பக்கங்கள்

சனி 27 2014

அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்..........


படம்--பாரத்ரத்னா.. 

காங்கிரசின் ஊழல் தயவால்  ஆட்சிக்கு வந்தது பாரதீய் ஜனதா கட்சி. அந்தக் கட்சி மற்ற கட்சிகளை மாதிரி ,அந்தக்கட்சிகளைவிட தொழில்நுட்ப உதவியுடன்..  தேர்தலில்  பொய்யான வாக்குறுதி அள்ளி வீசி வாக்காளர்களை  மோசடி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் . அந்தக் கட்சியை வழி நடத்தி வந்தவர்கள் சொன்னார்கள்.

கடந்த அய்ந்து தலைமுறையாக ஆட்சியை கைப்பற்றுவதற்குத் போராடினோம் என்று...., அப்படி போராடியவர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்வார்களோ? அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முதல் வேலையாக எல்லா அதிகார உயர் பதவிகளில் தங்கள் இனமான உயர் பார்ப்பனர்களை நியமித்தார்கள். நீதி வழங்கும் நீதிபதிகளின் தேர்வு முறையை மாற்றியமைத்தார்கள். இதுபோல பலப்பல....

 மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்று ஏட்டளவிலும் வாயளவிலும் இருப்பதை கூடிய விவைில் சனாதனம் நிரம்பிய இந்து (பார்ப்பனர்கள்) தேசம் என மாற்றியமைப்பார்கள்.

படிப்படியாக மாற்றியமைக்கும் வேலைகளில் ஒன்றதான். பார்ப்பனர்களிடையே உயர்ந்தவரும், அவர்கள் சொல்லிக் கொள்கின்ற சுதந்திரத்தை காட்டிக் கொடுத்த தீரரும். போலிகள் உள்பட பல கட்சி ஆதரவில் நல்லாட்சி செய்ததாக வாஜ்பாய்க்கும் சனாதன தர்மத்தை ஊரெங்கும் பரப்புதவதற்க்காகவும் அந்த சனாதனத்தை பாதுகாப்பதற்கு சனாதன மகா சபையை தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்கும். “பாரத்ரத்னா” விருது வழங்கி கௌரவிக்கிறார்கள்.

இதிலிருந்து தெரிவதென்ன ,அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்.

மோசமான கட்சியில் இருக்கும் சரியான நபர்க்கு கொடுத்த விருதைப் பாராட்டியும், மோசமான சனாதன தர்மத்தை விதைத்த மோசமானவர்க்கு வழங்கிய விருதை எதிர்த்தும், ஜனநாயகம், மனிதநேயம்.,கத்திரிக்கா, புடலங்கா, மதச்சார்பற்ற நாடு, பெரியார் பிறந்த  பூமி, அரசியல்  சட்டத்தை வகுத்தவர் அம்பேத்கர் என்று பலப்பல போதையிலே வீழ்ந்து கிடந்ததோடு.  நாண்கு வர்ணங்களை  நிலைநாட்டும் சனாதனம் ஆட்சியில்அமர எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டுட்டு கடைசி கட்டமாக தங்களுடைய கையாலகத்தனத்தால் புலம்பி தவிக்கிறார்கள்.....

 மாளவியாவுக்கு பரதரத்னாக்கு விருது கொடுத்துவிட்டு.... அடுத்ததாக. வில்லாளன்  ராமனுக்கு பாரத்ரத்னாவிருது  அவர்கள் கொடுப்பார்கள். அப்போது  எந்த  புலம்பலும் இருக்காது.


வெள்ளி 26 2014

அந்தக் காலத்து அரசியலாளர்கள்.. சொன்னது..

படம்-
சமூக வளர்நிலைப்படி
தோன்றியது முதலாளி 
வர்க்கம் அந்த முதலாளி
வர்க்கத்தை நிலை
நிறுத்துவதற்க்காக
வந்தவர்கள் அரசியலாளர்கள்.

அன்று அந்த முதலாளித்துவ
அரசியலாளர்கள் சொன்னார்கள்
பெரு முதலாளிகளுக்கு வரி
விதித்து அந்த வருவாயில்
மக்களுக்கான சமூக நலத்
திடடங்களை அமுல் படுத்துவதே
மக்கள் நல அரசு என்று.......

இன்று..........
சுரண்டலைத் தொடர்வதற்கும்
சுரண்டலை பாதுகாப்பதற்கும்
இயங்கும் அரசைமைப்பிற்க்கே 
மக்கள் நல அரசாகிப்போனது .

புதன் 24 2014

அந்த கிருஷ்ணனுக்கும் இந்த கிருஷ்ணனுக்கும் உள்ள உறவு


கீழ் வெண்மனி தியாகிகளுக்கு வீர வணக்கம்
சாதீ... படம் பார்க்க---http://www.vinavu.com/2010/12/28/casteism-in-india-sketches/

“நால் வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்றான். கூடவே., கடமையைச் செய் பலனை (கூலியை) எதிர்பாராதே!! என்றான். கீதையின் நாயகன் கிருஷ்ணன்.

