பக்கங்கள்

வெள்ளி 20 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-48






Image result for ஆட்டக்காரி



வண்டியை மறித்து
ஒரங்கட்டுமாறு சைகை
செய்தார் மாப்பிள்ளையான
 உறவு  முறைக்காரர்

ஒருங்கட்டிய பின்
காதருகில் வந்து
 மாமா..என்
அம்மா மட்டை
யாகினார் மாமா
என்றார் அவர்

உடனே வண்டியை
திருப்பி குரு
தியேட்டர்க்கு வந்து
ஒரு பெரிய மாலை
வாங்கி கொண்டு
மூன்றாவது ஆளாக
என் அஞ்சலியை
செலுத்தி விட்டு
திரும்பி வந்தேன்

தூக்குவதற்கு ஒரு
மணி நேரத்துக்கு
முன் அவ்விடம்
வந்தபோது இன்னொரு
மாப்பிள்ளைகாரன் போதையில்
என்னிடம் கிசு கிசுத்தார்.

மாப்பிள்ள வேல
இருக்குன்னு போகத..
சேர்ல உட்காரு
ஆட்டத்த பாரு
ஆடுதுகள  அதுக
ரெண்டும் ஒரிசினல்
பொம்பளக...வெட்கப்பட்டு
ஓடிறத மாப்பிள்ள.....

எய்...அம்மா
மாப்பள முன்ன
நல்லா ஆடுகம்மா
என்று மாப்பிள்ளகாரர்
 சொன்னதுதான் தாமதம்
ரெண்டு ஆட்டக்கார
அலுமேலுகளும் ஆட்டத்த
கொழுத்திப் பிட்டதுக....

மாப்பிள்ளகாரர் சாராய
வாடையுடன் என்
அருகில் குனிந்தவர்
சட்டென்று எனது
சட்டைப் பையில்
இருந்த இரண்டு
ஐம்பது ரூபாயை
எடுத்து இரண்டு
ஆட்டக்கார அலுமேலுகளுக்கு
கொடுத்து விட்டு
என் பெயரைச்
முரசு அறிவித்தார்

கொட்டும் டம்டமன“னு
அடித்து வாழ்த்து
தெரிவித்தன....அடடா
பெட்ரோல் போட
வைத்திருந்த காசு
ஆட்டத்தை கண்டதுக்கு.....
.....................................
..............................
..........................................


திங்கள் 16 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-46




Image result for சேலை கட்டிய மாதர்
படம் மாதிரிக்காக




அவரை யாரென்று
தெரியவில்லை ஆனா
பார்த்த முகமாக
தெரிகிறது .எங்கே
என்பது மட்டும்
உடனே நிணைவுக்கு
வரவில்லை. சில
மணி நேரமோ
அல்லது சில
நாட்கள் கழித்தோ
அவர் இன்னாரென்று
தோன்றும் போது
அய்யோ நான்
பேசாமல் இருந்து
விட்டேனே என்று
ஒரு பரிதவிப்பு
வந்து குடையும்
பிறகு அதுவும்
மறந்து போகும்

அந்த பேருந்து
நிறுத்த இருக்கையில்
அமர்ந்து இருந்த
போது என்னருகில்
 வருவதற்கு சற்று
முன் தன்மாறாப்பை
சரி செய்து கொண்டபடியே
புன்னகைத்தார் யாரென்று
புரியாத நிலையில்

அவரின் புன்னகை
எனக்குத்தான் என்று
தெரிந்த  அடுத்த
நொடியில் நானும்
இயல்பாக புன்னகைத்தேன்.

அருகில் வந்தவுக
நல்லா இருக்கீங்களா?
என்ற வினாவுக்கு
சட்டென்று  நல்லா
இருக்கிறேன் என்று
பதிலுரைத்த பின்
நீண்ட மவுணம்.

அந்த மவுணத்தின்
இடை வெளியில் வந்து
நின்ற  பேருந்தில்
ஏறி இருக்கையில்
அமர்ந்து கையையும்
தலையையும் ஒருசேர
ஆட்டி போய்
 வருகிறேன் என்று
விடைபெற்றார் அவுக
தலை மறைந்த
பிறகு என்தலை
இப்படி உருண்டது

அவுக யாரா..
இருக்கும் நம்முடன்
வேலை பார்த்தவுகளா?
உறவுக்காராங்களா..?இல்ல
நண்பர்களின் துணையர்களா.??
அவுங்களா இருக்குமோ..???
இவுங்களா ...இருக்குமோ...????

அய்யோ....அய்யோ...!!!!!!!!!!!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...