பக்கங்கள்

சனி 03 2015

நீதிக்கு பாதுகாப்பு!- உத்தரவும் உரிமைப் போரும்!


Prpc Milton Jimraj இன் புகைப்படம்.
தலைப்பைச் சேருங்கள்
                                                    Prpc Milton Jimraj
நீதிக்கு பாதுகாப்பு!- உத்தரவும் உரிமைப் போரும்!
------------------------------------------------------------
”உயர்நீதிமன்றத்தில் இப்போது என்ன நடக்கிறது? வழக்கறிஞர்களின் செயல் இதற்கு முன் இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது. நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். வழக்கறிஞர்களுக்கான உள்ள மூன்று சங்கங்களும் என்ன செய்கின்றன? சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்பவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் தானா?” -இப்படி உயர்நீதிமன்ற நிலவரம் பற்றி கோபத்தோடு வெளிப்படுத்தியவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து. இதை தொடர்ந்து உயர்நீதி மதுரைக் கிளையைச் சேர்ந்த 15 வழக்கறிஞர்களை அகில இந்திய பார் கவுன்சில், வழக்காட தடை விதித்தது. அது போல மதுரை பார் அசோசியேஷனும் வெளியேற உத்தரவிடபட்டது.
ஒரு சின்ன பிளாஷ்பேக்...
சில மாதங்கள் முன் ’கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்’ என உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன். இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் தர்மராஜ், செயலாளர் ஏ.கே. ராமசாமி மீது சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டது. இதற்கிடையே மதுரையில் ஆயிரகணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு நீதித்துறை ஊழல் ஒழிப்பு பேரணி ஒன்றை நடத்தினர். இதில் ஊழல் செய்த நீதிபதிகள் என ஒரு பட்டியலை வெளியிட்டார்கள். செப்-14-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ் சிவஞானம் அமர்வு முன் திரண்ட 11 வழக்கறிஞர்கள் ’தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்’ என பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் இடையிலான விவகாரம் உச்சநீதிமன்றம், சட்டமன்றம் வரை ஒலித்து தணலாக தகிக்க தொடங்கியது.
இந்நிலையில்’நாங்கள் அராஜகம் செய்பவர்களல்ல... மக்களுக்காகவே நிற்பவர்கள்’ என்று கூறும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவன். மேலும் ஒரு உத்தரவு தங்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அதை மீறும் உரிமையும், போராடுகிற உரிமையும் ஜனநாயத்தில் அனைவருக்கும் உண்டு அப்படி கேள்வி எழுப்பிய மதுரை வழக்கறிஞர்கள் மீது கண்டம்ப்ட் ஆஃப் கோர்ட்னு போட்டுருக்காங்க. அதே சிவில் நீதிபதிகள் பணி நியமனம் சம்பந்தமான உத்தரவில் ஊழல், சாதி பாராபட்சம் உண்டு என நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவுக்கு உடனே ஸ்டே கொடுக்கிறது அதே உயர்நீதிமன்றம் ஏனிந்த பாரபட்சம்?
’தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என வழக்கறிஞர்கள் அறவழியில் போராடினர். ஆனால் இதைக் கண்ட தலைமை நீதிபதி, ’நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக காவல்துறையோ வழக்கறிஞர்களைக் கண்டு பயப்படுகிறது. எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) பாதுகாப்பு நீதிமன்றத்திற்கு வேண்டும்’ என்கிறார். பிப் 19, 2009-ல் போலிஸ் மிகப்பெரிய தடியடி தாக்குதலை, வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் நடத்தியது. அதில் நீதிபதிகள் கூட காயமடைந்தனர். அப்போது கூட கேட்காத மத்திய பாதுகாப்பை இப்போது ஏன் கேட்கிறார்கள்.
சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு கேட்பது வழக்கறிஞர்கள் மீது ஒரு பீதியை உருவாக்கும் செயல் ஆக தற்போது சட்டமியற்றுதல், ஆட்சி செய்தல் இரண்டையும் நீதிமன்றம் தானே எடுத்துக் கொண்டால் இரண்டுக்கும் எதிரான ஜனநாயக போராட்டத்தை மக்களின் நீதிமன்ற பிரதிநிதிகளான நாங்கள் முன் எடுத்து செல்வோம்’ என்றார் அழுத்தமாக.
போலிஸ் உதவி கமிஷனர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”வழக்கறிஞர்கள் மது பாட்டிலோடு வருகிறார்கள், பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள், யோகா வகுப்பு நடத்த விடாமல், வழக்கறிஞர் மில்டன், ரஜினி தடுக்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி அதை மேற்கோள் காட்டி சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு தேவை என்கிறார். ஆனால் சட்டமன்றத்தில் பேசிய ஜெ. 5.8.2015ல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இறுதி ஆணையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். அந்த உத்தரவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட வில்லை’ என கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம்.
”கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை இப்படி சிலவற்றில் நீதிபதிகள் மீது புகார்கள் எழுந்து, அது தலைமை நீதிபதிக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு தீர்வுமில்லை, ஜக்கி வாசுதேவ் மீது புகார்கள் இருக்க அவர் நிறுவனம் மூலம் யோகா நடத்துவது சரியில்லை என்று மனு கொடுத்தோம். நீதித்துறை முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனி முறையை ஏற்படுத்தணும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய பெஞ்ச் பார் ரிலேசன்ஷிப் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள கமிட்டி இருக்கு. அதன் மூலம் செய்யணும். அதைவிட்டு கண்டம்பட் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது” என்றார் ஆணித்தரமாக.
நீதியைப் பெற மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றம் என்ற அஸ்திவாரம் தான். அந்த அடித்தளத்தில் நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் என்ற இரண்டு தட்டுகளும் சமமான புரிதலோடு இருந்தால் மட்டுமே நீதித் தராசு சரியாக இருக்கும்.
-சே.த. இளங்கோவன்
-நக்கீரன், செப் 30-அக். 02

