| தோழர் கோவன் |
தமிழ்நாட்டு தெரு வீதிகளில் காட்டாற்று வெள்ளமாக மம்மி ராணியின் டாஸ்மாக் சாராயம் பெருக்கெடுத்து ஓடி பெரும்பாலான குடும்பங்களும் மாணவ -மாணவிகளும் சிறுவர்களும் சாராய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருந்தனர்
இந்த காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்த பலரும் போராடினார்கள் அவர்களில். காந்திய வழியில் போராடிய சசிபெருமாள்.. மம்மி ராணியின் தர்பாரில் கொலலப்பட்டார்.
அடுத்து ஜனநாயக வழியில் போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு மற்றும் முன்னணியினருடன்,பொதுமக்கள் பலரும கைது செய்யப்பட்டனர்.
சாராய மம்மியின் தர்பாரை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவியர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர். அடங்க மறுத்த ம்ம்மியை எதிர்த்து போராடிய போது... மம்மியின் காலாட் படையால் அடித்து பூட்சால் மிதிக்கப்பட்டு , சிறையிலும் சித்திரவதை செய்யப்பட்டனர்.
இப்படி மம்மியின் சாராய வருமானத்தை எதிர்த்தவர்களின் உயிர் பறிக்கப்பட்டும், போராடியவர்கள் அனைவரும் செருப்பாலும் . இரும்பு கம்பியாலும் அடிக்கப்பட்டும், பினை மறுக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டப் பின்னரும்......
மம்மியின் சாராய சீரழிவை எதிர்ப்பை.. திசை திருப்ப.. பெரியாரின் பேரன் வெளியிட்ட கருத்தை எதிர்த்து மம்மியின் அடிமைப் படை குதியாட்டம், குத்தாட்டம் போட்டும்...
மம்மியின் சாராய எதிர்ப்பும் போராட்டமும் எதிர்ப்பும் .. அடங்காமல், ஒடுங்காமல் பம்மாமல் பெரும் வீச்சாக இருப்பதை கண்டு மனம் பொறுக்காமல் வெதும்பியது . மம்மியும். சாராய மமமியின் காலாட்படையும் ..
இந்நிலையில் மம்மியின் சாராய விற்பனை வருமானத்தை எதிர்த்து பாடல் பாடியதற்க்காக. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் .. கலைக்குழு கலைஞர் தோழர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதின் மூலம். சாராய மம்மி.. சாராய தேசத்தின் தலைவியாக காட்டிக் கொள்கிறார்.
அடுத்த கட்டமாக.. இனி... சாராய மம்மியின் தர்பாரில் அரசு சாரயம் குடிக்காமல் டேக்கா கொடுத்து தப்பிப்பவர்களும், காசில்லாமல் மம்மியின் சாராயம் குடிக்காமல் வழியில்லாமல் ஓடி ஒளிந்து கொண்டு இருப்பவர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மட்டுமல்ல இருக்கும் அனைத்து வகை சட்டத்தின்படியும் கைது செய்யப்படுவார்கள்..
பாடியவரைக் கைது செய்து விட்டார்கள்.
இனி பரப்பியவர்களைக் கைது செய்யட்டும்.
பாடலைக் கேட்பவர்களையும் கைது செய்யட்டும்.
நமது பாடல் கோட்டையை எட்டும்
கொடநாட்டையும் எட்டும்.
மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் குரல் அவர்களை செல்லுமிடமெல்லாம் விரட்டும்.
மேலும் பார்க்க.....தோழர் கோவன் கைது.......
மூடு டாஸ்மாக்கை மூடு
பாடு அஞ்சாதே பாடு – மக்கள்
தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பா…டு
பாடு அஞ்சாதே – பாடு
தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பா…டு
பாடு அஞ்சாதே – பாடு
எத்தனை கைது… எத்தனை சிறை…
எத்தனை அடி… எத்தனை உதை…
எத்தனை பெண்கள் கண்ணீரு
எத்தனை வீடுகள் சுடுகாடு
எத்தனை அடி… எத்தனை உதை…
எத்தனை பெண்கள் கண்ணீரு
எத்தனை வீடுகள் சுடுகாடு
எதிர்த்துக் நிற்க ஏன் தயங்கணும்
இப்பவே கேளு ஏன் நடுங்கணும்
இப்பவே கேளு ஏன் நடுங்கணும்
போதை தெளிய தமிழனுக்கு
பாட்டு ஒண்ணு பாடினதுக்கு
தேசத்துரோக வழக்கெதற்கு
தேடித்தேடி கைது எதற்கு
எங்க பாட்டை நிறுத்த முடியாது
வாய் பூட்டு போட முடியாது
பாட்டு ஒண்ணு பாடினதுக்கு
தேசத்துரோக வழக்கெதற்கு
தேடித்தேடி கைது எதற்கு
எங்க பாட்டை நிறுத்த முடியாது
வாய் பூட்டு போட முடியாது
பூட்டணும்னா கடைய பூட்டு
மிடாஸுக்கு விலங்கை மாட்டு
மிடாஸுக்கு விலங்கை மாட்டு
பாடல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு



