க...க..கதை கேட்பதில் ஆர்வம்தான்...
தெரிந்தவர்களோ. தெரியாதவர்களோ,
நண்பர்களோ.வேறு சிலரோ..
கதை சொல்லும்
போது,. கதை
கேட்பதில் ஆர்வம்தான். ....
ஆனால் அப்படி
கேட்ட கதைகள்
அதிகாலை கனவில்
வந்து கொல...
கொலய்யா..முந்திரிக்கா...
என்பேரு கத்திரிக்கான்னு
மறக்காமல் வந்து
ஆட்டம் போடுவதிலிருந்து
தப்பிக்க முடியவில்லை..
அப்படி வரும்
கதைகளில் கதாநாயகன்
வேறு நபராக
இருந்தாலும்..ஏதோ.
.நான் அதில்
சம்பந்தபட்டு பக்கத்தில்
இருந்து பார்ப்பது
போல் தோன்றுகிறது....
இதுவும் காலத்துக்கேற்ற.
டிஜிட்டல் கனவோ..!!!!!!!!
என்னவோ...ம்ம்.......
கேட்ட கதை.. கனவில் வந்த நிலை..
நான் நாற்பது வயதில் இறந்துவிட்டேன்... என்னை உலுக்கி ஒரு பெண் அலறுகிறாள். பிற்பாடு தெரிகிறது அது என் மனைவி என்று முகம் யாரென்று தெரியவில்லை.. அருகில் தவழும் வயதில் ஒரு குழந்தை.. அது என் மகனாம்..
முகம் தெரியாத என் அப்பா..முகம் தெரிந்த என் அம்மா... அக்கா மற்றும் மருமகன் மருமகள் உற்றார் உறவினர் எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொருத்தாராக வந்து செத்துப் போன என் உடலுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறார்கள்... வந்தவர்களில் ஒருவர் எனது பாஸ் அதாவது நான் வேலை செய்த கம்பெனி முதலாளி அவரைக்கண்டதும் என் மனைவியானவள் என் குழந்தையை சுட்டிகாட்டி அழுகிறாள்.. அதிர்ச்சி அடைந்த என் முதலாளி என் உடலருகே வந்து பாவிப்பயலே என்றபடி என் தொடையில் ஊசியால் குத்துகிறார்... தமிழ்மணம் மாதிரி.. செத்துப்போனவன் எப்படி்? கத்திருப்பான்.????
நிஜத்தில் ஆ..ஆ.ஆ..வென்று கதறி சத்தமிட்டுஎ ஊசி குத்தின தொடையை பார்த்தேன்....... நிஜத்தில் எதோ கடித்தது.கனவில் ஊசி குத்தியது.
இது எப்படி...???