பக்கங்கள்

வெள்ளி 21 2014

ஆசைப்பட்டதை அடைய அறிவை பயன்படுத்திய அறீவழகன்..???

படம்--www.siruppiddy.net







மக்கள் கள்ள சாரயத்தை குடித்து செத்துப் போகிறார்கள்..அதனால் ..நல்ல சராயத்தை கொடுத்து ,குடித்த,குடிக்காத எல்லா மக்களையும் கொல்ல -  அறிவை பய்ன் படுத்தி ஆசைப்பட்டதை அடைந்த அரசாங்கம் மாதிரி......தான் ஆசைப்பட்டதை அடைவதற்க்காக அறிவை பயன்படுத்தினான் அறீவழகன்

.எம்பிஏ முடித்துவிட்டு எம்.என்.சி வங்கியில் பணியாற்றி வந்தான்.பெங்களுர் மாகடிசாலையைச் சேர்ந்த அறீவழகன். இவர் கல்லூரியில் பி.யு.சி படிக்கும்போது  டியூசன் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மகள் மீது ஆசைப்பட்டார்.

தான் ஆசைப்பட்டதை அடைவதற்க்காக ஆசிரியர் மகளுடன் நட்பு ரீதியாக பழகி வந்தார். டியூசன் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மகளும் சகஜமாக நட்புடன் பழகி வந்தாள்.

 வேலை கிடைத்து வங்கியில் பணியாற்றி கொண்டு இருந்து கொண்டு அடுத்த கட்டமாக,தான் ஆசைப்பட்டதை அடைவதற்க்காக பழைய தமிழ் சினிமா பாணியில் திட்டமிட்டான்.

ஆசரியரின் மகளை தொடர்பு கொண்டு, தன்னுடைய பிற்ந்த நாள் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அன்னாரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அந்தப் பெண் .அன்னாரின் வீட்டிற்கு வருகை தந்தாரள்.

வீட்டில் யாரும் இல்லாததைக் கண்டு கேள்வி கேட்டுள்ள அந்தப் பெண்ணிடம் . எல்லோரும் இப்போது வந்துவிடுவார்கள், அவர்கள் வரும்வரை நாம் குளிர்பானம் பருகலாம் என்று கூறி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை  பருக கொடுத்தான்.

குளிர்பானம் பருகிய சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயக்கமடைந்த வுடன் பலத்காரம் செய்தான். அதை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டான்.

மயக்கம் தெளிந்த அந்தப் பெண் நடந்த சம்பவத்தை அறிந்து அவனுடன் சண்டையிட்டு, அவனை கண்டபடி திட்டிவிட்டு தன் வீடு சென்றாள்.இது பற்றி புகாரோ, தன் தாயிடமோ எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டாள்..

இதை சம்மதத்திற்கு அறிகுறியாக நிணைத்துக் கொணட அறீவழகன்.அடுத்த கட்டமாக அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளான்.

அவனை மறுத்தாள் அந்தப்பெண். அவன் மீண்டும்  தன் அறிவை பயன்படுத்தினான்.. பழைய தமிழ் சினிமா படத்தில் ..கற்பழித்தவனே கனவணமாக அமையும் கிளைமேக்ஸ காட்சியைப்போல் ..தனக்கும் அப்படி அமையும் என்று  நப்பாசையில்........

தான் பதிவு செய்த காட்சியை சி.டியாக தயாரித்து தனக்கு டியூசன் சொல்லிக் கொடுத்த ஆசிரியையும் ,தான் ஆசைப்பட்ட பெண்ணின் தாயாருக்கு அனுப்பினான்.

தன் மகளின் வீடியோ காட்சியை  பார்த்த ஆசிரியையான அந்தப் பெண்ணின் தாய் கொதித்தெழுந்தார். சம்பவத்தைப் பற்றி விலாவாரியாக தன் மகளிடம் விசாரிந்தார். பிறகு எவ்வித தயக்கம் காட்டாமல் போலீஸில் புகார் செய்தார்.

ஆசைப்பட்டதை அடைய அறிவை பயன்படுத்திய அறீவழகன்... அரிவலகனாக சிறையில் எண்ணிய கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறான்..


