பக்கங்கள்

வெள்ளி 18 2016

கொள்ளைக்காரனை ஆள வைக்கும் தேசம்........


..................................
...............................
...............................







அவன்  ஆட்சியாளன் அல்ல
அவன் ஒரு கொள்ளைக்காரன்
நல்லவன் போல் வேடமிட்டு
வழியில் போவோரை வருவோரை
வழி மறித்து  வழிப்பறி
செயயும் அவன்  கொள்ளைக்காரன்

அய்யோ..வழிப்பறி செய்யும்
கொள்ளைக்காரன் யார் என்று
தெரிந்தும் ஏமாளிகளை விட
அறிவில் சிறந்தவர்கள் அமைதி
காப்பது ஏனோ.... இந்த
பேரமைதி பெரும் ஆபத்துக்கு
அறிகுறி என்று சொல்வது
உன்மைதானோ.....இதை விட
இன்னொரு ஆபத்தா..அப்படி
என்றால் இந்நாடு வழிப்பறி
கொள்ளைக்காரனை ஆள வைக்கும்
தேசம்..இதுவும் தேசமா......


வியாழன் 17 2016

ரத்தக்காட்டேரியின் வாய்ஸ்.....

..........................................



........................................

.........................................









ஒரு நாட்டில் மனிதர்களை அடித்து தின்னு உயிர் வாழும் ரத்தக்காட்டேரி ஒன்று இருந்து வந்தது.

அந்த ரத்தகாட்டேரி பெரிய பெரிய கடவுள்களுக்கு பூஜையும் தவமும் செய்து “கேட்டதெல்லாம் கிடைக்கும் வரம் ” பெற்று இருந்தது.

இப்படி பெரிய கடவுளிடம் வரம் பெற்று இருந்தாலும் அந்தக்காட்டேரி மக்களை அடித்து தின்பதை நிறுத்தவே இல்லை. ஏனென்றால் அந்தக் ரத்தக்காட்டேரி பிறவிக் குணமே  அதுதான்...

இப்படி இருந்த கா்டேரியிடம் இன்னொரு காட்டேரி அதனிடம் கேட்டது. “உனக்குத்தான் கேட்டதெல்லாம் கிடைக்குதே, அப்புறம் ஏன்? மனிதர்களை  அடித்து சாப்பிடுகிறாய் என்று கேட்டது.

அதற்கு அந்த காட்டேரி சொன்னது.” எனக்கு தெரிந்த ஒரே வேலை மனிதர்களை அடித்து தின்பது மட்டும்தான்.....என்றது...பெருமையாக....

நன்றி!............


புதன் 16 2016

பாத்தியாக்கா அந்தாளு... கொழுப்ப.....

...........................................
..........................................
.........................................









என்னக்கா  அதிகாலையில இங்க வந்து படுத்துகிட்ட.......

அத ஏன்டா கே்க்கிற தம்பி.....வியாபரத்துக்கு காசில்ல..இருந்த காசெல்லாம் இந்த மூனு நாளு சாப்பாட்டுக்கு சரியாப் போச்சு  .அடுத்து வியாபாரத்துக்கு போக காசில்ல.. காதுல போட்டு இருக்கிற நகையை வச்சு கடன் வாங்கப்போனா.....வெறும் 500 ரூபாகத்தான் இருக்குனு சொல்லிப்புட்டான். வேற வழி எதுவும் இல்லமா அந்த பணத்த வாங்கிட்டு  இங்க வந்து மாத்துறதுங்க அதிகாலையில வந்து படுத்துட்டேன்டா............

நீ..இந்த பேங்க் முன்னால படு்த்து இருந்ததை...பத்தி  அந்தாளு சொன்னத  கேட்டியாக்கா.........

என்னடா சொன்னான் அந்த ஆளு......

நீ...நிம்மதியாக தூங்குறியாம்.... கருப்பு பணத்த வச்சிருக்கவனெல்லாம் தூக்கமில்லாம  திண்டாடுறிங்களாம்க்கா.............பாத்தியாக்க அந்தாளுக்கு இருக்கிற கொழுப்ப.....

ரெம்பத்தாண்டா அந்தாளுக்கு ஏறிப்போச்சு.... நாளைக்கு என்ன செய்யிறது..இன்னிக்கு என்ன செய்யிறதுன்னு தவியாய் தவிச்சுகிட்டு இருக்கிறது தெரியாம.... அந்தாளு தோசையை திருப்பி போடுறாண்டா .... நாசாமா போக........






திங்கள் 14 2016

தொடரும் அவதியும்..வில்லனின் கொடூரமும்........


.......................
.....................
..................








என்னங்க  பிரதர்...இப்படி சலிச்சுகீறிங்க.....ஒருநாள்ல வந்து நிக்கிறதுக்கே..இப்படின்னா... பிறந்ததிலிருந்து சாகுர வரைக்கும் காத்திருப்பேதே பொழைப்பா போன.. நாங்களெல்லாம் எங்கே போயி யாரிட்ட போயி சலிச்சுகிறது  பிரதர்.....

வரிசையிலே நிக்கிறதப் பத்தி சலித்துக் கொள்ளவில்லை பிரதர்....இப்படி என் பொழப்ப அந்தர கோலமாகிவிட்ட சன்டாளப்பயல்கள நிணச்சு பொருமுறேன் பிரதர்......

நிஜமாகவா..பிரதர்...

ஆமாம் பிரதர். இந்தப் பேப்பரை பாருங்கள் பிரதர்.


மக்களுக்காக உயிர் தியாகம் செய்யத் தயார் மோடி ஆவேசப்பேச்சு.......இந்த பேச்சு அந்தாளுக்கு கைவந்த கைலையாச்சே பிரதர்...


அது இல்ல பிரதர்... நம்ம உயிர வாங்கிபுட்டு இவரு பெருசா உயிர்விடத்தயார்ன்னு ஆவேசமா பேச்சு-இத படிச்சுபுட்டுத்தான் பொருமினேன்...பிரதர்.

உண்மைதான் பிரதர்..உங்க வாயிலிருந்தே...அந்த நாறுன கெட்ட கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்திருக்கன்னா.....நீங்க திட்டுன அந்த ஆளு மகா கொடூரமானவன்தான்.. பிரதர்.


இன்னொன்னு பிரதர்.. இந்தக் கொடுமை இன்னும் நீடிக்குமாம் பிரதர்.....


கள்ள பணத்த...கருப்பு பணத்த ஒழிக்கிறாங்கோலோ இல்லீயோ.... அந்த ஆளு சொல்லிக்கிற இந்துக்களையும் சேர்த்து ஒழிப்பாங்க பிரதர்...


புலம்பாத என்னையே புலம்ப விட்டவரு...வில்லாதி வில்லன் பிரதர்.

அந்த வில்லாதி வில்லனும் ஒருநாள் துண்டக் காணோம் துணியக் காணோம்முண்ணு ஓடுற காலம் ஒன்று வரும் பிரதர்....



அந்தக் காலம் எப்போ வருமோ...பிரதர்...


அந்தக் காலம் வர லேட்டாசுன்னா... நாமெல்லாம் கூடி தேர் இழுத்து வருகிற மாதிரி இழுத்து கொண்டு வருமோம் பிரதர்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...