பக்கங்கள்

வெள்ளி 25 2017

மயக்கும் தமிழ்........

அன்பே.....பண்பே......
திகட்டும்  தியாகமே...
மயக்கும் தமிழே..........
என்னை பித்தம்
கொள்ள வைக்கும்
தமிழ் அரசியே.........

உன் மீது
மோகம் கொண்டு
உன்னை பின்
தெடர்ந்து வரும்
 என் மீது
கோபம் கொண்டு
உன் பொற்
பாதங்களை தாங்கும்
செருப்பை எடுத்து
எறிந்து விடாதே...........

“என் ஆளோட
செருப்பை காணோம்”
என்று நான்
தேட வேண்டி
வரும் என்
வருங் காலமே...........

----------------------------------------------------------------------------------------------------------------------


டேய் நானும்
அப்பாது  இருந்து
பாத்துகிட்டு இருக்கேன்
என்னத்தடா தேடுற
என்னான்னு சொல்றா
நானும்    தேடுறேன்.........

என்னாது உன்
ஆளோட செருப்ப
காணோமா...சீ
நாயே அந்த
பிஞ்ச  போன
செருப்பாவா தேடுற..

உன்ன அந்த
பிஞ்ச செருப்பால
அடிக்கனும்..டா
அவனவன் கள்ளக்
காதலிக்கு தமிழ்
நாட்டையே தாரை
வார்த்து கொடுத்து
இருக்கான் நீ
என்னடான்டா ஒரு
புது செருப்பு
வாங்கிக் கொடுக்க
வக்கத்து போயிருக்க..........





புதன் 23 2017

மயிர் பிளக்கும் மயிர் வாதம்.......




அன்று அந்த கூட்டத்திலே
பல வாதங்கள் அரங்கேறி
விறு விறுப்பாக நடந்து
கொண்டு இருந்த அந்த
நேரத்தில் முத்தான வாதம்

ஒருவர் கேட்டார் அண்ணே
இரண்டு மயிர்கள் ஒன்று
சேர்ந்தால் குட்டி பிறக்குமில்ல..

ஆமாண்ணே எம் புள்ள
நோட்டு புத்தகத்தில வச்சு
இருக்கிற மயிலு மயிரே
குட்டி போடயிலே இணைந்த
மயிர்கள் குட்டி போடாம
இருக்குமா குட்டி  போடும்ண்ணே....


அப்தூல் கலாம் வாரிசு
ஒருவர் இடை மறித்தார்
என்னய்யா இது மயிறு
ஆராய்ச்சியா இருக்கு மயிலு
மயிறே குட்டி போடாது
இதில இணைந்த மயிறுகள்
எப்படியா குட்டி போடும்

புரட்சி தலைவியின் வாரிசு
ஒருவர் கோபம் கொண்டார்
அறிவில்லா கூட்டம் இல்ல
இது காலஞ் சென்ற
புரட்சி தலைவரின் புரட்சி
தலைவியின் நேரடி வாரிசுகளின்
கூட்டம் இதில் சிந்திக்க
சொல்பவரை  வன்மையாக கண்டிக்கிறேன்

அதை நான் ஆமோதிக்கிறேன்

வாழ்க! அண்ணன் நாமம்!!
வளர்க ! அண்ணியின் புகழ்!!

டேய்..அண்ணி இல்லடா
புரட்சி தலைவி அம்மாடா.....


.....??????......!!!!!!!!!!!!!!!!!!!

திங்கள் 21 2017

கொலை வெறியில் தாலிபான் அரசு.....

ஆட்சிக்கு வந்த
மூன்று வருடங்களில்
சகல துறைகளிலும்
வீழ்ச்சியை சந்தித்துள்ள
மோடியின் இந்து
தாலிபான் அரசு

ஏதாவது சாதனையை
உற்பத்தி செய்து
காட்டியே தீர
வேண்டிய கொலை
வெறியில் உள்ளது

அதற்க்காக தூய்மை
இந்தியா போன்ற
மேக்கப் திட்டங்களில்
இந்து தாலிபான்கள்
ஆளும் மாநிலங்களில்
பாசுக்களை காப்பார்
குழந்தைகளை கொல்வார்
என்ற வெறியுடன்
 மோடியின் இந்து
தாலிபான் அரசு
களமாடி வருகிறது

ஞாயிறு 20 2017

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க......

நாள்தோறும் நீங்கள்
மகிழ்ச்சியாக இருக்க
வேண்டுமா...................???

இதோ மத்திய
பிரதேச பி ஜே பி
அரசின் மகிழ்ச்சி
துறை அமைச்சகம்
வழி காட்டுகிறது.

அதன்படி நீங்கள்
செய்ய வேண்டியது

காலையில் தூங்கி
எழுந்ததும் சிரிக்க
வேண்டும் அன்றே
உங்களைப் போல்
காலையில் எழுந்ததும்
இளிப்பவர்களை தேடிச்
சென்று அவர்களுடன்
ஐக்கியமாக வேண்டும்

இந்த மகிழ்ச்சி
திட்ட  நிரலோடு
மான்ட்சரில் போராடிய
ஆறு விவசாயிகள்
மகிழ்ச்சியோடு போலீசின்
துப்பாக்கி குண்டுக்கு
பலியானதை நிணைவு
கூற வேண்டும்
நண்மை செய்த
அவர்களுக்கு நன்றி
கூற வேண்டும்..



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...