வெள்ளி 02 2015

சிரிக்கவும்.....சிந்திக்கவும்

சிரிக்கவும் சிந்திக்கவுமாய் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியது



கண்ணீரை புன்னகையாக மாற்றிய உலக நகைச்சுவை நடிகர் தோழர் சார்லி சாப்லின் நடித்த ஒரு சிறப்பு வீடியோ உங்கள் பார்வைக்கும்



                                    

வியாழன் 01 2015

அனாதை ஆனவன்...

படம்--வாடி நிற்கும் அனாதை




அன்று அவன்
தந்தை இல்லா
பிள்ளை.............

இன்று இவன்
தாய் இல்லா
தனயன்.........

 இனி என்ன
அவன் என்ற
இவன் தாய்
தந்தை இல்லா..
வாடி வதங்கி
நிற்கும் அனாதை


புதன் 30 2015

துன்பம் வந்த வேளையிலே........

படம்-கடற்கரை..



அன்று....

துன்பம் வரும்
வேளையில் சிரியுங்கள்
என்று எழுதி
வைத்து விட்டு
போனார் அவர்.........

இன்று...

 துன்பம் வந்த
வேளையில நான்
எப்படி சிரிப்பது
எங்கே சிரிப்பது
முட்டினாலும் சரி
மோதினாலும்  சரி
என்னுாள் சிரிப்பு
வரலியே அய்யா...
பொசுகென்று வந்து
நிற்கும்  கண்ணீரையும்
அழகையையும் அடக்கத்தான்
முடியவில்லையே அய்யா.............


திங்கள் 28 2015

தீட்டும்..குவார்ட்டர் பாட்டிலும்..

