பக்கங்கள்

சனி 05 2012

இரு கல்.......... பல கூத்து.

தமிழ் மாதமான சித்திரை நாட்களில் வெயிலுக்கும் வியர்வைக்கும்
கூத்துகளுக்கும் தமிழகத்தில் பஞ்சமே இருக்காது.என்ற வகையில்
தமிழகத்தின் இரண்டாவது மாநகரமும் ஒலக அதியங்களில் ஒன்றாக
இணையத்தில் ஒட்டு போடுங்கள் என்று ஓட்டு பிச்சை கேட்டு அதன்
மூலமாக ஒலக அதிசியமாகக்பட்ட மீனாட்சி கோயிலில் வருடத்துக்கு
ஒருமுறையாக இரு கல்லுக்கு நடக்கும் கூத்தும் ஒலக அதிசியமாக
தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் வருகிறது.
மதுரை

மீனாட்சி என்ற கல்லுக்கும்.சுந்தரேஸ்வரர் என்று பெயர்சூட்டிய
கல்லுக்கும் இரு ஆண்பட்டர்களால் நடக்கும் கூத்தை பார்ப்பதற்கு
முன்பு இலவசமாக இருந்தது. கூத்தைப்பார்க்க கூட்டமும் அதிக
மானதால்.டோக்கன் வேறு போட்டு கல்லாகட்ட ஆரம்பித்து
விட்டார்கள்.
இருகல்

விஞ்ஞானத்தால் உலகம் சுருங்கிவிட்டதோ இல்லையோ, மூட
 நம்பிக்கை மட்டும் விஞ்ஞானத்தையே மிஞ்சி உலகப்புகழ் பெரும்
வகையில் முன்னெறிக்கொண்டு வருகிறது.

மாங்கல்யபூசை,கோமம்,பாலியபூசை,காப்பு கட்டு இன்னும்
என்னென்ன மடத்தனங்கள் இருக்கிறதோ, அத்தனையும்
அரங்கேற்றம் நடைபெறுகிறது. இந்த அரங்கேற்றதுக்கு தோதுவாக
 முன்னர் ஒரு காலத்தில் நடந்ததாக பலவித புருடா கதைகளும்
 பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த இருகல்லுக்கு நடத்தும் கூத்துக்காக பரப்படும் கதைகளும்
 பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்துவருகின்றன..

தாய் தந்தையின் கல்யாணத்திற்க்காக மகன் தன் ரெண்டு
பொண்டாட்டிடன் அறுபடை வீடுகளில் ஒன்றான மூன்றாம்படை
வீட்டிலிருந்து வருகிறாராம். இதோடு இந்த கூத்துக்கு வரும்
வைணவக்கடவுளான கள்ளன் வந்து ஆற்றில் இறங்கும் கூத்தையும்
சேர்த்து வைணவத்தையும் சைவத்தையும் ஒன்றாக்கி ஒரே
கூத்தாக்கி விட்டனர்.

கல்யாண கூத்தக்கு வரும் கள்ளனை கைது செய் என்று முன்னொரு
காலத்தில் வீரமணியின் திராவிடர்கழகம் போஸ்டர் ஒட்டி
கூத்தின் மூடநம்பிக்கையை எதிர்த்தார்கள். வருடா வருடம்
வரும் கூடநம்பிக்கை கூத்தின் எழுச்சியால் அவர்களும்
 சோர்ந்து போய் விட்டார்கள்.

தனியயார்மயம்.தாராளளமயத்தின் புன்னியத்தால் இருகல்
கல்யாணமும் அதைத் தொடர்ந்த பல கூத்துகளும் வெள்ளிவிழா
கடந்து சென்சூரியும் கடந்து சென்று கொணடே இருக்கிறது.

மதம் என்ற போதை தெளியாத வரை.தெளிய வைக்காதவரை
 எவ்வளவுதான் வெயிலும் வியர்வையும் பஞசமும் பசியும்
பெருகி ஆறாக ஓடினாலும். இரு கல்லும் ...பல கூத்தும்
தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.




செவ்வாய் 01 2012

“மே” “மே” என கதறும் மேன்மக்கள்......

மேன்மக்கள்-1
இந்தியாவில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக
விளங்கவேண்டும் என்ற லடசிய ப(ய)ணத்துக்கு உதிரத்தை வியர்வை
ஆக்கி உழைக்கும் தொழிலாளர்கள் தங்கள் ஒது்துழைப்பை நல்கவேண்டும்


மேன்மக்கள்-2
நாட்டிலும்,தமிழகத்திலும் அமைதி,வளர்ச்சி,முன்னேற்றம் 
,தொழிற்சங்கவரலாற்றை திரும்பி பார்க்க வைக்க எதிர்காலத்தில் 
உலக தரத்தக்குஇணையாக வேலைத்திறனை அதிகரித்துக்கொள்ள
 இந்நாள் ஏற்ப்படுததட்டும்.

மேன்மக்கள்-3
1969-முதல் ”மே”க்கு தொழிலாளர்க்கு தனி அமைச்சகம்.1969-ல் விபிசிங்
பிரதமராக இருந்தபோது அவர்மூலமாக.நாடு முழுவதுக்கும் “மே” க்கு
ஊதியத்துடன் விடுமுறை.1971-ல் தொழிலாளர் நலநிதி.அதை 
கொள்ளையடிக்க தொழிலாளர்நலவாரியம். ஒப்பந்த தொழிலாளர்
வாரியம்.தனிச்சட்டம்.1973-ல்தொழிலாளர்கல்வி நிலையம்,1990-ல்
நேப்பியர் பூங்காவுக்கு “மே” பூங்கான்னு பெயர் மாற்றம்.போன்ற
 திட்டங்களை செயல் படுத்தியது. திமுக ஆட்சியிலேதான்.