வெடிக்க மறந்த குண்டை....வெடிக்க நிணைவூட்டியவர்கள்.

படம்--www.dailythanthi.com

இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கி 1945 வரை யிலான ஆறு ஆண்டுகள் நடைபெற்றது. அந்தப் போரின்போது அந்தமான் நிகோபர் தீவுகளில் வீசப்பட்ட குண்டு ஒன்று  இரக்கப்பட்டு  வெடிக்க மறந்தது.  

அன்று வெடிக்காமல் மறந்து போன குண்டு ஒன்று.,70 ஆண்டுகளுக்கு பின்   அப்பகுதியை சேர்ந்தவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது  .பின் வெடிக்க மறந்த போன அந்தக் குண்டை......  

போர்ட்பிளேரில் உள்ள கப்பற்படை யின் கமண்டோ படை  கைப்பற்றி -அதை கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்று ,அன்று  வெடிக்க மறந்த அந்த குண்டுக்கு வெடிக்க நிணைவூட்டி மீண்டும்   வெடிக்கச் செய்தனர். ஏனெ்னறால் நினைவு வந்து வெடித்தால் ... அவர்கள் மறந்து விடுவார்களாம்.


வியாழன் 20 2014

முதலாளியின் கஷ்டநஷ்டங்களை கண்டு வேலையை முடித்துக் கொடுத்த ருத்ரம்மாதேவி....

படம்-tamil.webdunia.com

“ருத்ரம்மாதேவி” என்ற படத்துக்கான கிளைமாக்ஸ் காட்சியின் வாள் சண்டையின் போது,ருத்ரம்மாதேவியின் வலது கை மணிக்கட்டில் சிறியளவிலான எலும்பு முறிவு எற்ப்பட்டது.

மருத்துவ சோதனையின் போது ருத்ரம்மாதேவி வாரக் கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை பட தயாரிப்பு முதலாளிகளும் ஏற்றுக் கொண்டு,தயாரிப்பு வேலையை தள்ளி வைக்க முன்வந்தது.

ஆனால் உழைப்பாளியான ருதரம்மாதேவி.முதலாளிகளின் கஷ்டநஷ்டங்களை புரிந்து கொண்டு தான் உழைக்க...அதாவது நடிக்கத் தயார் என்று அறிவித்தது.

எலும்புமுறிவு ஏற்பட்ட  கை மணிக்கட்டில் 5 ரோஸ்தோல் நிறம் கொண்ட பேண்டேஜ் கொண்டு கட்டு போடப்பட்டு, வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண ஊசிகளை போட்டுக் கொண்டு...

குறித்த நேரத்தில் சண்டைக்காட்சிக்கான உழைப்பை முடித்து கொடுத்தது ருத்ரம்மாதேவி.

சூப்பர்களுக்கும், தசவதாசர்களுக்கும், கத்தியில்லாமல் கத்தியவர்களுக்கும் ருத்ரம்மாதேவி-யும் சளைத்தவரல்ல என்று தெரியப்படுத்தப்பட்டது.

ருத்ரம்மாதேவியின் உழைப்பை பற்றி அந்தப்படத்தின் இயக்கநரும் தன்னுடைய இணையதள பக்கத்தில் ருத்ரம்மாவியின் மகிமையைப்பற்றி குறிப்பிட்டுள்ளாராம்.

ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற சாதிவெறி அய்யர்....!!!

Kathir Nilavan 2 புதிய படங்களைச் சேர்த்தார்.
## "குற்றால அருவியில் தெய்வங்களும், பார்ப்பான்களும் மட்டுமே குளிக்க வேண்டும் என்கிற பார்ப்பன சாதி வெறியை அலட்சியப்படுத்தி எல்லா சாதியினரும் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று உத்தரவிட்ட.......

'ஆஷ் துரை' சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.

