பக்கங்கள்

சனி 02 2017

மோடியின் டிஜிட்டல் இந்தியா.....

அண்ணே...அந்தா....அவரு  மோடியின் டிஜிட்டல் இந்தியான்னா.. என்னான்னு கேட்குறாரு.... எனக்கு சொன்ன மாதிரி அவருக்கு சொல்லுங்கண்ணே....

அத நீங்களே...! சொல்லிட வேண்டியதுதானே.......

நான்..சொன்னா..... என்ன கேனப்பய..ன்னு சொல்லுவாங்கண்ணே.....

அப்போ..நான் சொன்னா...என்ன..கிறுக்கு பயல்ன்னு சொல்ல மாட்டாங்களா???

அண்ணே.. சொல்றவங்க  சொன்னாத்தானே..சில மண்டைகளுக்கு   ஏறும்.... நீங்க பாயிண்ட் பாயிண்டா சொல்லுவிங்க.... நா.... சொன்னா  உனக்கு  என்னடா தெரியும்  ன்னு கொக்கி பொடுவாங்கண்ணே..  ???

யாரு....? சரி வா.....!!!!1

சார்..வணக்கம்..... நீங்கதான்  டிஜிட்டல் இந்தியா..ன்னா என்னான்னு கேட்டீங்களா...??

ஆமா..சார்.....உங்களுக்கு தெரியுமா...??

ஏதோ..எனக்கு தெரிஞ்சத  சொல்றேன்....

சரி.. சொல்லுங்க............

சார்... 
மோடியின் டிஜிட்டல்
இந்தியாவில் விவசாயி
எலிக்கறி தின்றான்

விவசாயம் பொய்த்த
நிலையில் வட்டி
கட்ட முடியாமல்
நெஞ்சு வெடித்து
சாகிறான்  விவசாயி

கந்து வட்டி
கொடுமை தாங்காமல்
குடும்பத்தோடு தீயில்
வேகுறான் தொழிலாளி

குடியிருக்க வீடில்லாமல்
குப்பையில் தள்ளப்பட்ட
மக்களிடம் வந்து
 தூய்மை இந்தியான்னு  
டிஜிட்டல் இந்தியான்னு 
வக்கிரத்தை காட்டுறான்

கருப்பு பணத்தை
ஒழிக்கிறேன் பேர்
வழின்னு ஓட்டு
போட்ட மக்களின்
இறுப்பு பணத்தை
ஒழித்து விட்டு

சிறுதொழில் வணிகத்தை
ரத்த ஞாயிறு
ஆக்க கொண்டு
 வந்ததுதான் ஜிஎஸ்டி
வரி  என்ற
டிஜிட்டல் இந்தியா....


முத்தாய்ப்பாக இதைத்தான் டிஜிட்டல் இந்தியாதுன்னு சொல்வது சார்... இன்னும் ஏகப்பட்டது இருக்கு சார்.... சொல்லவா   சார்.....


போதும் சார்...... போதும் சார்..... நீங்க யாருன்னு புரிஞ்கிட்டேன்..சார்....

என்ன புரிஞ்சு என்ன சார். புறயோசனம்.... மோடியின் டிஜிட்டல் இந்தியாவைல நீங்க புரிஞ்சுகிறனும்.....

நீங்க சொன்னப்பவே..புரிஞ்கிட்டேன் சார்........

எப்படி..சார்.......

செல்லாத நோட்டுகளை  மாத்த நானும் வரிசையில நின்னு நொந்தவன் சார்..

புரிஞ்சிகிட்டா மட்டும் போதாது  சார்......!!!!!!!!!!!!!!!!!!!.

வெள்ளி 01 2017

இயற்கையின் கொல வெறி......????


எடுத்தால் மொட்டை
வைத்தால் தாடி
 என்ற கதையாக

வந்தால் புயலும்
மழையுமாக  கொல
வெறியோடு வரும்

இல்லை என்றால்
வறட்சியும்  பஞ்சமும்
கொளுத்தும்  வெயிலுமாக
கொல வெறியோடு
வேடிக்கை பார்க்கும்

இயற்கையே ரெண்டு
கெட்டான நிலையில்
கொல வெறியில்
தோன்றும் போது
அது படைத்த
மனிதனும் அப்படியே
இல்லாமல் வேறு
எப்படி தோன்றுவான்..

