பக்கங்கள்

புதன் 12 2019

அதிகாலை கனவு-28.

சொர்க்கம் செல்ல ரூபா ரெண்டாயிரம்...






மணி ஒன்னு. அல்லது ஒன்றரை இருக்கும்..மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தைில் இறங்கியதும் ஒன்றிரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள்.. சவாரிக்கு அழைத்தார்கள்....மறுத்துவிட்டு  ஆரப்பாளையத்துக்கு  செல்லும் பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருந்தார். நெடு நேரம் நின்று கொண்டு இருப்பதற்கு பதிலாக பஸ் வருகிற வரைக்கும் எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து...இருக்கலாம் என்ற எண்ணத்தில் வந்து இருக்கையில் அமர்திருந்தார்..

அரை மணிக்கு மேல் இருக்கும்...செக்கச் சிவந்தழகி ஒருவர் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தார்....அந்த அழகியும் அவரைப்போல..சுமை எதுவும் இல்லாமல் வீசுன கையும் காலுமாக இருந்தார்.

இவரைப் பார்ப்பது..பின் ஒரு சுற்று சுற்றி பார்ப்பதுமாய்..இருந்தவர்..அந்த அழகி ரெம்ப நேரமாக உஸ்...உஸ்.உஸ்சுன்னு அழைத்தது இவருக்கு காதில் விழவே இல்லை... வெறுத்துப்போன அந்த அழகி.....யோவ்... உனக்கு காது கேட்காதா என்று கேட்டவுடன் அவருக்கு டக்கென்று காதில் விழுந்தது.

என்ன விசயம் என்றார். இவர்...இரண்டாயிரம் ரூபாய் இருந்தால் சொர்க்கத்துக்கு அழைத்து செல்வேன் என்றார் அவர்.  சுற்றும் பார்த்தவர் சொர்க்கத்துக்கு அழைத்து செல்வதற்கு இரண்டாயிரமா..? ரெம்ப கம்மியா இருக்கு  என்றார்..

ஆமா.. உனக்காக என்றார் அவர்....என்னை முன்னமே தெரியுமா..என்றார் இவர். இந்த மூஞ்சியை பார்த்துதானே வந்து பேசுறேன்.என்றார் அவர்....
சிறிது நேர இடை வெளிக்கு பின்... என்ன ..ஆட்டோவ கூப்பிடட்டுமா..? என்றார் அவர்.... என்னது ஆட்டோவுலயா சொர்க்கத்துக்கு ....இழுத்தார்..

ஆட்டோவுல போயி  ரூம்ல இறங்குவதற்கு.....என்ன கூப்பிடவா...? கொஞ்சம் இருங்க... காசு இருக்கான்னு பாத்துகிறேன்.    சட்டைப்பை..பேண்ட் பையில் கையை விட்டு துழாவினார்.....சில வினாடிகளில்  அய்யோ....என் பர்சக் காணோம் என்று பதற்றமாகவிட்டார்..பின் அந்த அழகியிடம்... அம்மா... தாயி..நான் சொர்க்கத்துக்கே வரல..ரெண்டாயிரத்த எடுத்துகிட்டு மீதிப் பணத்த கொடும்மா என்று கெஞ்ச ஆரம்பித்தார் இவர்.

ஏய் ..... என்னடா விளையாடுறியா...?...ஏ..வேலு.. கார்த்தி..பாண்டி  இங்க வாங்கடா என்று அவரும் உதார்விட்டார்........பிளீஸ்...பிளிஸ்.... நான் பொய் சொல்லல... ஐய்யாயிரம் வைத்திருந்தேன்... மொத்தமாக போச்சு  பஸ்ல போகக்கூட காசுல்ல...நீங்க கூப்பிட்டிங்கள..அவுங்க..வரட்டும்.....என்றவரை..  தலையில் ஒரு கொட்டு கொட்டி போய்யா.... லூசு.......பு.......திட்டி விட்டு  புயலாய் மறைந்துவிட்டார் அவர்.....


