பக்கங்கள்

வெள்ளி 16 2015

தெருப் பெயர்களுக்கும், தெரு வாசிகளுக்கும் சம்பந்தமில்லை


பாதயாத்திரை
படம்-சித்திரவீதிகாரன்
படம்-tamil.oneindia.com
 

ஒரு தகவலுக்காக
மெயின்ரோட்டில்
நின்று நண்பரின்
பெயரைச் சொல்லி
முகவரி கேட்டேன்.

நண்பர் இருப்பது
அம்பேத்கர் நகர்
என்றார்கள்........

அம்பேத்கா் நகர்
சென்று பார்த்தபோது
நண்பர் நண்பருக்கு
நண்பர் உடன்
பெரியார் நகரில்
இருப்பதாக தகவல்
சொன்னார்கள்....

கூடவே வழி
காட்டலுக்கு ஒரு
சிறுவரை உடன்
அனுப்பி வைத்தார்கள்.

அங்கு சென்று
நண்பரைக் கண்டதும்
நான் திகைத்துப்
போனேன்........

காரணம் நண்பர்கள்
இருவரும் ஒரு
மாத யோக்கியவான்
சீருடையில் காட்சி
அளித்தார்கள்.......

தேடி வந்த
விபரத்தை சொல்லி
விட்டு நண்பரிடம்
சீருடையை காட்டி
முருகனுக்கா? ஐயப்பனுக்கா?
என்று கேட்டுத்
தொலைத்தேன.

பெரியார் நகரில்
இருப்பவர்கள் முருகனுக்கும்
அம்பேத்நகரில் வசிப்பவர்கள்
ஐயப்பனுக்கும் செல்வதாக
சீருடை வேறுபாட்டை
சுட்டிக் காட்டி
சொன்னார்..............

அப்போதுதான் எனக்கு
புரிந்தது தெருப்
பெயர்களுக்கும் தெரு
வாசிகளுக்கும் சம்பந்தம்
இல்லையென்று............


ஒருமாத யோக்கியர்கள் பற்றி.......மார்கழி மாத யோக்கியர்கள் வருகிறார்கள்...........!!!........&    11மாத அயோக்கியர்களும் 1மாத யோக்கியர்களும்




வியாழன் 15 2015

ஜல்லிக்கட்டு: வீர விளையாட்டு அல்ல....

படம்-https://veppurthirudan.wordpress.com
ஜல்லிக்கட்டு....
மனிதர்களின்
வீர விளையாட்டு
அல்ல............

அது..............
உண்டு கழித்த
ஆண்டைகளின்
 வேடிக்கை
 விளையாட்டு.

ஊத்திக் கொடுத்து
சீரழிக்கும்  அரசைப்
போல... ஆண்டைகளின்
 ஏகத்தாளத்தை பறை
சாற்றி  அடிமைகளுக்கு
வாக்கரிசி போடும்
ஜல்லிப் பயல்களின்
சாதி வெறி விளையாட்டு

ஜல்லிக்கட்டு
வீர விளையாட்டு
அல்ல..............
அது பஞ்சாமா
பாதகர்களின்
கொல வெறி
விளையாட்டு...

ஜல்லிக்கட்டு
 வீர விளையாட்டு
 அல்ல..........

புதன் 14 2015

காவியும்...மஞ்சளும் கூறும் புத்தாண்டு ...

Enact Law Check Honour Killing Says Ramagopalan
காவித்துறவி.
திமுக ஆட்சியில் புத்தாண்டு தினம் மாற்றப்பட்டதை இந்து தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்து தமிழ்ர்கள் கொண்டாடும் பண்புகளை.விழாக்களை கேலி செய்வதம், மேற்கத்திய  நாகரித்தை புகுத்துவதும் திமுகவின் தந்திரமாகும்

அதை செயல்படுத்தவே கலைஞர் தொலைக்காட்சியில் இந்துக்களின் பண்டிகைகளை விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி என்றும். மற்ற பண்டிகைகளை பெயர் குறிப்பிட்டும் வெளிப் படுத்துகிறார்கள்.

கருணாநிதியின் கொள்கையை அவரது குடும்பத்தினரும், கட்சியினருமே ஏற்ப்பதில்லை என்பது உலகம் அறிந்த உண்மை. இனியாவது இந்து மத உணர்வுகளுக்கு கருணாநிதி மதிப்பளிக்க வேண்டும்.
                                                            


மஞ்சல் துண்டு
அ.தி.மு.க.வின் தலைவி 2011ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக தி.மு.க. ஆட்சியிலே கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுக்ககு மூடுவிழா நடத்தப்பட்டது போல.. தமிழின அடையாளத்தை காட்டும்  தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக  அறிவித்த அறிவிப்புக்கும் மூடு விழா நடத்த ஏற்பாடுகளை அவசரமாக அவசரமாக செய்தார்

அதிமுக தலைவியின் அறிவிப்பு வந்த நேரத்திலே மிகச் சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும் அறிஞருமான் ஐராதவதம் மகாதேவன், “ இன்றைய பஞ்சாய்கங்களை? வான நூல்களை, பருவங்களின் சுழற்சிகளின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில் அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவை புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்டார்.

போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவை நடை முறைப்படுத்த, திமுக ஆட்சியிலே நிறைவேற்றப்பட்டது என்ற ஒரே காரணத்திற்க்காக ஜெயலலிதா ஆட்சியிலே மாற்றப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே,“ தரணியாண்ட தமிழருக்கு தை  முதல் தமிழ்புத்தாண்டு” என்று பாடியதையும் நிணைவு கூற விரும்புகிறேன். இந்த வரலாற்று உண்மையை மறைக்கத்தான் இன்றைக்கு ஆட்சியாளும் ஆட்சியாளர்கள் பெரு முயற்சி எடுத்து சித்திரைத் திங்களை தமிழ் ஆண்டின் தொடக்கம் என்று மாற்றி ஆணை பிறப்பித்து இருக்கிறார்கள்.

அவர்களின் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டு மக்கள் எந்த மரியாதையும் கொடுத்தாகத் தெரியவில்லை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் கூட இந்த உண்மையை புரிந்து கொண்டு, தைத் திங்கள் முதல் நாளைதான் தமிழர்களின் திருநாள், தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதி செய்து கொண்டு, கொண்டாடுகிறார்கள்.

எனவே, தைத்திருநாளை, தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாக சீரும் சிறப்புமாக கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.“ தை முதல்நாளே, தமிழர் புத்தாண்டு திருநாள்!”




செவ்வாய் 13 2015

இந்து மனுதர்மக் கொடுங்கோன்மைக்கு சில சான்றுகள்..

படம்--




இந்துத்துவம் ஒரு வாழ்க்கை முறையென்றும்.இமயம் முதல் குமரி வரை இந்திய மக்களை ஒன்றிணைக்கும் கலாச்சாரம் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ் .  பாரத கலாச்சாரம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறும் பார்ப்பன பயங்கரவாதம் இமயம்முதல் குமரி வரை எண்ணிலடங்கா மக்களை பலி கொண்டிருக்கிறது.


அவர்களின் அந்த  மனுதர்ம கொடுங்கோன்மைக்கு சில சான்றுகள்.

1930-களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிலிருந்த கேரளா- வைக்கம் நகர வீதிகளில்  நடப்பதற்குகூட தாழ்த்தப்பட்ட, ஈழவ சமுதாய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.   (அன்று பெரியார் தலைமையில போராட்டம் வென்றது.. அன்றைய காங்கிரசின் பார்ப்பன கும்பலையும் சங்கராச்சாரியையும் கதி கலங்க வைத்தது)

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிலிருந்த குமரி மாவட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்... சாணார் சமூகத்துப் பெண்கள் மார்பை மறைக்க கூடாது என்பது அரசாங்க சட்டம். இந்த கொடுமைக்கு எதிராக அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி  , மேற்சட்டை அணிந்தார்கள். “ சாணார் பெண்கள் மார்பை மறைப்பது மேல் வருணத்தாராகிய (பார்ப்பனர்) எங்களது மத உணர்வை புண்படுத்துகிறது” என்று பிரிட்டீஷ் ராணியிடம் புகார் செய்தார்கள் கேரளத்து பார்ப்பனர்கள்.


 குஜராத்தில் மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு நரோடா பாட்டியா எனும் அகமதாபாத் நகரத்தில் நடத்திய  இனப்படுகொலையில் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட முசுலீம் மதத்தை சேர்ந்த  மக்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் போல நாற்புறமும் சுற்றிவளைத்து எரித்துக் கொல்லப்பட்டனர்.


