பக்கங்கள்

வெள்ளி 25 2013

கொண்ட கொள்கைக்காக பதவி துறந்தவர்...........




கொள்கைக்காக போட்ட கருப்பு துண்டை மாற்றி, 
மஞ்சள் துண்டைபோட்டுக்கொண்டு “ நானும் 
கம்யூனிஸ்டுதான் என்று வித்தாரம் பேசும்
வித்தகர்கள் நிறைந்த கூட்டத்திலே.......

தினந்தோறும் பெண்கள் மீது நடைபெறும் கொடுரமான 
முறையில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டுவதற்க்காக,மரணதண்டனை,ஆயுள் தண்டனை,
தனிமைச்சிறை, குண்டர்தடுப்பு சட்டம், ஆண்மை நீக்கம்,
விரைவானநீதி என்றுவிவாவதம் நடத்தும் தொலைக்
காட்சிகள்,பத்திரிக்கைகள், ஓட்டுக்கடசிகள்,அமைப்புக்கள்,
பிரபலங்கள், அரசு அதிகாரிகள்,சாதிவெறித்தலைவர்கள் 
போன்றவர்கள் நாளும் ஒரு கொள்கையும் நிமிடத்திற்கு
 ஒரு வேஷமாக போட்டு ஏமாற்றித்திரியும் சமூக 
பொருப்பில்லாத சுயநலவெறிபிடித்த, பணத்திற்க்காக 
மேடை போட்டுகொண்டு கொள்கைகளையும் நாட்டையும் 
விற்கும்அரசியல் வாதிகள் நிறைந்த  நாட்டிலே ............

பெண்களின் விடுதலைக்காக.பதவியை துறந்தவர் 
அண்ணல் அம்பேத்கார் அவர்கள்

போலி சோசலிச சிற்பி பிரதமராக இருந்த 
அமைச்சரவையில் சட்டஅமைச்சராக இருந்த 
அம்பேத்கர். பெண்களுக்கு உரிமை வழங்கும்
மசோதா  ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த 
மசோதாவை ஆதிக்கசாதிவெறிபிடித்த சாதி 
இந்துக்கள்.ஒரே அணியில் திரண்டு கடுமையாக
எதிர்த்தனர்.இப்பொது தீ கொளுத்தி ராமதாசு 
தலைமையில் ஆதிக்கசாதிவெறியர்கள் 
அணிதிரண்ட மாதிரி...........

பெண்களின் விடுதலைக்காக இந்த மசோதாவை 
ஆதரிப்பதாக கூறிவந்த போலி சோசலிச சிற்பியும் 
கடைசி நேரத்தில் கைகழுவிவிட்டு துரோகத்தனமாக 
நடந்து கொண்டார். இதனால்..............

பெண்களின் பிரச்சனைகளுக்காக,உரிமைக்களுக்காக,
அவர்களின் விடுதலைக்காக கொண்டுவந்த 
மசோதாவை நிறைவேற்ற முடியாத்தால் அன்றே 
தன் அமைச்சர் பதவியை துறந்தார்.


இன்று அவரால் மேல்நிலை வர்க்கமாக நிலைநிறுத்திக்
கொள்ளும் தலித்துகளும்,நாட்டுப்பற்று,கொள்கைப்பற்று, 
புடலங்காய்பற்று என்று வாய்ப்பந்தல் போடும் எல்லா 
வகையான கூட்டமும் இன்று கொண்ட கொள்கைக்காக 
பதவியைத் துறக்குமா?........ 

செவ்வாய் 22 2013

திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை......கதை..(2)...



முன் தொடர்ச்சி----http://valipokken.blogspot.com/2013/01/blog-post_20.html

சொரக்கட்டை ஒன்று, பக்கத்து ஊரில் நடக்கும் திரு
விழாவுக்கு செல்வதற்க்காக, தன் பொண்டாட்டி 
சொரக்கட்டையிடம்.......

 அடியே. அடியே........ நான் திருவிழாவுக்கு போயிட்டு 
வர்ரேன்டி..எனக்கு சோறு கட்டி கொடுடீன்னு 
சொல்லிட்டு சோத்து பொட்டலத்துடன் திருவழாவுக்கு 
புறப்பட்டு சென்றது சொரக்கட்டை.......