செவ்வாய் 28 2017

செத்த பின்தான் வருவாங்க. வருவாங்க.ண்ணே..!!!


ஜெ சகோதரி சைலஜாவுடன் அம்ருதா


என்ன சார் இது..?

எது சார்...??

இந்த பேப்பரை படிங்க.........

மறைந்த  ஏ1 குற்றவாளியின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டி பெங்களுரைச் சேர்ந்த  பெண் ஒருவர் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


ஏற்கனவே ஒரு பெண் இப்படி தாக்கல் செய்த மனுவை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில்  அம்ருதா என்ற பெண் மனு தாக்கல் செய்துள்ளது
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


ஆகா..... சூப்பரு..........

என்ன சார்.... இது சுத்த மானக்கேடாக அல்லவா..இருக்கு....???

ஏ1 குற்றவாளியின் கட்சிக்காரனே இத மானக்கேடாக நிணைக்காதப்போ... நீங்க ஏன்? சார் இது மானக்கேடுன்னு நிணைக்கிறிங்க.........

இப்படி ஒவ்வொருத்தராவா........... செத்த பின்தான் வருவாங்களோ..??

வந்துட்டு போகட்டும்... இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கனும்முன்னா கறுப்பு அங்கி போட்டு இருக்கிறவுருதான் முடிவு எடுக்கனும்...

..எப்படி முற்றுப்புள்ளி...... வைக்கனும்.........

.... அப்பன் ஆத்தா சொத்துக்கு வாரிசு உரிமை கேட்பது. மாதிரியே...ஏ1ன்னுக்கு நான்தான் வாரிசுன்னு வர்ரவுங்க  வாரிசு  உரிமைப்படி செத்துப்போன   ஏ1  குற்றவாளிக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்தால் போதும் ..ஒரு  எந்த ஒரு பய..பிள்ளைகளும்  இப்படி வராது.!!!


ஆ...ஆமா......சார்......!!!!!!!!!!!!!!

i-am-jayalalitha-daughter-amrutha-bengaluru-with-puthiya-thalaimurai

திங்கள் 27 2017

இயக்கம்..மாறுதல் இரண்டும் ஒன்றா....???

தூங்கிக் கொண்டே படித்ததால் வந்த குழப்பம் என்று  தூக்கம் கலைந்த பின்னர்தான்  எனக்கு தெரிந்தது.

படிக்க வேண்டிய காலத்தில்  காலமும் நேரமும் என்னை படிக்க விடாமல் துரத்தியது .....அப்போது விட்டதை இப்போது படிக்கலாம் என்று புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தால்    விட்ட குறை தொட்ட குறையாக வாசித்த சிறிது நேரத்தில்  கண்கள் சொறுக..தலை கோடாங்கி அடிக்க... தொடங்கிவிடுகிறது..  சே  .. இதென்ன  விடாது துரத்தும் கொடுமை என்று நிணைத்து தூங்கிவிட்டு பிறகு படிக்கலாம் என்று படுத்தால்.... அங்கேயும் கொடுமை துரத்துகிறது... படுத்த சிறிது வினாடிகளில்  பல்வேறு  மன குழப்பத்தால் தூக்கம் வர மறுக்கிறது.. 

சே..... என்ன  கொடுமை இது... இந்தக் கொடுமை எனக்கு மட்டும்தானா என்று நிணைத்து வீட்டை அன்னாந்து பாரத்தால் எந்த ஒரு அசீரிரியும் ஒலிக்க வில்லை...

திரும்ப எழுந்து தூக்க கலக்கத்தில் படித்ததை நிணைத்து பார்த்தேன். அடடே“ ன்னு எனக்குள் ஒரு மகழ்ச்சி...ஆகா படித்தது எல்லாம் நிணைவுக்கு வருகிறதே  என்று.....

மறைந்த..மறைந்திருந்தவை எல்லாம் நிணைவுக்கு வந்தால்........ ரெம்பவும்  நன்றாக இருக்கும் என்று நிணைவு வேறு பக்கம் திரும்பிது... இப்படியே  போய் கொண்டிருந்த நிணைவை திரும்ப இழுத்து பிடித்து படித்ததில் கொண்டு நிறுத்துவதற்கு சற்று கடினமாக இருந்தது.