'வாஞ்சிநாத சாதிவெறி அய்யர்' தற்கொலை செய்து கொண்ட நாள் 17.06.1911.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியில் தமிழ்நாட்டில் கலெக்டராக இருந்தவர் ஆஷ். 'கேரக்டர்' குறித்து பேச வேண்டுமானால் சில உதாரணங்களை சுட்டிக்காட்டலாம்.

"அருந்ததி இனத்தை சேர்ந்த பெண், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல ஊருக்குள் உள்ள அக்கிரஹாரம் வழியே செல்ல ஆஷ் முயன்ற போது, பார்ப்பனர்கள் 'அவள் தீட்டு சாதியை சேர்ந்தவள். அவளை ஊருக்கு ஒதுக்கு புறமான வழியில் அழைத்துச் செல்லுங்கள்' என்று கூச்சலிட்டதோடு வண்டியை நகர விடாமல் முற்றுகையிட்டனர். வேறு வழியில்லாமல் 'ஆஷ்' அவர்கள் மீது தடி அடி நடத்த உத்தரவிட்டு முற்றுகையிட்டவர்களை ஓட வைத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்."

"குற்றால அருவியில் தெய்வங்களும், பார்ப்பான்களும் மட்டுமே குளிக்க வேண்டும் என்கிற பார்ப்பன சாதி வெறியை அலட்சியப்படுத்தி எல்லா சாதியினரும் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று உத்தரவிட்டார்."

சரி, ஆஷ் துரைக்கும் வாஞ்சிநாத அய்யருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

வழி மறைத்த பார்ப்பன கூட்டத்தில் 16 வயது இளைஞன் ஒருவனும் இருந்தான். அவனுக்கும் அடி விழுந்தது. 'இந்து சம்பிரதாயங்களை மதிக்காத இந்த வெள்ளைக்காரனை சாகடிப்பேன்' என்று அப்போதே தீர்மானித்துக் கொண்டான். விளைவு சில ஆண்டுகளுக்கு பின் இரயிலில் மனைவி, குழந்தைகளோடு பயணம் செய்து கொண்டிருந்த ஆஷ் துரையை மாறுவேஷத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டு சாகடித்தான். தப்பிச் செல்லவும் அவனுக்கு வழியில்லை. அங்கேயே அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டான். அவனுடைய சட்டைப் பையில் ஒரு கடிதத்தையும் வைத்திருந்தான். அதில் இருந்து சில வரிகள்:

"எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை."

வாஞ்சிநாத அய்யரோடு 'பாரதியார்' என்கிற கவிஞனும் கொலை முயற்சியில் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார். திட்டத்திற்கு மட்டும் உடந்தையாக இருந்த பாரதியார் கைது செய்யப்பட்ட போது 'மன்னிப்பு' கோரியதால் சில நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். பின்னாளில் பாண்டிச்சேரிக்கு ஓடிவந்த பாரதியாரின் பார்ப்பன விசுவாசம் ஆரியம், இந்து, இந்து தேசம் என்று கவிதைகளில் வெறியேற்றிக் கொண்டது.
thanks! - தமிழச்சி.
17/06/2014

செவ்வாய் 18 2014

குருவை மதிக்க மறந்த குருநாதன்...........

படம்-www.vikatan.com



திரைபடத்துறையிலே மேற்கத்திய(பிரமலை) கள்ளன் என்ற அடை மொழியுடன் புதிய,பழைய இயக்குநார்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் குருநாதன்.

அந்த குரு நாதனின சிஷ்யர்கள் எல்லாம் தங்கள் குருவானவரை மதிப்பது போல் இந்த குருவான குருநாதன் தன் குருவானவரை மதித்தாரா..?? நிணைத்தார..??? என்றால்....இந்த குருநாதனின்  வாயிலிருந்து வரும் வார்த்தைகளே இல்லை என்றே மெய்ப்பிக்கிறது.

நடிப்பதற்க்காகவே சினிமாவிற்கு வந்த இந்த குருநாதன் அதற்க்காக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் திரைப்பட இயக்குநாராக ஆகலாம் என்று முடிவெடுத்து அன்றைய பெரிய இயக்குநார்களான எஸ்.பி. முத்துராமன், சி.வி.இராஜேந்திரன் போன்றவர்களிடம் உதவி இயக்குநாராக ஆகும் வாய்ப்பு கிடைக்காததால்...

