பக்கங்கள்

சனி 09 2013

அட,செவ்வாயிலுமா.!!................மலம் அள்ளனும்....???



உயர உயர
பறந்தாலும்
ஊர்க்குருவி

ஊர்க்குருவி
பருந்தாக
முடியாதாம்.

செவ்வாயிக்கு
மங்கால்யானை
பறக்க விட்ட
பிண்டங்களுக்கு

மனிதன்
மலத்தை
மனிதன்
அள்ளுவதை
தடுப்பதற்கு
தெரியாதாம்.

உதவாத
பழமொழிகளை
சொல்லும்
மனித பிணடங்களே!

செவ்வாயிலுமா..?
மனிதன்
மலத்தை
மனிதன்
அள்ளி
சுமக்கனும்...!!!!




வெள்ளி 08 2013

பாராளுமன்ற உறுப்பினரான பால்காரம்மா........!!!

எல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு  ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
அமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்கு காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.
ஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.
நான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ பாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.
ஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என்று புரிந்து கொண்டார்கள். (சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா,பக்கம் 33)எல்.
நன்றி!!செங்கொடி  வேர்

வியாழன் 07 2013

.கருத்துப்படங்கள்............




சி.பி.எம் கார்ட்டூன்
வினவு

சி.பி.எம் கார்ட்டூன்
வினவு

பல்லக்கு
புதிய ஜனநாயகம் மாத இதழ்



கம்யூனிசம் கற்க‌ ஒரு தளம்..

கம்யூனிசமே வெல்லும்-போலி கம்யூனிசம் ஒழிக













செவ்வாய் 05 2013

ஒன் பாட்டி போரும்....அதன்பிற கூத்துகளும்..........நடந்தகதை!!!

ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்டு மாய்ந்த விடுதலை வீரர்களையெல்லாம் சாதித் தலைவராகவும், சாதிவெறி பிடித்து கட்டபஞ்சாயத்து செய்த ஊள்ளுர் தலைவரெல்லாம் தேசிய தலைவராகவும் மாற்றி விட்ட  இந்தக் காலத்தில் சாதிவெறியின் குல தெய்வத்தின் பூஜைக்காக சிவகங்கை.இராமநாதபரம் மாவட்டங்களில் ஒன் பாட்டி போர் தடை போடப்பட்டுருந்த நேரம்

அந்த ஒன் பாட்டி போர் போடப்பட்டுருந்த நாட்களில் சிவகுமார் என்பவரும்   காசுபாண்டி என்ற பெயரும் கொண்ட வருமான பள்ளிப் பருவத்து நண்பர்களான இருவரும் ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தித்து  தங்கள் தங்கள் வாழ்நிலையைப்பற்றியும் வேலை நிலைமைகளைப் பற்றியும் தங்களுடன் படித்த மற்ற நண்பர்களைப்பற்றியும்.தீபாவளிக்காக  வழங்கப்பட்ட போனசு தொகைகளைப்பற்றியம் அலாவலவிக் கொண்டு இருந்தனர்.

நண்பர்களின் பேச்சு,ரெம்ப சந்தோசமாகவும்.நகைச்சுவையாகவும் பழைய நிணைவுகளை அசை போடுவதாகவும் இருந்தது. நண்பர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த  மற்ற சிலரும் மலரும் நினைவாக கேட்டு ரசித்துக் கொண்டு இருந்தனர்

அப்போது, காக்கி சட்டை அணிந்த ஒரு உருவம். பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருகியதால் ஏற்பட்ட சத்தத்தோடு அவர்களுக்கு அருகில் வந்தது. நண்பர்கள் பைக் சத்தத்தைக்கேட்டு தங்கள் பேச்சை நிறுத்தி அந்த காக்கி சட்டை உருவத்தை பார்த்தனர்.

வந்து நின்ற காக்கி சட்டை உருவம், இவர்களைப் பார்த்து ஒருமையில்  உருமியது.. பக்கத்தில் நின்றவர்களை கடிக்காத குறையாக குலைத்தது.

