![]() |
| படம்- |
அம்மா...
இனி நான் பள்ளிகூடத்துக்கு
போகப்போவதில்லை யம்மா..
பள்ளிக்கூடம போகாததால்
என் மீது கோபம் கொண்டு
என்னை அடிக்காதே யம்மா..
நான் ஏன்? பள்ளிக்கூடம் போக
அடம் பிடிக்கிறேன் என்பதை
நீ முதலில் தெரிந்து கொள் அம்மா...
நான் என்ன சாதியென்று நீ
எனக்கு சொல்லித் தராதபோது
பள்ளிக்கூட ஆசிரியர்கள் நான்
இன்ன சாதியென்று சொல்லி
விட்டார்கள் அம்மா........
இன்ன சாதியினர்தான் பள்ளிக்கூட
கழிவறையை சுத்த்ம் செய்ய வேண்டும்
என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
உத்தரவிட்டார்கள் அம்மா..........
அந்தப் பள்ளிக் கூடத்தில் படிக்கும்
குடியானவர் வீட்டுப் பிள்ளைகள்
தவிர நம் தெருவிலுள்ள பிள்ளைகள்
அனைவரும் சேர்ந்து பள்ளிக்கூட
கழிவறையை சுத்தம் செய்தோம் அம்மா...
ஆசிரியர்கள் சொல்படி கழிவறையை
சுத்தம் செய்த பின்பு நாங்கள்
சுத்தமில்லாமால் இருந்ததினால்
பள்ளியில் தனியே உட்கார
வைக்கப்பட்டோம் அம்மா...
குடியானவர்கள் எல்லாம் மேல்
சாதியாம் கிழக்கு தெருவில்
இருப்பவர்கள் எல்லாம் கீழ்
சாதியாம் அ்ம்மா........
படிப்பில் கெட்டிகாரனாக இருந்த
என்னிடம.. கழிவறையை சுத்தம்
செய்த பின் என் நோட்டைக்கூட
ஆசிரியர் தொடுவதில்லை யம்மா...
நான் என்ன சாதியென்று நீ
என்னிடம் சொல்ல மறுத்தாலு ம்
பள்ளிக்கூடத்தில் நான் இன்ன
சாதியென்று பட்டியல் போட்டு
சொன்னார்கள் அம்மா.....
படிக்கச் சென்ற என்னை
பள்ளி கழிவறையை சுத்தம்
செய்யும் வேலையை செய்யச்
சொல்வதால். எனக்கு படிக்க
மனம் வரவில்லை அம்மா..
அதனால்தான் அம்மா...
பள்ளிக்கூடத்துக்கு போகாமல்
உன்னுடன் வேலைக்கு வந்து
உனக்கு துனையாக வேலை
செய்கிறேன் அம்மா........
ஆகவே அம்மா..
பள்ளிகூடத்துக்கு செல் என்று
என்னை அடிக்காதே அம்மா....!!!!
செய்தி:- அன்மையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டியல் இன குழந்தைகளை பள்ளி கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்தனர்...
