பக்கங்கள்

சனி 30 2021

என்(ன) நிறம்..???






 மனிதரில் எத்தனையோ

நிறங்கள் நான்

என்ன நிறம் 

என்பது இப்போது  

வரைக்கும் தெரியவில்லை............

வெள்ளி 29 2021

மனுவின் வேசி மகனின் சாதி வெறி நோய்..



தீண்டாமை வெறியாட்டம்....

தமிழக அரசே நீட் தேர்விற்காக டாக்டர் அனிதாவுடன்
இணைந்து வழக்குத் தொடர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு
தீண்டாமை அவலம் நடந்தேறியது வெட்கக்கேடானது...

பொங்கள் விழாவிற்காக தன் வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவர்
பாரதிதாசன் தனது தலைமுடியை திருத்துவதற்காக சலூன்
கடைக்கு சென்ற பொழுது அம்பட்டையன்பட்டியைச் சேர்ந்த
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாதி வெறியன் ராமன்
வீம்புக்கு என்றே பேசி ஆணவத் திமிரோடு நடந்த கொண்டது
வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு
படித்து வரும் மாணவர் பாரதிதாசன் படிப்புக்குப்
பாதுகாப்பு அளித்திட வேண்டுகோள் விடுக்கிறோம்..
அறிவுள்ள மாணவர்களாக வளர்ந்து வரும் இவர்களுக்கு
சாதி ஒரு தடுப்புச் சுவராக இருப்பது பெரும் துயரமானது...

அதை தகர்ப்பது தான் கல்வி நிறுவனங்கள்..

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு,
ஏன் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு
முக்கியத்துவம் அளிப்பதில்லை?? மாணவர்களின்
மனநிலையை புரிந்து ஒத்துழைப்பதும்,வளர்த்தெடுப்பதும்
இன்றைய தேவை என்பதை நாம் உணர்வோம்..
காவல்துறை அலட்சியத்தால் குற்றவாளியை
கைது செய்யாமலிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழக அரசு சாதி வெறியனை உடனடியாக
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்..
எதிர்வரும் திங்கட்கிழமை

சென்னை நுங்கம்பக்கம் தேசிய தாழ்த்தப்பட்டோர்
நல ஆணையரிடம் நேரில் சென்று மாணவர்
பாரதிதாசனுக்கு நீதி வழங்கிட
மதுரை மாவட்டம் எஸ்.பியிடம் தொடர்பு
கொண்டு குற்றவாளியை கைது செய்யுங்கள்
என்று அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்,
சட்டரீதியாக வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளோம்.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு துணை நிற்போம்.!!
சாதிய தீண்டாமை எனும் மனநோயை அழித்தொழிப்போம்.!!!


புதன் 27 2021

உலகை ஏமாற்றிய ஜான்சிராணி என்ற லட்சுமிபாய்....

 




வாளேந்தி போர் புரிவதில் பயிற்சி பெற்ற வீரமங்கை -ஜல்காரிபாய். தாழ்த்தப்பட்ட பெண்ணான இவர்.

இரண்டாம் பேஷ்வா பாஜிரா மன்னனின் வாரிசான லட்சுமிபாயின் உண்மையான பெயர் மணிகர்ணிகா தாம்பே -விடம் பணிப்பெண்ணாக  இருந்துள்ளார். லட்சுமிபாயும் ஜல்காரிபாயும் உருவ ஒற்றுமையில் ஒன்று போலவே இருந்ததால். அதைப் பயன்படுத்தி லட்சுமிதேவி தனக்கு பதிலாக கல்காரிபாய்- யை போரிட வைத்து உலகையே ஏமாற்றியுள்ளார். இந்த ஆள்மாறாட்டம்  வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டு உலகின் பார்வைக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.

லட்சுமிபாயை வீரமங்கை ஜான்சிராணியாக திட்டமிட்டே வளர்த்துள்ளனர் பாரப்பனர்கள் என்கிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அவலங்களை “ கேஸ் மேட்டர்” என்ற புத்தக்கத்தை எழுதியுள்ள இளம் எழுத்தாளர் சூரஸ்யெங்டே என்பவர்.

   ஹியூரோஸ் என்ற இரணுவ அதிகாரியின் கட்டளையின் கீழ் நடந்த அந்த யுத்தத்தில் போரிட்டது லட்சுமிபாய் அல்ல. லட்சுமிக்கு சேவை செய்துவந்த ஜல்காரிபாய்தான் என்கிறார் சூரஜ். இது 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மைக்கதை என்கிநார் சூரஜ்.

இதற்கு ஆதாரமாக மோகன்தாஸ்நய்மி ஷராய் என்பவர் எழுதிய “ வீராங்கனை ஜல்காரிபாய் ” என்ற தலைப்பில் 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகத்தை குறிப்பிடுகிறார். சூரஜ்...


 தகவல் :- விடுதலை ஞாயிறு மலர் 24.01 2021

திங்கள் 25 2021

என் தாயின் நினைவு.....

 




நேற்றிரவு என்

தாயாரை சந்தித்தேன்

கடுங்குளிரால் என்

கால்கள் இழுத்துக்

கொண்டபோது......


ஞாயிறு 24 2021

அற்புதம்மாள் என்ற தாயின் வேண்டுதல் நிறைவேறுமா...???

தாய்





விடுதலை ஆவாரா பேரறிவாளன் ?/உருக்கமான பாடல் /7 thamilar  release  songs...




காந்தியை கொன்ற கோட்சே 20 ஆண்டு சிறை பேரறிவாளன் சிறை 30 ஆண்டு இது என்ன நியாயம்? உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...