பக்கங்கள்

வெள்ளி 20 2015

கடவுள் படும் பா..டு..!!!!!!!.


நானே உன்னை படைக்காத போது
ஏன் மனிடா என்னை நீ படைத்தாய்?
மிக எளிதாய் படைத்துவிட்டாய்!
வகை வகையாய் வணங்கியும் விட்டாய்!
புல்லுக்கா?புல்லை திங்காவிடில் சாகும் மானுக்கா?
மானுக்கா மானை திங்காவிடில் சாகும் புலிக்கா?
அல்லது எல்லாவற்றையும் திங்கும் மனிதனுக்கா?
அல்லது அவனை திங்கும் நுண்ணுயிரிகளுக்கா?
சொல்!யாருக்கு நீதிவழங்குவாய்?
கடவுளாக இருந்துபார் என் கஷ்ட்டம் தெரியும்?
சுனாமி வரும் போது கண்டுக்காம இருந்த கபோதி!
பூகம்பம் வரும்போது பூ பறிக்கபோன பன்னாடை!
பஞ்சம் வரும்போது பாராமுகம் காட்டுமன பரதேசி!
வெள்ளம் வரும்போது வெட்டியாய் நின்ற வெண்ணெய்!
இப்படி வண்ண்டிவண்டியாய் திட்டை கேட்டு
‪#‎கடவுளாகஇருந்துபார்‬ என் கஷ்ட்டம் தெரியும்?
எல்லாம் எனக்கு தெரியும் என்று எளிதாக சொல்லிவிட்டாய்
”பை”யின் துல்லிய மதிப்பு கேட்கிறான்?
வாணம் எங்கு முடிகிறது என கேட்கிறான்?
முட்டையா கோழியா எது முதலில் என கேட்கிறான்?
பிறக்கும் முன்பு உயிர் எங்கே இருந்தது?
ஆதாமுக்கு ஏன் தொப்புள்?
என் மனைவிகளுக்கு ஜாக்கெட்டு தைத்த டைலர் யார்?
இறுதியாக என் இனிஷியல் என்ன என்பதுவரை?
விழிபிதுங்கி பேதியாவது எனக்கு மட்டும்தான் தெரியும்!
கடவுளாக இருந்துபார் என் கஷ்ட்டம் தெரியும்?
போலியாய் என் வேஷமிட்ட மானிடர்கள் கூட
ஆண்டு நூறு வாழாமல் ஓடிவந்து ஒப்பரிவைக்கின்றனர்.
கண் முன்னே புரோகிதன் கருவறையில் கலவி செய்ய
புலன்களை அடக்கி அசையா அஃறினை கல்லாய் நான்
என் பெயர் சொல்லி சகமனிதன் கழுத்தை அறுக்கும்போது
கைகள் இரண்டும் கட்டபட்ட்ட்ட கைதியாய் நான்
ஏன் என்னை கைவிட்டீர்:என்ற குழந்தையின் இறுதிமுச்சுக்கு
முந்திய பார்வையை நான் சந்திக்கும் கனம்
கூணி குறுகி வெந்து சாகிறேன்.
கடவுளாக இருந்துபார் என் கஷ்ட்டம் தெரியும்?
எல்லாம் படைத்தவன் என்று சொல்லிக்கொண்டே.....
சந்தணம்ம் நெய் இரத்தம் சதை என வகையாய் லஞ்சம் கொடுத்து
செய்யபோகிற பாவத்தின் மண்ணிப்புக்கு
முன்பதிவு செய்வதை தடுக்க இயலாமல் பிண்டமாய் நிற்பதும்....
பிரித்து, அடக்கி ,சுரண்டி .கெடுத்து,கொழுத்து திரியும்
கூட்டத்தின் சிறையில் கையறு நிலையில் நான் இருபதும்.
ஆன்மா இல்லாத உலகில் ஆன்மாவாக ஆசைப்பட்டு
அஞ்சுக்கும் பத்துக்கும் சொல்லும் சுவாஹாவுக்கு கட்டுபட்டு
சதுர்த்தி முடிந்தவுடன் கடற்கரையில் மிதிபட்டு
கடவுளாக இருந்துபார் என் கஷ்ட்டம் தெரியும்?
கடவுளாக இல்லை என்பது உண்மை அல்ல
கடவுளாக இருக்க முடியாது என்பதுதான் உண்மை!
கடவுளாக இருப்பது முட்டைக்கு முடிபுடுங்குவது
கடவுளாக இருந்துபார் அப்படி இருக்கமுடியாது என்று புரியும்?
— Ilangovan Balakrishnan உடன்