திடுக்கிட்ட நண்பர்கள் இருவரும்  வந்து நின்ற அந்த உருவத்துக்கு   வணக்கம் செய்தனர்.

அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த உருவம். பைக்கின் சத்தத்தை குறைத்து உறுமியபடி அவர்களின் பெயர்,ஊர்.தொழில் சாதி முதலானவற்றை விசாரித்தது.

நண்பர்கள் இருவரும் தத்தம் சாதிகளைத்தவிர மற்ற விபரங்களை சொன்னார்கள். அதில் திருப்தி அடையாத  தீராத அந்த உருவம், பக்கத்தில நின்ற அப்பாவிகளை  விரட்டியது.

விரட்டுபட்டவர்கள் தாங்கள் இந்தஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் தீபாவளி க்காக பொருட்கள்  வாங்கிக் கொண்டு ஊர் செல்வதற்க்காக பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக பணிந்து சமர்பித்தார்கள்.

அந்தப் பணிவால் ஆத்திரம் குறைந்த அந்த உருவம்,தான்  சப் ஆய்வாளர் என்று சொல்லாமல் வெளிப்படுத்தி, அந்த இரண்டு நண்பர்களிடம் தோரனையாக பேசியது.

 ஒன்பாட்டிபோர் போடப்பட்டு இருக்கிறது. இரண்டு பேர்,மூன்று பேர் ,இப்படி கூட்டமாக நிற்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா என்று கேட்டுவிட்டு நண்பர்களை எச்சரித்தது.

 ஆட்டோ எதுவும் வரவில்லை, வரவேண்டிய பஸ்சும் வரவில்லை. பஸ்சுக்காகத்தான் நிற்கிறோம் என்றார்கள் நண்பர்கள் இருவரும்

சமாதானமடையாத அந்த உருவம் நண்பரகள்   இருவரையும்  சேர்ந்து நிற்பதை தடுத்து தனித்தனியாக நிற்க உத்தவிட்டது. மற்றவர்களையும்
அப்படியே தனித்தனியாக கழட்டிவிட்டது.

கடைசியாக அந்த உருவம் தன் கையிலிருந்த வயர்லெஸ் ஒலி பேசியுடன் இரைச்சலாக கத்தியபடியே அவ்விடத்தை விட்டு நகன்றது.

அந்த காக்கி சட்டை உருவம் அவர்கள் கண்களிலிருந்து வரைக்கும் அந்த பஸ் நிறுத்தம் அமைதியாக இருந்தது.

சாதிவெறி குல தெய்வ பூஜை கொண்டாட்த்துக்காக ஒன்பாட்டிபோர்(144) தடையுத்தரவு போடப்பட்டு இருப்பதால்,  சாதிவெறி கொண்டாட்த்தில் அசாம்பாவிதம் நடக்காமல்இருப்பதற்கும். துப்பாக்கிசூடு நடைபெறுவதை தவிர்ப்பதற்க்காகவும், அரசு சார்பிலும் சாதிவெறி கொண்டாட்டம் நடைபெறு வதால்  அந்த கொண்டாட்த்தில் அமைச்சர் பெரு மக்களும், அவர்களைச் சார்ந்து எதிர்க்கட்சி தலைகளும், அதற்குப்பின் சாதிவெறி.மதவெறி அமைப்பகளும் விழாவில் கலந்து கொள்வதால்................

அவர்களை பாதுகாப்பதற்கும் விழாவை  அமைதியாக நடப்பதற்குமாக, தென் மண்டல ஐ.ஜி உள்பட,ஆறு ஐ.ஜிக்களும், எட்டு எஸ்பிக்களும், அய்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிஸ்காரர்களும் பாது காப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இவர்களோடு, ஆளில்லாத உளவு விமானங்களும்,பாரா மோட்டார் கேமரா மூலமும் கண்காணிப்பு ஏற்ப்படுத்தி  தூள் கிளப்பிக் கொண்டிருந்தனர்.

