பக்கங்கள்

சனி 01 2012

உலகில் அதிகமான பாரத்தை சுமப்பவர்கள்........



அந்தக்காலத்தில் பெண்களில் வயித்துக்குள்ளார இருக்கிற குழந்தை ஆணா? பெண்ணான்னு  விக்கிரமாதித்தனின் மந்திரி பட்டி துல்லியமா சொல்லியிறுவாராம்.அந்த மந்திரி எப்படி துல்லியமா சொல்லியிரப்பாருன்னு ஒரு அய்யாவிடம் கேட்டேன்.

 அவர்-சொன்னார்.

கர்ப்பமா இருக்கிற பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தால் பெண் என்றும்
சிறியதாக இருந்தால் ஆண் என்றும் இதை அடிப்படையாக வைத்து சொல்லியிருப்பார். இந்தக்காலத்து சென்னை  வானிலை ஆய்வு மைய்யம் சொல்ற மாதிரி மாறி விடுகிற வாய்ப்பெல்லாம் அந்தக் காலத்தில் இருந்திருக்காது அதனால் பட்டி சொன்னது துல்லியமாக இருந்திருக்கிறது என்றார்.

மேலும் உலகத்தில் பெண்கள்தான அதிகமான(எல்லா) பாரத்தை சுமப்பவர்கள்

ஆண்கள் பாரத்தை சுமப்பவர்கள்ளில்லை.அவர்கள் பாரத்தை
ஏற்றுபவர்கள்.  விதவிலக்காக ஒருசிலர் வயிற்றில் ஏற்ப்பட்ட பானையை சுமப்பார்கள் அவர்கள் பாரத்தை சுமந்தவர்கள் அல்ல என்றார்.

வியாழன் 29 2012

”ஆமான்னுதான் சொல்லு மாமா”............!!!


(ஒலகத்த சுத்தி பார்க்க புறப்பட்ட காக்கா!!!..)...........
சிங்காரம் என்ற காக்கைக்கு சிங்காரி என்ற காக்கை பொண்டாடியாக இருந்தது. இருந்தாலும் சிங்கார காக்கைக்கு சபல புத்தி அதிகமாக இருந்த்தினால் பிங்காரி என்ற காக்கையை வைப்பாட்டியாக வைத்துக்கொண்டது.

சிங்கார காக்காவுக்கு இருக்கிறத விட்டுட்டு இல்லாத்திலே ஆசை அதிகம். அந்த ஆசையினாலே,சிங்காரி காக்காவை சரிவர கவனிப்பதில்லை. பிங்காரி உடனே அதிக நேரத்தை கழித்தது..

ஒருநாள் பிங்காரி காக்காவுக்கு ஒரு ஆசை ஏற்ப்பட்டது. தன் ஆசையை
சிங்காரகாக்காவிடம்சொல்லியது.“மாமா,மாமா,ஒங்களுடைய ஆசையெல்லாம் நான்  நிறைவேத்துறமாதிரி என் ஆசையை  நீங்க நிறைவேத்தனும் மாமான்னு கொஞ்சி குலாவியது. பிங்காரிமேல் மோகம் தீராத சிங்காரம் அந்த  ஆசை என்னவென்று சொல்லு.அதை உடனே நிறைவேத்துறேன் என்றது.

இந்த ஒலகத்த ஒரு தடவ சுத்தி பார்க்கனும் மாமா, அதுதான் என்
ஆசை மாமான்னு சொல்லுச்சு,...

சிங்காரமும் பிங்காரியும் ஒலகத்த சுத்தி பாக்க போற விசயம் சிங்காரத்தின் பொண்டாட்டி சிங்காரி காக்காவுக்கு தெரிஞ்சது. .உடனே, சிங்காரி, சிங்காரத்திடமும், பிங்காரியிடம்,  என்னையும் சேத்து கூட்டிட்டு போங்க ஒலகத்த சுத்தி பாத்ததிலாவுது நான் கால்த்த ஓட்டிடுறேன் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொண்டது. சிங்காரம் பிங்காரிய பார்க்க, பிங்காரி வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டது.

நல்ல நாளில். சிங்காரம்காக்கா, சிங்காரியை முதுகிலும் பிங்காரியை வாயிலும் கவ்விய படி ஒலகத்த சுத்திப்பாக்க கிளம்பியது. ஒலகத்த சுத்திக் கொண்டு மகாசமுத்திரத்தின் மேல் பறந்து கொண்டு வந்தபொழுது.
சிங்காரி காக்கா, நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன் என்று  முன்பு இருந்ததை சிங்காரத்திடம் சொல்லியது. சிங்காரம் காக்காவோ..  சிங்காரியை வாயில் வைத்திருந்ததால் பதில் எதுவும் சொல்லாமல் வெறுமனமே  ம்ம்ம............... ம்ம்ம்................ ம்ம்ம்.......என்றே சொல்லி வந்தது. 

இதைப் பொறுக்காத பிங்காரி காக்கா“ஆமான்னு தான் சொல்லு மாமா”ன்னு சொல்லியது. பிங்காரியின்னு சொல்லுக்கு மறு பேச்சு சொல்லாத சிங்காரம் காக்கா , வாய தெறந்து “ஆமான்னு சொன்னுதான் தாமதம்... சிங்காரத்தின் வாயிலிருந்து நழுவி மகா சமுத்திரத்தில் விழுந்தது பிங்காரிகாக்கா .. 

வைப்பாட்டிய இழந்த சிங்கார காக்கா சிங்காரியிடமே  மீதி வாழ்நாளை கழித்து வந்தது. 

