பக்கங்கள்

சனி 11 2015

அவர்கள் வரிசையில் நிற்கத் தயார்.......

படம்-tamil.thehindu.com


இலவச பொருட்கள்
கொடுக்கிறார்களா..?
அவர்கள் வரிசையில்
நிற்கத்தயார்,...............

அப்பன் ஏழுமலையானை
தரிசிக்க வரிசையில்
நிற்க வேண்டுமா......??
அவர்கள் வரிசையில்
நிற்கத் தயார்...

இது மாதிரி பல
வரிசையில் நின்று
களம் பல கண்டவர்கள்

தமிழகத்தில் சட்டசபை
தேர்தல் நடத்த
தேர்தல் ஆணையம்
தயார் என்றால்
அவர்கள் வரிசையில்
நிற்கத் தயார்....தயார்......!!!!!!!!!!!!!!!

வியாழன் 09 2015

எஜமானியாம்மாவின் நாயாக இருந்தாலும்,வாயும் வாலும் வேறு வேறனாவை...!!!

Image result for நாயின் வகைகள்
படம்-www.kungumam.co.in

எஜமானியம்மாவின் விசுவாசமான நாயாக இருந்தாலும்.அந்த நாயின் வாயும்.வாலும் வேறு வேறனாவை என்பதற்கு ஆதாரமாக இந்தச் சம்பவத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

அடித்தக் கொள்ளையின் ஊழலால், தீர்ப்பு கூறப்பட்டு, தன் கார்டனில் ஓய்வு எடுத்து கொண்டே, தன் சுண்டு விரலால் ஆட்சியையும்,  ஆளும் ஆட்களையும் ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கும் எஜமானியம்மாவின் அருமையையும்.பெருமையையும் செவ்வாய் மண்டலம்வரை பரப்பிக் கொண்டியிருக்கும் தொண்டர்கள், ஊழியர்கள், அமைச்சர் பெருமக்கள், நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில்....

நீரின் மேலே  மிதந்து (டாஸ்மாக தண்ணி அல்ல) எஜமானியம்மாவின் ஆயுளை கெட்டியாக்கி உழைத்த கோமகனும், எஜமானியம்மாவின் மேல் ஒரு துறும்பு பட்டால் அந்தத் துறும்பை கடித்து சின்னாபின்னமாக்கி, தன் ஆதிக்க சாதிகூட்ட பராக்கிரமத்தை காட்டித்திரியும் கொம்பனும், எதிர் எதிரெதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது, எல்லா ஓட்டு சீட்டு கட்சிக்காரர்களுக்கும் தெரியும்.

அதாவது, கிணத்து தண்ணியிலேயும், கண்மாய் தண்ணிலேயேயும் முழ்காமல் மிதந்து எஜமானியம்மாவின் புகழ் பாடும் கோமகன். அடக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்.  பிற சாதியை அடக்கி ஒடுக்கியே வீரம் பெற்ற ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் கொம்பன். இவர்கள் எதிர்எதிர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும். எஜமானியம்மாவின் பக்தர்கள். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் அடிமைகள்...

இவர்களின் பக்தியையும், விசுவாசத்தையும் கண்டு மனம் குளிர்ந்து போன எஜமானியம்மாவர்கள் இருவருக்கும் தொகுதி எம்எல்ஏ என்ற பதவியை கொடுத்து அனைவரையும் அரவனைக்கும் வள்ளல்தன்மையைக் பறைச்சாட்டிக் கொண்டார்.

எஜமானியம்மா ஆளும் நாட்டில் குளிர்காலம்போயி, கோடைகாலம் வந்தது.. குடிக்கும் தண்ணரீரை பாட்டிலில் அடைத்து பகாசூர கொள்ளைக் கம்பெனிக்கு போட்டியாக, குறைந்த விலையில் விற்று,தன் தயாள குனத்தின் கரிசனத்தை வெளிப்படுத்திக் கொண்ட எஜமானியம்மாளின் புனித உள்ளத்தை மேலும் தெரியப்படுத்துவதற்க்காக, எஜமானியம்மாவின் பக்தர்கள் இலவசமாக, நீர்,மோர் பந்தலை திற்ந்து வக்கற்ற மக்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள்.

இப்படியாக எஜமானியம்மாளுக்கு புகழும் பெருமையும் சேர்த்து அதன்மூலமாக மேலும் பதவியும் பரிசும் பெறும்விதமாக, தன் அல்லகை்கைகள் மூலமாக, கொம்பன், கோமகனின் தொகுதிக்குள் புகுந்து, அந்த கோமகனை புறக்கணித்துவிட்டு அடுத்தத் தேர்தலில், இந்தக் கோமகனின் தொகுதியை கபளிகரம் செய்து, இந்தத் தொகுதியை தனக்கோ, அல்லது தனது சாதிவெறி குலகொழுந்துகளுக்கு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன்., எஜமானியம்மாவின் புகழ்பரப்பு என்ற பதாகையுடன்“ நீர்மோர் பந்தல்” திறப்பு விழாவில், தனது ஆதிக்கச்சாதிவெறி படையுடன் வந்து. திறந்து வைத்தார் சாதி வெறி குலதெய்வத்தின் பெயரை தனது பெயராக சூட்டிக் கொண்ட திருகுமங்குல தொகுதி கொம்பன்.