இயக்கம்..மாறுதல் இரண்டும் ஒன்றா..? இல்லை ஒரே அர்த்தத்தை ஒரே செயலை குறிக்கிறதா? இல்லை  தனித்தனியான சொற்களை குறிக்கிறதா..? என்று சந்தேகம்..


ஊடே....பார்ரா அறவியல பத்தி சிந்திக்கிறாண்டா..?ஃ என்று எனக்கு வந்த கிண்டலுக்கு ..ஏயோவ்  பிளஸ் டூவில  இரண்டாவது குருப்பில இயற்பில் படித்தவன்...அந்த பரிட்சையில்... பாஸ் மார்க்கு 69 மார்க்எடுத்தவன்... கேடு கெட்ட இயற்பியல் வாத்தியான்  செய்முறை பயிற்சியில் ஒரு மார்க் போட்டு இருந்தால் நான் பாஸாகி இருப்பேன்.. அந்த வாத்தியான் ஒரு மார்க்  போடாததற்கு காரணம்.... அண்ணா நகரில் வாத்தியான் கட்டும் வீட்டு வேலைக்கு எல்லா மாணவர்களும் சென்றபோது  அதில் நான் மட்டும் மிஸ்ஸிங்..அந்த கோபத்தில்..மார்க் போடாமல் பழிவாங்கி விட்டான்....பாசாகி இருந்தாலும் மேல கிழிச்சிருப்ப...அன்றைக்கு வழியும் வாய்ப்பும் இருந்திருக்காது...மனசு வேறு வழியில ஓடிப் போயிறுச்சு....

இங்குட்டும் அங்குட்டும் மனசு போய்கிட்டும் வந்துகிட்டும் இருந்துச்சு..மறுபடியும் இழுத்து கொண்டு வந்து  இயக்கம்... மாறுதலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. சந்தேகம் தீர்க்க புத்தகத்தை திறக்கலாமா?? என்று யோசித்த போது.....

“ஆத்தாடி... வேணாம்.....தலை  கோடாங்கி அடித்துவிடும்... எதுக்கு வம்பு... இப்பத்தான் மொத..மொதறைய  படித்தது நிணைவுக்கு வந்திருக்கு ...இதப்போயி கெடுத்துகிட்டு.............அப்பாடி......

இயக்கம் என்ற சொல்லுக்கு அகராதியின் படி பார்த்தால் இடம் மாற்றம் என்று பொருள் வருகிறது....ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு நகர்தல், போவது என்பதை குறிக்கிறது...சரி.........அப்ப....மாறுதல் எதைக் குறிக்கிறது..???

உதாரணத்துக்கு.. ஒரு பஸ். பெரியார் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்கிறது என்பதை எடுத்துக் கொள்வோம்.

..யோவ்...அது இப்ப மாட்டுத்தாவணி இல்ல...எம்ஜியார் நிலையம்
தெரியுமில்ல..... ்இருக்கட்டும் எனக்கு மாட்டுத்தாவணிதான்னுதான் மனசுல வருது...


மாறுதல்......... மாறுதல்........ம்ம்....மாறுதல் என்பதற்கு இப்படி அர்த்தம் கொள்ளலாம்.... ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு மாறிக் கொள்வதை மாறிக் கொள்வதை மாறுதல் என்று  சொல்லலாம்...

ஆகா.......ஆகா....உதாரணத்துக்கு.... நெல் .அரிசியாக மாறுவது.....இதையும் கூட சொல்லிக் கொள்ளலாமா...??? புழுவாக  தோன்றி   டெங்கு கொசுவாக மாறுவதையும்  எடுத்து்கொள்ளலாமே....... ஓ..யெஸ.......

இப்ப நல்லா புரிஞ்சு போச்சு......... என்னது   புரிஞ்சு  போச்சா.....இல்லையில்லை புரிந்து இருக்கிறது.

ஆக....இயக்கம்்  என்பது இடமாற்றத்தை குறிக்கிறது....மாற்றம் என்பது வடிவத்தின் நிலையின் மாற்றத்தை.....குறிக்கிறது... ஆகா..... ஆகா எனக்கு
நன்றாக புரிந்தது......  அன்று முழுவதும் மனது சந்தோசமாக இருந்தது...

படித்தது தொடர்ந்து  நிணைவுக்கு வரவேண்டுமே..என்ற ஏக்கமும் தொடர்ந்து வந்தது....

பெரியார் நிலையம் க்கான பட முடிவு

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...