சிறு பிள்ளைகளாய் விளையாடிக் கொணடியிறருந்த
ஒரு காலத்தில் வீட்டில் அம்மா கூப்பிட்டாலும்
பதில் கொடுக்காமல் விளையாட்டில் ஆர்வமாய்
இருந்த நேரத்தில் ஒரு வயதானவர் வந்து ”டேய
என்னங்கடா இன்னுமா விளையாடிகிட்டு இருக்கீங்
க.எனக் கேட்டு பிறகு ஒரு குண்டை போடுவார்.
கேப்பையில நெய்யி வடியுதுன்னு அவனவன் சட்டி
முட்டியில புடிச்சுகிட்டு இருக்காங்கே”போங்கடா
தீரப்போகுது.விளையாட்ட நிப்பாட்டிட்டு ஓடுங்கடா
என்பார்.
கேப்பையில் நெய் வடிவதை போசுக்குன்னு சொல்லி
விட்டு மற்றவற்றைக்கு அழுத்தம் அதிகம் கொடுத்து
கேலியை வெளிக்காட்டாமல் உண்மையாக நெய்
வடிந்து சனங்கள் எல்லாம் அள்ளிக்கிட்டு போறது
மாதிரியே சொல்வார்.
அதுமாதிரி இருக்குதப்பா ஏழாம் அறிவபத்தி அதன்
நாயகன் சொல்லுறது. ஆறாம் நுாற்றாண்டில் தமி
ழகத்தை சேர்ந்த போதிதர்மன் என்பவர் சீனா சென்று
தற்காப்புகலைகளை பரப்பி உலகத்துக்கே கடவுளா
யிட்டராம்.அப்படிபட்ட வரலாற்று கடவுளான நாயக
னைக்கொண்டுதமிழர்களின் கலை,பண்பாடு,கலாச்
சாரம் முதலியவை எப்படி இருந்தது என்று படம்
புடுச்சு சொல்லுகிறார்களாம்.
எந்தத் தமிழரிடம் சொல்லப் போகிறார்கள் என்று பார்த்
தால்,முன்னேறிய நாடுகளின் கலாசாரத்தில் முழ்கிக்
கிடக்கும் தமிழர்களிடம் சொல்லப்போகிறார்களாம்
உன்னதமான கலாச்சாரம் சினிமா கலாச்சாரம் தான்னு
என்று உணர்ந்து நிமிர முடியாமல் தலை குணிந்து
கிடக்கும் ஒவ்வொரு தமிழனையும் தமிழரையும் தலை
நிமிர வைக்கும் படமாக இருக்குமாம்.
படம் வந்து பார்க்கிறவங்கதான் சொல்லனும் தலை
நிமிர்ந்து பாத்தாங்களா? தலை நிமிர்ந்து பாத்தாங்க
ளான்னு?
இப்படி ஒவ்வொரு பட இயக்குநர்றும், நடிகரும் விதைய
விதைச்சுகிட்டே போகவேண்டியதுதான். விதை முளைச்
சாலென்ன,முளைக்காம இருந்தாலென்ன, அவர்களுக்கு
என்ன? அவர்களுக்கு ஏழு அறிவு மட்டுமா இருக்குது.
அதையும் தாண்டியில்ல ..............................இருக்குது.
(ஏலேய்,கேப்பையில நெய்யி வடியுதுன்னு சொன்னா
கேட்டவனுக்கு புத்தி எங்கல்ல போச்சு?????
7ம் அறிவு பார்க்க போயிருக்கில்லே!!!!!!)
வியாழன் 29 2011
செவ்வாய் 27 2011
சிற்றரசை ஆளும் பேரரசியின் குட்டிக்கதை!!!
ஈரோட்டு பாசறையில் தோன்றிய அண்ணாவும் அண்ணாவின் தம்பிகளும் மேடைப்பேச்சினிடையே கதை சொல்வார்கள். அப்படிக் கதையை சொல்லி கூட்டத்திலிருந்து நெளிபவர்களை உற்சாக பானம் அருந்தியவர்களைப்போல
வாய் பிளக்க வைப்பார்கள்.கூடவே விழுந்து விழுந்து சிரிக்க வைப்பார்கள்.
இந்த வழியில் அண்ணாவின் இதயக்கனியும் அந்த இதயக்கனியின் வழிவந்த புரட்சி செல்வியும் மேடைபேச்சின்ஊடாக கதை சொன்னார்கள். கதையின்
தலைப்பு என்ன தெரியுமா? “வாயைக் கொடுத்து வாங்கிக் கொ்ண்டவர்கள்.. இதற்கு இன்னொருபெயரும் உண்டு. நுனலுாந்தன்(தவளை) தன் வாயால் கெடும் என்பதுதான். இந்தக் கதையானது யார் யாருக்கு பொருந்தும் என ஆராய்ச்சியில் இறங்க போவதில்லை.
ஆனால்.சிற்றரசை ஆளும் பேரரசியர்க்கு கன்னடமும் ஆங்கிலமும் பிறவி மொழியாக இருந்தாலும் கூட்டத்திலுள்ள பாசத்தொண்டர்களுக்கும் இலவசத்தை வாங்கவந்த வந்தவர்களுக்கும் தமிழரின் நலன் கருதி தமிழி
லேயே கதை விடுத்தார்கள்.
கதையைக் கேட்காதவர்கள் அன்னதாயின் புகழ் பரப்பும் தினசாரிகளை பார்த்து படித்து தெரிந்து கொள்க.
பரிசு,கார்,டாஸ்மக்,திருட்டு, போன்ற உவமைகளைச்சொல்லி கதையைச் சொல்லி முடித்தார்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிமைகளும் பேரரசியரின்அறிவுத்திறமையையும் கதை சொல்லிய பாங்கையும்
கண்டு ஆரவாரமாக,எட்டுதிக்கும் கேட்கும்படியாக(கூச்சல்) கரகோஷம் போட்டார்கள்.
சிற்றரசை ஆளும் பேரரசியும் தன் முன் அனுபவத்தையே உவமைக்கதையாக குட்டிக்கதையாக பொருத்தமாகவே
சொன்னார்.
இலவசம் வாங்க வந்தவர்கள் முகத்திலோ பகட்டுக்கூட சந்தோசததைக காணவில்லை.எப்படா.பங்ஷன் முடியும் ஆட்டையும் மாட்டையும் ஓட்டிகிட்டு போறப் போறோம் என்பதிலே கவனம் இருந்ததால் கூட்டத்
தோடு கூட்டமாக அரகொரா கோஷம் மாதிரி கரகோஷம எழுப்பினார்கள்.அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொங்கி வந்த சிரிப்பாக தெரியவில்லை. பாவம் பேரரசியின் பாதுகாவலர் எப்பத்தான் சிரிப்பார் என்று தெரியவில்லை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...