இத்தோடு சாதிவெறியின் மாவட்ட முழுவதும் ஒன்பாட்டி தடையுத்தரவு அமுல் படுத்திவிட்டு, சாதிவெறி பக்தர்கள்  வாடகை வாகனங்களில் வருவதற்கு தடையத்தரவு இருப்பதால் சாதிவெறி குலதெய்வத்தின் சமாதியான இடத்துக்கு சிறப்பு பஸ் வசதியும் இயக்கப்பட்டன.

இவ்வளவு கெடுபிடிகளுடன் சாதிவெறி குல தெய்வ கொண்டாட்டம் நடைபெறுவதால் அந்தந்த மாவட்ட எல்லைகளில்  சோதனை சாவடி திறக்கப்பட்டு, அங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பட்டய கிளப்பிக் கொண்டு கண்காணிக்கப்பட்டன.

இப்படி தூள்பரப்பி பட்டய கிளப்பி ஒன்பாட்டிபோரை அமுல் படுத்தி கண்காணித்து கொண்டு இருக்கும்பொழுது............

அம்மன்பட்டியை சேர்ந்த  ஐநூறு சாதிவெறி பக்தர்கள், ஒன்பாட்டிபோரை மீறி  நீண்ட தடிக்கம்புகள் சகிதமாக போலீஸ் தடையை மீறியும் சில போலீசை தாக்கி விட்டும்  கமுதி வழியாக தங்கள் நடைபயணப்போரை தொடங்கி விட்டார்கள்.

இதனால் அரண்டு பயந்து போன எஸ்பிக்கள்,ஏஸ்பிக்கள், உயர் போலீசு அதிகாரிகள், நடைபயண பக்தர்களை தடுத்து நிறுத்தி, ஒன்பாட்டி போரை விளக்கி இரண்டு பேருக்கு மேல்,அதுவும் தடிக்கம்புகளுடன் செல்லக்கூடாது என்றும் அதனால் பஸ்ஸில் செல்ல அறிவுறுத்தினர்.

ஒன்பாட்டிபோருக்காக எங்களை பஸ்ஸில் போகச் சொல்வதா ..? என்று கோபம் கொண்ட  குல தெய்வத்தின் பக்தர்கள். பஸ்ஸில் போகச் சொல்வதை கண்டித்து மறியல் செய்தனர். மறியலில் பெருமாள் தெவன்பட்டி போன்ற அருகருகே உள்ள ஊரின் குலதெய்வ பக்தர்களும் சேர்ந்து கொள்ள சாதிவெறி பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

உடனே.ஒன்பாட்டிபோரை அமுல்படுத்தும் அதிகாரிகள் யார் யாருக்கோ போன் பேசினர், பிறகு அவர்களின் உத்தரவுபடி, அசம்பாவிதத்தை தடுக்கும் முகமாக ஒன்பாட்டிபோரை மறந்து,பக்தர்களை நடைபயணமாக செல்ல அனுமதித்தனர்.

சாதிவெறி குலதெய்வத்தின் சமாதி  இருக்கும் இடத்தி்ல் அய்ந்துஆயிரம் போலீசும்,தென் மாவட்டங்களில் இருப்பதைந்தாயிரம் போலீசையும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளதால்.........

அரண்டு.மிரண்டு போன  நடப்பு மற்றும் வருங்கால சாதிவெறித் தலைகள் எல்லாம் எதற்கு வம்பு பின்னாடி பாத்துக்கிறலாம் என்ற ரீதியில் அந்தந்த மாவட்ட,.மாநகராட்சி,பேரூராட்சி,ஊராட்சி நகரங்களில் நிறுவப்பட்டுள்ள சாதிவெறி குல தெய்வத்தின் சிலைகளையே சமாதியின் வழிபாட்டுத்தலமாக மாற்றி,போலீசு பாதுகாப்போடு பால்குடம்,வேல்குடம்,காவடி,முளைப்பாரி   மேளதாளங்கள் போன்ற சகல அம்சங்களுடன் சென்று கொண்டாடினார்கள்.

