பக்கங்கள்

வியாழன் 25 2021

முதல் சந்திப்பும்..கடைசி சந்திப்பும்.............

 



 முதல் சந்திப்பு- 

 ஙே....அய்யா....உங்கம்மா...நல்லாயிருக்காங்களா...?

அம்மாவா...!  நல்லா இருக்காங்க அம்மா... நடமாடிகிருவாங்க.... எனக்கு அவுங்கதான் சமைச்சு  போடுறாங்கம்மா...  எங்கம்மாவ உங்களுக்கு எப்படி தெரியும்....


நல்லா கேட்டடீய்யே அய்யா... உங்கம்மாவும்..நானும் ஒரே இடத்தில வேல பார்த்தோம் அய்யா...  உன்னையும் தெரியும் அய்யா.... நீதான் என்ன மறந்திட்ட.. பாவம்..உனக்குதான் கல்யாணம் முடிக்கா விட்டிருச்சு. அது ஒரு குறைதான் மற்றபடி. தங்கமான அம்மாவுக்கு தங்கமான மகன்ய்யா நீ....... நானும் மூனு பெத்து போட்டு இருக்கனே.......

 ஏன்? என்னாச்சும்மா...!!

 மகன்க ரெண்டு பேரும் பொண்டாட்டி பேச்சக் கேட்டு என்னோட சண்டைக்கு நிக்கிறானுங்க.... மகளோ...  காசு..காசுன்னு கேட்டு படுத்தி எடுக்குறா.....

உங்களுக்கு என்னம்மா... வருமானம் வருது...? 


என் வீட்டுக்காரரின் குடும்ப பென்சன்  வாங்குறேன்ய்யா....


ஆ....மகன்கள் சண்டை செய்வதும், மக ..படுத்தி எடுப்பதும் உங்க பென்சன் பனத்துக்குத்தான் அம்மா.... கடைசி காலத்துல நிம்மதியாக இருக்க விடமாட்டாங்க.... உங்க நிம்மதிக்கு நான் ஒரு வழி சொல்லட்டும்மா அம்மா...?

” ஆ...ஆ...சொல்லுய்யா.....!  


வேற ஒன்னும் இல்லம்மா...நீங்க கொஞ்சம் தியாகம் பன்னனும். வாங்குற பென்சன்ல.. பாதிய நீங்க  மகன்களுக்கும் மகளுக்கும் கொடுத்து பாருங்கம்மா.. கடைசி காலமாச்சு... பெத்து போட்டு வளத்து ஆளாக்கியாச்சு...அதுகட்ட போயி இனி வசவ வாங்கிட்டு .......யோசித்து பாருங்கம்மா......


சரி..... பாக்குறேன்... உங்கம்மாகிட்ட பாக்கியம் கேட்டேன்னு சொல்லு... ஒரு நாளைக்கு வீட்டுக்கு.... வந்து பாக்க வர்ரேன்னு சொல்லு...மறந்திடாதய்யா....


சரிம்மா..கண்டிப்பா  சொல்றென்ம்மா.....


இரண்டாவது சந்திப்பு-

யேய்..... அய்யா... இங்க வாங்க..... அன்னிக்கு உங்கம்மாவு பத்தி கேட்டதுக்கு என்ன சொன்ன.... நடந்துகிரவாங்க... உனக்கு சமைச்சு போடுறாங்கன்னு சொன்னயில்ல..... ஏய்யா.. பொய்... சொன்ன.......

அம்மா கோவிக்காதீங்க...... ஒங்க மனசு வருத்தப்படக்கூடாதுன்னுதான் அப்படி சொன்னேன்.. வயசான காலத்துல...கவலைப்படக்கூடாதல்லவா...!! ஆமா.. உங்களுக்கு எப்படி தெரிஞ்சது....ம்மா.....


என் மகனும் மருமகளும்தான் சொன்னாங்க.... உங்கம்மா   தங்கமான மகனான உன்னை விட்டுட்டு செத்து போயிட்டாங்கன்னு.....


என்ன செய்யிறது அம்மா.... பிறந்ததலிருந்து சாகிற வரைக்கும் ஓடா உழைத்து தேஞ்சு போனவங்க... என்னைய மாதிரியே.. என் அம்மாவும் அவுங்க அப்பா என் தாத்தா இறந்திட்டாங்க...என் அம்மாச்சியும் என் அம்மா  என் அப்பாவ கல்்யாணம் முடிக்கிறதுக்கு முன்னமே இறந்திட்டாங்க....அதோடு கட்டிக் கொடுத்த மக...  என் அக்காவுக்கு..பாதி வாழ்க்கையில கண் தெரியம போச்சு.. என் அம்மாவுக்கு ஒரே  ஆறுதல், வாழ்க்கை பிடிப்பு  நான்தானம்மா..  . நானும் உங்க மகன மாதிரி கல்யாணம் பன்னியிருந்தா.... தங்கமான அம்மாவுக்கு தங்கமான மகனாக இருந்திருக்க முடியாதில்லம்மா....... கவலப்படாதிங்கம்மா..ரேசன் கடையில மண்ணெண்ண ஊத்துறாங்க.. அத வாங்க போயிட்டு வர்ரேன்ம்மா.............