Prpc Milton Jimraj



Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 3 பேர் ஆகியோருடன்
குடி, மனிதர்களின் சுயமரியாதையை அகற்றி, தூர வீசிவிட்டது; மான உணர்ச்சியைத் துண்டித்து, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.
உண்மையில் இதுதான் மிகப் பெரிய கவலைக்குரிய அம்சம். சுயமரியாதையையும் மான உணர்ச்சியையும் ஒருவன் இழந்துவிட்டால் அவன் அடிமைக்குச் சமம்.
டாஸ்மாக் மதுக்கடைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எத்தனையோ செய்திகள் வெளிவருகின்றன. போதும், போதும் என்ற அளவுக்கு புள்ளிவிவரங்களும் வெளியாகின்றன. பெரும்பாலும் இவை நகர்ப்புறம் சார்ந்தவை. உண்மையில், கிராமப்புறங்களில்தான் டாஸ்மாக்கின் பாதிப்புகள் மிக அதிகம். மாதாந்திர ஊதியமோ, வேறு தொழில் வாய்ப்புகளோ இல்லாத கிராமப்புறங்களில் பெரும்பாலும் விவசாயமும், அதைச் சார்ந்த கூலித் தொழில்களுமே நிறைந்திருக்கின்றன. வாங்கும் தினக்கூலியைக் கொண்டுவந்து டாஸ்மாக் கல்லாவில் கொட்டிவிட்டுத்தான் வீடு வந்து சேர்கின்றனர் தொழிலாளர்கள்.
ஒரு கிராமப்புற டாஸ்மாக் கடையின் வருமானம், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருக்கும் கருவேப்பிலங்குறிச்சி என்ற ஊரில் ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்தக் கடையின் ஒரு நாள் வருமானம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை. பண்டிகை நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும். குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் என வைத்துக்கொண்டால், வருடத்துக்கு 365 லட்சங்கள் அல்லது 3.65 கோடி ரூபாய். ஒரு சின்னஞ்சிறிய ஊரில் ஆண்டு ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள் என்பது எத்தனை பெரிய அதிர்ச்சி?! இந்தத் தொகை, சரக்குக்கானது மட்டும்தான். சைட் டிஷ், சிகரெட் தனிக் கணக்கு.
கருவேப்பிலங்குறிச்சி டாஸ்மாக் கடையில் காலை 10:30 மணிக்கு நாம் நின்றிருந்தபோது ஒருவர் சரக்கைக் கடன் கேட்டுக்கொண்டிருந்தார். ''காலையிலேயே கடன் கேட்டுக்கிட்டு... ஓடிப்போயிரு... அடிச்சேபுடுவேன்'' என்று விரட்டினார் கடையில் இருந்தவர். அவர் சளைக்கவில்லை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப வந்து கடன் கேட்டுக்கொண்டே இருந்தார். இதற்கு இடையில் குடிக்க வருவோரின் முகங்களையும், அவர்கள் கைகளில் இருக்கும் சரக்கையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொள்கிறார். அவரின் சரக்குத் தாகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடையில் இருப்பவரிடம் பிச்சை எடுப்பதைப்போல கெஞ்சு கிறார். கடைக்காரர், இப்போது நாகரிகமான வார்த்தைகளைக் கைவிட்டு மிக மோசமான கெட்ட வார்த்தைகளுக்கு மாறுகிறார். ஓங்கிய கை அடித்துவிடுமோ என்ற நிலையில்தான் கிளைமாக்ஸ்! அதுவரை கெஞ்சிக்கொண்டு இருந்தவர், அண்ட்ராயர் பாக்கெட்டில் கைவிட்டு 50 ரூபாய்த் தாளை எடுத்துத் தருகிறார்.
