பக்கங்கள்

சனி 16 2011

இவங்கள்ல புத்திசாலி யாருங்க ?


கேள்வி நம்பர்-ஒன்,
கடந்த சட்டமன்றத்தில் தி.மு.க கருனாநிதியை அடிக்க 
பாய்ந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த சேகர்பாபு இப்போது
தி.மு.க வில் இணைந்து. தி.மு.க வேட்பாளராக நின்று
தேர்தல் முடிவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்

கேள்வி நம்பர்-டூ.
கற்பு பற்றி பேசியதால் தமிழ்நாட்டில் துள்ளி குதித்து 
சாமியாட்டம் ஆடிய அய்யா ராமதாஸ்சும் அண்ணன்
திருமாவும். அந்த குஷ்புவையே  தங்களது தேர்தல்
பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

கேள்வி நம்பர்-த்ரீ.
அண்ணியா இருந்து அன்னையான இதயதெய்வம்
அம்மா அவர்கள்  காத்திருந்த புரட்..சீ புயலை 
கழட்டிவிட்டு ,நீதான் ஊத்திக் கொடுத்தாயா?
என்று கேட்ட ,நேற்று வந்த சீமை சாராயகேப்டன்
கருப்புவை சேர்த்து கொண்டார். இவுங்கள்ல புத்திசாலி
யாருன்னு விடை தெரிஞசு  சொல்லாம போனா உங்க
தல வெடிக்காது.விடை தெரிஞ்சு சொன்னிங்கன்னா
இவர்களை பின்பற்றி வரிசையா நிக்கிறவங்களுக்கு 
அடுத்த தேர்தலுக்கு பயன்படுமேன்னுதான்.
சட்டுபுட்டுன்னு அவசரமா சொல்லாம நன்றாக
தேர்தல் ஆனையம்மாதிரி தீவிரமாக கண்கனித்து
சொல்லுங்கா. அவுக தொழில் இரகசியம் என்று
சொல்லாம போயிடாதிங்கோ.  அப்புறம்.....நன்றிங்க!!!!

வியாழன் 14 2011

புருஞ்சா........ புருஞ்சுகோங்கோ.............


அந்தா........இந்தா.........குந்தா.......ன்னு பரபரப்பா இருந்த 
தேர்தலும் கண் இமைக்கும் நேரத்தில வந்துட்டு போயிருச்சு .தேர்தலுக்காக  ஓடி ஆடி உழைத்தவர்களும், சற்றே ரிலாக்ஸ் எடுத்துகொண்டு இருப்பார்கள்.எல்லா கட்சிகாரர்களும் நங்கதான் வருவோம்.நாங்கதான் வருவோம்ன்னு மக்கள் எங்களத் தான் தேர்ந்தெடுத்து இருக்காங்கன்னு பேட்டியில 
சொல் றாங்க  ஆக்கப் பொருத்துவிட்டு ஆறப் பொறுக்க 
முடியாத கதையாக இருக்காங்க.  ஆனா, ஒன்னு 
மட்டும் நிச்சயம்.

     நாயோ,நரியோ, யாணையோ, யார் வென்றாலும், 
காசு வாங்கியோ, காசு வாங்காமலோ, நேர்மையாக ஓட்டு போட்டவங்களுக்கு எந்தவொரு நன்மையோ, சந்தோஷமோ,
பிரதிபலனோ  ஏற்ப்படபோவதில்லை
காசு உள்ளவர்களுக்கே-கல்வி
காசு உள்ளவர்களுக்கே-வேலை
காசு உள்ளவர்களுக்கே-நீதி
காசு உள்ளவர்களுக்கே-அதிகாரம்
காசு உள்ளவர்களுக்கே-மருத்துவம்
காசு உள்ளவர்களுக்கே-வாழ்க்கை
காசு உள்ளவர்களுக்குத்தான் எல்லாமும்
“காசு இல்லாதவன. கடவுளே ஆனர்லும்,கதவை சாத்தடி
கடவுளுக்கே அந்தக்கதியென்றால் ஓட்டு போட்ட 
சாமனிய மக்களுக்கு எந்க்கதியோ?
“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
காசு இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”.
புரிஞ்சா...........புரிஞ்சுகோங்கோ.................
....................................................................
புரியலைன்னா...................................புரியலைன்னா!!!!!!
உலாவியில தேடுஙகோ!





திங்கள் 11 2011

வாக்கு ஆள குடி மக்களே!



டாஸ்மாக் தோன்றா காலத்திலிருந்து குடித்துவரும் மூத்தகுடிமகனின்
தேர்தல்-போதை பிரச்சாரம. வாக்கு ஆள குடீ மக்களே! வணக்கம், என் பெயர் ஆண்டி குடித்தே ஆண்டியானவன் இல்லிஙக. என் அப்பா.ஆத்தா வச்சபேரே....ஆண்டிதாங்ககுடிகாரன் உளருரான்னு நினெக்காதீங்க. என்ன மாதிரி ஆண்டியான குடும்பத்திக்கு வருவாய்தான் பெரும்பிரச்சனை. நான் நேர்மையான குடீ மகனுங்க அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் விலைவாசி ஏறுனா?அவுங்களுக்கு பிரச்சனையில்லங்க,விலைவாசிக்கு தக்கமாதிரி சம்பளமும் கிம்பளமும் ஏறுமுங்க. முன்பெல்லாம் தெரியாம குடிச்சா போலீசுகாரங்க புடுச்சு உள்ளே போடுவாங்க. இப்போ காசுஇல்லாம குடிக்காம போனாலும் ஏன்? குடிக்காம போறேன்னு புடுச்சு உள்ளேபோடுறாங்க. கடைய திறந்து வச்சுபுட்டு குடிகுடிய கெடுக்கும். குடி உடல்நலத்தை கெடுக்கும்முன்னு போர்டு வச்சா போதுமா? குடிக்காமயாரு இருக்கா? உலகத்தலே நம்மதான அதிகமாஇருக்கோம். ஏ....மகன்கூடகுடிக்கிறான்.ஏங்......பொண்டாட்டிகூட மேல்வலிக்குன்னு குடீக்கிறா! குடீக்கிறதுலகூட ஆண்கள்தான் மொஸாரிட்டிமற்ற வருவாயவிட நம்மகுடீக்கிறதலாதான் அரசாங்கமே நடக்குது.
      ஆனா, நம்ம குடீமக்கள, எந்த அரசும்சரி,எந்த கட்சியும்சரி கண்டு
கிறவே மாட்டுறாங்க. கருணாநிதி அய்யா.....நா....ன. எம்புட்டு கொடுத்தேன்
இன்னும் மிக்ஸி, கிரைண்டர் தருவேன்னு சொல்லுறாரு. செல்வி ஜெயா
அம்மையாரும் அய்யாவவிட நெறைய தருவதாக சொல்றாங்க.இடது வலதுசெகப்பு காரங்களும்.குல்லா போட்ட வயசு பையன காட்டி விற்பனைக்குஅல்ல ன்னு சொல்லுறானுங்க.கருப்பு அண்ணனோ பாரின் சரக்கா அடிக்கிறாரு    மத்திய  அமைச்சரு ஒருவரோ. உங்களுக்கு
என்னத்த கொடுக்கல.பிள்ளதான் பொடுக்கல.இனி பிள்ளையும் கொடுக்கிறோம் என்று சொல்லுறாரு. வாக்காள குடீ மக்களே! இவுங்க கொடுக்கிறதெல்லாம்வச்சு குடீக்கமுடியுமா? குடீ மக்களே! சிந்தியுங்கள்.நேர்மையை கடை பிடியுங்கள்.  டாஸ்மாக்கில் ஆப்பு,புல்லுஎல்லாம் விலை எகிறிபோச்சு, கலப்படமும்
போலிசரக்கும்பெருகிபோச்சு.அதனாலநிம்மதியாகுடீமக்களலகுடிக்கமுடியுதா. அதக்கேட்க நாதியில்ல. நம்மல குடிக்க பழக்கிவிட்டுபுட்டு, ஓட்டுக“கு கிடைக்கிற காசையும் தடுத்துபுட்டு   சிந்தித்து, நேர்மையாக ஓட்டு
போடுங்கனு சொன்னா ஓட்டு போட்டுவோம்மா. குடிக்க கஞ்சியில்லை
யினாலும். குடீக்காம நாம இருந்திருக்போமா?  ஆகவே, வாக்கு ஆள பெருங்குடீ மக்களே. நாம ஓசியில சரக்க கேட்கல டர்ஸ்மாக் விலை யை குறைத்து குடீமக்களின் நெஞ்சிலும் வயித்திலும் போதையை ஏத்துற வரைக்கும்.நாம் இந்த போதையில்லா தேர்தலை பாய்காடபன்னுவொம்.
சிந்தித்தால் சிரிப்பு வலும்
மனம் நொந்தால் அழுக வலும்
இது நமக்கு தேவையா?------வணக்கம்

குறிப்பு;   டாஸ்மாக்கின் அருமைபெருமைகளை அறிய
வினவு.வெளியிட்ட.“பனமரத்துல வவ்வாலு, டாஸ்மாக்
இல்லேன்னா திவாலு”-பதிவை மகாஜனங்கள் படித்து
தெரிந்து கொள்லவும்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...