மேற்பட்ட சம்பவங்களுடன், அமைச்சர் பெரு மக்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதும்,  முப்படை தளபதியை வரவேற்க சென்றவர்கள் மீது கல்லெறியபட்டதும் புரடசி புயலும் தன்னை பின் தொடர்ந்து வந்த புரட்சிப்படையை தடுத்து தன் படையை திருப்பி அனுப்பியது, மோடியின் அல்லக்கைகள்,தேசிய விழவாக கொண்டாட போவதாக சவுடால் விட்டது போன்ற எல்லா களக்காட்சிகளையும் அனைத்துவித  தினசரி பத்திரிகைகளிலும்,  எல்லா  தொலைக்காட்சிகளிலும் நேரடி யாகவும்    ஒளி-ஒலி பரப்பு செய்யப்பட்டன.

மேற்படி ஒன்பாட்டி போர் களக்காடசிகளை.  படித்தும் பார்த்தும் இருந்த இரு நண்பர்களான ,காசுப்பாண்டியும் சிவக்குமாரும் ,பஸ் நிறுத்தத்தில் ஒரு காக்கி சட்டை உருவும் செய்த அலப்பரையை நிணைத்து கைப்பேசியில்   பேசிக் கொண்டனர்.

“ஒன் பாட்டி போரின் ” போர்களக்காட்சியெல்லாம் பாத்து வெறுத்துப் போனதாக சொல்லி, அலப்பரை செய்த உருவத்தைப்பற்றி தகவல் கேட்டார் காசப்பாண்டி..

அதற்கு சிவகுமார்சொன்னார். அது எவனா...இருந்துட்டு போகட்டும் “ போலீசே சாதிவெறி போலீசாகத்தான் இருக்குதுன்னு வினவு தளத்துல படித்த கட்டுரை எடுத்துக்காட்ட, பரமக்குடி சம்பவத்தையும் ஒன்பாட்டி போர் சம்பவத்தையும் ஒப்பிட்டு பார்க்கச் சொன்னார் சிவக்குமார்.

கடைசியாக, காசுபாண்டி சொன்னார். நவம்பர்புரட்சிதினவிழா, கூட்டத்துக்கு வருமாறு ஒரு தோழரு சொன்னாரு, நீயும்வா,நாம ரெண்டு பேரும் போவோம். அங்கபோயி புரட்சிகர உணர்வை பெற்று வருவோம்  தவறவிடவெண்டாம்  வா..என்றார்

கண்டிப்பா வர்ரேன். நீ எங்க வீட்டுக்கு வந்துடு சேர்ந்தே போவோம்.... என்று பதில் சொன்னார் சிவக்குமார்.





திங்கள் 04 2013

திமுக-வின் முப்படைத்தளபதி கொட்டிய போர் முரசு.....





சாதிவெறி குலதெய்வத்து சமாதி பூஜையில் கலந்து கொண்ட“ திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் முப்படைத்தளபதி”.............“அகில இந்திய அனைத்து திருடர்கள் முன்னெற்ற கழகத்திற்கு” போட்டியாக..

சாதிவெறி குல தெய்வத்தின் பழைய திரைக்கதையுடன் புதிதாக சில வசனங்களையும் சேர்த்து செய்தி ஆளர்களிடம்

முத்துராமலிங்க ம் அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவானவர் என்றும், சமுதாய ஒற்றுமைக்கு பாடுபட்டவர் என்றும் அவரை குறுகிய வட்டங்களில் அடைக்ககூடாதென்றும்,144 தடையுத்தரவு போட்டது சரியான நடவடிக்கை அல்ல என்றும் தன்னுடைய போர் முரசை கொட்டினார்.