இந்த கதை பட்சி களுக்கு மட்டுமே உரித்தானது. மனிதர்களுக்கு அல்ல.

நீதி--பட்சி சாதி நீங்க. எங்க பகுத்தறியாவதவர்களை பார்க்காதீங்க........


திங்கள் 26 2012

நிணைவோடு …………………….(சிறுகதை)


 
அவர் அழகானவரும் இல்லை, அழகில்லாதவருமில்லை, அவர்கள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்ததுமே எனக்குள்ஒருபரவசம் அவரை கண் இமைக்காமல் பார்த்தேன். அவர் அரைநூற்றாண்டை கடந்துவிட்டதாக சொன்னார்.ஆனால் பார்ப்பதற்கு முப்பது முப்பத்தைந்து  இளைஞராக தெரிந்தார். என் ஆசைகள் சிறகடித்தது.

பேசிக் கொண்டு இருந்த அவரிடம் அவர் நண்பர் கேட்டார்.

“எப்படிடா, நான் கிழட்டாவா ஆயிட்டேன்,நீ எனக்கு மகன் போல் இருக்கிறாய்

எல்லாம்,“ ரேஷன் அரிசியின் மகிமையிடாஎன்று அவர் சொன்னபோது நண்பர் அதிர் வேட்டு போல சிரித்தார்.நானும் சத்தமில்லாமல் சிரித்தேன்”.

ஒவ்வொரு கேள்விக்கும் சந்தேகத்திற்கும் சிரிக்காமல் பதில் சொன்னார். அவரின் நண்பரோ அதிர் வேட்டுபோட்டு சிரித்தார்.  அந்த அதிர் வேட்டுடன் நானும் மத்தாப்பு வேட்டுடன் சரித்தேன.. சுற்றியிருந்தவர்கள் அதிர்வேட்டு சத்தம்கேட்டு அவரை பார்த்தபோது அவர்களும் கம்பி மத்தாப்பாக சிரித்து வைத்தார்கள்.

அன்று ஏக்கமும் சோகமும் நிராசையுமான என் மனம் உற்சாகத்தால் நிரம்பியது.அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என  என் மனம் பரபரத்தது. துறு துறுத்தது.

“ நான் எப்படி?...... அறிமுகமில்லதா அவருடன் அறிமுகமாவது. என் பென்மை என்னை பின்னுக்கு இழுத்தது. படித்திருந்தாலும்  பெண்களை அடிமைபடுத்தி வைத்திருத்த அடிமை புத்தியும் தயக்கமும் பயமும்  என்னுள்ளும் மேலோங்கி நின்றது.

அவர் தனியாக இருந்தால் தைரியமாக அவரிடம் அறிமுகமாகி விடுவேன்.

நான் வந்த வேலை முடிந்தும் அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையினால் காத்து இருந்தேன். சிறு துப்பு கிடைத்தால் போதும் மனம் நிம்மதி அடைந்துவிடும் பிறகு  எல்லாம் நிதானமாக........................

அவரை, அவருடைய வழுக்கை தலை நண்பர் விட்டபாடில்லை,
அவர் எப்படி விடுவார். பால்ய நண்பர், அதுவும் தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளி வரை ஒன்றாக படித்தவர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள்..

எனக்கே இப்படியென்றால்......................அவர்களுக்கு.....................

என்னை அறியாமல் வழக்கை தலை மீது கோபம் வந்தது.

“அதற்கு இப்படியா?.............. இவ்வளவு நேரமா?.................

பெண் என்பவள் பொறுமைக்காரி என்று என்னைப் பார்த்துதான் சொல்லியிருப்பார்கள்..... பொறுமையாக  அவரின் திரு உருவத்தை
படம் பிடித்து மனதிற் பதிவேற்றிக்கொண்டேன.

பேசிய களைப்புகள் தீர இருவரும் தேநீர் கடைக்கு சென்றார்கள். நானும் அவர்களை பின் தொடர்ந்து தேநீர் கடைக்கு சென்றேன். கடையில் அவர் என்னை பார்க்கும்படியாக நின்றேன். ஒரு கனம் அவர் என்னைப்பார்த்தார்.
மறுகனம் என் கண்கள் அவரின் கண்களுக்குள் ஊடுருவிச் சென்றது. மெய் மறந்து போனேன்.

சில  விநாடிகளா?......நிமிடங்களா? தெரியவில்லை. நிதானித்தபோது அவரும் இல்லை. பேசிப்பேசயே வறுத்தேடுதத வழுக்கை தலை ந்ந்தியையும் காணவில்லை.

அய்யோ!!!........ஒரே பரிதவிப்பு........தவறவிட்ட படபடப்பு.... ஏக்கமும் கவலையும் துக்கமும் மீண்டும் என்னை பற்றிக் கொண்டது.  சுற்றிலும் தேடினேன். தேநீர் கடைக்காரரிடம் விசாரித்தேன்.  அவரைப்பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. சோர்ந்து போன மனதுடன்......................

அடிக்கடி தினமும் அந்த இடத்திற்கும் தேநீர் கடைக்கும்  வந்து சில நேரங்கள் காத்துக் கிடப்பேன் அவரை பார்த்து விடமுடியாத  ........என்ற நம்பிக்கையுடன்.

 நாட்கள்  மாதங்களாக வருடங்களாக கடந்து விட்டன. அவரை பற்றி ...
எந்த தகவலுமின்றி  தனி மரமாக காலத்தை கடத்துகிறேன். பகலில் விட்டுவைத்திருக்கும் அவர்............... இரவில் என் நிணைவோடு இருக்கிறார்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...