இந்தச் செய்தியறிந்து, எஜமானியம்மாவின் புகழை பரப்புவதற்க்காக கோயிலுக்கு வேண்டிக் கொண்ட தாடியுடன் தனது தொகுதியான ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு உள்ள ஸ்தலத்தில் ,படையில்லாமல் ஆஜராகி

திருகுமங்க கொம்பனிடம், “எனது தொகுதிக்குள் எனக்கு தெரிவிக்காமல் என் அனுமதி இல்லாமல் நீர்,மோர் பந்தலை எப்படி திறக்கலாம் என்று கோமகன் கேட்க..

இது கட்சி நிகழ்ச்சி, மாவட்டச் செயலாளர் என்ற முறையில்“நீர்மோர் பந்தலை திறந்து வைக்க எனக்கு அதிகாரம் உள்ளது, அதுக்கு என்னாங்குறே... என்று தனது ஆதிக்கச் சாதி வெறி குணத்துடன் நாக்கை  துறுத்திச் கொண்டு கெட்ட வார்த்தை பேச...

கோமகனும் இவர்களின் அரட்டல் மிரட்டலுக்கு பயந்து தொகுதியை விட்டுக் கொடுத்திடக்கூடாது என்ற பதைபதைப்பில் எதிர்த்து கேள்விக்கேட்க, ஒரு கட்டத்தில் கோமகனுக்கும், கொம்பனுக்கும் கை கலப்பு ஆரம்பித்தவுடன், கூடியிருந்த கூட்டங்களில்  சிலர் இவர்களுக்கு இடையே உள்ளே புகுந்து கோமகனையும் கொம்பனையும் விலக்கிவிட்டனர்.

கொம்பன் ,தன் ஆதிக்கத்தின் பவரையும், பலத்தையும் நிலைநாட்டும் விதமாக, அதனைக்காட்டி தன்னை எதிர்த்த கோமகனை அடக்கும்விதமாக  கோமகனின் எதிர்ப்பை மதிக்காமல், வீம்புக்கு பஸ்ஸாண்டில் அருகில்  சென்று ,நீர்மோர் பந்தலை திறந்து வைத்து தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிவிட்ட வெற்றிப் பெருமிதத்தில் கொம்பன் ஊர்வலமாகச் சென்றார்.

இந்தச் சம்பவத்தைக் நேரில் கண்ட தொகுதி மக்களோ, இந்தக் கோமகன் தொகுதிக்குள் அந்த கொம்பன் வந்து நிர்மோர் பந்தல் திறந்து வைத்தது மாதிரி, அந்தக் கொம்பன் தொகுதிக்குள் இந்தக் கோமகன் சென்று நீர்மோர் பந்தல் திறந்து வைத்தால் அந்தக் கொம்பன் சும்மா இருப்பாரா??? என்று கேள்வி கேட்டனர்.

நடுநிலையாளர்களோ.... கொம்பனின் ஆதிக்கச்சாதிவெறியின் ஆதிக்கத் திமிறால்தான் இந்த பிரச்சனை என்றார்கள்.

 இந்தியாவே, நாலா பிளந்து மண்ணோடு மண்ணாக போகாதொழிய சாதி வெறியும் சாதி ஆதிக்கமும் ஒயாது ஒழியாது என்ற போதிலும், சாதியிலே பெரிய சாதியான எஜமானியம்மாவின் வீட்டு விசுவாசமுள்ள நாயாக இருந்தாலும்.அந்த நாயின் வாயும்,வாலும் வேறு வேறனாவை என்றுதான் இந்தச் சம்பவம் இந்தச் சமூகத்திற்கு மீண்டும்  உணர்த்துகிறது.


திங்கள் 06 2015

காந்தியின் செல்வாக்கை ஒழித்த ஜின்னா.....

படம்-www.kalachuvadu.com


மதுரை வந்த காந்தி . எப்படி! அரை ஆடை காந்தியாக மாறி.. ஏழைகளை கவர்ந்திழுக்க  தந்திரம் செய்தாரோ...அதே பாணியில் பாகிஸ்தான் நாட்டுத் தலைவரானவர் எம்.ஏ.ஜின்னா..