தந்தையைப் போலவே தனயனும் திரைக்கதை அமைத்து சாதிவெறி குலதெய்வத்தின்  வரலாற்றை மாத்தி போ்ட்டு போர்முரசு கொ்ட்டி ஒளிவட்டம் போடுவதில் தானும் கில்லாடிகள்தான் ............என்பதை தெளிவுபடுத்திவிட்டார்..

எந்தப்படையையும் போரிட்டு வெற்றி  வாகை சூடாத இந்தத்தளபதி..........

ஞாயிறு 03 2013

நீங்க....தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா........!!!


 தீபாவளி அன்னிக்கு தொலை காட்சியால் ஒரே தொல்லையாக இருந்தது, கைகாலும் சும்மா இருந்ததால, கைக்கும் காலுக்கும் வேல கொடுக்குற
துக்காகவும்  , மக்கள் எப்படியெல்லாம் தீபாவலிய கொண்டாடுறாங்கன்னு பார்ப்பதற்க்காகவும், அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து வாக்கிங் போயிட்டு வரலாமுன்னு  வீதி வழியா போய்கிட்டு இருந்தேன்.

ஒன்னாவது தெருவிலிருந்து என் வீட்டுக்கு அருகிலுள்ள மெயின் ரோட்டு வரைக்கும் உள்ள கடைகளெல்லாம் அடப்பு, ஆனா, அதில. ஒரே ஒரு கடை மட்டும் ஜெக ஜோதியா ஒளி வீசிகிட்டு இருந்தது. அந்தக் கடையில ஒரே வெள்ளையும் சொள்ளையுமான கூட்டம்.......

அது எந்தக் கடைன்னு ஒங்களுக்கு  படிக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கும் இருந்தாலும், தெரியாதவங்களுக்கு சொல்லனும்ல....... அதனால ,அந்தக் கடை  வேறு கடை இல்லங்க.............ஒயின் ஷாப்புங்க,

அந்தஒயின்ஷாப்ப கடந்துதான் நான் போகனும்  வரனும்.. அத அவாய்ட் பண்ணாம போகவம் வரவும் முடியாதுங்க........ அந்தக் கடைக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு கூடாரத்துல“ உங்கள் உதவிக்கு காவல்நிலையம்னு இருக்கிற.  இடத்த போட்டு அது பக்கத்துல தொலை பேசி எண் எழுதிய போர்டு ஒன்னு மாட்டி இருந்தது.ச்சுங்க......... அத இப்பதாங்க...நானும் பார்க்குறேனுங்க.. நா...........அத பாத்தபடி முகத்த வேறு பக்கமா திருப்பி கிட்டு போனேனா..........

ஒரு குடி மகன் என்ன தடுத்துட்டாருங்க................

என்னா,அந்த போர்டையே பாத்துகிட்டு போறீரு..........அந்த மகன் சொன்னாருங்க........ அப்புறம் அவரே..பேசினாருங்க.........போலீசக்காரன் செல் நம்பர போடலேன்னு.... பாக்குறீரா...............ன்னு கேட்டுன்னு  சிரிச்சாருங்க.......

 பதிலக்கு சிரிக்கலைன்னா அந்த குடிமகனுக்கு கோபம் வருமுன்னு  எனக்கு முன்னாடியே தெரிஞ்சதுனால....... நானும் பதிலக்கு பல்ல மட்டும் காட்டினேனுங்க................

நான் பல்ல காட்டினனோ, இல்லையோ.அத பாத்துட்டு.இன்னொரு குடி மகன் தள்ளாடி தள்ளாடி  வந்து.என் தோள் பட்டையில கைய வச்சாருங்க.......

அவரும். பொன்னான ஒரு கேள்விய கேட்டாருங்க............. என்னாது தீபாவலி அதுவுமா.......கருப்பு சட்டய போட்டுகிட்டு, தீ  பாவ  லீக்கு   ட்ரெஸ்  எடுக்கலை யான்னு.....................

நா.............அந்தக் குடி மகன திரும்பி பார்த்து பதில் சொல்றதுக்குல்ல.முதல் குடி மகனே....... பதில்  சொன்னாரு............பாய்காட் பன்னுறாருன்னு...........என்றார்.....