''ஏன்யா... காசை வெச்சுக்கிட்டுத்தான் இவ்வளவு நேரமா சீன் போட்டியா?'' எனக் கடைக்காரர் இன்னும் கடுப்பாக, உதட்டோரப் புன்னகையுடன் ஒரு கட்டிங்கை வாங்கிக்கொண்டு பின்பக்கம் செல்கிறார் அந்தக் குடிவிரும்பி. அவர் ஏன் பணத்தை வைத்துக்கொண்டே கடன் கேட்க வேண்டும்? ஏனெனில், அந்தக் காசு அவருக்கு அன்றைய நாளின் அடுத்த குடிக்குத் தேவைப்படுகிறது. இப்போது கடன் வாங்கிக் குடித்தால், இந்தக் காசை பிறகு குடிப்பதற்கு வைத்துக்கொள்ளலாம். இதுதான் அவரது எண்ணம். அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றி நிச்சயம் அவர் கவலைப்பட மாட்டார். ஆனால், அடுத்த வேளை குடியைப் பற்றி முன்யோசனையுடன் இருக்கிறார். இதற்காக அவர் மானம், மரியாதையை இழக்கவும் தயாராக இருக்கிறார் என்பது முக்கியமானது.
கிராமப்புறங்களில் ஒரு சுடுசொல் பெரும் ரத்தக்களறியை உருவாக்கிய உதாரணங்கள் உண்டு. ஆனால், அதே கிராமப்புற மனிதர்கள் இன்று காதில் கேட்கத் தயங்கும் வசவு வார்த்தைகளை எந்தக் கூச்சமோ, சொரணையோ இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர் என்றால், இதற்கு 'சகிப்புத்தன்மை’ எனப் பெயரிட முடியுமா? குடி, மனிதர்களின் சுயமரியாதையை அகற்றி, தூர வீசிவிட்டது; மனிதர்களின் மான உணர்ச்சியைத் துண்டித்து, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. உண்மையில் இதுதான் மிகப் பெரிய கவலைக்குரிய அம்சம். சுயமரியாதையையும் மான உணர்ச்சியையும் ஒருவன் இழந்துவிட்டால் அவன் அடிமைக்குச் சமம். 'அடிமைக்கு அவன் அடிமை என்பதை உணர்த்து... அவனே கிளர்ந்து எழுவான்’ என்றார் அம்பேத்கர். இந்தக் குடி அடிமைகளுக்கு அவர்கள் அடிமை என்பதை யார் உணர்த்துவது? உணர்த்தவேண்டிய அரசோ, ஊற்றிக் கொடுப்பதில் பெருமிதம் அடைகிறது; புதிய அடிமைகளை உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணயிக்கிறது.
குடிகாரர்கள் சுயநினைவு இழந்து, சொரணைஇல்லாமல் வாழ்வது அவர்களின் உடல்நலக் கேடாக மட்டும் முடிவது இல்லை. அவர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை சீரழிவுகளையும் சகித்துக்கொள்கின்றனர். மணல் கொள்ளையாக இருந்தாலும், விலைவாசி உயர்வாக இருந்தாலும், அனைத்தையும் ஒருவித மயக்க நிலையில் வேடிக்கை பார்க்கப் பழகியுள்ளனர். சரியாகச் சொல்வதானால், அப்படி எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதற்கு அரசு இவர்களைப் பயிற்றுவிக்கிறது. இதன் விளைவை அரசியல், சமூக இயக்கங்கள் நேரடியாக எதிர்கொள்கின்றன. மக்களிடம் எந்த ஒரு சமூகச் சிக்கல் குறித்தும் பேசவோ, பிரசாரம் செய்யவோ முடியவில்லை. அதைச் செவிமடுத்துக் கேட்கவும், இணைந்து போராடவும் அவர்கள் தயார் இல்லை. பலர் குடியின் பிடியில் வீழ்ந்துகிடப்பது ஒரு காரணம் என்றால், மற்றவர்கள் குடியின் விளைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிகாரக் கணவனால் சிரமப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் சொந்தப் பிரச்னையைச் சமாளிக்கவே வலு இல்லாதபோது, அவர்கள் எப்படி சமூகப் பிரச்னைக்குக் குரல் கொடுக்க முன்வருவார்கள்? எனவே, வேறு எந்தச் சிக்கல் குறித்தும் மக்களிடம் விவாதிப்பதற்கு, குடியை ஒழிப்பது ஒரு முன்நிபந்தனை ஆகிவிட்டது. இந்தத் தடுப்பை உடைத்தால்தான் அடுத்ததற்கே போக முடியும். குடியை வைத்துக்கொண்டே மற்ற சமூகச் சிக்கல்களை அகற்றுவது சாத்தியமற்றது.