புட்டண்ணா கனகலிடம் உதவியாளராக சேர்ந்தார். அன்றைய இயக்குநர் புட்டண்ணா இவரை மதித்து தனது உதவி இயக்குநாராக சேர்த்துக் கொண்டார் புட்டண்ணாவிடம் பணிபுரிந்து... அதன்மூலம் இயக்கு நாராக மாறி இன்று தன்னுடைய சிஷ்யர்களின் உதவியால்  இயக்குநர் இமயம் என்று புகழ் பெற்ற இந்த குருநாதன்.

தான் பேசும் மேடைகளில் இயக்குநர் தொழில் கற்றுக் கொடுத்த புட்டண்ணா கனகலை மறந்து.... தனக்கு குருவே அல்லாத  ஸ்ரீதரை தன்  சினிமா பயணத்துக்கான  முன்னோடி என்று பீத்திக் கொள்கிறார்.

இந்த குருவை மதிக்க மறந்த இந்த குருநாதன்.........!!!


மாமூல் கேட்கும் ஆளும் கட்சி பிரமுகர் மீது ஆளும்கட்சி முதல்வரிடம் புகார்மனு..

படம்-meeralgal.blogspot.com

கேழ்வரகிலே நெய் வடிகிறது என்றால்..கேட்கிறவனுக்கு புத்தி எங்க போச்சுன்னு. என்று.கேள்வி கேட்கிற பழமொழி ஒன்று உண்டு. இந்த பழமொழிக்கு  விளக்கம் தெரியாமல் இருந்த காலம் உண்டு. அந்தப் பழமொழிக்கும் இந்த பதிவின் தலைப்புக்கும் உள்ள சம்பந்தம் இது.

மதுரை மாவட்டத்தில் 1300க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த ரேஷன் கடைகளில் ஆளும்கட்சி பிரமுகர்கள், ஆளும்கட்சியின் அதிகாரிகள், ஆளம்கட்சி ரவுடிகள் என அவ்வப்போது ரேஷன் கடை ஊழியர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்கிறார்கள்.

இந்த மாமூல் வசூலுக்கு கொடுக்கும் பணத்தை சரி கட்டுவதற்க்காகத்தான் ரேஷன் கடை க்கு வரும் பொது மக்களிடம். ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களுடன் சம்பந்தமில்லாத  வேறு  பொருட்களை கூடுதலாக வாங்கச் சொல்கிறோம் என்கிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள்.

ரேஷன் கடைகளில் பெரும்பாண்மையாக பெண்களே அதிகமாக பணியாற்றுவதால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு பயந்து மாமூல் பணத்தை கொடுத்து விடுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் கதைக்கிறார்கள்.

மாதந்தோறும் மாமூல் பணம் கட்டாயம் வேண்டும் என்று ஆளும் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், ரவுடிகள் வந்து வசூல் செய்கிறார்கள் என்றும் மாமூல் பணம்  கொடுக்கவில்லை என்றால் ரேஷன் கடையிலுள்ள பொருட்களை அள்ளி சென்று விடுகிறார்களாம்..

இது பற்றி மாவட்ட ஆட்சியரிடமும் ,டிஎஸ்ஓ உள்ளிட்ட அதிகாரிடமும் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ரேஷன் கடைக்காரர்கள் எல்லாம் மாமூல் கேட்கும் ஆளுங்கட்சி பிரமுகரைப்பற்றி ஆளுங்கட்சி அதிகாரிகளைப பற்றி, ஆளுங்கட்சி ரவுடிகளைப் பற்றி, ஆளுங்கட்சி முதல்வருக்கு புகார் மனு அனுப்பி இருக்கிறார்களாம்.

இப்போது முன் சொன்ன பழமொழியை திரும்பவும் படித்துப் பாருங்கள். பழமொழியின் அர்த்தங்கள்   புர்ர்ர்ரியும்.

