பக்கங்கள்

வெள்ளி 19 2011

உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்!.!!

கந்துவட்டி,ரன்வட்டி,மீட்டர்வட்டி.இன்னும் என்னென்ன அளவுகள்
உள்ளனவோ , அத்தனை அளவுகளிலும்வட்டி வசூலிக்கும் தொழில்
நுட்பத்தை கண்டுபிடித்த பெருமையெல்லாம் யாருக்கு சேருமுன்னு
பாரத்தால்.அந்த பெருமை மதுரை மாவட்டம்,உசி லை வட்ட மற்றும்
தேனி மாவட்ட சேர்ந்த மேற்குப்பகுதியைச்சேர்ந்த ஆதிக்க சாதியைச்
சேர்ந்த பிரமலைக்கள்ளர்களையே  சேரும்.

இவர்கள் கண்டுபிடிப்பு இதோடு மட்டும் நிற்கவில்லை.உடன் பிறந்த
அக்காள் மகளை(சொத்து வெளியே போயிடக்கூடாதாம்)வயதுக்கு
வந்த சில நாட்களில் திருமணம் முடிக்கும் பழக்கத்தையும் அறிமுகப்
படுத்தியவர்களும் இவர்கள்தான்.அக்கா மகள் வயதுக்கு வந்து நீராட்டு
விழா நடக்கும் நாளில் கொட்டுமுழக்கத்துடன் சீர்வரிசையுடன் தெருக்
களில் ஊர்வலம் வந்து வெடிவெடிக்கும் பழக்கத்தையும் அறிமுகப்
படுத்தியவர்கள்  ஒருமுறைக்கு நான்கு முறை காணிவிழாநடத்துவதும்
அழைப்பிதழை சிறு புத்தகம் அளவுக்கு பெயர்களை சேர்த்து அடிப்பதும்
“மொய் நோட்டைத் திருப்பி பார்க்கவும்” என்று கொட்டை எழுத்துகளில்
அச்சடித்து வெளியிடுவார்கள்.தப்பித்தவறி மொய் செய்யாமல் இருந்து
விட்டால் அவர்கள் வீட்டுக்கு சென்று வசைமாரி பொழியும் வசவுகளை
கண்டுபிடித்ததும்  இவர்கள்தான்.

தாழ்த்தப்பட்டவர்களை நா கூசாமல் சாதியைச்சொல்லி திட்டுவதும்
இவர்கள்தான். இவர்கள் பரப்பிவிட்ட கண்டுபிடிப்புகள் ஏழை ஆதிக்க
சாதியினரிடம் அல்லாமல் எல்லா வகைப்பட்ட ஆதிக்க சாதியினர்
மற்றும் எல்லாவகை ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினரிடமும்
பழக்கவழக்கமாகிவிட்டது.

உசிலம்பட்டி மற்றும் மேற்குப்பகுதியில் பெண் சிசுக் கொலைக்கு
முதல் மூலகாரணம்  பிரமலைக்கள்ளர்கள் கண்டுபிடித்த தொழில்
நுட்பம்தான். ஒவ்வொரு திசைக்கும் ஒரு வரலாறு இருப்பது மாதிரி
இந்தப்பகுதியில் இருந்துதான் மற்ற பகுதிகளுக்கு பரவியிருக்கலாம்.

அன்மையில்கூட பத்திரிக்கையில் மதுரை மாவட்ட எஸ்.பி அவர்கள்
கந்துவட்டி பற்றி கடுமையாக எச்சரிக்கை விட்டுருந்தார் என்றால்
அதன் கொடுமை எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

சரி,இப்படிபட்ட நல்ல வல்ல பழக்கவழக்கங்களை ஆதிக்க சாதியை
சேர்ந்தவங்களே,கடைபிடிக்கட்டும்.அவுங்க சாதி குலத்தெய்வங்
களுக்கு குருபுசை செய்யட்டும். ஆடாட்டும்,பாடட்டும். அவுங்க
அருமை,பெருமைகளை ஊரு புராசொல்லட்டும் ஏன்? உலகத்துக்கே
பரப்பட்டும்.

ஆனால் சாதீயத்தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட ஏழை
எளிய மக்களும் ஆதிக்க சாதியினரின் பழக்கவழக்கங்களை ஏற்றுக்
கொண்டு,இவர்களும் அடுத்த வகையான ஆதிக்க சாதியாக தங்களை
வளர்த்துக் கொள்வதில்  பெருமையும் போட்டிபோடுவதையும் கண்டால்
வேதனையாக இருக்கிறது.

குற்ற பரம்பரையை ஒழித்தாக சொல்லி அவர்களின் சாதித் தலைவர்க்கு
குருபுசை நடத்தினால், ஆதிக்கசாதியினால் சாதித்தீண்டாமைக்கு
ஆட்பட்ட,இழிவுப்படுத்தப்பட்ட சாதிகளும் ஆதிக்க சாதியின் வழி
முறைகளை,பழக்கவழக்கங்களை  அப்படியே காப்பியடித்து பின்
பற்றுகின்றனர்.

