பக்கங்கள்

சனி 01 2014

மௌனமான போராட்டத்தால் தியாகியான அன்னை..............

thinakaran.lk 


















கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்களின் பக்திக்கும் வணக்கத்திற்கும் உரியவராக திகழ்பவர் இயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாள்.

இயேசுவைப்போலவே, இயேசுவின் போராட்டத்தில் பங்கு கொண்டு சக மனிதர்களின் விடுதலைக்காக மௌனமாக போராடினார். இறுதியில் சக மனிதர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தனது உயிருக்கு உயிரான மகனையே தந்து தியாகினார்.  

அப்போதும்------இப்போதும்.

அது அப்போது
             
                              எல்லோரையும் போலவே
                               வாழ ஆசைப்பட்டேன்
                                என்றான்.- அவளை
                                காண்பதற்கு முன்னால்

இது இப்போது

                                எல்லோரும் என்னைப்
                                            போல  வாழ
                                 ஆசைப படக்  கூடாது
                                  என்றான்-----அவளை
                                  காதலித்த  பின்னால்

வெள்ளி 31 2014

இயற்கையின் விதியை மீற வைத்த சமூகம்...............


பள்ளியில் உடன்
படித்த நண்பன்
ஒருவன் கேட்டான்

நீண்ட நாள்
கழித்து சந்தித்த
சந்திப்பின் போது .....

நண்பா..... திருமணம்
முடித்து விட்டாயா?
குழந்தைகள் எத்தனை?
அவர்கள் எல்லோரும்
நலமாக இருக்கிறார்களா?
என்று...............

மனைவி.குழந்தைகள்
எந்த வாய்ப்பும்
இன்று வரை
 கிட்டவில்லை
என்றான் நண்பன்.

கோபம் கொண்டு
நண்பன் சொன்னான்

இயற்கை விதியை
மீறி விட்டாயாடா!!
சமூகம் உன்னை
சின்னா பின்னா
படுத்தி விடும்மடா?


நண்பனுக்கும் நண்பனுக்கும்
தொடர்ந்த வாதங்கள்
முடிவதாய் இல்லை

 முடிவாக ...........
நண்பனின்  மேல்
 வருத்தம் கொண்ட
நண்பனிடம் நண்பன்

இயற்கை விதியை
மீற வைத்ததே
ஏற்றத் தாழ்வாக
நிலவும் சமூகம்தான்
என்றான்.............

வியாழன் 30 2014

வாய்ச் சொல்லில் ஏமாற்றும் வேட்பாளர்கள்..........

இருபத்தியொரு வயதில்
எனக்கு கிடைத்த
உரிமை என்ற
வோட்டை விலைவாசியை
குறைப்பதாக வாக்களித்த
கட்சிக்கு வாக்கு
அளித்தேன்...........

அடுத்த தேர்தல் வரும்
வரை விலை வாசி
குறையவே இல்லை

இருபத்தியாரு வயதில்
எனக்கு  வழங்கிய
உரிமை என்ற
வோட்டை இலஞ்சத்தை
அடியோடு  ஒழிப்பதாக
வாக்களித்த வேட்பாளர்க்கு
என் வாக்கை  போட்டேன்.

அந்த வேட்பாளர்
திரும்பவும் வாக்கு
கேட்டு   வந்த
பின்னும் இலஞ்சம்
ஒழியவே இல்லை.

முப்பத்தியோரு வயதில்
 மீண்டும் கிடைத்த
உரிமையான வோட்டை
 வேலை வாய்ப்பை
பெருக்குவோம் என்று
முழங்கிய தலைவருக்கு
திரும்பவும் என்
வாக்கை பதிந்தேன.

சீக்கிரமாக வந்த
இத்தினியாவது
தேர்தல் முடிந்து
அடுத்தக் கட்சி
நாற்காலி பதவியில்
அமரும்  வரை
 எனக்கு வேலை
கிடைக்கவே இல்லை.

முப்பத்தியாறு வயதில்
தொடர்ந்து கிடைத்த
உரிமையான என்
வோட்டுக்காக........

ஓட்டு வாங்கும் போது
ஓடி வந்து ஏமாத்தி
உத்தமனைப் போல் வாய்ச்
சொல்லில் பறை சாற்றி

சென்றவர்களின் உதிர்ந்த
மயிரைக் கூட   புடுங்க
முடியாது என் ஓட்டால்
என்று  பட்ட அனுபவத்தால்
உணர்ந்து கொண்டேன.

