அந்தக் கருத்தரங்க கூட்டம் முடிந்ததும்.
அவருடைய சிந்தனையில் இவைதான் நிகழந்தது.
என்ன பயன்? அவற்றால் என்ன பயன்? என்றுதான் அவர்
மனது அசை போட்டது. வீட்டிற்கு சென்றவுடன் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக வாயினால்
சொல்லி பார்த்துக் கொண்டார். மேலும் மறக்காமல் இருப்பதற்க்காக பேப்பரில் எழுதியும்
பார்த்துக் கொண்டார்.
அவர் எழுதிய பேப்பரில் எழுதி .இருந்தது.
1.. மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு
எழுத்தறிவே இல்லாத போது எழுத்துரிமையால் என்ன பயன்?
2. கல்வி அறிவு இருந்தும்
லட்சகணக்கில் பணமின்றி பத்திரிகை நடத்த முடியாதபோது கருத்துரிமையால் என்ன
பயன்??
3. வேலை வாய்ப்பே இல்லாத போது இந்தியாவில்
எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யும் உரிமையால் என்ன பயன்???
4. இருக்கும் தொழிலே நசிந்து கொண்டு
இருக்கும் பொழுது எங்கு வேண்டுமானலும் தொழில் நடத்தும் உரிமையால் என்ன பயன்????
5. பட்டினியால் சுருண்டு கிடப்பவர்க்கு
வாழ்வுரிமையால் என்ன பயன்?????
6. உணவு. தண்ணீர், மின்சாரம், சாலை, கல்வி,
மருத்துவம், வேலை போன்றவற்றில் எதுவுமே வழங்க முடியாத போது வாக்குரிமையால் என்ன
பயன்??????..
நானும் படித்தபோது எனக்கும் அதேதான் எனது
மனதிலும் தோன்றியது.