தேவேந்திரகுலவேளாளர் என்று பெயரிட்டுக்கொண்ட பள்ளர் என்ற
தாழ்த்தப்பட்ட ஒருபிரிவினர். ஆதிக்கச்சாதி வெறியினால் கொல்லப்
பட்ட இம்மானுவேல் சேகரனுக்கு, சாதிவெறி குலதெய்வத்தின் குரு
புசை போன்றே  இம்மானுவேல் சேகரனுக்கும் குருபுசை செய்கின்றனர்


இவர்கள் வழியிலே சாதித்தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட அருந்ததி
அமைப்புகளும் வந்துவிட்டன. சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரரை
சாதியத் தலைவராக்கி   சாதிவெறி குலதெய்வம் போலவே குருபுசை
செய்துவிட்டனர்

இப்பவெல்லாம் யாரு சாதி பார்க்கிறா என்று கேள்வி கேட்கும் அன்பர்்
கள்  இந்த குருபுசையினால் எப்படி சாதிவெறி வளர்க்கப்படுகிறது.என்று மண்டயை கசக்காமல் புரிந்து கொள்ளலாம்.

தாழ்த்தப்பட்டஅமைப்புகளின் ஒருபிரிவான இம்மானுவேல் சேகரன்
பேரவையோ,புதிய தமிழகமோ,தேவேந்திர குலவேளாளர் சங்கமோ?

இன்னொரு பிரிவான விடுதலை சிறுத்தைகளோ,அம்பேத்கர் மக்கள்
இயக்கமோ?

மற்றொரு பிரிவான.அருந்ததியர் விடுதலை இயக்கமோ,ஆதித்தமிழர்
பேரவையோ, தமிழ்ப்புலிகளோ?-இவைகளெல்லாம் தனித்தனியாகவோ
அல்லது கூட்டாகவோ, சாதிவெறிக்கும்,சாதித்தீண்டாமைக்கு மூல
காரணமான வர்னாசிரமத்தை ஒழிக்கவோ ,சாதி ஒழிப்பு நடவடிக்கையோ
சாதி எதிர்ப்பு நடவடிக்கைகளோ, நடத்துவதில்லை.இனிமேலும்
நடத்தும் என்ற வாய்ப்பும் இல்லை. இவைகளெல்லாம் ஆதிக்க சாதி
வழிமுறைகளை போன்றே.ஓட்டுகட்சிகளிடம் தனது சாதி செல்வாக்கை
காட்டி பேரம் பேசவும்,தங்களின் செல்வாக்கையும் பலத்தையும்
உயர்த்தி காட்டவே. செயல்படுகின்றன.

ஆதிக்க சாதிவெறிப்போரில் பலியான,ஆதிக்க சாதிவெறியை
எதிர்த்து போராடிய தலைவர்களின் நினைவுதினத்தை கடை பிடித் தல்
சூளுரைத்தல், பிறந்தநாள் விழா போன்ற வழமையான பழக்கவழக்கங்களை
கைவிட்டுவிட்டன. புறந்தள்ளிவிட்டன.

புதிய ஜனநாகம் மாத இதழின் கூற்றுப்படி
“பிழைப்புவாதமே!தலித்தியமாகவும்,ஒட்ண்ணிகளே! தலைவர்களாகவும்
மாறிவிட்டன.

இனி வருங்காலத்தில்,காமராஜர் குருபுசை,அண்ணா குருபுசை,எம்.ஜியார்
குருபுசை.இப்படி சாதிவெறி குருபுசைகள் நடந்தாலும் வியப்பதற்கிலலை..

ஞாயிறு 14 2011

வெற்றிகரமான 65வது ஆண்டாக துரோகத்தினம்

தமிழ்நாட்டிலுள்ள செம்பட்டி வாரச்சந்தையில் விற்கப்படும் ஆடு
விற்பனையில் ,வெள்ளாடுகளை “டை” அடித்து கருப்பு ஆடுகளாக்கி
விற்பனை செய்வது மாதிரி, இந்தியாவில் காந்தியும்-காங்கிரசும்
செய்த துரோகத்தை மறைத்து வெள்ளயனை எதிர்த்து வீரப்போர்
புரிந்து போராடி சுசந்திரம் பெற்றதாக 65 ஆண்டாக புருடா விட்டு
வருகின்றனர் முதலாளிகளும், இவர்களுக்காக ஆளுகின்ற
ஆட்சியளார்களும்,எல்லாவித அயேக்கிய தனங்களும் நிறைந்த
அரசியல் கட்சித் தலைவர்களும்.