திங்கள் 17 2014

இவர்கள் தங்கள் பெருமையை பீத்திக் கொள்வதற்க்காக திரைக்கு வருகிறார்கள்.!!!!!!!!!

இந்தியாவின் வரலாற்றில்  ஏற்கனவே “திருவாளர் பரிசுத்தம்” என்று ஒருவர். அந்த பரிசுத்தம் யார் என்றால் இந்தியாவின்  நேருவின் பரம்பரையிலிருந்து வந்த  இளவயது பிரதமரான ராஜீவ் காந்திதான்.

அப்போதும்  இணையதளங்கள் இல்லாததால்...... ஊடகங்களில் மட்டுமே திருவாளர் பரிசுத்தமாக துாக்கி காட்டப்பட்டார்.

வரலாற்றில் இரண்டாவது பரிசுத்தமாக......மோ(ச)டி  கிளின் இந்தியா என்ற பரிசுத்தமானவர் இறக்கி விடப்பட்டுள்ளார்.

மோ(ச)டியின் ஆணையை ஏற்று இந்தியாவின் பிரபலங்கள் தங்கள் பெருமையை காட்டிக் கொள்வதற்க்காக பெருக்க வருகிறார்களா...???? அல்லது தங்களது வெத்து வேட்டு தனங்களை மறைக்கிறதுக்காக பெருக்குகிறார்களா......???

முதலாவது அந்த திருவாளர் பரிசுத்தத்தின் காட்சிகளை காண கொடுத்து வைக்காதவர்கள். இரண்டாவதாக வந்துள்ள மேக் இன்டீயாவின் பரிசுத்தத்தை

கீழுள்ள வீடியோவை கண்டு கழித்து ??? நீங்களே!! முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்!!!!

வினவு-ன் ஆணையை ஏற்று இந்த வீடியோ பகிரப்படுகிறது. பரப்பப்படுகிறது

வீடியோ உதவி...வினவு....

நன்றி.வினவு

மருந்து கடையிடம் வெட்டு வாங்கிய செருப்புக்கடை..!!!!

படம்-தந்தி

இங்கலீஸ். மருந்து கடை வைத்திருப்பவரும். செருப்பு கடை வைத்திருப் பவரும் அருகருகே  கடை வைத்து தங்கள் தொழிலை செய்து கொண்டு இருந்துள்ளனர்

 இதில் மருந்துகடையை,  அவ்வப்போது வந்து கவனித்து கொள்வார் மருந்துக்கடைக்காரரின் மனைவி .

மருந்து கடைக்காரரின் மனைவி, மருந்துகடைக்கு வந்தவுடன். செருப்புக் கடை வந்து  மருந்துகடையின் மனைவியுடன்  நகைச்சுவை சொல்லி சிரித்து பேசிக் கொண்டு இருக்கும்.

இப்படி தினமும் வந்து தன் மனைவியிடம் வந்து கடலை போட்டுக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டு இருப்பது பற்றி மருந்துக்கடைக்கு சந்தேகம் வந்து மருந்துகடைக்கு வரக்கூடாதுன்னு செருப்பு கடையை ...பலமுறை கண்டித்துள்ளது மருந்துகடை..

இதை காதில் போட்டுக் கொள்ளாத செருப்புக்கடை. மருந்து கடை இல்லாத நேரமா பார்த்து தொடர்ந்து  மருந்துகடை மனைவிடம்  மீண்டும் கடலை போட்டு வந்துள்ளது. பொருத்து பொருத்து பார்த்த மருந்துகடை. ஒருநாள்

தன் மனைவியுடன் கடலை போட்டு சிரித்து கொண்டு இருந்த செருப்புக்கடையை அரிவாளால் ஒரே போடாக போட்டது. அம்புட்டுதான்

மருந்து கடை வெட்டியதில்  பலத்த காயமடைந்த செருப்புக்கடை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

 மருந்துக்கடையோ.. செருப்பு கடையை வெட்டியதால் போலீசுக்கு பயந்து  தலைமறைவாய் திரியுது.

 நீதி----  நொம்பளம் எந்தெந்த வழியில் எல்லாம் வரும் என்பது யாருக்கு தெரியும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...