பக்கங்கள்

வெள்ளி 24 2013

அது அங்கே!! இது இங்கே!!!



தென் அமெரிக்க நாடுகளில் தண்ணீர் தனியார் மயத்தை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஒரு போரையே நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்

ஆனால் இங்கே, கல்தோன்றா,மண்தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்தக்குடி என்று பீ....ற்றிக்கொள்ளும் தமிழ்நாட்டின் தலை நகரிலோ?

தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட தண்ணீரை தனியாரிடம் ஒழுங்காக வழங்கக்கேட்டு ரோட்டில் உடகாரந்து மறியல் செய்கிறார்கள். இது தனியார் தண்ணீர் கம்பெனியை ஊக்குவித்து, ஏழைகளின் தண்ணீர் தாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே வழிவகுக்கும்

திண்ணுவதிலிருந்து களிப்பது வரைக்கும், இறுதியில் செத்து சுடுகாடு போவது வரை .தனியார்தான்

இதனால காசுக்கார கூட்டத்துக்கு பிரச்சினையில்லை, , பெருமாளுக்கு மொட்ட போட்டு மசிர கொடுத்தால் எல்லாம் சரியாய் போய்விடும் என்று வேறு ரூட்டை தேடி ஓடிகிறது காசில்லா கூட்டம்

ஒரு காலத்தில் புலி பதுங்குவது பாய்வதற்குன்னு சொல்லப்பட்டது. இந்தக்காலத்தில் புலி  (பூனையாகி) பதுங்குவது தப்பித்து ஓடி விடுவதற்க்குத்தான் என்பது நடைமுறையாகிவிட்டது

புதன் 22 2013

பண்ணைபுரத்து பண்ணையாருக்கு நண்பனாகி போன இளையராஜா.!!!!


 
 தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைய ராஜாவினுடைய ஊரான பண்ணைப் புரத்தில்.உள்ள தேனீர்க்கடையில் தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தனிக் குவளையில் தான் தேனீர் வழங்கப்படும். இளையராஜா பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர். அங்கு பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாக உள்ளதால் அவர்களுக்குத் தனிக்குவளை கிடையாது.

இந்தத் தனிக்குவளை அகற்றுவதற்கான போராட்டத்தில் முக்கியமாகப் பங்கேற்றுக்கொண்ட தோழர்கள் பக்கதிலுள்ள கூடலூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் அதிகமாக அனைவருமே தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த வட்டாரத்தில் சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டும் சாதி அதுதான். தேவர் சாதி வெறிக்குப் பெயர் போன ஊரே கூடலூர்தான்.

அந்த தேனீர்க்கடையில் நடந்த தள்ளுமுள்ளு மோதல்களில் நமது தோழர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இளைய ராஜாவின் மனைவி மற்றும் யுவன் சங்கர்ராஜா ஆகியோர் கூப்பிடு தூரத்தில் காரில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர்.

இங்கு குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால் பறையர் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் இந்தப்போராட்டத்தில் அன்றைக்கு பெரியளவில் பங்கேற்றுக் கொள்ளவில்லை.

இளைய ராஜா அந்த ஊர்ப் பண்ணையாரின் நண்பராக மாறிவிட்டார்

ஆனால் இந்தப் போராட்டம் முடிவடைந்து இந்தப் பிரச்சனை ஒரு பேசப்படுகிற சம்பவமாகிவிட்டது. இந்த நிலையில் இளைய ராஜாவின் நண்பரான பண்ணையார் இந்த ஊரில் தீண்டாமைக் கொடுமையெல்லாம் இல்லை தனிக்குவளை இல்லை என்று பறையர் சாதியினர் மத்தியில் கையெழுத்து வேட்டை நடத்த முனைந்தார்.

இந்த நிலையில் இளையராஜா,பண்ணையாருக்கு நண்பராக மாறிப்போனாலும்.............

தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவருமே பண்ணையாரை எதிர்த்து நின்றனர். கையெழுத்துப் போடுவதற்கு யாருமே சம்மதிக்கவில்லை.

இனியொரு டாட்காம்-ல் மகஇக மாநில செயலர் தோழர் மருதையன் நேர்கானலிருந்து

ஞாயிறு 19 2013

ஈழத்தமிழரின் நினைவஞ்சலியில் கலந்து கொண்ட தமிழக போலீசு காவலர்கள்.!!!



2009 வருடம் மே17ந்தேதி இன அழிப்புப்போரில் உயிர்நீத்த அனைத்து ஈழத்தமிழருக்கான நினைவஞ்சலியை...

கோடை வெய்யலின் உக்கிரத்தை காலையில் தாங்க முடியாததால் மாலை வேளையில் காற்று வாங்கிக்கொண்டு,யாருக்கும் எவ்வித-துளிகூட கஷ்டமின்றி,ஓரமாக மெழுகுவத்தி ஏந்தி திரிவதை மாற்றி..
சீ என்று புறந்தள்ளி..

ஈழத்தமிழரின் நினைவஞ்சலி கூட்டத்தை போர்குணமிக்க ஆர்ப்பாட்டமாக ஈழத்தமிழரின் தன்னூரிமைக்கான மாணவர் முன்னணியும்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தினர்.

இந்த இன அழிப்பு போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத்தமிழர்க்கான நினைவஞ்சலி ஆர்ப்பாட்டத்தில் 70 மகளிர் காவலர்களும்,50ஆண் காவலர்களும்,7 உதவி ஆய்வாளர்களும்,5 ஆய்வாளர்களும்,2 உதவி ஆய்வாளர்களும்,5 உளவுத்துறை ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

வந்திருந்த உளவுத்துறை ஆய்வாளர்களில் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில்
தலைமை வகித்து பேசிய புமாஇமு தோழர் மருதுவின் தலைமை உரையிலும்,சிறப்புரை ஆற்றிய ஈ.த.மா.முன்னணியின் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் த.கணேசன் உரை வீச்சிலும் ஈர்க்கப்பட்டு 
தன் கையேட்டில் பதிவு செய்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்கத்தில் பேசிய தோழர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அணைத்து காவலர்களையும் வரவேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

நன்றி..வினவு


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...