படைத்த நாலு வர்ணத்தின் கடைசியாக  காலில் பிறப்பதற்கு இடமில்லாததால் தரையிலே பிறந்த சாதி,  தாழ்த்தப்பட்ட சாதி,உழைத்த உழைப்புக்கு கூரிய கூலி கேட்டதால் வெண்மணியில் கூலிகளை தீயிட்டு கொளுத்தினான்( இரிஞ்சூர்) கோபால கிருஷ்ணன்.

அந்தக் கீதையின் கிருஷ்ணனின் சிலையை  காப்பாற்றிய  திப்பு சுல்தானைப்போல  இந்த கோபாலகிருஷ்ணனை காப்பாற்றியவன் பன்னையார்களின் தலைவனும் த.மா.கா.கட்சியின் நிறுவனனுமான கருப்பையா ..




செவ்வாய் 23 2014

வெளி மாவட்டத்தில் கொள்ளையடிக்க...மலைக்கள்ளன் & கோ . கம்பெனிக்கு அனுமதி


படம்- மனு செய்யுமிடம்.
ஒரு ஏரியாவில் திருடியவர்கள் கொள்ளையடித்தவர்கள் மாட்டிக் கொள்வோம், பிடிபட்டுவிடுவோம் என்ற கணக்கு வழக்கில்  திருடும் ஏரியாவை மா்ற்றிக் கொள்வார்கள். இதற்க்காக இவர்களுக்கு எந்த நீதி மன்றமும் சரி, கட்டப் பஞ்சாயத்து போலீசும் சரி எந்த லைசென்சும் வெளிப்படையாக வழங்கியது கிடையாது.

இனிமேல் இவர்களுக்கும் கொள்ளையடித்த வழக்கில் இவர்களின் குருப்பின் மேல் வழக்கு இருந்தால். இவர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு ஒரு முன்னோட்டமாக மதுரை உயர்நீதிமன்றத்தில்   கிரானைட் கொள்ளைக்கார மலைக்கள்ளன் அன்ட கோ கம்பெனிக்கு வெளிமாவட்டத்தில் கொள்ளையடிக்க லைசென்ஸ் வழங்கியுள்ளார் ஒரு நீதிபதி..

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மலையையே  இல்லாமல் கொள்ளையடித்த மலைக்கள்ளன் கம்பெனியின் பங்குதாரர் ஒருவர் கிரானைட் கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களால் கொள்ளைத் தொழிலை நடத்த முடியவில்லை. அதனால் கொள்ளை அடித்த மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்தில் மலைக்கள்ளன் அன்ட.கோ கம்பெனிக்கு கொள்ளை அடிப்பதற்க்காக அனுமதி வழங்க வேண்டும் என்று மனு செய்தார்.

 இந்த வழக்கை விசாரித்த  மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி  “ வழக்கு நிலுவையில் இல்லாத  வெளிமாவட்டத்தில்” மலைக்கள்ளன் அன்ட. கோ கம்பெனி வங்கிக் கணக்கு தொடங்கவும், கிரானைட் கற்களை கொள்ளையடித்து ஏற்றுமதி செய்யவும்  உத்தரவு அளித்தார்.

மலைக்கள்ளன் அன்டகோ கம்பெனியின் மனுவுக்கு அரசு பதில் அளிக்கவும் உத்தரவு இட்டார்.

இந்த வழக்கில் “மனித உரிமை பாதுகாப்ப மையத்தின் இணை செயலாளரும், வழக்குரைஞமான வாஞ்சி நாதனை ஒரு மனுதாராக ஏற்க மறுத்துவிட்டார்.

மதுரையிலிருந்து சென்னைக்கு போக ஒரு வழியா இருக்கிறது என்பது மாதிரி, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கிரானைட் கொள்ளை குறித்து  விசாரனை செய்து அதன் அறிக்கையை தாக்கல  செய்ய தனி அலுவலராக முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியாளரான் திரு.சகாயத்தை தனி அலுவலராக நியமிக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிற வேளையில்..

பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிட்ட கதையாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர். அதையும் எதையும் தெரியாதவர்போல் கிரானைட் கொள்ளை மலைக்கள்ளன் அண்ட கோ கம்பெனிக்கு வெளி மாவட்டத்தில் கொள்ளையடிக்க அனுமதி வழங்கியுள்ளார்.



இனி லைசென்ஸ் இல்லாத திருடர்களும் கொள்ளைக்காரர்களும் லைசென்ஸ் பெ்ற்று கொள்ளை அடிப்பதற்கு மனு செய்து கொள்ளலாம்.
கிரானைட்-ஊழல்

திங்கள் 22 2014

அம்மா உணவகம் வந்தக்கதை தெரியுமா..உங்களுக்கு???

படம்-


விண்ணை முட்டும்  கட்டிடங்களும், மால்களும், நவீன கார்களும் செல்பேசிகளுமாக மின்னும் சென்னை நகரத்தில்.