ரெண்டாவது குடி மகனறாருக்கு, நானு யாருன்னு திடீரென்று ஞாபகம் வந்திருச்சு போல......... ஓ......ஓ................ஓ..........காம்ரேட்.........காம்ரேட்...........
என்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு விரல்களில் ம ற்ற விரல்களை மடக்கிவைத்து ஆள்காட்டிவிரலை மட்டும் நீட்டி தலையை பல தடவை ஆட்டி ஆட்டி சொன்னார்.

இப்படியே விட்டால் என்னைச் சுற்றி  குடி மகன்கள் கூடி விடுவார்கள் என்பதால் நல்லபடியாக அவர்களிடமிருந்து தப்பிக்கும் முகமாக.. தோழர் ஒருவர் என்னை பார்க்க, பஸ்நிறுத்தில் நிற்கிறார்.  அவரை பார்க்க செல்ல வேண்டும். பிறகு பேசலாம் என்று   அவர்களின் ஒப்புதலை பெற்று நடையை கட்டினேன்.

 கொஞ்ச தூரம் சென்று,வீட்டுக்கே செல்லலாம், என்று திரும்பி பார்த்தால்...மூனு நாலு குடி மகன்கள் நின்று கொண்டு இருந்தார்கள். மனதை மாற்றிக் கொண்டு வாக்கிங் செல்ல தொடங்கினேன்.

பைபாஸ் ரோட்டைக் கடந்து பிக் பஜார் பில்டிங்கிட்ட நடந்து வரும்பொழுது. அங்கு    கணவனும் மனைவி மான ரெண்டு பேர் வழி மறித்து தீபாவளி வாழ்த்து சொன்னார்கள்.

எதுக்குங்க...வாழ்த்து.. நாந்தான் தீபாவலியே கொண்டாடடுறதே..இல்லையே என்றேன்.  ரெண்டு பேருமே சேர்ந்து ..நீங்க.....தீபாவளிய  கொண்டாட மாட்டிங்களா ....? என்று கேட்டார்கள்.

அவர்களுக்கு தியரியை  எடுத்து சொல்வதை விட்டுட்டு, சிம்பிளிக்கா..சில விபரங்களை மட்டும் சொன்னேன்.

எனக்ககு விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து தீபாவலியை கொண்டாடடுவது இல்லை, அன்று புத்தாடை துணிமணியும் எடுப்பதில்லை. அணிவதுமில்லை, என்றேன்.

 ஆட்டுகறிகூட எடுத்து சமைத்து சாப்பிடுவதில்லையா என்றார்கள் வியப்புடன. அவர்களுக்கு   தோழர்களின் மொழியின் சில விளக்கங்கள் சொன்னேன்.

விலை அதிகமிருப்பதால் காந்தி(ஆட்டுகறி) எடுப்பதில்லை..பறவையில் ஊசி ஏற்றி பெருக்க வைப்பதால் அதையும் சாப்பிடுவதில்லை.  காங்கிரசும் (மாட்டுக்கறி) வரவர ரப்பராக இருப்பதால். சாப்பிடுவதில்லை. “நவம்பர் 7 புரட்சி தின”த்தில் மட்டும்  சமைத்து சாப்பிட்டுக் கொள்வது.... இந்திய்ன் பார்லி மென்ட் ( கருப்பு பன்னி) மற்றும் அய்ரோப்பிய பார்லிமெண்ட (வெள்ளைப்பன்னி) இரண்டையும் தொடுவதே இல்லை.. என்றேன்.

 அடப்பாவி!  தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா !!! என்று கேட்தற்க்கா இம்புட்டு விவரம் என்பது போல்  கணவனனமனைவி இருவரின்  வாய்  திறந்து இருக்க.............அவர்களிடம் விடைபெற்று, “ விட்டா போதுமடா........ சாமி” என்று வாக்கிங்கை பாதியிலயே முடித்துக் கொண்டேன.



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...