.......................
.....................
..................
என்னங்க பிரதர்...இப்படி சலிச்சுகீறிங்க.....ஒருநாள்ல வந்து நிக்கிறதுக்கே..இப்படின்னா... பிறந்ததிலிருந்து சாகுர வரைக்கும் காத்திருப்பேதே பொழைப்பா போன.. நாங்களெல்லாம் எங்கே போயி யாரிட்ட போயி சலிச்சுகிறது பிரதர்.....
வரிசையிலே நிக்கிறதப் பத்தி சலித்துக் கொள்ளவில்லை பிரதர்....இப்படி என் பொழப்ப அந்தர கோலமாகிவிட்ட சன்டாளப்பயல்கள நிணச்சு பொருமுறேன் பிரதர்......
நிஜமாகவா..பிரதர்...
ஆமாம் பிரதர். இந்தப் பேப்பரை பாருங்கள் பிரதர்.
மக்களுக்காக உயிர் தியாகம் செய்யத் தயார் மோடி ஆவேசப்பேச்சு.......இந்த பேச்சு அந்தாளுக்கு கைவந்த கைலையாச்சே பிரதர்...
அது இல்ல பிரதர்... நம்ம உயிர வாங்கிபுட்டு இவரு பெருசா உயிர்விடத்தயார்ன்னு ஆவேசமா பேச்சு-இத படிச்சுபுட்டுத்தான் பொருமினேன்...பிரதர்.
உண்மைதான் பிரதர்..உங்க வாயிலிருந்தே...அந்த நாறுன கெட்ட கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்திருக்கன்னா.....நீங்க திட்டுன அந்த ஆளு மகா கொடூரமானவன்தான்.. பிரதர்.
இன்னொன்னு பிரதர்.. இந்தக் கொடுமை இன்னும் நீடிக்குமாம் பிரதர்.....
கள்ள பணத்த...கருப்பு பணத்த ஒழிக்கிறாங்கோலோ இல்லீயோ.... அந்த ஆளு சொல்லிக்கிற இந்துக்களையும் சேர்த்து ஒழிப்பாங்க பிரதர்...
புலம்பாத என்னையே புலம்ப விட்டவரு...வில்லாதி வில்லன் பிரதர்.
அந்த வில்லாதி வில்லனும் ஒருநாள் துண்டக் காணோம் துணியக் காணோம்முண்ணு ஓடுற காலம் ஒன்று வரும் பிரதர்....
அந்தக் காலம் எப்போ வருமோ...பிரதர்...
அந்தக் காலம் வர லேட்டாசுன்னா... நாமெல்லாம் கூடி தேர் இழுத்து வருகிற மாதிரி இழுத்து கொண்டு வருமோம் பிரதர்.