சொரக்கட்டை போகும்போது. வழியில் சரியான மழை, 
மழையானமழை, பேஞ்சு ஊத்திபிடுச்சு..ஊத்தி. மழையில் 
நணைந்த சொரக்கட்டைஒதுங்குவதற்கு வழியில்லாமல், 
மாட்டு வண்டி செல்லும் வழிதடத்துப்பாதையில் அதாவது மாட்டுவண்டிப்பாதையிலுள்ள மணலில் புதைந்துகொண்டு 
இளப்பாறியது.

ஒருவழியாக மழையும் நின்றுவிட்டது. மழை விட்டதும் 
அந்த வழியாகவந்த மாட்டு வண்டி ஒன்று வந்தது. மாடு
களின் கால்களுக்குள் சிக்கி மிதிபடாமல் தப்பித்த தவளை, 
மாட்டு வண்டியின் சக்கரத்துக்கு தப்பிக்க முடியாமல் 
வண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போயி கிடந்தது
அந்த நேரம் உணவுக்காக அலைந்து திரிந்த கொக்கு 
ஒன்று குடல் தள்ளிப் போயி கிடந்த தவளையைக் 
கண்டு அதன் அருகில் வந்தது.

கொக்கு அருகில் வந்ததை, கண்ட குடல் தள்ளிப்போயி 
கிடந்த சொரக்கட்டைஅண்ணா, கொக்கு அண்ணா............... 
மன்னர் திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேலே 
கையைப் போட்டேன்.மன்னர் அம்பால குத்தியதால்
குடல் தள்ளிப்போயி கிடக்கிறேன்.அண்ணா, என்னய 
ஒன்னும் செஞ்சிறாதிங்க அண்ணா........... எனக்கு ஒரு 
உதவிமட்டும் செய்யுங்கண்ணாஎன்று கேட்டது 
சொரக்கட்டை,கொக்கும், மன்னர் பொண்டாட்டி மேல 
கையப்போட்ட சொரக்கட்டய  பெருமையாகவும் 
கொஞ்சம் பயந்தும் இருந்ததை காட்டிக்கொள்ளாமல்

என்ன, உதவிப் பன்ன்னுமுன்னு கேட்டுச்சு................

மாட்டுவண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போயி 
கிடப்பதை மறைச்சு..“ திருமலை நாயக்கர் 
பொண்டாட்டி மேல கையைப் போட்டதால் மன்னர் 
அம்பால குத்தி குடல் தள்ளிப்போயி கிடக்குறேன்னு, 
என் பொண்டாட்டிகிட்ட சொல்லி என்னய பார்க்க வரச் சொல்லுங்கண்ணா....என்றது.

கொக்கும் பறந்து போயி சொரக்கட்டையின் 
பொண்டாட்டிகிட்டே, இப்படி சொல்லியது.
“ ஓம் புருஷன்  திருமலை நாயக்கர் பொண்டாட்டி
 மேல கையை போட்டதால.... மன்னர் அம்பால 
குத்த்துப்பட்டு குடல் தள்ளிப்போயி கிடக்காரும்மா”........... 
ஒன்னையும் ஒங்க கூட்டத்தையும் பார்க்க வரச்
சொன்னாரும்மா............ என்றது கொக்கு.

மாட்டு வண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போனதை 
மறைச்சு ரெம்ப பெருமையாக திருமலை நாயக்கர் 
பொண்டாட்டி மேல கையைப் போட்டதால குடல் 
தள்ளிப்போனதாக உதார்விட்ட சொரக்கட்டை 
போல்தானுங்க,........ஆதிக்கச்சாதிவெறிப்பிடித்தலையும் 
கூட்டம் நாங்க ஆண்ட பரம்பரை என்று உதார் விடுவதும், அடக்கப்பட்ட.ஒடுக்கப்பட்ட. திருகுமாவளவன் போன்ற 
சாதிக்காரர்கள். ஆதிக்கச்சாதிவெறிக் கூட்டத்த எதிர்க்க துப்பின்றி.....நாங்களும் ஆண்ட பரம்பரை. ஆளும் 
பரம்பரை என்று சொரக்கட்டை மாதிரி உதார் 
விடுவதும், தன்க்கு கீழ் உள்ள  சாதிக்காரர்களையும். 
ஒரே சாதியிலுள்ள வரியவர்களையும் அடக்கி 
ஒடுக்கி எல்லா சாதிக்காரர்களும் 
இந்த சொரக்கட்டை மாதிரிதான் உதார் 
விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

  

ஞாயிறு 20 2013

திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை...........


