பக்கங்கள்

சனி 30 2015

பெண் போலீஸ் .எப்போது ஆண் போலீசா..ஆனாள்..!!!



“மவனே..  எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தா...”
படம்-viruvirupu.com
  அவள் அவனைப் பார்த்தாள்
அவளின் பார்வையில் தன்
பார்வை சந்திப்பதை தவிப்பதற்க்காக
தலை குனிந்து தரையை
பார்த்தான்.அவளை திருட்டு
பார்வையால் பார்த்தபோது
தலையில் கொண்டையும் தன்னைப்
 பார்க்கும் கண்களும் அதோடு
 காதில் தோடும் இல்லை என்றால்.................

இருக்கையில் அமரந்த பிறகு
அவன் பெயரைக் கேட்டாள்
அவன் தலை நிமிர்ந்து
அவளை பார்க்க நிமிர்ந்த
போது அவன்  பெயரைச்
சொல்லி  அவன் மனைவி
கொடுத்த புகார் மனுவை
 நீட்டினான் பாவி அங்குள்ளவன்.

அவள் படித்தாளோ இல்லையோ
அருகிலிருந்த கம்பை எடுத்து
விலாசி தள்ளி விட்டாள்.
அவள் அடிப்பதை பார்த்ததும்
அவன் வாய் பிளந்து நி்ன்றான்

இப்போது அவன் அவளை
ஆச்சரியமாய் பார்த்தான் கண்
சிமிட்டாமல்...பூ...போன்ற
கைக்கு இவ்வளவு பலமா...?

இப்போது அவள் அவனை
பார்த்தாள்... தனது போலீசு
லத்தியை   சுழற்றிய படி
அந்த லத்தியை நீட்டி
தொலச்சு பிடுவேன் தொலச்சு

 இப்போது அவனுக்கு அவள்
அருகில் நிற்கும்  தன்
மனைவி தெரியவில்லை அவன்
மனைவி அவனைப் பற்றி
சொல்லும் போதும் அவள்
பேசுவதை கேட்டு  அவள்
தன்னை பார்ப்பதையும் தன்னை
பார்த்துக் கொண்டே தன்
 மனைவிடம் பேசுவதையும் ஆச்சரியமாய்
ஆர்வமாய் கவனித்தான்.. பெண் 
போலீஸ்... எப்போது ஆண்
போலீசா ஆனாள்.....என்று......!!!
சிந்தித்தான் சிந்தித்தான் திரும்பவும்
அடி வாங்கும்  வரை.......!!!






வெள்ளி 29 2015

இரவில் ரெண்டும் கெட்டான் நிலை....

படம்-vivinrubusdurai123.blogspot.com


இரவில்........
உடல் முழுக்க
போர்வையை போர்த்தி
படுத்தால் மூச்சு
திணறுகிறது. அதனால்

போர்வையை விலக்கி
கழுத்துவரை போர்த்திக்
கொண்டு படுத்தால்
கொசுப் படைகள்
காதுகளையும் மூச்சு
பாதைகளையும் திணற
அடிக்கிறது.. இதுதான்
ரெண்டும் கெட்டான்
நிலையோ...........????

வியாழன் 28 2015

அராஜகத்துக்கு மறுபெயர் ஜனநாயகம்

படம்-மகஇக..


வீதி வழி போய்க்கொண்டு இருந்த பேனா கட்சிக்காரர் ஒருவர். போகும் வழியில் தன் நண்பரும் போலிகளின் ஒன்றான இடது கட்சியின் தோழரான ஒருவர் கொடியுடன் தனியாக நிற்பதை பார்த்துவிட்டு. அவரை நோக்கி வந்தார்.

இடது கட்சியின் கொடியுடன் நின்றவரும் தன் நண்பர் தன்னை நோக்கி வருவதைக் கண்டு முகம் மலர்ந்து.

“ என்னது இந்தப் பக்கம்” என்றார்.

அவரும், பதிலுக்கு.“ நீங்க உங்க கட்சி கொடியுடன் தனியாக நிற்பதைப் பார்த்து விட்டு போகலாம் என்று இந்தப் பக்கம் வந்தேன் ” என்றார்

“ நண்பர்க்கு இன்னும் நக்கல் அடிக்கிற பழக்கம் விட்டுப்போகவில்லை போலிருக்கு ” என்றார்.

