பக்கங்கள்

புதன் 12 2018

நினைவலைகள்-37.

காலம் கடந்த மன்னிப்பு...

தொடர்புடைய படம்


அவருடன் எட்டாம் வகுப்பு வரை படித்த ரவி என்பவர் தன் ஒரே மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து கண்டிப்பாக தனது  மகள் திருமணத்திற்கு    வர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அன்று கண்டிப்பாக  வருகிறேன் என்றவர்.  மறந்தே போய்விட்டார்.. திடிரென்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் புது உடை உடுத்தி அலங்காரம் செய்து கூட்டமாக சலசலவென்று பேசிக் கொண்டு அவர்களின் உறவுக்கார திருமணத்திற்கு சென்றதைப பார்த்ததும் அவரு,க்கு நண்பரின் மகள் திருமணம் நிணைவுக்கு வந்தது.

அவசரமாக  திருமண பத்திரிக்கையை தேடி பிடித்து  நேரத்தை பார்த்த போது  முகூர்த்த நேரம்  நெருங்கி கொண்டிருந்தது. செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்தி ஒதுங்க வைத்துவிட்டு..தயராகிக் கொண்டு திருமண மண்டபத்தை  நோக்கி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார் .

அரை மணி நேரத்துக்கு குறைவான பயணத்தில் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட மண்டபத்தை கண்டுபிடித்து வாகனத்தை நிறுத்திவிட்டு, தான் வாங்கி வந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்கு உள்ளே நுழைந்தார்.

 மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு பரிசு பொருள் வழங்கியும் அவர்களுடன் சேர்ந்தும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டு இருந்ததை கண்டார். வரிசை அதிகமாக இருப்பதால் நண்பரை தேடினார். அவரின் கண்களுக்கு நண்பர் அகப்படவில்லை... நண்பரின் மனைவி தனியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு .அருகில் சென்று வணக்கம் சொல்லிவிட்டு நண்பரை கேட்டார்..

நண்பரின் மனைவி, அவரின் வணக்கத்தை ஏற்று முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு , நண்பர் இருக்கும் பகுதியை கை நீட்டிக் காட்டினார். அந்தத் திசையை  பார்த்ததும் திடுக்கிட்டார். பின்னர் சமாளித்து நண்பரின் மனைவியிடம் விடைபெற்று  பெண்கள் சூழ மையத்தில் அமர்ந்து
சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டும் நண்பர்க்கு இடைஞ்சலாக நண்பர் போய் அருகில் நின்றதும்.  நண்பர் வந்திருந்த நண்பரின் பெயரைச் சொல்லி அழைத்து வரவேற்று... சூழ்ந்து நின்ற பெண்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.


“ ஏய்....சுப்பு...இது யாரு  தெரியுமில.....”

“சுப்பு என்ற பெண் தன் உதட்டை பிதுக்கி தனக்கு தெரியாது என்றார்.

“செம்பு...இவரு யாருன்னு பாரு....?”

”செம்பு என்ற பெண்மணி..“ நம்ம ஏரியாவுல அடிக்கடி பார்த்திருக்கேன் ” என்றார்
“ சுமதி   உனக்குமா தெரியல....”

” சுமதி என்பவர்  சற்று நெளிந்தார்... இப்படி அவரைச் சூழ்ந்திருந்த பெண்களிடம் வந்திருந்தவரை  காட்டி...யாருன்னு வினாவை எழுப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரங்களில் நண்பரின் மனைவி தனியாக அமர்திருந்திருப்பதற்க்கான காரணம் விளங்கிவிட்டது. நண்பர் கட்டையனாகவும் குட்டையாகவும்... இருந்தார்  தேவையில்லாமல் வந்திருந்த நண்பருக்கு நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது என்ற சொல்வடை வந்து போனது..

நண்பரை சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு. இவர்களுடன் பேசிக் கொண்டு இரு... இந்தப் புத்தகத்தை மணமக்களிடம் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மணமக்களிடம் வந்து  குறிப்பாக மணமகளிடம் அவரின் தந்தையின் பள்ளித்தோழன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு நேரம் இருக்கும்போது இந்த  புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள் என்ற அறிவுரையுடன் அன்பளிப்பாக வழங்கினார்.

தங்களைத் தெரியும் சார்,...அப்பாவை காண பல தடவை வீட்டிற்கு வந்ததை நினைவுப்படுத்தினார் மணமகள். மணமகனும் கண்டிப்பா படிக்கிறேன் சார்,    ஒளிப்படம் எடுப்பவரை தேடினார்கள்.  நண்பர் பரவாயில்லை என்று அவர்களை வாழ்த்திவிட்டு நண்பர்க்கு அருகில் வந்தார். இப்போது நண்பர்க்கு அருகில் அவரது மனைவியும் சில உறவுக்கார பெண்கள் மட்டுமே இருந்தனர்.

அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தபோது... நண்பரும் மனைவியும் சாப்பிட்டு வருமாறு வற்புறுத்தினார்  மெதுவாக சாப்பிடுவோம் என்று விட்டு சிறிது நேரம் ஓய்வாக அமர்திருந்தார்..

நண்பர்க்கு அருகில் ஒரு குண்டம்மா வந்தமர்ந்து..  வெற்றிலையை மடித்து வாயில் தள்ளியபடி.....என்ன.........கணேசா...நல்லாயிருக்கியா...?? என்று கேட்டது... தூக்கத்திலிருந்து விழித்தவர் போல... நல்லாயிருக்கேன் என்று பதில் சொல்லிவிட்டு யாரென்று தெரியாமல் நண்பர் ரவியை பார்த்து “ யாரென்று கண்களால் விசாரித்தார். நண்பர்  சொல்ல வாய் திறந்த போது குண்டம்மா ரவியை தடுத்து...நீ ஒன்னும் சொல்லத ரவி அவனா கண்டுபிடிக்கட்டும் என்றார். ரவி சிரித்தபடியே வாயை பொத்திக் கொண்டார்.

தன்னுடன் படித்தவராகத்தான் இருக்கும் இவ்வளவு உரிமையா  ”டா” பேசுவதிலிருந்து தெரிந்து கொண்டார்... யோசிக்கத் தொடங்கினார்...யோசனை வந்தபாடில்லை.... என்ன செய்வது என்று அந்த குண்டம்மாவை பார்த்தபடியே இருந்தார்.     சிறிது அவகாசத்துக்கு பிறகு அந்தக் குண்டம்மா.. ஒருவரை அழைத்து இவன்(ர்) என் வீட்டுக்காரர்  இவனைப் பார்த்தாவது  நான்..இவன் யாரென்று தெரிகிறதா என்று கேட்டார்.. மௌனமாக  தெரியவில்லை என்று தலையை ஆட்டினார்

அந்தக் குண்டம்மாவுக்கு கோபம் பொத்துகிட்டு வந்தது.. “அட..மக்கு கணேசா... இவன் கொடுத்த லவ் லெட்டரை என்னிடம்  கொடுத்து, நான் நீ கொடுத்ததாக நிணைத்து டீச்சரிடம் செமையா அடி வாங்க வைத்ததுகூட மறந்து போச்சாடா என்றபோது.....

சட்ரென்று நினைவுக்கு வந்தது. நண்பர்க்கு     ஆ......ஆ.....நீய்யா.....???.






திங்கள் 10 2018

நினைவலைகள்-36.

படித்தவர்களும்- படிக்காதவர்களும்.....


ஆர்ட் படம் க்கான பட முடிவு

படித்தால் அறிவு வளரும் என்றார்கள்.
அப்படி படித்தவர்களில் பெரும்பாலானவர்கள்
மூடநம்பிக்கைகள் நிறைந்த சுயநலக்காரர்களாகவும்
உலக நிலையை அறியும் சக்தியற்றவர்களாவும்
நாய் நரி, கழுதைகளிலும் கீழனாவர்களாக
நடந்து கொண்டு இருக்கிறார்கள்..............


அன்று படிக்காதவர்களை விட
இன்று படித்தவர்கள் நாயாகவும்
கழுதையாகவும் இல்லாமல் மலம்
தின்னும் பன்றியாகவும் புழுத்த
நாய் மலத்திலும் கேவலமாய்
நடந்து கொண்டு இருக்கிறார்கள்

ஞாயிறு 09 2018

நினைவலைகள்-35.

 திட்டும்  பின்அறிவுரையும்.




யாரைப் பற்றியும் பொருட்படுத்தாமல் அவர். அவனை திட்டிக் கொண்டு இருந்தார். சமாதனம் செய்யப்  போகிற வரையும் திட்டி தீர்ப்பதோடு சில கேள்வியோடு உத்தரவாதம் கேட்ப்பதால்  ..அவர் திட்டும்போது யாரும் ஊடே போவதில்லை.. அவராக பார்த்து எதாவது கேட்டால் என்னவென்று எதுவும் புரியாமல்  அவருக்கு சார்பாக தலையை ஆட்டிவிட்டு ஒதுங்கி கொண்டனர்.

இது வழமையாக நடந்து கொண்டிருக்கும்போல....அன்று நடந்த திட்டில் நான் மாட்டிக் கொண்டேன்..அவர் கேட்ட எல்லாவற்றுக்கும் சளைக்காமல் பதில் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர். அவர் தன் மகனை அன்றிலிருந்து தன் மகனை திட்டுவதையே விட்டு விட்டார்.