புதன் 18 2015

குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசம் பற்றி சிங்கிக்கு இ.மெயில்,

srirangam-byelections-cartoon
படம்-http://www.vinavu.com/2015/02/18/delhi-to-srirangam-byelections-results-bjp-status/



பிரியமுள்ள சிங்கிக்கு,.....உன் அன்பு சிங்கா அனுப்பிய இ.மெயில்.

 பிரியமுள்ள சிங்கி..நீ எனக்கு அனுப்பிய இ.மெயிலை படித்துப் பார்த்தேன். அதிலுள்ள விபரங்களையும் ... நீ ..கேட்டுள்ள  பெரும் சந்தேகமான மனிதனுக்கும் மனித குரங்குக்கும்  என்ன வித்தியாசம் என்பதையும் படித்து அறிந்தேன்.

நிற்க....  மனிதனுக்கும் மனித குரங்கிற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி ஒனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை ஒங்க ஊரில் பள்ளி கொண்டு தூங்கிறமாதிரி நடித்துக் கொண்டு இருக்கும் திருவரங்கனிடம்.. கேட்டும்

“ அந்த திருவரங்கனே மிரண்டு போயி”,..“ ஆத்தாடி ,நல்ல சந்தேகத்த கேட்ட போ” ..

“ புகுந்த வீட்டில போனவுடனே,  புகுந்த வீட்டின் சொத்துக்கள கொள்ள அடிச்சதுல, கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, பிறந்த  வீட்டுக்கு அடுத்தாண்ட உள்ள மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சதால..” காலியான புகுந்த வீட்டில் நடந்த கூத்த்துல... என் பக்தையோட பணபலம், அதிகாரபலம், எடக்குமொடக்கு தில்லுமுல்லு எல்லாத்தையும் பாத்துண்டு, என்னால வாய் திறந்து பேச முடியாம இருக்கேன்”.

இந்த லட்சனத்துல.  ஒனக்கு ஏற்பபட்ட சந்தேகத்த... என்னால தீர்க்க முடியாது. உன்னோட சிங்கா கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்க” என்று திருவரங்கனே கூறியதாக  குறிப்பிட்டு இருந்ததையும் அறிந்தேன் சிங்கி.

நீ அனுப்பிய இ.மெயிலை படித்ததிலிருந்து இந்த மெயில் அனுப்புகிற வரைக்கும் இடைவிடாமல்  ஓசித்து ஓசித்து பார்த்ததில் ” மனித குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசம்” என்னவென்று, திருவரங்கனின் பகுதியை கொண்டே கண்டுபிடித்துவிட்டேன் சிங்கி....

தொண்டையை செருமி, மூளையை கசக்கி,  ரெண்டு கட்டு சொக்கலால் பீடியை புகைத்து, பாதிப் புகையை பக்கத்தில் இருப்பவர்களின் நண்மைக்காக வெளியே விட்டு, கொஞ்சோன்னு புகையை உள்ளுக்கு இழுத்து. அந்த கொஞ்சோன்னு புகையயை மூக்கின் வழியாக விட்டு , அரும்பாடு பட்டு சிங்கிக்காக இந்த சிங்கா கண்டுபிடித்த  ரகசிய விபரத்தை மெயில் அனுப்புகிறேன்.

மனிதனுக்கும், மனித குரங்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால். அது இதுதான்.சிங்கி.

“மனித குரங்கிற்கு பொட்டுக்கடலை.பொரிகடலை, நிலக்கடலை, கொய்யாப்பலம்.வாழப்பலம்  போன்ற பழங்கள் கொடுத்தாலும் அதை வாங்கித் தின்னுட்ட மனித குரங்கு, அதற்கு பரிகாரமாக.நன்றிக்கடனாக. விசுவாசத்த காட்டுவதற்க்காக மனித குரங்கெல்லாம் படையெடுத்து தேர்தல் பூத்துக்கு போயி, வரிசையில் நின்று ஓட்டு போடப் போகாது”.