கொட்டு வாங்கின தலை வலித்ததால் தலையை தடவியபடியே...ரெண்டாயிரத்தில் சொர்க்கத்துக்கு அழைத்து செல்பவரை தேடு தேடுன்னு தேடுவதற்கு கண்விழித்தார்.... மறுநாள் மெடிக்கல்ஷாப்பில் நின்று கொண்டிருந்த ஒருவர். இந்தக் கதையை மருந்து கடைக்காரரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் ...  அட..நம்.... கனவுல..வந்தவரா..இவரு..என்று  என்று அவரை உர்ர்ரரென்று பார்த்தபோது.... என்ன உர்ர்ன்னு பாக்குறீங்க என்று எ்ன்னிடம் கேட்ட போது  என்னத்த சொல்ல... அப்படிச் சொன்னாலும் நம்பவா போறாங்கே...... 





திங்கள் 10 2019

அதிகாலை கனவு-27.

சத்தியம் தவறாத உத்தமனா/ தியாகியா..???






ஆறாம் வகுப்பில் வயதுக்கு வந்து ஏழாம் வகுப்பில் படிக்கும்போது திருமணம் முடிக்கப்பட்டவர் என்சகோதரி... திருமணம் முடித்த எட்டாவது மாதத்தில் குறை பிரசவத்தால் ஒரு குழந்தை இறந்துவிட... அடுத்த குழந்தை பத்தாவது மாதத்தில் பிறந்து சில நாளில் இறந்துவிட்டது..


பிள்ளை பெறும்  இயந்திரமான என் சகோதரி.  மூன்றாவதாக  ஒரு பெண் குழந்தை நான்காவதாக இரண்டாவது பெண் குழந்தை. ஆண் குழந்தைக்காக ஐந்தாவதாக...ஆண்குழந்தை ஆறாவதாக ஆண் குழந்தை  ஆகா   ஆறு குழந்தைகள் பெற்றெடுத்து இரண்டை பறிகொடுத்து விட்டு இருக்கும் நான்கு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு என் தாயார் மூலமாக என் தலையில் விழுந்தது...எப்படி.. என்றால்.....

கடைசி பிள்ளை பிறந்த சில மாதங்களில். அவர்கள் வளர்க்கும் பசு மாட்டை  கதிர் அறுத்த வயல்களில்   மாட்டின் கயிற்றை பிடித்துக் கொண்டு மேய்ச்சலுக்கு விட்டு நின்று கொண்டிருந்தார் ஒழுங்கா மேய்ந்த அந்த மாடு அடுத்த இடத்தில் மேய்வதற்க்காக கயிற்றை பிடித்துக் கொண்டிருந்த என் சகோதரியை இழுத்துக் கொண்டு ஓடியது... பலமில்லாத என் சகோதரி மாட்டின் கயிற்றை விடாமல் இழுத்து பிடிக்க..பசுமாடும் தன் பலத்தால் இழுக்க..கயிற்றோடு என் சகோதரி கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் நேற்று அறுக்கப்பட்ட கதிர் சுனை என் சகோதரியின் இரு கண்களையும் பதம் பார்த்துவிட்டது.  ஒரு வருடம் இல்லை.இரு வருடம் இல்லை..ஐந்து வருடத்திற்க்கு  அரவிந்த் கண் மருத்துவமனை அரசு மருத்துவமனை என்று அலைந்து பார்வை திரும்ப கொண்டுவர முடிவில்லை
என்னனென்னமோ பெயர் சொன்னார்கள்.....சத்து குறைபாடு என்றார்கள்..

என் தாயாராலும் என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை... கிராமத்தில் இருந்தவர்களை அடிக்கடி போய் பார்த்தும் கடன் பெருகி வருமானம் குறைந்து  அன்றாட தேவைகளைகூட நிறைவேற்ற முடியாமல் தவித்த நிலையில் என் தாயார் தன் மகள் மருமகன் பேரப்பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்துவிட்டார்