கருவேப்பிலங்குறிச்சியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய்க்குக் குடிக்கிறார்கள் எனப் பார்த்தோம். இந்த ஊரிலாவது பத்து கடைகள் இருக்கின்றன. நான்கைந்து ஹோட்டல்கள், ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கின்றன. ஆனால், இது எதுவுமே இல்லாத அச்சுஅசல் கிராமப்புறப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஊர் காவனூர். பக்காவான கிராமம். ஒரு சிறு சந்தில் நுழைந்து நடந்தால், ஒருபக்கம் வயல்வெளிகளும், மறுபக்கம் எருமை மாடுகளும் சூழ்ந்திருக்க, ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்தக் கடையில் ஒரு நாளைக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடக்கிறது. யார் காசு? இந்த ஊரில் எல்லோரும் பெரும் செல்வந்தர்கள் அல்ல. இருப்பது எல்லாம் மிக, மிக அடிமட்டக் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் உடல்நோக உழைக்கும் பணம் சிந்தாமல், சிதறாமல் மதுக்கடைகளுக்குத்தான் வருகிறது. இந்தக் கிராமத்தின் மளிகைக்கடையில் ஒருநாள் வியாபாரம் 10 ஆயிரம் ரூபாய்தான் என்பதை ஒப்பிட்டுப்பார்த்தால் குடியின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். பணம் மட்டும் அல்ல... இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்கள் நேரடியாகப் பொருட்களையே கொடுத்து சரக்கு வாங்குகின்றனர். மண்வெட்டி, கடப்பாறை, அரிசி, பருப்பு, பெட்ரோல்... எனப் பண்டமாற்றுக்குப் பயன்படும் பொருட்களின் பட்டியல் நீள்கிறது.
டாஸ்மாக் வந்த பிறகு கிராமங்களின் சமூக இயல்பு அடியோடு சீர்குலைந்துவிட்டது. ஊர்மந்தை, சாவடி, வாய்க்கால் கட்டை, கோயில் வாசல், மரத்தடி நிழல் என முன்பு எங்கு எல்லாம் ஆண்கள் ஒன்றுகூடுவார்களோ... அந்த இடங்கள் அனைத்தும் இன்று திறந்தவெளி பார்களாக இருக்கின்றன. சாலையில் செல்பவர்கள் பார்க்கிறார்களே என்கிற தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இளைஞர்கள் குடிக்கிறார்கள். குடும்ப நிகழ்வோ, ஊர்த் திருவிழாவோ சரக்கு இல்லாமல் முழுமை அடைவதே இல்லை. இவர்கள் குடித்துவிட்டு வீசிய பிளாஸ்டிக் டம்ளர்களும் தண்ணீர் பாக்கெட்டுகளும் பாட்டில்களும் எங்கும் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. கோயில் வாசலில் ஒரு தலித் சிறுவனின் கால் பட்டுவிட்டால் 'தீட்டு’ என சாமியாடும் இவர்கள், குடித்த குவார்ட்டர் பாட்டில்களை அதே கோயில் பிராகாரங்களில்தான் வீசுகின்றனர்
- பாரதி தம்பி, 
குடி குடியை கெடுக்கும், 
ஆனந்தவிகடன், 30/09/2015

