பக்கங்கள்

வெள்ளி 20 2015

வேதங்கள் மற்றவர்களை மடையர்களாக்கும் மடைமைகள்...


படம்-veda.wikidot.com


பட்டறிவை விட சாலச் சிறந்தது
எதுவுமில்லை..........

இறந்து போனவர்களுக்காக
தலையை சிராத்தம் செய்து
கொள்வது அபத்தனமானது...

இறந்து போனவர்களுக்காக
படையல் வைத்து வழிபடும்
போது..இறந்தவர்கள் வந்தா..
அந்த படையல்களை  உண்ணுகிறார்கள்...

மறு உலகம் பற்றி மடையர்கள்தான்
சிந்திப்பார்கள்..

வேண்டுவதிலும் யாகங்கள்
செய்வதிலும்  தியானம்
செய்வதிலும் எந்தப் பயனுமில்லை

வேதங்கள் மற்றவர்களை
மடையர்களாக்கும் மடமைகள்

வேதங்கள் மக்களை மழுங்கடிக்கவே
உருவாக்கப்பட்டவை...

வியாழன் 19 2015

தொட்டில் பழக்கம் சுடுகாடு ஆக்கும் நாட்டிலும்......


படம்-www.maalaimalar.com

உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்ததாக பீத்திக் கொள்ளும் பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜிய நாட்டிலும்,

 உழைப்பால் உயர்நத நாடு.... என்று பீத்தி  கொள்பவர்களால் பெருமையாக பீத்தப்படும் நாடான  சப்பான் நாட்டிலும்.. இந்தியாவின் தொட்டில் பழக்கம் மற்ற நாடுகளை சுடகாடாக ஆக்கும் இந்த நாடுகளிலும் உள்ளது .


கர்ப்பிணிப் பெண்கள் பச்சை நிற மரகத கல்லான எமரால்டை அணிந்து கொண்டால் பிரசவம் எளிமையாக இருக்கும் என்பது பிரிட்டீஷ் பெண்களின் நம்பிக்கையாம்.

நடுப்பகலில் சிலந்திப் பூச்சி வலைபின்னினால் விரைவில் மழைவரும் என்பது சப்பானிய கிராம பகுதி மக்களின் நம்பிக்கையாம்.

கையில் ஒரு லோடு கயிறு கட்டியிருப்பது இந்தியநாட்டு மக்களின் நம்பிக்கை மாதிரிதான் இதுவும் 


புதன் 18 2015

மகளுக்காக நடிப்பை நிறுத்திக் கொண்ட நடிகர்...

படம்- கே.பாலாஜி


நடிகராக இருந்து பின்னாளில படத் தயாரிப்பாளராக மாறிய நடிகர் இவர். முதலில் சினிமாவில் நடிக்க வந்தபோது வில்லனாகவே அறிமுகமானார். இப்படி இவர் வில்லனாக நடித்த பல படங்களில் ஒன்று “மாதர் குல மாணிக்கம்”

பழைய படங்களில் வில்லனாக இருந்தால் அந்த வில்லனுக்கு ஒரு கற்பழிப்பு காட்சி கண்டிப்பாக இருக்கும். இது அப்போதைய படங்களில் ஒரு விதி...

அந்த விதியின் படி வில்லனாக நடித்த அந்த நடிகருக்கும் “மாதர்குல மாணிக்கம்” படத்தில் ஒரு கற்பழிப்பு காட்சி...

இந்தப் படத்தை பார்த்த வில்லன் நடிகரின் மகள் “ தன் வயதுடைய பெண்களை கற்பழிப்பது போல நடிக்க வேண்டாம்” என்று தன் தந்தையான அந்த வில்லன் நடிகரிடம் அழுதார்.

தன் சக நடிகரின் மகள் என்று தெரிந்தும்தன் மகள் வயதுடைய  அந்தப்பெண்ணை கதாநயாக்கி.. கிழடு தட்டிபோயியும் கதாநாயனாக ஆட்டம் போட்ட இன்றைய நடிகர்கள் மத்தியில் அந்த  பழைய வில்லன் நடிகர்.

தன் மகள் அழுவதையும் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதையும் பார்த்த அந்த நடிகர். தன் மகளின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அன்று முதல் வில்லனாகவும், கற்பழிப்பு காட்சிகளிலும் நடிப்பதை தன் மகளுக்காக அறவே நிறுத்திக் கொண்டார்.

அதன்பின்தான் சுஜாதா சினி ஆர்டஸ் என்ற திரைப்பட துறையை தொடங்கி, படத் தயார்ப்பாளராகி பல படங்களை தயாரித்தார். அந்த நடிகர் 

செவ்வாய் 17 2015

பழைய விசுவாசத்துக்கு சிலைக்கடன்...............

