பக்கங்கள்

வெள்ளி 26 2017

எச்.ஆர் என்ற அந்த நாய்க்கு பேரு..



அன்று தனியாக
தொழில் தொடங்கிய
போது வேலை
கொடுத்தவர்கள் எல்லாம்
வேலையை முடித்து
கொடுத்தபோது பேசின
கூலியை குறைத்து
கொடுத்து என்னை
குமுற வைத்தார்கள்

இன்று எனக்கு
விலைவாசி உயர்வு
பாதித்த போதும்
கூலியை குறைத்து
முன்பணம் போட்டு
வேலையை சீக்கிரமாய்
முடித்து கொடுத்தும்
பல நாட்கள்
கடந்து மாதங்கள்
ஆகியும் கூலியை
சொன்ன தேதியில்
கொடுக்காமல் சவ்வாக
இழுத்து அடித்து
பேரு வாங்குகிற
எச் ஆர் என்ற
அந்த நாய்க்கு
பேரு நிர்வாக
சூரப் புலிகளாம்.
(



புதன் 24 2017

பலருக்கும் சிலருக்கும்...........

பலருக்கு சிலரை
பிடிப்பது இல்லை
சிலருக்கு பலரை
பிடிப்பது இல்லை
பிடிப்பதற்கும் பிடிக்காமல்
போவதற்கும் காரணம்
பல இருந்தாலும்
ஏன்? என்று
கேட்டால் பலருக்கு
காரணம் சொல்லத்
தெரிவதில்லை சிலருக்கு
காரணம் தெரிந்தாலும்
வெளியே சொல்வதில்லை
அது போல்தான்
என் தெருவில்
உள்ள சிலருக்கு
என்னை பிடிப்பது
இல்லை என்னைக்
கண்டவுடன் இரு
கை விரல்களையும்
மடக்கி நெருக்கி
சொடக்கு போடுவார்கள்
அதற்கு அர்த்தம்
நாசமா போக
என்பது.அவர்களுக்கு
என்னை பிடிக்காத
காரணம் எனக்கு
தெரிவது இல்லை
அவர்களுக்கு தெரிந்து
இருந்தாலும் நான்
தெரிந்து கொள்ள
விரும்பியதும் இல்லை

தட்ஸ்  ஆல்...........

செவ்வாய் 23 2017

அதெப்படி..மோடி சொன்னாதான் நம்புவோம்.....

அண்ணே  இன்னிக்கு மழை கி்லை பத்தி ஏதாவது தகவல் இருக்காண்ணே.

ஒனக்குதான்யா  போட்டு இருக்காங்கே...படிக்கிறேன் கேளு......

....................ம்ம்ம் படிங்க.....

வெப்பச் சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி,சூறைக்காற்றுடன் கூ.டிய மழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு... படிச்சத
கேட்டியல... போயி கவனமா  சூதானமா  இருடே......

அதெப்படி ஆய்வு மையம் சொன்னா நம்புவேன்னா.....

அப்ப...யாரு சொன்னா நம்புவேடா.....

மோடி சொன்னாத்தான்  நம்புவோம்......

ஏய்..... அந்தாள இன்னுமாடா  நம்பு றேங்கே....

பின்ன ...சலூன் கட பாண்டி....மோடி ஒவ்வொருத்தரு அக்கவுண்ட்ல... 15 லட்சம் போட்டுருவாங்கன்னு  பிஜேபிடத்த கட்சியில சேர்ந்திருக்காரு.....

அதனால  மோ(ச)டி சொன்னாத்தான் நம்புவாயாக்கும்  ..

ஆமா......

இந்தப் படத்த பாரு...  உன்மோடியண்ணே இளம் வயசுல உடற்பயிற்சி செய்த போது எடுத்த படம்.... இது உன் மோடியண்ணேதான் என்று நம்பினால்  .... சென்னை ஆய்வு மையம் சொன்னத நம்ப வேண்டாம்டா.....

படம்உதவி Villavan Ramadoss


அய்ய்....எங்க மோடி அண்ணனேதான்...தாண்ணே.......

கரெட்றா... நீதாண்டா..மோ(ச)டி பக்தன்.....டேய் அந்த கல்ல எடுங்கடா... டேய்...

திங்கள் 22 2017

அதிகாலை இருமலால் பெற்ற வசவு.............