என்க்கு கிடைத்த
வாக்கு  எனும்
உரிமைச் சீட்டால்
பேண்ட குழந்தையின்
மலத்தைக் கூட
அப்புறப்  படுத்த
முடியா யென்பதை
கண்டுணர்ந்தேன்.........

வரும் தேர்தல் என்ன?
எத்தினியாவுது தேர்தல்
என்று பீத்தீனால் என்ன?
என் வாக்குக்கு அதிகாரம்
கிடைக்கும்  வரை..........
.
எவனுக்கும் எவளுக்கும்
அவர்கள் கொள்ளை அடித்து
சுகபோகமாய்  வாழ
 நான் வாக்களிப்பதில்லை
 என்று..முடிவெடுத்தேன்.

நான் வாககு அளிப்பதும்
வாக்கு அளிக்காமல்
இருப்பதும்....... என்து
உரிமை.........



புதன் 29 2014

டாஸ்மாக்கை அடித்து நொறுக்காத மகன்...............


மதுரை மாவட்டம்,திருமங்கலம், முத்து நகரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி வயது 70, இவரது மகன் சரவணன் வயது 34,

பந்தல்போடும் தொழில் செய்து வந்த பந்தல் அமைப்பாளர் சரவணனுக்கு டாஸ்மாக்கின் புன்னியத்தால் குடிபழக்கம் இருந்து வந்துள்ளது.

தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப குடிபழக்கத்தை விட முடியாத சரவணன். தன் தந்தையிடம் 1000 ரூபாய் கேட்டு உள்ளார். தந்தையோ மகனுக்கு ரூபாய் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சரவணன். வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தந்தையை ஒரே போடாக போட்டுவிட்டார்.

இதனால் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
குடிபழக்கத்தால் கொலை செய்துவிட்ட சரவணனோ சிறையில் .

சிறையிலே அடைக்கப்பட்ட சரவணன் டாஸ்மாக்கு  யாரை அடிப்பார்.!! 

குடிக்க காசில்லை என்றால் குடிப்பழக்த்துக்கு ஆளாக்கிய டாஸ்மாக்கை அடித்து நொறுக்காமல்,தந்தையை நொறுக்கிவிட்டார் பந்தல் அமைப்பாளர்.

இதனால் சகல குடிமக்கள் உள்ள வீட்டாள்கள்,. இருக்கும்- கிடைக்கும்
சொற்ப காசு பணத்தை குடிமக்களிடமும் திருடர்களிடமும் இருந்து
பாதுகாக்க, எல்லோருமாக  சேர்ந்து குடுமபத்தையும் ஊரையும்
நாசப்படுத்துவது பத்தாதுன்னு உயிரையும பறிப்பதை தடுக்க
 வேண்டுமென்றால் டாஸ்மாக்கை  ஓட ஓட விரட்டி அடித்து
நையப்புடைத்து நொறுக்குவதைத்  தவிர வேறு வழியில்லை.


செவ்வாய் 28 2014

அந்தக்காலமே மோசமாகத்தான் இருந்துருக்கு.......................

tn.loksatta.org 





அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஓமந்தூரர்க்கு திடிரென நெஞ்சு வலி வந்திருச்சு.........

அன்றைக்கும் சென்னை உள்பட அரசு மருத்துவமனைகளில் சிறந்த நேர்மையான தன்னலமற்ற மருத்துவர்களுக்கு பஞ்சமாகத்தான் இருந்திருக்கு,

 முதல்வருக்கு சிகிச்சை செய்த  சாக்கில்  சிபாரிசுக்கு செல்லும் வழக்கமும் இருந்துள்ளது.

இப்படிபட்ட நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட ஓமந்தூரார்

தனக்கு  சிகிச்சை செய்வதற்கு முன் ஒரு ஒப்பந்தத்தை படித்து பார்த்து  கையெழுத்து செய்த பின்னரே .மருத்துவரை சிகிச்சை செய்ய அனுமதிப்பாராம்.