ஞாயிறு 27 2015

நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!

படிக்க...அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!

இளம் வயது, பள்ளிப் பருவ கோடை விடுமுறையில் தனது தந்தையைப் பார்க்க கோர்கானுக்கு இரயிலில் பயணிக்கிறார்கள் அம்பேத்கரும் அவரது அண்ணன் மற்றும் உறவுக்கார இளைஞர்களும். புதிதாக தனித்து வந்து இரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கியவுடன் சாதி தரை தட்டுகிறது. தண்ணீரையும் உணவையும் கூட அவர்கள் தொட முடியாத அளவுக்கு ஆதிக்க சாதி அசிங்கங்கள் சூழ்ந்து கொள்ளும் அனுபவத்தை நீங்களே பாருங்களேன்.
“… நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக் கொண்ட ஸ்டேஷன் மாஸடர் எங்கள் பரிதாப நிலையைக் கண்டு மிகவும்  வருந்தினார். இந்துக்களின் வழக்கமபோல, நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறி விட்டேன். (பம்பாய் இராஜதானியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமூகத்தினருள் மஹர்களும் ஒன்று). அவர் முகம் திடீரென  மாறி விட்டது. அதிசயக்கத்தக்க வெறுப்புணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது.  எனது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்று விட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்றுகொண்டு இருந்தோம். பதினைந்து, இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை; சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்; பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி  எல்லாம் மறைந்து  எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.
அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எங்களைக் கேட்டார். மாட்டுவண்டி வாடகைக்குக் கிடைத்தால், கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாகக் கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டிக்காரர்களுக்கும் தெரிந்து விட்டபடியால், தீண்டத்தகாதவர்களைத் தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று தங்களை இழிவுபடுத்திக் கொள்ளவோ, தங்களை அசுத்தப் படுத்திக்கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை.” ( நூல். பக். 9, 10)
பலவிதமான சூழ்நிலைகளுக்குப் பிறகு ஒரு வழியாக காசுக்கு ஒத்துக் கொண்டது ஜாதி. சாதிக்கு விடை கொடுத்தது மாடு, “… ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது; எங்களைப் பார்த்து “உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?” என்று கேட்டார். எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண அவர் முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. “எங்களால் வண்டி ஓட்ட முடியும்” என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று “வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்துவிட்டு வண்டியை அவர்களே ஓட்டி வருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்” என்று கூறினார். இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்துக் கொடுப்பதுடன், தன்னைத் தீட்டடையச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான்.” (நூல்)
“…இரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது… எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம்… தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதரக் கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்று நீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்தத் தண்ணீர் இருக்கவில்லை. அந்த நீரின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால், நாங்கள் அதைக் குடிக்கவில்லை. அதனால் வயிறு நிரமபும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று… நான்கு , அய்ந்து மைல் தூரம் நாஙகள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார். பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்து கொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தமாகிவிடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டிவர மறுத்த அந்த மனிதன், தன் மதக் கோட்பாடுகளை எல்லாம் கை விட்டுவிட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம்..” (நூல்)
ஆதிக்க சாதி மனநிலையின் சாதிய, வர்க்க ரசவாதங்களை அம்பேத்கர் விவரிக்கும் இந்த இடத்தில் தெற்கே ‘நான் தேவன்டா’ என்று மீசையை முறுக்கிவிட்டு வடக்கே ‘நான் பாவன்டா’ என்று வடை சட்டியோடு பிழைப்புக்காக ‘அண்ணே’ போட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் சமூக நிலைமைகள் தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறது.
அம்பேத்கரின் நினைவலைகள் பலவிதமான காட்சிகளையும் கருத்துக்களையும் நம் கண்முன் விரிக்கிறது,
“…எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால், நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால் மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஓர் இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது
என்று வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார். எனவே, “நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்” என்று கூறினார். அதன்படி சுங்கம் வசூலிப்பவரிடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பேசினேன். எனவே நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருதுவார் என்று எண்ணினேன். ஆனால் என் தந்திரம் பலிக்கவில்லை. “உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள்? மலைமேல் தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக் கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை” என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்குத் திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டுமே அவர் எங்களிடம் சொன்னார்…. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைப் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்கவேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதன் காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்குக் காரணம்.”(நூல்.)