அரியானா மாநிலம் துலேனா-வில் மாட்டின்  தோலை உரித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஐந்து தலித்துகளை விசவ இந்து பரிசத்தின் குண்டர்களும் போலீசும் சேர்ந்து பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்தனர். இந்துக்களை பொருத்தவரை கோமாதாவின் உயிர் புனிதமானது என்று அறிக்கை விட்டான் கிரிராஜ் கிஷோர். “ 5 தலித்தகளை வெட்டிக் கொன்ற கொலைகாரர்களை கைது செய்யக் கூடாது” என்று ஊர்வலம் விட்டார்கள் ஜாட் சாதி வெறியர்கள். போலீசோ.. மாட்டை கொலை செய்தற்க்காக கொல்லப்பட்டு இறந்துபோன தலித்துகள் மீதே வழக்கு பதிவு செய்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திண்ணியத்தில்  தலித்துக்களின் “ நாக்கை அறு, காதில் ஈயத்தை ஊற்று” என்று கூறும் மனு நீதியை மிஞ்சும் தண்டனை . உழைத்து வாழும் தலித்துக்கு வழங்கப்பட்டது   அது “நாய் தின்னும் மலத்தை மனிதனின் வாயில் திணித்த தண்டனை.  எதற்கு இந்த தண்டனை என்றால் ”லஞ்சக் காசை நக்கி வயிறு வளர்த்த ஒரு  மேல் “ஜாதி” நாய் பீ தின்று வயிறு வளர்க்கும் ரகசியத்தை ஊருக்கே தமுக்கடித்து அறிவித்தற்க்காக...........


மீனாட்சிபுரத்தில் 1981இல் 1000 தலித் மக்கள் இசுலாமுக்கு மதம் மாறியபோது, ஆர்.எஸ்.எஸ்.அலறித் துடித்தது. உடனே... பாரத ரதனா விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ள  வாஜ்பாயி உடனே மீனாட்சி புரத்துக்கு வந்திறங்கினார். “ தலைக்கு ஒரு லட்சம் தருகிறோம். தாய் மதத்துக்கு திரும்புங்கள்” என்று ஆசை காட்டினார். “ உன் மதத்துக்கு வேண்டுமானால் விலை குறிக்கலாம், எங்கள் மானத்துக்கு விலை வைக்க முடியாது” என்று முகத்திலடித்தார்கள் மக்கள். அதனால்தான்    சட்டம் போட்டு மதமாற்றத்தை தடுக்க வேண்டுமென அலறுகிறது சங்க பரிவாரம் தலைமையிலான மோடி அரசு.

கூத்திரம்பாக்கத்தில் மக்கள். அரசாங்கத்தையே ஆட்டிவைத்தவரும் சங்கரராமனை கொலை செய்து விடுதலையான சங்கராச்சாரிக்கு அடிபணிய மறுத்தன 60 தலித் குடும்பங்கள். “ நாங்கள் வழிபட முடியாத கடவுள் எங்களுக்குத் தேவையில்லை, மதம் மாறுகிறோம் ” என்று அறிவித்தார்கள். இதனால் அமைச்சர் வந்தார், அதிகாரிகள் வந்தார்கள், சங்கராச்சாரி வந்தார்., ஆனால் கடவுளான  சாமி மட்டும் தலித் தெருவுக்கு வரவேயில்லை... மதம்மாறும் முடிவிலிருந்து மாறத தலித் மக்களை இந்து மத லாக்-அப்பில் அடைத்து வைக்க கடைசியாக போலீஸ் வந்தது. அன்று இந்து மதத்தின் ஜாதிய முகத்திரை கிழிந்து தொங்கியது.



இப்படியான பல இந்து மனுதர்மக் கொடுங்கோன்மைகள்  இது மட்டுமல்ல  அன்றிலிருந்து இன்றுவரை  இன்னும் அதிகமாக  இருக்கின்றன.


நன்றி! ---புதிய கலாச்சாரம் மற்றும் புதியஜனநாயகம் மாத இதழ்கள்.

திங்கள் 12 2015

சித்தப்பன் சொல்றத நம்பனும்லே........???


Sarathkumar Aismk LEADER-1.jpg
படம்-


சமத்துவ  மக்கள் கட்சி...பதவிக்காக ஆரம்பிக்கபட்ட கட்சி அல்ல.

மக்கள் சேவைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட கட்சி...

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...