  முப்பத்திமூன்றாவது வயதில் சுயமாக தொழில் தொடங்கி முப்பத்தி ஐந்தாவது வயதில் திருமணம் முடிக்க என் உறவுக்காரரும் நண்பர் ஒருவரும் என் தாயாரிடம்  பேசிய போதுதான்.. என் தாயாரின் கருத்தும் முடிவும் தெரிந்தது..நான் திருமணம் செய்து கொண்டால் வரப்போகும் மருமகள் தன் மகளையும் பேரப்பிள்ளைகளையும்  வளர்க்க விடமால் தன் மகனை மாற்றிவிடுவாள்... என்று  பல்வேறு குடும்பங்களில் அன்று நடந்த நடப்பை தெரிந்து கொண்டு  என்னிடம்  தன் நிலை..தன் மகள் நிலை பேரப்பிள்ளைகளின் நிலை எல்லாவற்றையும் தான் வேலை செய்யும் எஜமானிகள் சொல்லிக் கொடுத்தபடி என்னிடம் பேசி..கசிந்துருக வைத்துவிட்டார்...இயல்பாகவே... இரக்க குணமுள்ள நான்.. என் தாயாரின்  அழுகைக்கும் அழுதபடியே பேசிய பேச்சுக்கும் இரக்கத்துக்கு அடிபணிந்து அவர்  கேட்டபடியே சத்தியம் செய்து கொடுத்து.. என் தாயார் இறக்கும்வரை அதாவது இரண்டுவருடத்துக்கு முன்பு வரை கொடுத்த சத்தியத்தை காப்பற்றி வந்தேன்.

தாய் சொல்லை தட்டாத நானும்  என் உடன் பிறப்புக்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை என்பதால்... நானும் அவர்களை வளர்க்க பல உழைப்புகளில் ஈடுபட்டேன். என்னுடன் படித்த ஆசிரியர் நண்பர் பணிபுரியும் பள்ளியில் இரு ஆண்பிள்ளைகளை  சேர்த்து படிக்க வைத்தேன் மூத்த பெண் குழந்தை பள்ளிக்கு செல்ல அடம் பிடித்ததால் ஏழாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டது இரண்டாவது பத்தாவது வரை படித்துவிட்டு மேல் படிக்க விரும்பவில்லை.கடைசியாக இரு மருமகள்களை என் சகோதரி மற்றும் அவரின் கணவரின் விருப்படியும் ..முடிவுப்படியும்அவர்கள் பார்த்த மாப்பிள்ளைகளுக்கே திருமணம் முடித்து வைத்தேன்  . என்தாய் இறந்த ஒரு வருடம் கழித்து மூத்த மருமகனுக்கு  அவன் விருப்பப்படியும் அவன் தந்தை-தாயின் பெருமைப்படியும் அவர்கள் பார்த்த பெண்னை மணமுடித்து வைத்தேன்..அடுத்த மருமகன்.. எதற்கும் பிடி கொடுக்காமல் இருப்பதாலும் நான் சொல்வதற்கு எதற்கும் செவி சாய்க்காமல் இருப்பதாலும்  எனக்கும் கடனும் பெருகிவிட்டதாலும்  இதனால் அவனுக்கு மணமுடிக்கும் நிகழ்ச்சி நிரல் மட்டும் தள்ளிக் கொண்டே போகிறது. அந்தக் கதையை அடுத்து சொல்கிறேன். 

நான் திருமணம் முடிக்காமல் இருக்கும் காரணத்தை சுட்டிக் காட்டியே என் தெருக்காரிகளின்-காரன்களும் இவர்களோடு  என் தந்தை வழி உறவுக்காரர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் . ஆட்பட்டுவருகிறேன்... அது பெரியகதை...

இதோடு என் தெரு.. நாட்டாமையும் தெருக் கோயிலின் பூசாரி மற்றும் அவனின் வைப்பாட்டி. காதலி.சின்னவீடு பெரியவீடு போன்றர்கள் என் இடம் வீட்டை அபகரிக்க தொடுத்த இம்சைகளாலும்.. சுயமாக தொடங்கிய தொழிலால் வருமானத்தை பார்க்க வேண்டிய நிலையில் தவியாய் தவித்து போனதாலும்....திருமணம்..உறவு எதுவும் என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன்....என்று    ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தவற்வையும் நடந்தவற்றையும் நண்பரிடம் சொல்லி முடித்தபோது..
நண்பரின் முகம் சற்று வாடிப் போயிருந்தது...

அமைதியாக இருந்த நண்பர்.... உண்மையிலே   நீ  தியாகிதாண்டா.... அதுல எனக்கு எந்த சந்தேகம்...இல்லை என்று நண்பர் சொன்னபோது...

வேறு ஒரு நண்பர் சொன்னது... என் கனவை கலைத்தது.... எவன்டா சொன்னது உன்னை தியாகியென்று... நீ இஇ.....அவ்வளவு  சத்தியம் தவறாத உத்தமனடா ..
போடா  கேனப்பயலே....கூமுட்ட...கிறுக்கன்டா...

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...