ஆனால், மனிதர்களில், சிலர் ஒரு ஓட்டுக்கு அய்யாயிரம் ரூபா  துட்டு வாங்கிக் கொண்டும், மற்றும் சிலர். புல்லும் ஆப்புமாக சோம பானத்தையும், கூடவே. ரெண்டு துண்டு கறியும், ஒரு சின்ன எலும்பும் போட்ட குஸ்காவை, , பிரியாணி என்று எண்ணி..நாலுகால் பிராணி மாதிரி லபக்லபக்கென்று வயித்து டேங்கில கொட்டிவிட்டு. கொடுத்த துட்டுக்கும் ஊத்தின சாராயத்துக்கும் திண்ட பிரியாணிஎன்று ஏமாற்றி கொடுத்த குஸ்காவுக்கும்  வாங்கிய நன்றிக்கடனுக்காக, நேர்மைக்காக, பாசத்திற்க்காக, அன்புின் அடிமைக்காக, கூட்டத்தோடு படையெடுத்து கொலவபோட்டு ஆட்டம்பாட்டத்துடன் ரெம்ப சந்தோசத்தடன் தேர்தல் பூத்துக்கு போயி நெடுநேரம் கால்கடுக்க வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருவான்.

அம்மாவின் அதிரடியில் பேசமுடியாமல் ஊமையாகிப் போன திருவரங்கனை
கேட்டாலும்  இதைத்தான்  சொல்வான் சிங்கி.

கடைசியாக சிங்கிக்கு, பலர் பலவிதமாக சொல்வதைக் கேட்டு குழம்பிக் கொள்ள வேண்டாம் .


அடுத்து ... உன் இ. மெயில் கண்டு...........


இப்படிக்கு
உன் அன்பு சிங்கா..
தேதி--19/2


செவ்வாய் 17 2015

டெங்கு கொசுவின் சாதி பற்றிய ஒரு ஆய்வு...

கொசு
படம்-http://eluthu.com/


டெங்குவின் பிடியில் சிக்கி பத்துநாளில் ஒன்பது பேர் உயிரிழப்பு” என்று செய்தியை பற்றி படித்துக் கொண்டு இருக்கும்போதே  அருகில் இருந்த இருவருக்கு  கடவுள்,சாதியை படைத்தது  பற்றிய பேச்சு ஆரம்பித்தது.

இருவரில் ஒருவர் சாதி பிறந்த வரலாற்றைச் சொன்னார். ஆதியில் கடவுள் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், மார்பில் பிறந்தவன் சத்ரியன். தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் ..இந்த நாலு வர்ண சாதியை படைத்தவர் உலக முதற்க்கடவுளான கிருஷ்ண பரமாத்மா என்றார்.  கூடவே இந்த நாலு சாதிக்கு அடுத்ததாக பிறக்க  இடமில்லாததால் தரையில் பிறந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி முடித்தார்.

 முதலாவது நபர் சொல்லி முடிக்கும்வரை கேட்டுக் கொண்டு இரண்டாவது நபர். தலையை நிமிர்த்தி அங்கும்மிங்கும் பார்த்துவிட்டு அருகில்  சிறு பிள்ளை கள் யாருமில்லைஎன்பதை உறுதிப்படுத்திவிட்டு மெதுவான குரலில் சொன்னார்.

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் நாலு வர்ண சாதிக்காரன்களை விட தரையில் பிறந்தவன்தான் உண்மையிலேயே.. மனிதர்களின்  சூத்துக்கு. யோனிக்கும் பிறந்தவன்னு  எனக்கு தெரியுது..   

முதலாவது நபர். சற்று அதிர்ச்சியடைந்தவராக.... நாலு வர்ண சாதிக்காரர்கள் கடவுளால்  படைக்கப்பட்டவர்களாப்பா....

அதைத்தான் நானும் சொல்கிறேன். நாலு வர்ணத்து சாதிக்காரங்களெல்லாம் கிருஷ்ணபரமாத்மாவால் படைக்கப்பட்டவர்கள். பொறக்க இடமில்லாமல் தரையில் பிறந்ததாக சொன்னீர்களே அவர்கள் . மனித சூத்துக்கும் யொனிக்கும்  ஏற்ப்பட்ட இணை சேர்க்கையில்பெண்னின் வயிற்றிலிருந்து   தொடங்கி  யோனி  வெளியே வந்து  தொபக்கடின்னு தரையில் விழுந்தவர்கள். அதாவது நீங்கள் சொன்ன படி தரையில் பிற்ந்த சாதிக்காரர்கள்.