இவர்கள் சொல்லிக் கொள்கின்ற சுதந்திரதினத்தில் கூட சுதந்திரமாக
கொடியேற்ற முடியவில்லை.அவர்களே, அவர்களின் சுதந்திரத்தை
சுதந்திரமாக கொண்டாட முடியாத போது, மக்களை மட்டும்
சுதந்திரத்தை சுதந்திரமாக கொண்டாட விட்டுவிடுவார்களா?

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்கிற மாதிரி சுதந்திரம்
பெற்றதாக சொல்வோர் அரண்டு போயுள்ளனர். அதனை மறைக்க
இத்தனை பாதுகாப்பு, கெடுபிடிகள்.

சுதந்திர இந்தியாவில்இரண்டாவது காந்தியாக முன்னிருத்தப்படும்
அன்னா கசாரேகூட சுதந்திரம் இல்லையென்று தான் இரண்டாவது
சுதந்திரப்போர்,மூன்றாவது சுதந்திரப்போர் என்று பிதற்றுகிறார்
இது மாதிரி எத்தனை பேர் போர் அடித்தாலும் சுதந்திரம் மட்டும்
கிடைக்கப்போவதில்லை.

ஆயிரம் கட்டுகதைகளிலும் கட்டுரைகளிலும் கவிதைகளிலும்
சினிமாவிலும் நாடகங்களிலும்  தொலைகாட்சிகளிலும் சுதந்திரம்
பெற்றதாக கூப்பாடு போட்டு புலம்பி தவித்தாலும் உண்மையில்
சுதந்திரம் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

சுதந்திரத்திற்காக பலர் உண்மையாக தங்கள் இன்னுயிரை பலி
கொடுத்தது வீனர்களாலும் சுய்நல தம்பட்ட தலைவர்களாலும்
வீணடிக்கப்பட்டுவிட்டது.

ஆகஸ்டு15 சுதந்திரமில்லை,போலிச்சுதந்திரம் தான். அதிகார
மாற்றம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டி
யதில்லை.65 வருடமாக ஆட்சி செய்தவர்களின் ஒரு சில நட
வடிக்கைகளை நினைவுப்படுத்தி பார்த்தாலே உண்மை புரிந்து
விடும் இது போலிச்சுதந்திரம்தான் என்று.

மக்களை ஏமாற்றுவோரும், அவர்களின் வாரிசுகளும்,ஆண்டை
களும் உயர்அதிகாரிகளும் அவர்களின் பாதந்தாங்கிகளான
பதிதிரிகைகளும் ஒரு பொய்யை  65 வருடமாக விடாமல்
ஒப்பிக்கிறார்கள்.

ஒரு பொய்யை 65 வருடகாலமாக சொன்னால் உண்மையாகி
விடுமாம். அப்படி உணமையாகிவிடும் என்று அவர்கள் நம்பு
கிறார்கள்.

“வளர்க்கிறவனை  நம்பாதாம் ஆடு. ஆறுக்கிறவனைத்தான் நம்பு
மாம். ஏனென்றால் நாளைக்கு அறுக்கப்போகிற ஆட்டுக்கு
நிறைய கீரையும் இலைகளையும் போடுவதைக் கண்டு
ஆடு . நம்பிடுமாம். இதுமாதிரி அறுக்கிரவனை நம்பும் மக்கள்
விழிபபுனர்வு பெரும்வரை....

ஆகஸ்டு15 சுதந்திரத்திரைப்படம் 65 ஆண்டுகழித்தாலும் அரங்கு
நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டுதான் இருக்கும்

நல்லோர்களே! நேர்மையானவர்களே! உண்மையான தேசப்
பக்தர்களே! சுதந்திரத்துக்காக உழைத்த உழைக்கின்ற உத்தமர்களே!
பகத்சிங்கின் வாரிசுகளே! வெள்ளி விழாக் கண்ட ஆகஸ்டு15 போலி
சுதந்திரத்தினம் செஞ்சூரி அடிப்பதை தடுத்திட ஓரணியில் திரண்டுவீர்.

சுதந்திரத்தினம்! சுதந்திரத்தினம்.என்று வாய்கிழிய கதறுபவர்களே!
உங்களுக்கோர்  கேள்விகள்.

1.காந்தியும்-காங்கிரசும் ஒரு துரோக வரலாறு-பு.மா.இ.மு. வெளி
யீட்டுக்கு சப்பைக்கட்டு கட்டாத உங்கள் பதில் என்ன?

2.காட்ஒப்பந்தம்,அனுசக்தி ஒப்பந்தம்,இரானுவ ஒப்பந்தம் இவை
எல்லாம் யாருக்காக? மக்களுக்காகவா? நாட்டை மீண்டும்
காலனியாக்குவதற்க்காகவா?


உங்களின் மெளனம் கலையட்டும்valipokken.blogspot.com

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...