“ எனக்கு சிகிச்சை அளித்தப்பின், சிகிச்சை அளித்த மருத்துவரின் குடும்பத்தாரோ,அவரின் உறவினர்களோ,யாரேனும் எந்தச் சூழ்நிலையிலும் சிபாரிசுக்கு வரக்கூடாது” என்பதே அந்த ஒப்பந்தம்..

ஆக....அந்தக்காலத்திலே யே  சிபாரிசு,மற்றும்  எல்லாமே இருந்திருக்கு........

அதனால்தான் என்னவோ  ஓமந்தூரர் நிணைவான புதிய சட்டசபையை மருத்துவமனையாக ஆக்கி பலி வாங்கிறார்களோ.......????.......

திங்கள் 27 2014

இவரெல்லாம் பகுத்தறிவு பாசறையில் இருந்தவராம்............!!!

சோழவந்தான் அருகே,காடுபட்டியை சேர்ந்தவர் குணசேகரன் வயது40 .இவர்.செல்லம்பட்டி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர்.

இவர் தனியார் நிதி நிறவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே விவசாயமும் செய்து வந்தார்.

இவர் 50க்கும் மேற்பட்டவர்களிடம் நிதியை பெற்று,தனியார் நிறுவனத்தில் செலுத்தியுள்ளார். செலுத்திய தொகைக்கான பாண்ட் காலம் முடிந்தவுடன் பணத்தை திருப்பி தர நிதி நிறுவணம் மறுத்துள்ளது.

இதனால் பணம் கொடுத்தவர்கள் குணசேகரனைன தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த குணசேகரன்

விட்டுக்கு அருகிலுள்ள தனது தோட்டத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிதி நிறுவனத்தின் மெத்தனப்போக்கால் தற்கொலை செய்து கொள்கிறேன். என்றும்,மனைவி குழந்தைகளை மாமியார் வசம் ஒப்படைத்து விடும்மாறு தெரிவித்துள்ளார்.

சாகும்வரை மூத்திரப்பையுடன்  விடாது,அயராது மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் இருந்தவர்க்கு நீதிமன்றம்,பத்திரிகை,போராட்டம் போன்ற வடிவங்கள் தெரியாமல் தற்கொலைக்கு போனது கொடுமையிலும் கொடுமை.......................

ஞாயிறு 26 2014

கோழைகள் வீரனாவது இப்படித்தான்......


www.sairose.net -







சோவியத் ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த தோழர் மாலடோவ்-வை  சதியால் வீழ்த்தி தலைமை பொருப்புக்கு வந்த குருசேவ் .கட்சி கூட்டம் ஒன்றில்.........

தோழர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சுமத்தி  பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்து குருசேவ்க்கு ஒரு துண்டு காகிதம் கொடுக்கப்பட்டது.

அந்த துண்டு காகிதத்தில் தோழர் ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளை அவர் உயிரோடு இருந்த காலத்தில் “நீங்கள் ஏன் சுட்டிக்காட்டவில்லை” என்று எழுதப்பட்டு இருந்தது.

அதைப் படித்துப் பார்த்த குருசேவ், “இதை எழுதி அனுப்பியவர் யார்? அவர் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார்.

கூட்டத்தில் இருந்தவர்கள் யாருமே கையை உயர்த்தவில்லை, குருசேவ் சிரித்துக் கொண்டே துண்டு காகிதம் எழுதியவர் “ என்னைக் கண்டு பயத்தினால் கையை உயர்த்தவில்லை. அதே பயத்தினால்தான். ஸ்டாலின் உயிரோடு இருந்த காலத்தில் நான், அவர் மேல் குற்றம் சாட்டவில்லை என்றார்.

அடேங்..............கப்பா...................குருச்சேவு.............................



புன்னாக்கு மாடன்..........






ஏ...ஏ... சினிமா
போஸ்டர் தின்னும்
மாடே ஒனக்கு
புன்னாக்கு ஒரு கேடா.........
சினிமா போஸ்டரே
போதும் மாடே

ஹி.. ஹி..  ஹி... ஹி

இளிக்காதே மாடே
ஒனக்கு போட்டியா
புன்னாக்கு மாடன்
அவனுக்கு புன்னாக்கே
போதும் மாடே.......

அவன்தான் உன்னை
மேய்ப்பவன் மாடே

ஹா....ஹா........ஹா.....ஹா

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...