என்னப்பா.... கொஞ்சம்கூட நாகரிகம் தெரியாமல் இப்படி பச்சையாக சொல்ற...

இப்படி பச்சையா சொன்னாத்தானெ எனக்கும்...நீங்க என்ன சொல்ற விபரம் கிளியரா புரியும்.... அதுக்குத்தான் இப்படிச் சொன்னேன். 

இருவரும் அமைதியாக இருந்த இடைவெளியில் செய்தியை வாசித்துக் கொண்டு இருந்தவர் சொன்னார்.

நீங்க என்னாதான்  விஞ்ஞான விளக்கம் சொன்னாலும். இயற்கை விளக்கம் சொன்னாலும். சாதியை ஒழிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது.  பச்சையாக விளக்கம் சொன்னவர் தன் கையில் அமர்ந்திருந்த கொசுவை “டப்“பென்று அடித்ததைக் கண்டும்.  “ இப்படி கடித்துவிட்டு கண்இமைக்கும் நேரத்தில் பறந்தோடும்  கொசுவையும் ஒழிக்க முடியாது என்றார்.

நாலு வர்ண சாதியை படைக்கப்பட்டதாக சொன்னவர் “உண்மைதான் கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட சாதியை மனிதனால் ஒழிக்க முடியாதுசார். அது மாதிரி, கொசுவுக்கு எவ்வளவுதான் கொசு மருந்து மற்றும் புகை மருந்து அடித்தாலும் கொசுவை ஒழிக்க முடியலையே சார்.”

 மனிதர்களை நான்கு வர்ண சாதிகளாக படச்ச கிருஷ்ண பரமாத்மாதான்  இந்த டெங்கு கொசுவையும் படச்சு இருப்பாரு.... என்று விட்டு,  நாலு வர்ணத்த சொன்னவரிடம் டெங்கு கொசு படைக்கப்பட்டதா??..அல்லது பிறப்பிக்கப்பட்டதா?? என்று சந்தேகம் கேட்டார் பச்சையாக பேசியவர்.

படைக்கப்பட்டாலும் பிறப்பிக்கப்பட்டாலும் ரெண்டும் ஒன்றுதானே என்றார் செய்தி படித்துக் கொண்டு இருந்தவர்.

அப்படி இல்ல சார், படைக்கப்பட்டதென்றால்.அந்தமும் ஆதியுமில்லாமல் கிருஷ்ண பரமாத்மாவின்  அருளால் ஒரு நொடியில் உருவாணவைகள்தான் படைக்கப்பட்டவை, மனித இனத்தின் சூத்தும் யோனியும் இணைந்துஅதன் மூலம் அனு அனுவாக உருவாகி  மாதங்கள் கடந்து தரையில் வந்து விழுவது பிறப்பிக்கப்பட்டவை.....

ஓ....நீங்க...அந்த..அர்த்தத்தில் சொல்றிங்களா..???? என்றவர். நீங்க.. சொல்வதின்படி பார்த்தால் டெங்கு கொசுவும் கிருஷ்ண பரமாத்மாவால் படைக்கப் பட்டது.  டெங்கு கொசுவும் நாலு வர்ண சாதியில்தான் வருகிறது.

என்ன கொசு படைக்கபட்டதா..?  குப்பைகளிலும் சாக்கடைகளிலும் அல்லவா உற்பத்தி ஆகிறது. என்றார் கிருஷ்ணனின் நாலு வர்ணத்தை சொன்னவர்.

அப்படியா.... தாங்கள் எதைக் கொண்டு கொசு  கிருஷ்ண பரமாத்மாவால் படைக்கப்பட்டது என்று சொல்கிறிர்கள் என்று கேட்டார் பச்சையாக பேசியவர்..


