பக்கங்கள்

புதன் 08 2014

ஒரு ரூபா இட்லி தமிழனுக்கு .... தில்லை கோயில் தீட்சதனுக்கு..!!!

20140107_110523.jpg ஐக் காட்டுகிறது
மனித உரிமை பாதுகாப்பு மையம்

தில்லை நடராஜன் கோயிலை திட்சதனுக்கு சொந்தமாக்கி தீர்ப்பு கூறிய நீதிபதிகளான சௌஹான், போப்டே இருவரும்.................

தில்லியிருந்து சென்னைக்கு  புஷ்பக விமானத்தில் வந்தால் வான்வழியாகத்தான் வரவேண்டும் .புகை வண்டியில் வந்தால்  இரு தண்டவாளத்தில்தான் வரவேண்டும். டீலகஸ் பஸ.கார்களில் வந்தால் நான்கு வழிச் சாலை மற்றும் அதற்க்கான சாலைகளில்தான் வரவேண்டும், இது அனைவருக்கும் தெரிந்த  முறை வழிகள்.

இந்த முறை வழிகளில் இல்லாமல்  புகை வண்டி  நான்கு வழிச்சாலைகளிலும் ஆகாய விமானம் தண்டவாளத்திலும் பஸ்சும் காரும்  வான் வழியில் வந்தால் அது முறை கேடான வழி......

இந்த முறைவழியை பின்பற்றாமல் முறைகேடான வழியை பின்பற்றித்தான் தில்லை நடராஜன் கோயில் வழக்கில் இந்தியாவின் உச்சி குடுமி மன்ற இரு நீபதிகளும் அள்ளி தள்ளியுள்ள தீர்ப்புதான் தில்லை கோயில் திட்சதனுக்கே சொந்தம். அரசு சொத்தை தனியாருக்கு கொடுத்தது மாதிரி

இந்த முறை கேடுடான வழிகள் இன்று நேற்று அல்ல........பிரிட்டீஷ் காரன் “ நாயை கொல்வதென்றாலும் தீர விசாரித்தே கொல்லுவோம் ” என்று சொல்லி, அநீதி மன்றத்தைகொண்டு வந்த காலத்திலிருந்தே இந்த முறை கேடான வழியைத்தான் பின்பற்றுவது மரபாக  இன்னி வரைக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது மேலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த முறைகேடான வழிகளை நுனிக்கி ஆராய்ந்து   கண்டு பிடித்து வாதாடும்  சுனா.....சாமி போன்ற வழக்குரைஞர்கள் எல்லாம் வழக்கு அறிஞர்களாக மாறியது இப்படித்தான்.

எப்போதாவது தப்பித்தவறி முறை வழியில் தீர்ப்பு ஒன்று வந்துவிட்டால். ....

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்.கொட்டப்பாக்குக்கு விலை சொல்லும்  உச்சி குடுமி நீதிமன்ற நீதிபதிகள் வழி வழியாக பின்பற்றப்படும் மரபு வழியை பயன் படுத்தித்தான் முறை கேடான தீர்ப்பை வழங்குவார்கள்.

இந்தியாவின் சுதந்திரமே முறை கேடாக பெற்றதுதான்.இதில்  நீதி மன்ற தீர்ப்பு மட்டும் முறை வழியாகவா வந்துவிடும்.

மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் 66 கோடி சொத்து சேர்த்த வழக்கிலும் இந்த வழி வழி மரபைத்தான் பின்பற்று வார்கள் நீ தி அரசர்கள்.

யானை வரும் பின்னே.......மணி யோசை.வரும் முன்னே....... என்பதுபோல்தான்

ஒரு ரூபாய் இட்லி தமிழனுக்கு, தில்லை  கோயில் தீட்சதனுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ளது.

...“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு ................


“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்; 

அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டவர்களும் நேசிப்பவர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள்.


http://ta.wikipedia.org/s/an8















 36 வயதில் பைரன் இறந்தது நல்லது – அவன் மேலும் வாழ்ந்திருந்தால் பிற்போக்கான முதலாளியவாதியாக மாறியிருப்பான். 


http://ta.wikipedia.org/s/djj














 29 வயதில் ஷெல்லி இறந்தது வருந்தத் தக்கது; ஏனென்றால் அவர் வாழ்க்கை முழுதும் புரட்சியாளனாக இருந்தார். மேலும் வாழ்ந்திருந்தால் சோசலிசத்தின் முன்னோடியாக விளங்கியிருப்பார்”


ஞாயிறு 05 2014

ஆசை.........காட்டி....................சிறுகதை


புதுசா தவனை தொழிலுக்கு வந்த தவனைக்காரனிடம், தவனை
வாங்கியே பழக்கப்பட்ட ஒருவன். ஒரு லட்சம்வரை தவனை வாங்கி இருந்தான்.இரண்டு மாதங்கள் வரை தவனை செலுத்திய தவனை வாங்கியவன்.

தவனை கொடுத்தவன் தொழிலுக்கு புதியவன் என்பதினால் தவனை கொடுக்காமல் எமாற்றும் திட்டத்தோடு அவனுடன் சண்டையிட்டான்.
இதனால் தவனை கொடுத்தவனுக்கும் தவனை வாங்கியவனுக்கும் மனஸ்தாபம் ஏற்ப்பட்டது.

தவனை வாங்கியவன் தவனைத் தொகையை இன்னைக்கு தாரேன். நாளைக்கு தாரேன் என்று நாட்களை கடத்தி வந்தான்.