முன்னுரை.....

ஆதிக்கசாதி சாதி வெறிக் கூட்டம் என்ன செய்யும் தனக்கு கீழ் 
உள்ள சாதிகளை அடக்கி ஒடுக்குவதோடு. தன்சொந்த 
சாதியைச்சேர்ந்த வறியவர்களையும் ஆதிக்க சாதிவெறியுடனே 
அடக்கி ஒடுக்கி ஆண்டுவரும்

அந்த ஆதிக்கசாதிவெறி கூட்டம் மாதிரியே, ஒடுக்கப்பட்ட,
தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் இருக்கும் சாதிவெறி.ஆதிக்க 
கூட்டமும் தனக்கு கீழ் உள்ள சாதியையும் தன் சாதியைச் 
சேர்ந்த வறியவர்களையும் அடக்கி ஒடுக்கி தன்னை 
மேலானவாக காட்டிக் கொள்ளும்.ஆனால் இந்தக் கூட்டம் 
தனக்கு மேல் ஆதிக்கம் செய்யும் கூட்டத்தை மயிரளவுக்குக்
கூட எதிர்த்தது கிடையாது. அவர்களின் காலை நக்கும். 
நக்குவதற்கு வாய்ப்பு இல்லையென்றால் வலியச் சென்று 
பல்ளிலிக்கும் ரெம்ப ஒட்டி உறவாடும். உதாரணமாக 
சொல்வதென்றால். தருமபுரியில் நடந்த நிகழ்ச்சிக்குப்பின் திருகுமாவளவன் ராமதாசுவிடம் பவ்வியமாக நடந்து 
கொளவது மாதிரி...............

திருகுமாவளவன் சாதியைச் சேர்ந்த  ஒரு கூட்டம்,
சிறுசுகளைத்தவிர ஆண்பெண்களைச் சேர்த்து அறுபது 
பேர் கொண்ட உறவினர்,மற்றும் குடும்ப உறுப்பினர்களை 
கொண்ட  கூட்டம் ஒன்று., எட்டு பேர் கொண்ட  ஒருகூட்டு 
குடும்பத்தை பல தொல்லைகளக்கு ஆளாக்கி தன்னுடைய 
ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டு வருகிறது.. ஆனால் இந்த 
அறுபது பேர் கொண்ட கூட்டம், அதே தெருவில் வசிக்கும் 
ஒரே ஒருஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைக்கண்டு,
வாய்பொத்தி.மெய்பொத்தி எது நடந்தாலும் தெரியாதமாதிரி 
நடித்துக் கொண்டு கூலைக் கும்பிடு போடுகிறது.

ஒரே தெருவில் ஒரே சாதியாக வசித்து வரும் அந்தக் 
கூட்டத்தின் ஆட்டம் பாட்டம் அதிகாரம் அந்த தெருவுக்குள் 
மட்டும்தான். வெளியில் , வேறு தெருக்களில் மூச்சு 
விடுவதுக்கூட தெரியாது.

 பல குடும்ப உறுப்பினர்களை கொண்ட அறுபது பேர் கொண்ட 
கூட்டம் அவர்களுக்கு நெருங்கிய உறவு கொண்ட,   ஒரு 
குடும்பத்துக்கு எண்ணிலடங்கா தொந்தரவு கொடுத்து சின்னபின்னமாக்கியது அந்த ஒரு குடும்பத் தலைவர்   
மாடு வளர்த்து பால் கறந்து வளர்ந்து வருவதை பிடிக்காமல், 
அந்த அறுபது பேர் கொண்ட கூட்டம், மாட்டு சானம் வீசுது,
 மாடு வளர்ப்பதால் கொசு கடி தாங்கமுடியவில்லை,  
மாட்டுத்தண்ணி என் விட்டுக்கு வருது என்று இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி அடிதடி சண்டையிட்டு 
போலீஸ் ஸ்டேசன் புகாரில் அறுபதுபேரும் கையெழுத்து 
போட்டு அவரை தொழில் செய்து வாழ விடாமல் செய்து 
விட்டார்கள். 