டெங்கு கொசு எந்தெந்த வழிகளில்  பரமாத்மாவால் படைக்கப்படுகிறது  என்றால் நாலு வர்ண சாதிக்காரர்களை தலை,மார்பு, தொடை,.காலு  எ என்ற இடங்களில் படைத்தது மாதிரி சுத்தமான  ,சேமித்துள்ள, தேங்கியள்ள  தண்ணீர் நிலைகளில் இருந்தும், டப்பா,.டயரு, சிரட்டை,.குப்பைக போன்ற இடங்களில் முட்டையாக ஆசிர்வதிக்கப்பட்டு, அதிலிருந்து அக்னி பாகவானின் அனுக்கிரக பார்வையால் கொசுவாக, டெங்கு கொசுவாக படைக்கப்படுகிறது. டெங்கு கொசு படைக்கப்பட்டபின் நாலு வர்ண சாதிக்காரர்களைப்போல் சாதி வெறி அதாவது கொலை வெறி கொண்டு  தரையில் பிறந்தவர்களையும்,   நாலு வர்ணத்திலே உள்ள கீழ்நிலையுள்ள  உள்ளவர்களையும் கடித்து சின்னாபின்னப் படுத்துகிறது.

இதனால்தான் முன்னபே சொன்னதுபோல  கிருஷ்ண பரமாத்மாவால் படைக்கப்பட்ட நாலு வர்ண சாதியையும் ஒழிக்கமுடியாது. அதே கிருஷ்ணபரமாத்மாவால் புதிதாக படைக்கப்பட்ட டெங்கு கொசுவையும் ஒழிக்க முடியாது என்று..

இப்படி  செய்தியை படித்துக் கொண்டு இருந்தவர் சொன்னதைக் கேட்டதும் முதலாவது நபர். அமைதியானார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது நபரும்  பேச்சை நிறுத்திக் கொண்டார்..இவர்கள் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு மூன்றாவது நபரும் செய்தி பேப்பரை விட்ட இடத்திலிருந்து அமைதியாக படிக்க ஆரம்பித்தார்.

(கடைசியாக டெங்கு கொசு என்ன  சாதி என்று கண்டுபிடிக்கப்பட்டது.)







திங்கள் 16 2015

சிவன் ராத்திரி விரதம் தோன்றியகதை,




எங்க ஊரு சிவாவுக்கு
தை மாசி யில் உண்ட
உணவு செரிக்காமல்
வயிற்று வலி,வயிற்று
பொருமல் வந்தது..

செமியாக் குணத்தால்
சீரணகோளாறால் வந்த
வலியால் துடித்தான்

இதற்கு பரிகாரம் காண
பாட்டி வீட்டிற்கு சென்று
மருந்து கேட்டபோது
பாட்டி சொன்னாள்


இரவில் விரதமிரு
உண்ணா விரதமிரு
தூக்கம் வராது  அந்த
நேரத்தில் விழித்திரு
காலையில் பலன்
தெரியும் என்றாள்

பாட்டி வைத்தியத்தால்
சிவன் ராத்திரியில்
முழித்து உண்ணா
 விரதமிருந்து குனம்
கண்டான்.

அன்று முதல் சிவன்
ராத்திரி விரதமாயிற்று..




ஞாயிறு 15 2015

மச்சிக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.....

பீர்பாட்டில்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
குவார்ட்டர்


மச்சி....
நான் குடிச்சு..புட்டு..
ஒளறேன்னு .....
நிணைக்காதாட......
மச்சீ.........

காதலர் தினத்தில்..
காதலில் தோத்து
போயி கண்கலங்கி
 நீ..நின்டத பாத்து
சொல்றேண்டா..
மச்சீ.....

திரிஷா.. வருண்
மணியோட போனால்
போகட்.டூம்டா....மச்சி....

 நயன்தாராவுக்கும்
அனுஷ்கா ரொட்டிக்கும்
அவுக வீட்டில மாப்பிள்ள
பாக்குறாங்கடா மச்சி....


நீ ஏதுக்கும். கண்ண
தொடச்சிகிட்டு..உன்
போட்டாவை அவுகளுக்கு
அனுப்பி வைய்யிடா...
மச்சீ............

இந்தத்தகவல....
நீ... குவாட்டர் மேலயும்
ஃபீர் மேலயும் ரெம்ப பாசமா
இருந்தத வச்சு சொன்னேன்டா
மச்சி.......................

இப்படிக்கு
உன்.பாசமுள்ள உன் மச்சி


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...