தாங்களும், வெளிநாட்டுக்காரனிடம்  கேட்க வேண்டிய கேள்வியை உள்நாட்டு காரனிடம் கேட்கும் பழக்கம் இன்னும் விட்டுப் போகவில்லை  போலிருக்கு” என்றார்.

அய்யா சாமி... உங்களிடம் வாய் கொடுக்க முடியாது சாமி” என்றுவிட்டு சிரித்துக் கொண்டார்

சில நிமிடங்கள். தங்கள் தொழில், குடும்பம், போன்ற விபரங்களை பரிமாறிக் கொண்டுவிட்டு..மீண்டும் நடப்பு விசயத்துக்கு வந்தனர்.

நண்பர் மட்டும் கொடியுடன் நிற்பதைக் கண்டு, மற்றவர்கள் யாரும் குறித்த நேரத்துக்கு வருவதில்லையா...? என்று கேட்டார் பேனா கட்சிக்காரர்

அதை ஏன்? கேட்க்குறீங்க.... பத்து மணிக்கு கூட்டம் என்று முடிவு செய்தால்..கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு, மணி பதினொன்னாவது  இப்ப வரைக்கும் ஒருத்தரும் வரவில்லை..என்பதிலிருந்து..  நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்றார்.

அப்போ..உங்க கட்சியில்  ஜனநாயகம் பூத்து குலுங்குதாக்கும்” என்றார்.

உங்க“பேனா கட்சியில் ஜனநாயகம்  எப்படி  பூக்குது..??

உங்க..கட்சியில இருக்கிற மாதிரி...இங்க பூத்து குலுங்க வில்லை... பத்து மணி என்று முடிவு செய்யப்பட்டால்... பத்தரை.. முக்கால் மணிக்கெல்லாம் ஒவ்வொருத்தாரா வந்து சேர்ந்திடுவாங்க  ” 

 இக்கரைக்கு அக்கரை பச்சைதான் போலிருக்கிறது..என்றார்.


அந்த கரை பச்சை எல்லாம் எனக்கு தெரியாதுங்க..... குறிப்பிட்ட நேரத்துக்கு வராததும் ஒரு அராஜகம்தான்  என்று தெரிவித்து விட்டு விடை பெற்றார் பேனா கட்சிக்காரர்.

புதன் 27 2015

பெரிய மனிதரின் தீர்ப்பை மாத்தி சொன்ன ஊர் நாட்டாமை...

குன்ஹா க்கான பட முடிவு                   குன்ஹா க்கான பட முடிவு                                 குன்ஹா க்கான பட முடிவு
படம்-tamil.oneindia.com
முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட ஒரு வீட்டின் சொந்தக்காரர், சமையல்காரியை அழைத்து தோட் டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை பிடித்து சமைக்கச் சொன்னார்களாம். தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து அடித்து சமைத்த பெண்ணுக்கு அதை சுவைக்க ஆசை ஏற்பட்டதாம். முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து சாப்பிட்டாளாம். மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம். மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள்.

நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது என்று வாதிட்டாளாம் அந்த பெண். வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம். விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு கால்கள்தான். இந்த பெண் எதையோ மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாராம். தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், வழக்கை ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம்.

அந்த பெண் என்ன பண்ணினாரோ? ஏது பண்ணினாரோ? தெரியவில்லை?! விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும் முயலுக்கு மூன்றே காலென்று தவறாக கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம்.

தீர்ப்பைக் கேட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும் சிரிப்போடும், திமிரோடும் ஊர் மக்களைப் பார்த்தா ராம்.

நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம் முழுசாக மறுநாள் தான் மக்களுக்கு தெரிய வந்ததாம்.

தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம் இரண்டு கால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள். எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான். எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம். இப்ப நீங்க சொல்லுங்க!

முயலுக்கு மூன்று கால்களா? நான்கு கால்களா? அந்த பெண் நிரபராதியா? குற்றவாளியா? அந்த பெண்ணு க்கு தண்டனை தரவேண்டுமா? வேண்டாமா?
## வாட்ஸ் அப் பில் பரவி வந்த
குட்டிக் கதை .