அறுபது பேர்களை எதிர்க்க முடியாத அவர் தன் வீட்டையும் 
மாட்டையும் உசிலம்பட்டி வகையாறாவைச் சேர்ந்த ஒரு 
ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவருக்கு அடிமாட்டு விலைக்கு 
விற்று விட்டு செத்துப்ப்போனார்.அதை வாங்கிய ஆதிக்கச்
சாதிக்காரோ வித்தவரின் மாட்டுத் தொழுவத்திலே தன் 
மாட்டையும் கட்டி மாட்டுத் தொளுவமாக்கினார். வித்தவர் 
மாட்டைவிட வாங்கியவர் மாடு தண்ணீராக கழியும் ஒவ்வொரு 
வீட்டின் முன்னும் பேளும் மூத்திரம் கழியும்.பாதையில் 
படுத்துக்கொண்டு நகராமல் சண்டித்தனம் செய்யும். இரவு 
வேளையில் ஒவ்வொரு விட்டுக்குள்ளும் புகும். 

இன்னொரு ஆதிக்க சாதி வாரிசாக காட்டிக் கொள்ளும் 
அந்த அறுபது பேர் கொண்ட கூட்டம்  சிறிய மூச்சுகூட  
விடுவது கிடையாது. ஆதிக்கசாதிக்காரரிடம் யாராவது ஒருத்தர் பவ்வியமாக சொன்னால் என்னாங்கடா........... ன்னுதான கேட்பார்
அடுத்து அறுபதுபேர் கூட்டம்  ஒன்னுமில்ல 
ஒன்னுமில்ல என்று மழுப்புவார்கள் பிறகு அதப் பத்தி மூச்சே விடமாட்டார்கள்....... 

ஒரு ஞாயத்துக்காககூட அவரை எதிர்த்துப்பேச துப்பில்லாத 
முதுகெலும்பு இல்லாத அறுபது பேர் கூட்டம்  ஒரே சாதியைச் 
சேர்ந்த எட்டு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதிக்கம் செய்து  
வீரத்தை காட்டிக் கொண்டு இருக்கிறது. எட்டு பேர்கள் கொண்ட குடும்பத்தலைவரோ தெருவைவிட்டு  ஓடிப்போகாமல் இடத்தை அடிமாட்டு  விலைக்கு விற்காமல்  திருகுமாவளவனின் 
கூட்டம் கொடுக்கும் இம்சைகளுக்கு-இன்னல்களுக்கு 
வருத்தப்பட்டு சோர்ந்து போகாமல் களத்திலே  நின்று 
அந்தக் கூட்டத்தை எதிர்த்து நேர்மையான  வழியிலே 
போராடிக்கொண்டு வருகிறார்.

 ஆதிக்கசாதி வெறியர்கள் தன்சாதி வறியவர்களிடமும் 
தனக்கு கீழுள்ள சாதிகளிடம் சாதிவெறிகாட்டி தனக்கு 
மேல் மற்றவர்களை வளரவிடாமல் தடுப்பது மாதிரி, 
தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் சாதிவெறி, அடக்கி ஒடுக்கும் 
வெறித்தனமும் இருப்பதும், மேல் சாதிகளை சேர்ந்தவர் 
ஒருவர் எவ்வளவுதான் தார்க்குச்சியை. கொண்டு குத்தினாலும் 
பெரிசு படுத்தாமல்  பொய்யாக மற்றவர்களிடம் தன்வீர 
பராமக்கித்தை புளுகி தள்ளும் திருகுமாவளவனின் கூட்டத்தை அம்பலப்படுத்த்தான் இந்த“ .திருமலை நாயக்கர் பொண்டாட்டி 
மேல் கையை போட்டதால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை கதைசொரக்கட்டை என்பது அது ஒரு வகையான தவளை...திருகுமாவளவனின்கட்சிக் கொள்கையைப் போல

                                                  தொடரும்.---

  

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...