தவனை கொடுத்தவனோ, தெரியாத் தனமா இத் தொழிலுக்கு வந்துவிட்டனே! என்று தன் நண்பரிகளிடம் புலம்பியபடி சலிக்காமல் கேட்டு அலைந்து கொண்டு இருந்தான். கொடுத்த பணத்தையாவது  வாங்கிவிட வேண்டும் என்று மனதில் கங்கணம் செய்து கொண்டு இருந்தான்.

மூன்று பைசா வட்டிக்கு வாங்கி மாதம் தவறினாலும் வட்டியை தவறாமல் செலுத்தி வரும்  நேர்மையாளனின் ஒருவனின் மூலமாக தெரிந்த நண்பரின் ஆலோசனைப்படி......

முதலில் தவனை கொடுக்கும் தவனை பார்ட்டிகளிடம் ஆலோசனையை கேட்டான். அந்த தவனை பார்ட்டிகளோ.....மிரட்டல்,கடத்தல்,அடித்தல், கொடுத்த பணத்திற்கு ஈடாக பெருமான பொருளை எடுத்துக்
கொள்ளுதல்,கட்டபஞ்சாயத்து செய்தல். போலீசில் மோசடி புகார் செய்தல்.போன்ற பல அனுபவங்களை சொன்னார்கள்.

புதிய தவனைகாரனுக்கு அந்த வழிகளில் செல்வது  சரியாகப்படவில்லை, கம்பும் உடையாமல் பாம்பும் சாகமால் இருப்பது போன்ற வழிகளை யே தேடினான்.

ஒருநாள்  ஆலோசனை கேட்டதின்படி தனக்கு தெரிந்த பேங்க்காரன் ஒருவனிடம் ஒரு லட்சம் கடன் பெற்றவனைப்பற்றி சொல்லி பணத்தை வசூல் செய்யும் வழி கேட்டான்.

அந்தப் பேங்காரனோ.தனக்கு இவ்வுளவு கமிஷன் கொடுத்தால். பணத்தை பெற்று தருவதாக சொன்னான்.

கடைசியாக. புதுத்தவனைக் காரனும் பேங்க்காரனும் சில  உடன் படுக்கை செய்து கொண்டனர்.

சில நாள் கழித்து தவனை கொடுத்தவன். தவனை வாங்கியவனை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தான். அப்பொழுது டிப்டாப் ஆசாமி ஒருத்தன் இவர்களுக்கு அருகில் வந்தான். வந்தவன். ஒரு நோட்டீசை கெர்டுத்து

அரசு அங்கீகாரம் பெற்ற இன்வெஸ்ட கம்பெனி, உத்தரவதமானது,
கஷ்டப்பட்டு ரெண்டு லட்சம் கட்டினால்.அடுத்த ரெண்டெ வருசத்தில்
 ஐந்து லட்சம் உங்களுக்கு கிடைக்கும், மந்திரமும் இல்லை. மாயமும்
இல்லை நிஜம்... இப்படி நிறைய பேரு கட்டி வாங்கிட்டாங்க........ ஒரு குடும்பத்துல ஒரு நபருக்கு ஒரு தடவைதான் சான்ஸ்.....  அடுத்த சான்ஸ் மற்றவங்களுக்கு.இத்திட்டம் குறுகிய காலம் வரைக்கும்தான்  என்று நம்பும்படியாக அளந்து விட்டான்.

தவனை வாங்கியவனிடம் சென்று ரெண்டு லட்சம் இல்லேன்னாலும் ரெண்டு பேர் சேர்ந்து ஆளுக்கு ஒரு லட்சம் கட்டிவிட்டு ரெண்டு வருசம் கழித்து ஐந்து லட்சம் வரும்போது ரெண்டரையாக பிரித்துக் கொள்ளலாம் .“ வீடு தேடி வர்ர சீதேவிய ஊதாசினப்படத்தக்கூடாது என்றான்.

தவனை கொடுத்தவனும் தவனை வாங்கியவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தவனை வாங்கியவன் .டிப்டாப் ஆசாமியிடம் மேலும் சில சந்தேகங்களை கேட்டான்.

பணத்தோடு,ரெண்டு பாஸ்போர்ட் போட்டோ ரெண்டு.ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, ஜெரக்ஸ்சுடன் ஒரிசினலுடன் ஆபிசுக்கு வரவேண்டும் என்றான்.

தவனை கொடுத்தவன். தவனை வாங்கியவனிடம் சொன்னான். ஏப்பா....... எனக்கு தர வேண்டிய ஒரு லட்சத்த எப்படியாவது பொரட்டு,நானும் ஒரு லட்சம் தர்ரேன். ரெண்டு பேர்லேயும் கட்டுவோம். அஞ்சு லட்சத்தில் பாதியாக பிரித்துக் கொள்வோம், எனக்கு  நீ ஒரு லட்சம் தரவேண்டியதில்லை என்றான்.

டிப்டாப் ஆசாமி, விசிட்டிங்கார்டை ரெண்டு பேரிடமும் கொடுத்துவிட்டு  சில விசயங்களில் சட்டுபுட்டுன்னு முடிவெடுக்கனும், லேட்டானா  வாய்ப்பு கை நழுவிப் போயிடும் என்றான்.

மறுநாள் தவனை வாங்கியவன். தனக்கு தெரிந்தவர்களிடம் இனஸ்வெஸ்ட கம்பெனியைப்பற்றி விசாரித்தான். தன் பொன்டாட்டியின் நகைகளை விற்றான். ரெண்டு லட்சத்தை தேத்தியவுடன் தான் மட்டும் தனியாக “ரெண்டு லட்சம் கட்டினா அஞ்சு லட்சம்” கொடுக்கும்  இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனிக்கு புறப்பட்டான்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...