என்னைப்பற்றி விசாரித்தவர்...நான் என்னைப் பற்றி உள்ளதை சொன்னதைக் கேட்டு வியப்பால் ஆச்சரியமானார்.. இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தனா...? என்று நம்ப முடியாமல் வியந்தார். என்னைப்பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்தாரோ அல்லது நான் சொல்லியது உண்மைதான் என்று நம்பிக் கொண்டாரா..என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால்  ...திட்டுவதை குறைத்துக் கொண்டு..நிறுத்தியே விட்டார் என்றே எனக்கு தோன்றியது... நான் அந்தப் பக்கம் செல்லும் போது அவரின் குரல் கேட்பேதில்லை என்பதிலிருந்து அறிந்து கொண்டேன். நேரில் பார்க்கும்போது என் நலன் பற்றி விசாரிப்பார். தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை. கடையில் சாப்பிடும் பழக்கம் இல்லையென்று சொல்லி மறுத்துவிடுவதால் அவருக்கு சிறிது வருத்தம்.

அவர். அவர் மகனை திட்டுவிட்டு அறிவுரை சொல்வதை கேட்ட நான்.. அதிலிருந்து நானும் சில வற்றை தெரிந்து கொண்டேன்..

சிக்கனத்திற்கும் கஞ்சனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்றால்

 தேவைகள் அதிகமா இருந்தாலும் சிறிதளவு உண்பது சிக்னம். அதையும் உண்ணாமல் இருப்பது கஞ்சத் தனம் ( கிடைக்காமல் அல்லல்படுவது வேறு)

ஒரு வேலையை முன்னிட்டு செல்லாமல்.. கூடவே  போகிற வழியில் ஆகிற சில வேலையை முன்னிட்டு செல்வது..-- இது மாதிரியாக சில ..

தும்பை விட்டுட்டு வாலை பிடிப்போம் என்ற எண்ணத்தில் வாலையும் பிடிக்க முடியாமல் விட்டகதையாக..எந்த பிடிமானமும் இல்லாமல் இருக்கும்  எனக்கு சற்று  ஆறுதலை தந்தது...

சுற்றி இருப்பவர்களாலும்  உறவுக்காரர்களாலும்  எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும்  பொருள் சேதத்தையும் சற்று குறைக்கும் வழியாக  அவர் அறிவுரை தெரிந்தது.




யாரிடமும் எவரிடமும் யோசனை கேட்பதில்லை...இதுவரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை.  அப்படியே சில நேரங்களில், சில சம்பவங்களில் , மன உளச்சலில் இருக்கும்போது தெரிந்தவரிடமோ. அல்லது வேறு யாரிடமோ, இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டால் “ அடே அப்பா..உனக்கு தெரியாத யோசனையா  ” என்று என்னை திருப்பி கேட்பார்கள்..


உண்மையில் என் வாழ்நாளில் இன்றுவரை எவ்வளோ இம்சைகளையும் துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்தபோதும் நான் இன்று வரையில் அழுதது இல்லை. என் தாய் இறந்தபோதும் சரி என் நண்பர்கள் இறந்த போதும்சரி, போலீஸ்காரன்கள் என்னை சரமரியாக அடித்து வெளுத்த போதும் சரி அழுததில்லை. என் கண்ணில் ஒரு சொட்டு கண்ணிர் வந்ததில்லை.. அதற்கு பதிலாக என்னவோ  இரு சக்கர வாகனத்தில்  மூப்பதை கடந்து நாற்பது வேகத்தில் செல்லும்போது என் கண்களிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. யாருக்கும் பயன்படாமல்.........

உண்மையில் “ எல்லாம் தெரிந்தவனுமில்லை.. எதுவுமே தெரியாவனுமில்லை” என்ற சொல்லாடல்தான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று நிணைக்கிறேன்.   வருடம் அறுபதை நெறுங்கும் என்னை பார்ப்பவர்கள் பொறாமைதான் படுகிறார்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பதாக... தலையும் மீசையும் தாடி முடியெல்லாம் நரைத்து இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்களோ அல்லது அவர்களின் கண்களுக்கு தெரியவதில்லையோ..? தற்போது   விபத்தொன்றில் நான்  செவிடானாக போனது  உள்பட...

சிலர் வயது ஆக ஆக..எல்லாம் வரும் என்று பய கொள்ள வைக்க முயலுகிறார்கள். நானும் பயந்தவன்தான் ஆனால் சாவதற்கு பயப்படவில்லை.. எப்போதோ தொலைந்திருக்க வேண்டியவன். எப்போதும் தொலையாதிருக்க முடியுமா...??








ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...