இப்படிப்பட்ட சமூக அநீதிகளுக்கு தனிப்பட்ட முறையில் நான் காரணமல்ல என்று மட்டும் சமாதானமடைய நியாயம் உள்ளதா? ஒட்டுமொத்த சமூகமும் தாழ்த்தப்பட்ட மக்களின் சேவைகளால் பயன்பெற்றுக் கொண்டு அவர்களுக்கான இயற்கையான உரிமைகளைக் கூட மறுக்கும் இந்த சமூக அமைப்பு, இதை மௌனமாய் அனுமதிக்கும் ஆதிக்க சாதி மனநிலை கேவலத்தின் உச்சம் என்பதை சுருக்கென உணர வைக்கின்றன பல பகுதிகள்.
வாழ்நாள் முழுக்க வருணாசிரம வெறிக்கு எதிராக சிந்தித்தவர் மட்டுமல்ல, அதையே சந்தித்தவர் அம்பேத்கர் என்பதை அவர் பரோடாவில் பட்ட அனுபவங்கள் விவரிக்கின்றன.
“…நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத்தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சினையாகவே இருப்பான் என்பதையும் பற்றிய அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்து விட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது “எங்கு தங்குவது? யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்?” என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். நான் பொய்சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை. அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்துவிட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன்…. தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்று அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராடடுவதில்லை என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்று கருதினேன். …. விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடை களைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார். பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார். பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஓர் இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்,
அந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார். அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்த வித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன். “எவ்வாறு நீ தங்கமுடியும்? இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வர வேண்டும் ” என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பெர்சி பெயரை உபயோகப் படுத்திக் கொள்கிறேன். “எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே” என்று நான் கூறினேன். நான் கூறியதை ஏற்றுக் கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
“… பிரச்சினை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்தோ! இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை……. நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப்பார்வையுடன், உயரமாக தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்து கொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர். என் அறைமுன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். “நீயார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்” என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை…… மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது; உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன்….” (நூல்)
ஒரு இளைஞனாக அம்பேத்கர் அழுத கண்ணீர், காலங்கள் கடந்தும் பல இளைஞர்களின் விழிகள் மாறி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணமான சமூக அமைப்பை நினைத்து வெட்கப்பட்டு குற்ற உணர்ச்சியோடு ஒருவன் தன்னைக் குறுக்கிக்கொள்வது மட்டும் நியாயமாகாது. வெளிப்படையான இந்த சமூக அநீதியை வெளிப்படும் களங்கள், முக்கியமாக ஆதிக்க சாதி உணர்வு நிலைக்கு எதிராக ஒவ்வொருவரும் சுயசாதிக்கு எதிராக கலகம் செய்வதும் ஆதிக்க சாதி அசிங்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதும்தான் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கான முதல் வழி. இந்நூலில் அம்பேத்கரின் நினைவலைகள் அனுபவத்தின் வழி உணர்த்துவதும் இதுதான்.
பார்ப்பன இந்துமதம் தொடங்கி பார்சி, கிறிஸ்தவ, இசுலாமிய மதங்கள் வரை அனைத்துமே தம்மை தீண்டத்தகாதவனாக நடத்திய அனுபவங்களை அம்பேத்கர் பகிர்ந்துள்ளார். ஒரு புரட்சியைத் தீண்டினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கான சுயமரியாதையும் , பொதுவான ஒரு சமூகத்தையும் பெற முடியும் என்று சொல்வதற்கான அனுபவம் அம்பேத்கருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அதை நாம் சொல்வதில் தப்பேதுமில்லை.
உடனே சாதி என்பது இந்தியாவுக்கே உள்ள தனிப்பிரச்சினை, இதை மேலைநாட்டு மார்க்சியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று மேல், கீழ் பார்க்கும் அன்பர்களே! இந்தியாவுக்கே உள்ள இந்த  விசேசப் பிரச்சினையை மேலை ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயக வழியில் என்று முயன்று அம்பேத்கரே தன் இறுதிநாளில் நொந்து கொண்டதுதான் இந்த போலி ஜனநாயகம். எல்லா சமூக அநீதிகளுக்கும் பாதுகாப்பாகவும் அடிப்படையாகவும் விளங்கும் இந்திய ஆளும் வர்க்க, ஆதிக்க சாதி அரசமைப்பை தகர்த்தெறிவதுதான் இந்நூலை படித்து முடித்தவுடன் ஏற்படும் உணர்வு. படித்துப் பாருங்கள், நீங்களும் உணர்வு பெறுங்கள்…
நூல்விசாவுக்காக காத்திருக்கிறேன். டாக்.பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்.
விலை: ரூ.10.00
வெளியீடு: திராவிடர் கழகம்.
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...