படம்-www.dinamani.com-

உலகத்திற்கு நாகரிகத்தையும், ஜனநாயகத்தையும் கற்றுக் கொடுத்தாக பீற்றிக் கொள்ளும் அந்நாடு, ,உலகின் பல நாடுகளை கபலிகரம் செய்து அந்நாட்டை  கொள்ளையடித்ததோடு மட்டும் இல்லாமல் விடுதலைக்கு போராடிய நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கிய  உலகின் பழமையான ஜனநாயக நாட்டிற்கு ,உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் பிறந்து,, வளர்ந்து பலவிதங்களில் பக்கபலமாகவும், பெரும் உதவியாகவும் இருந்து கால ஓட்டத்தில் மறைந்து போனாலும்....

உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் கரன்சி நோட்டில் இடம்பிடித்து தனது பொக்கை வாயை காட்டிக் கொண்டு இருப்பவரக்கு. உலகப்போரில் தனது படைக்கு உலகில் பெரிய ஜனநாயகநாட்டிலிருந்து ஆள்திரட்டி படைக்கு உதவிய விசுவாசத்தைப்போல் எண்ணிடங்கா விசுவாசத்திற்கு  நன்றிக்கடனாக...

உலகின் பழமையான ஜனநாயக நாட்டின் தலைநகரில் உள்ள, அந்நாட்டு நாடாளுமன்றம் என்ற பன்றித் தொழுவத்தின் சதுக்கத்தில் ஒன்பது அடி உயரமுள்ள வெண்கல சிலையை நிறுவி, பழமையான விசுவசத்திற்கு  பிரதி பலனாக சிலைக் கடனை நிறுவி திறந்து வைத்தது,  உலகத்திற்கு ஜனநாகத்தையும் நாகரித்தையும் கற்றுக் கொடுத்தாக சொல்லிக் கொள்ளும் அதி பயங்கரமான முன்னால் கொடுங்கோல் அரசு....

ஞாயிறு 15 2015

தரம் தாழ்ந்து போன வாக்காளர்கள் நிறைந்த தமிழகம்...

படம்- ஓட்டுக்கு பணம் வாங்கும்காட்சி.

பெங்களுரு சிறப்பு நீதி மன்றத்தில் 18 ஆண்டுகளாக ஜெ.-கும்பலால் இழுத்தடிக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், நீதிபதி டி.குன்ஹா நன்கு ஆராய்ந்து எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல், எந்த ஆசை குழிகளுக்கும் விழாமல் பணத்துக்காக சோரம் போகாமல் துணிவுடன் ஒரு ரூபா சம்பளத்தில் உழைக்க வந்ததாக பீத்திக் கொண்டு  66கோடியே  65 இலட்சம் சம்பாரித்த  கிரிமினல் கும்பலை  சட்டத்தின்படியே நேர்மையாக தண்டித்து தீர்பளித்தார்.

ஆனால் சிறீரங்கம் வாக்காளர்களோ....  ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி பதவியிழந்த முதலாவது முதல்வர் என்ற சிறப்பு தகுதியை அடைந்ததன் விளைவாக நடந்த இடைத்தேர்தலில் இந்தக் கிரிமினல் கும்பல் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராகவோ அல்லது இந்த இடைத் தேர்தலை புறக்கணித்தோ  ஜெ கும்பலின் முகத்தில் கரியை பூச ஒரு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி, மனம் உறுத்தாமல்  வாக்காளர் என்ற தகுதியில் எந்தவித ஒரு பொதுச் சிந்தனை இல்லமால்.. ஊழல் கும்பல்கள் கொடுத்த  ரூ5000-க்கும் ரூ2000-க்கும் எந்தவித உறுத்தல் இல்லாமல் தன்மானமின்றி தரம் தாழ்ந்து பணத்துக்காக தரம் தாழ்ந்து  விலை போனார்கள்.

ஓட்டுக்கு பணம் கொடுத்து பெற்ற சிறீரங்கம் தேர்தல் வெற்றியானது  இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக ஆகிவிட்டது. தமிழ் சமுதாயத்தை அடிமைகளாகவும், தன்மனம் இழந்த இழிபிறவிகளாகவும். கை யேந்திகளாகவும்  சீரழித்த  ஜெ கும்பலின் சிறீரங்கம் இடைத்தேர்தல் வெற்றியானது. இதுவரை இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து போன வாக்காளர்கள் நிறைந்த ஆபத்தான தமிழகமாக மாற்றிவிட்டது.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...