அதிகாலை நேரம்
இன்னும் சிறிது
நேரத்தில் விடிந்து
விடும் அந்த
சமயத்தில் வந்தது
இருமல் அதை
நிறுத்த குடி
தண்ணீர் குடித்தும்
நிற்கவில்லை தூங்கிக்
கொண்டு இருப்பவர்களின்
நலனை முன்னிட்டு
வெளியே வந்து
சுவரை ஒட்டிய
திண்ணையில் அமர்ந்து
இருமிக் கொண்டு
பார்வையை எதிர்
வீட்டு வாசலின்
உள் வரண்டாவை
பாரத்தபோது ஆறு
பிள்ளை பெற்
பேரன் பேத்தி
கண்ட பாப்பாத்தியும்
அதுவின் நான்காவது
கனவரும் அதிகாலை
குளிரை தவிர்க்க
இருஉ்டல் ஒரு
உடலாக சேர்ந்து
இருப்பதை பார்த்து
மிரண்டு போய்
பார்வையை வேறு
பக்கம் திருப்பி
எழுந்து  செல்ல
முடியாமல் தவித்து
இருந்தபோது வந்த
இருமலை மீறி
நந்தியாய் நான்
வந்ததாய்  நிணைத்து
அவர்களிடம் இருந்து
வந்தது பச்சை
பச்சையான வசவு

ஞாயிறு 21 2017

என்ன தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க.........

அச்சம் என்பது மடமையடா....அஞ்சாமை என்பதுதிராவிடர் உடமையடா.....
ஆறிலும்....சா..........

அலோ...வணக்கம்.... பேசுங்க.......

‘ஹலோ..சார்.....வலிப்போக்கன்  சாருங்களா......?????

ஆமாங்க...வலிப்போக்கன்தான்  பேசுறேன்....  நீங்க.........

சார்...... நல்லா இருக்கீங்களா.......?????

நல்லா இருக்கேன் மேடம்..... நீங்க  யாருன்னு...!!!!!

வலிப்போக்கன் சார்..நீங்க  ஃப்ரியா இருக்கீங்களா...???

இல்லீங்க   மேடம்.......!!!

இல்லியா...!!!! அப்ப செய்து கிட்டு இருக்கீங்க சார்.....????

உங்கிட்ட  பேசிகிட்டு இருக்கேன் மேடம்.....

என்ன சார் நீங்க பழைய ஓல்டு ஜோக்கை  சொல்றீஙக.....!!!!!! புதுசா கைவசம் எதுவும் இல்லீங்களா...???

ஜோக்கு பழசா இருந்தாலும் உண்மையைத்தானே சொல்லனும் மேடம்.   ஆமா...நீங்க....யாருன்னு.........

நல்லா பேசுறீங்க.....சார்.... ஆமாசார்... நீங்க எழுத்தாளரா...???

இல்லீங்க மேடம்......

அப்போ..கவிஞரா  சார்...???

அதுவும் இல்லீங்க மேடம்.......

அப்போ..நீங்க என்னாவா  இருக்கீங்க?????

பிளாக்கர் என்ற வலை தளத்தில் வலிப்போக்கன் என்ற வலைப்பூவில் பதிவிடும் தமிழ் பதிவராக இருக்கேன் மேடம்....

ஓ.......ஓ...... வலிப்போக்கன் என்பதான் உங்க வலைப் பூவா.....???

ஆமங்க...மேடம்...... மேடம்...நீங்க  யா.......

வலிப்போக்கன் சார்...நீங்க எப்படி..இருப்பீங்க.....????

உண்மையைச் சொல்லனும்னா...ஐந்தடிக்கு கொஞ்சம் கூடுதலா உயரத்துல..அண்டங்கருப்பா  இருப்பேன்  மேடம்....

பொய் சொல்லாதீங்க வலிப்போக்கன் சார்.....

இல்ல...மேடம்..சத்தியமான உண்மை மேடம்..உண.மையைத் தவிர வேறு பொய்ல்லை   மேடம்....

.................................................


மேடம்  உங்கள பத்தி ஒன்னுமே.. சொல்லலையே  ...

 என்னப்பத்தி சொன்னா..அதையும் வலைப்பூவில போட்டுருவிங்கல்ல.....

உள்ளதைதானே மேடம்  போடுவேன்...... என்னைய இம்புட்டு கேள்வி கேட்ட நீங்க உங்களபத்தி ஒன்னுமே சொல்ல மாட்டுறீங்களே  மேடம்....

என்னைத் தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க............

................................................

என்ன சார்  பேச்சக் காணோம்.............

அது  வந்து.....ஒன்னும் செய்யப் போறதில்ல மேடம்...யாருன்னு தெரிஞ்சுக்க விறும்பியதால் கேட்டேன். சொல்ல விருப்பம் இல்லையென்றால் சொல்ல வேண்டியதில்லை மேடம்... 

என்ன சார்... என் மேல் கோவம்மா......???

நீங்க யாருன்னே தெரியல....உங்கட்ட எப்படி கோபப்படுறது மேடம்..

........ஓ.அந்த ருட்டுல வர்ரீங்களா.....?


அதெல்லாம்  ஒன்னுமில்ல  மேடம்......இனி எதுவும்.என்னப்பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது இருக்குங்களா..மேடம்................


........................................................


அலோ  மேடம்...... அலோ  மேடம்.


ஒயிங்.......ஒயிங்.......ஒயிங்..............லொடக்..........


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...