கடைசி சந்திப்பு-

ஒரு மாதம் கழித்து ரேசன்கடையில் மண்ணெண்ண வாங்க  செல்லும்போது.. போன மாதம்  தங்கமான தாயின் தங்கமான மகனை சந்தித்த பாக்கியம் அம்மாவின் படம் போட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கண்ணில் பட்டது.அன்று மாலையில்  ஐஸ் பெட்டியில் உறங்கி கொண்டிருந்த பாக்கியம் அம்மாவின்  பூத உடலுக்கு மலர்மாலை வைத்து கால் பாகத்தில் நின்று வணங்கி இடுகாடு வரைக்கும் சென்று வழியனுப்பி வைத்தான் தன் தங்கமான தன் அம்மாவை சந்திக்க......


செவ்வாய் 23 2021

பிறந்தநாள் காணும் இராவணனுக்கு வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள்!!

 


மீ.ப.
என்னாது இராவணனா ? ஏங்க நீங்க யாரு ? புள்ளைக்கு அப்பாவை வரச்சொல்லுங்க ஏதையாவது ஒரு பேர வெச்சுட்டா அப்புறம் மாத்த முடியாது பார்த்துக்கோங்க...!!!
பிறந்த கையோடு மருத்துவமனையில் பெயர் எழுதி கொடுக்கும் படிவத்தை இவன் தந்தை தோழர் பெருமாள் கொடுக்கும்போது மேற்படித்தான் கேட்டார் அந்த பெண் அலுவலர்!!
'மேடம் நான்தான் பிள்ளைக்கு அப்பா '
ஏன் என் பிள்ளைக்கு இராவணன் என்று பெயர் வைக்க கூடாதா என கேட்க,,!
அட என்னங்க நீங்க இராமாயண கதையில சீதையை கடத்திக்கொண்டு போனவன் தானே இராவணன் போயும்போயும் அவன் பெயரை பிள்ளைக்கு சூட்டலாமா??
நல்லது,,!! நீங்களே சொல்லிட்டீங்க இராமாயணம் கதைதான்னு சரி அந்த கதைப்படியே பார்த்தாக்கூட ..!
இராவணன் தன்னை விரும்பாத ஒரு பெண்ணை தொட்டாலே தலை சுக்குநூறாகி விடும் என்று இருக்கிறது..!!
அதன்படி பார்த்தால் சீதையை தொட்டவுடனேயே இராவணன் தலை வெடித்திருக்கவேண்டுமே.!!??
இப்போ சொல்லுங்க சீதையை இராவணன் கடத்தினானா?? இல்லை
இராவணன் மீது மயங்கி சீதையே அவனை கடத்த சொன்னாளா?? அதுபோக இராவணன் அய்யோக்கியனாக இருந்திருந்தால் சீதை எப்படி கற்ப்போடு வந்திருக்க முடியும் ??
என பெருமாள் கேட்க...!!
தேவையில்லாம வாயை கொடுத்துவிட்டோமோ என்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு இருந்த அலுவலரிடம் பெருமாள் சொன்னார்... மேடம்....!!
வாலி'யை பின்னாலிருந்து கொன்ற துரோகி! மனைவியின் கற்பை சோதிக்க தீயில் இறக்கிய கொடுரன் இராமன் கதைதான் இராமாயண கதை..!!
அதுமட்டுமில்லாமல் இராமாயண கதை ஆரிய திராவிட போரின் பிம்பம்தான் என பல்வேறு வரலாற்று ஆராய்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள் எனவே கதை கதையாகவே இருந்திட்டால் பரவாயில்லை , ஆனால் கதையில் வரும் இராமனை கடவுளாக்கி அதையே அரசியலாக்கி இன்றைக்கு வரைக்கும் ஒரு இனத்தின் மீது அட்டூழியத்தை அரங்கேற்றி வரும் நாட்டிலே ...!!
இராமன்கள் ஏராளமாய் பிறக்கிறார்கள் !! அரிதாகத்தான் இராவணன்கள் பிறக்கிறார்கள்!! என சொல்ல,, அலுவலர் கேட்டார் இப்போ நான் என்னங்க செய்ய...!!
என் பிள்ளைக்கு நான் எழுதிக்கொடுத்த #இராவணன் என்கிற பெயரையே பதிசெய்து கொடுங்கள் என்றார் பெருமாள்!!
அப்படி பேரு வைக்கவே பெரும் விவாதம் நடத்தியது இந்த பிள்ளைக்குத்தான்!!
எனவே இன்று பிறந்தநாள் காணும் எங்கள் இராவணனுக்கு
வாழ்த்துக்கள்
,,
வாழ்த்துக்கள்
.!!
குழந்தை மற்றும் நிற்கிறார் இன் படமாக இருக்கக்கூடும்
பீனிக்ஸ் பறவை, Chandran Veerasamy மற்றும் 686 பேர்
157 கருத்துக்கள்
84 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

திங்கள் 22 2021

உலக மகா பொய்....!!!!!!!!!

 





உலக மகா பொய்

என்ன என்பது  தெரியுமா..?

உங்களுக்கு  தெரியாது..

தெரிஞ்சா நீங்க ஏன்?

நடிகனுக்கும் நடிகைக்கும்

ஓட்டு போட்டு இருப்பீங்களா??


அந்தப் பொய் இதுதான்

பொய்யிலே வளர்ந்து

பொய்யாலயே ஆட்சிக்

கட்டிலில் அமர்ந்து

ஆட்டம் போடுற மோடி

வகையாறாக்கள் மாதிரி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்

நாட்டுல தேனாறும் பாலாறும்

ஓடும் என்று அள்ளி

வீசுவதுதான்...................



இதில் இன்னொறு பொய்

நல்லவன் வாழ்வான் என்பது.......


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...