மேன்மக்கள்-4

8மணி நேர வேலை என்று கட்டுப்பாடு விதிக்கக்கோரி வீதிக்கு வந்த
போதுஅநீதியான அடக்குமுறைகளை ஏவி அவர்களை ரத்த சகதியில்
புரளள செய்தது ஆதிக்கபுரி.அந்த அடக்கு முறையை பாட்டாளி வர்க்கம்
புரட்டி போட்ட நாள்.இந்நாள்.பன்னாட்டு வணிகம்.சூதாடிகளுக்கு
 உரிமைஆனதாக மாறிவரும் போக்கை மாற்றி ஒப்பற்ற நிலையை
 நோக்கி வையகத்தை நகர்த்தும் பணியில் நம்மை ஒப்படைத்துக்
கொள்வோம்

மேன்மக்கள்-5
உலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் உழைப்பு என்பது 
பொதுவுடமையாகும்அந்த உழைப்புக்கு உயர்வு தருவது“மே” 
விழாவாகும்.ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவது
என்பது எல்லோருக்கும் உழைப்பதற்க்கான வாய்ப்பை அளிப்ப
தன் மூலமே முடியும் உழைப்பாளர்களின் திறமையை உடமை
யாளர்கள் போற்றவும்.உடமையானவர்கள் உருவாக்கும் தொழில்
வாய்ப்பகளை உழைப்பாளிகள் பயன்படுத்திக் கொள்ளவும். சீரான
நிலைமையை காண்பதற்கு இந்த”மே”  பயன்படட்டும்.
மேன்மக்கள்-6
நாட்டின் இறையாண்மையும் சுயசார்பையும் பாதுகாக்க வேண்டிய 
பொருப்பு தொழிலாளர்களின் தோள்களிலே சுமத்தப்பட்டுள்ளது. 
சமூக நீதி எனும் விழுமியங்களை காக்க போராடுவொம்.
தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை தக்க வைத்துக்
கொள்ள தொடர்ச்சியான போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

மேன்மக்கள்-7
இயற்கை சூழல் காக்க படவேண்டும்.இயற்கை அழிவை தடுப்பதன்
மூலம் பூமண்டல அழிவை தடுக்க இயலும் எனவே,சமதர்ம சமுதாயம்
மலர தொழிலாளி வர்க்கம் அரசியல் தலமை ஏற்க முன்வரவேண்டும்

குறிப்பு .இன்னும் நிறைய மேன்மக்கள் “மே......மே.......மே...” என்
கதறியிருக்கிறார்கள். வாசகர்களின் பொருமையைக கருதி இத்துடன்
முடித்துக்கொள்ளப்படுகிறது.


 
.

ஞாயிறு 29 2012

ஒலக அறிஞரும் ஒலக அழகியும்

ஒலக அறிஞரும்,ஒலக அழகியும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து
கொண்டனர்.அப்போது ஒலக அழகிக்கு ஒலக அறிஞர் பேசிய

ஒலக அறிஞர்களும்,ஒலக அழகிகளும்

பேச்சின் போது ஒலக அறிஞர் மீது காதல் வந்தது.

அந்தக் காதலை ஒலக அறிஞரிடம் வெளிப்படுத்தும் விதமாக
ஒலக அழகி .ஒலக அறிஞரிடம் சொன்னார்.

ஒலக அறிவுள்ள நீங்களும்.ஒலக அழகி நானும்.ஆக நாம்
இருவரும் திருமணம் புரிந்து கொண்டால்.பிறக்கும் குழந்தை
ஒங்க அறிவும் என் அழகும் சேர்ந்து இருக்கும்.இதனால்
ஒங்க அறிவும் என் அழகும் இந்த ஒலகத்தில் அழியாமல்
இருக்கும். அதனால் நாம் இருவரும் திருமணம் செய்து
கொள்ளலாம். என்ன சொல்கிறிர்கள் என்று கேட்டார்
ஒலக அழகி.

ஒருகணம்.மயங்கி.திகைத்து.சுதாரித்தக்கொண்ட ஒலக
அறிஞர்.ஒலக அழகியிடம் சொன்னார்.

அப்படியா! ...அழகில்லாத என் அழகும் .அறிவில்லாத உன்
அழகும் சேர்ந்து பிறந்தால். பிறக்கும் குழந்தை“ உலகத்துல
அழியாத அவமானச் சின்னங்களில் ஒன்றாக இருந்துவிட்டால்
என்ன செய்வது......

ஒலக அறிஞரின் இந்தப் பதிலைக்கேட்ட ஒலக அழகி பதிலேதும்
சொல்லாமல் சென்றுவிட்டார். அதிலிருந்து ஒலக அறிஞரை
சந்திப்பதையே தவிர்த்துவிட்டராம்.

ஒலக அறிஞரின் அறிவும் ஒலக அழகியின் அழகும் சாமானிய
மக்களுக்கு பயன் பட்டதாக வரலாறே இல்லை.

(குறிப்பு. அறிவும்.அழகும்உள்ள விந்துதானம்.மற்றும் இதே
ஒலக அழகி வழியில் சிந்திப்பவர்கள் கவனிக்கவும்)

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...