எப்போதும் இல்லாத அளவுக்கு  ரோட்டோர கையேந்தி பவன்களும், கூழ் விற்கும் பெண்களும்  புற்றிசல்களாக முளைத்து வருவதைக் கண்டு..

பெருகி வரும் உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றுப்பசி திண்டாட்த்தை,  கொள்ளைக்கார அம்மாவுக்கு ஆதரவாக அறுவடை செய்யும் நோக்கத்தில்

கையேந்தி பவன்களை ஒழித்துக்கட்டும் மத்தியரசின் புட் ஸ்டாண்ட்ர்ஸ் அன்ட் சேப்டி ஆக்ட் -ன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்க்காகவும் கொண்டு வரப்பட்டதுதான் அம்மா உணவகம் ..

இத்தகைய கையேந்தி பவன்களில் காரை நிறுத்தி, சூப்பர் ஸ்டார்கள் திண்டதை சிலாகித்து  சிலீர்த்து எழுதிய பத்திரிக்கை முண்டங்கள்

சுரண்டப்பட்ட மக்களின் வறுமையை, துர்பாக்கிய நிலையாக  சித்தரித்து கருணை  அடிப்படையில் வழங்கும் ஒரு ரூபா இட்லிக்காக...மக்களை  போதைக்கு அடிமையாக்கி அவர்களிடமிருந்து, புடுங்கிய அம்மா சாராய வருமானத்திலிருந்தும், மின்சார கட்டண உயர்வு, வாட்வரி போன்ற எண்ணற்ற மறைமுகமாகவும், நேர்முகாவும் புடுங்கப்படும் வரி  பணத்தில் தான். அம்மா உணவகம் செயல்படுகின்றன என்பதை மறைத்து கொள்ளைக்காரியை அம்மாவாக . அத்தனை பேருக்கும் படியளக்கும் அன்னலட்சுமியாக காட்டி ஓலமிடுகின்றன்.


ஞாயிறு 21 2014

உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்....!!!!

படம்-nellaionline.net

110 கோடி மக்கள்
தொகை கொண்ட
இந்திய நாட்டில்
உழைப்பால் உயர்ந்த
கொள்ளையர்கள் யாரென்று
 உங்களுக்கு  தெரியுமா???

பெரும்பாலானவர்களுக்கு
உழைப்பால் உயர்ந்த
அந்த கொள்ளையர்களை
தெரிந்திருக்காது..........
தெரிந்திருக்கவும் வாய்ப்பு
இருந்திருக்காது..............

படியரிசியில் முனியரிசி
சோமாறும்  உள்ளுர்
ரேஷன்கடை பலசரக்கு கடை
திருடர்களைத்தான் அவர்களுக்கு
தெரிந்திருக்கும்...............

படியரிசியில் முனியரிசியென்ன
படியையே கொள்ளையிட்ட
கொள்ளையிட்ட கொள்ளையர்களை
அவர்களுக்கு..... தெரியாததுதான்.

அவர்கள்தான் தலைமுறை
தலைமுறையாக வறுமையின்
நிழலிலே வாசம் செய்பவர்
களாயிற்றெ.... அவர்களுக்கு
எப்படித் தெரியும்... உழைப்பால்
உயர்ந்த கொள்ளையர்களை..

தலைமுறை தலைமுறையாக
உழைத்து வீனாய் போனவர்கள்
அல்ல கொள்ளையர்கள்.......

கடும் உழைப்பால் உயர்ந்த
 கொள்ளையர்கள் அவர்கள்.
சாதரண கொள்ளயைர்கள்
அல்ல..

கோடிக்கணக்கான விவசாயிகளின்
தொழிலாளிகளின் உழைப்பையும்
அவர்களின் வாழ்வாதாரங்களை
கொள்ளையடித்த தனியார்
மயத்தின் தாராள மயத்தின்
நவீன  கோடீஸ்வர கொள்ளையர்கள்

அவர்கள்தான் இந்தியாவின்
முகேஷ் அம்பானி,லட்சுமி மிட்டல்
திலிப்சாங்வி, அஸ்ம் பிரேம்ஜி
பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி..





மனிதத்தை மீட்க அப்பீல் செய்யும் ம.க.இ.க செயலாளர்.!!!

தோழர் மருதையன்
படம்-தோழர் மருதையன்

வியட்நாமை அமெரிக்கா ஆக்கிரமித்து இருக்கும்போது அமெரிக்க சிப்பாய்களுக்கு ஊழியம் செய்யும் ஒரு கூட்டம் உருவாயிற்று. அமெரிக்க ஆக்கிரமிப்பை உலகமே எதிர்த்து போராடியபோது அமெரிக்க சிப்பாய்களை அண்டி பிழைத்தவர்கள், “ அமெரிக்காவே போகாதே” என்றார்கள். அவர்களை “விலைமாதர்களின் பிள்ளைகள் ”என்றார்கள் அந்நாட்டு போராளிகள்.








ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...