செவ்வாய் 26 2015

அப்படி இருந்தவர்கள்..இப்படி ஆகிவிட்டார்கள்...

படிக்க--பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?



மாயாண்டி------மாயாண்டித் தேவர்..ஆனார்

முத்துச்சாமி--முத்துச்சாமி பிள்ளை--யானார்

கோவிந்தன்.----கோவிந்த நாயுடு..வாகிப்போனார்.

அய்யணன்---- அய்யண அம்பலம்....மானார்

நாச்சி முத்து--நாச்சிமுத்துக் கவுண்டர்..ஆயினார்.

பால்ச்சாமி--- பால்ச்சாமி கோனார்....ராகிவிட்டார்.

மயிலேறி----மயிலேறி சேனையர்..ஆக மாறினார்.

மணிகண்டன்---- மணிகண்ட வன்னியர்...ஆகினார்.

இருளப்பர்---- இருளப்பசேர்வை...யாக மாறிப்போனார்

ராமகிருஷ்ணன்--- ராமகிருஷ்ணநாடார்....ஆகிவிட்டார்

ராமையா---- ராமையா ஆசாரி..ஆகினார்.

ராமச்சந்திரன்---- ராமச்சந்திர முதலியார்..ஆனார்

சீத்தாராமன்---- சீத்தாரமய்யர்..ராகிவிட்டார்.

பாலசுப்பிரமணியன்----பாலசுப்பரய்யங்கார்..ராயினார்.

சிதம்பரம்-----சிதம்பரச்செட்டியார்.....ராகிவிட்டார்...

 குறிப்பு-
 சாம்பான்,குடும்பன்,பகடை,.--இவர்களில்-- ஒன்று இரண்டு பேர்களைத் தவிர..மற்றவர்கள்  இந்த பட்டங்களை போட்டுக் கொள்ளாததால் அவர்கள் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை.



.
.

திங்கள் 25 2015

ஏன்? என்ற கேள்வி......

படம்-www.nambikkaimalar.com


உன்னால் முடியும்
உன்னால் முடியும்

என்னால் முடியும்
என்னால் முடியும்

நம்மால் முடியும்
நம்மால் முடியும்

என்று மூச்சுக்கு
முன்னூறு தடவை
மூச்சிறைக்க சொல்லி
விட்டு கடைசியில்

எல்லாம் அவன்
செயல் என்று
பினாத்துவது ஏன்????????????

ஞாயிறு 24 2015

இப்படி பன்றேங்களம்மா......!!!

படம்-tamil.thehindu.com

உனது அழைப்பில்
உனது உத்தரவு
கிடைத்த மறு
வினாடியில் புறப்பட்டேன்
நீ  இருக்கும்
இடத்தை  நோக்கி..............

வரும் வழியில்
தீய சக்திகளின்
சதியிலிருந்து வெற்றி
வாகை சூடிய
அம்மா அவர்கள்
தங்களுடை பொழப்பு
வாதத்தின் பிதா
மகன்களின் நன்றி
கடனுக்கு மாலை
சூட்டும் கையோடு
அம்மா மீண்டும்
அரியணையில் அமர
 படை சூழ
பவனி வந்தார்கள்


அம்மாவின் பக்தர்களும்
அம்மனை தரிசிக்க
வேண்டி கூட்டமாக
கூடி சாலையை
மறித்து  நின்று
என்னையும் மறித்து
விட்டார்கள் அன்பே...


நகர்வலத்தின் முன்
தப்பிக்க முடியாமல்
மாட்டிக் கொண்டேன்.

உன்னை பல
மணி நேரம்
காக்க வைத்ததினால்
என் மீது
ஏற்ப்பட்ட கோபத்தை
தனிக்க அம்மாவையும்
அம்மாவின் பக்தர்களை யும்
உன் வழக்கமான
அர்ச்சனை வசவுகளால்
திட்டி ஆற்றிக் கொள்.

அடிமைகளின் அம்மாவையும்
அம்மாவின் பக்தர்களையும்
இப்படி பன்றேங்களம்மா
என்று..........................



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...