 2015

பசுவதை தடைசட்டம்.: அன்றும்..இன்றும்

படம்-subavee-blog.blogspot.com
ப.ஜ.க. ஆளும் இன்று 
பசுக்களை கொல்வதை தடை செய்ய நாங்கள் உறுதி கொண்டிருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த வகையில் ஏற்கனவே மத்திய பிரதேச மாநில அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளது. மராட்டிய அரசும் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மராட்டிய அரசு பசுவதை தடை சட்டம் இயற்றி அனுப்பி வைத்தபோது, அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு நாங்கள் அனுப்பி வைக்க நேரம் எடுக்கவில்லை.என்று  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
 அசோகர் ஆண்ட அன்று

அசோகர் விலங்குகளை கொல்வதை தடை செய்தார். குறிப்பாக பார்ப்பன விழாக்களில் போது யாகப் பலியாக விலங்குகள் (மாடுகள்) கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என்பதே... அவரது நோக்கமாக அன்று இருந்தது.



திங்கள் 30 2015

பார்ப்பனீய மதமான இந்து மதத்தில் பெண்களுக்கான பத்துக்கட்டளைகள்..!!!

படம்-ilakkiyainfo.com

1. கணவன் வெளியே சென்று வீடு திரும்பியதிலிருந்து உணவருந்தும் வரை      அவனது தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

2. கணவனது நோன்புகளையும் ,கடைபிடிப்புகளையும் மணவியும்         கடைபிடிக்க  வேண்டும்.

3.கணவன் அனுமதித்தால் மட்டுமே ,திருவிழாக்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ, யாகங்களிலோ, மதச் சடங்குகளிலோ கலந்து கொள்ளவேண்டும்.

4. கணவனின் அனுமதியின் பேரில்தான் விளையாட்டுகளில் பங்கெடுக்க வேண்டும்.

5.கணவனது நண்பர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

6. கணவனின் பெற்றோர்களுக்கு பணிவிடை புரிந்து அவர்கள் கட்டளைப்படி நடக்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் பெண்கள் பேசக்கூடாது. அப்படி பேசினாலும் குறைவாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். சத்தமாக சிரிக்கக்கூடாது.

7. கணவன் வெளிநாடு சென்றுவிட்டால் மணைவியானவள், கட்டுப்பாட்டுடன் துறவியைப்போல் வாழ வேண்டும்.குறைந்தளவு அணிகலன்களையே அணிய வேண்டும். நோன்புகளிலும் மதச் சடங்குகளிலும் மனதை செலுத்த வேண்டும்.


8. மூத்தோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்.

9. விழாக்கள்,துயர் (சாவு) நிகழ்ந்தாலன்றி உறவினர் வீடுகளுக்கு செல்லக்கூடாது. அவ்வாறு போக நேர்ந்தால் கணவனது உறவினர் துனையோடு செல்ல வேண்டும்.

10. எதாவது வேலையில்  வெளியே  சென்றால், விரைவில் வீடு திரும்ப வேண்டும்..

ஞாயிறு 29 2015

மறுமை உலகு சிறந்தது என்றால்.......

படம்-tamilnanbargal.com


மறுமை உலகுதான் சிறந்தது என்றால். ஏன்? மதவாதிகள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஒரு மனிதனை உயிரோடு புதைக்கும்போது. அந்த மனிதனுடைய ஆன்மா நிலத்தை பிளந்து கொண்டு ஏன் ? வெளிப்படவில்லை.


மனித உடலிருந்து ஆன்மா பிரிந்து செல்வதை ஒருவர்கூட கண்ணால் காணவில்லையே ஏன்???

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...