ஜின்னாவும் மேல் நாட்டு நாகரிக உடைகளை கைவிட்டு, பின்தங்கிய இசுலாமிய மக்களிடையே, இந்திய பாணி உடைகளோடு சென்று கலந்துறவாடினார். சல்வார் வகைத் காற்சட்டையும்,ஹெர்வானியும் அணிந்த ஜின்னா, கீழ்தட்டு இசுலாமிய மக்கள் கூட்த்தில் கலந்து நின்றார். அவசர அவசரமாக கற்றுக் கொண்ட உருது மொழியில் பொதுக்கூட்டங்களில் பேசினார். இவையெல்லாம் மக்கள் தலைவராகும் செயல் நோக்கம் கொண்ட வெளி நடிப்பு என்று  தெரிந்திருந்தாலும்..

 மதவுணர்வகளைத் தூண்டிவிட்டு இந்து தீவிரவாதி அரக்கனை எப்படி காந்தி உருவாக்கினாரோ, அதே வழியை ஜின்னாவும் பின்பற்றி,“ இசுலாமிய தீவிரவாதக் கொடிய விலங்கை உருவாக்கினார். இவையெல்லாம் ஏழை இசுலாமியர்களிடம் காந்திக்கு இருந்த செல்வாக்கை ஒழித்தது.

பகத்தறிவுவாதிகளாலும்,தீண்டப்படாதவர்களாலும், இசுலாமியர்களாலும் கைவிடப்பட்ட காந்தி, மேல்சாதி இந்துக்களின் தலைவராகவும், பின் இந்து தேசியம் என்று அழைக்கப்படத் தொடங்கிய பார்ப்பனியத்தின் பேச்சாளாராகவும் காந்தி சுருங்கிப்போனார்.


நன்றி.....

இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.

Product Description


இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.


ஞாயிறு 05 2015

வீரமாய் பொய்யுரைத்த சுவாமிஜி.......! ! !

படம்- மாலைமலர்


இந்து எழுச்சி பற்றிப் பேசும் இன்றைய இந்து தீவிர வாதிகள். பார்ப்பனிய மதம் பிற மதங்களுடன் மிகுந்த சகிப்பு தன்மையுடன் நடந்து கொள்வதாக   இன்று வரை விடாமல்  பொய்யுரைத்து  கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மையில்

பார்ப்பனிய இந்து மதத்தால்.. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் தென்னிந்தியாவில் இழைக்கப்பட்ட கொடுமைகள் எண்ணிலடங்காதவை....

இந்த அரிய பெரிய உண்மைகளை, இவர்களுக்கு முன்னோடியாக “கட்டுச் சோற்றில் பெருச்சாளி” யை மறைத்த கதையாக...  1893 ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி அமெரிக்காவின் சிக்காகோவில் நடந்த ஆன்மீக மாநாட்டில் சுவாமிஜி ,“எனது அருமை அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! என்று தொடங்கி பேசியதை பெருமையாக சிலாகித்து  போனவர்களுக்கு, தென்னிந்தியாவில்  இருந்த சமனர்களும், பௌத்தர்களும் சகோதரிகளாக! சகோதரர்களாக தெரியவில்லை.   ஆங்கில உரை நிகழ்த்திய சுவாமிஜிக்கே அமெரிக்க மக்கள்தான் சகோதரிகளாக.....சகோதரர்களாகத்தான்  தெரிந்து இருக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் இருந்த பௌத்தர்களும் சமணர்களும் தெரியவில்லை. அதனால்தான்..சுவாமிஜி..உண்மையை மறைத்து. “பார்ப்பனிய இந்து மதம் பிற மதத்தினரை கொடுமைப் படுத்தியதும் இல்லை. இந்து மதத்தை பரப்புவதிலும் ஈடுபட்டதில்லை” என்று  போகுமிடமெல்லாம் கூறினார்.

கி.பி. 600ஆம் ஆண்டு வாக்கில் .மதுரையில் தமிழ் பார்ப்பனான திருஞானசம்பந்தன் என்பவன் .8000 எட்டாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றான்.

அந்த எட்டாயிரம் சமணர்களை கொன்றதன் வெற்றி விழாவாகத்தான் இன்றைய நாள் வரையிலும் மதுரை மீனாட்சி கோயிலிலும். வேறு சில கோயில்களிலும்  திருவிழாக்களாக நடத்தப்பட்டு வருகின்றன்.

இதோடு, தமிழக பௌத்தர்களும்,சமணர்களும் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்ட காட்சிகள், அனேக கோயில் சுவர்களில், ஓவியமாக வரையப் பட்டுள்ளன.

பௌத்தருடைய சீடர்களும், பௌத்த மதத்தைச் சார்ந்த  பாமர மக்களும் ஈவு இரக்கமின்றி கொடுமை படுத்தப்பட்டார்கள். வெட்டிக் கொல்வது, நாடு கடத்துவது, வாள் முனையில் இந்து மதத்திற்கு மாற்றவது போன்ற ஏகப்பட்ட கொடுமைகள் செய்தார்கள்.

இவற்றை எல்லாம்  வசதியாக மறைத்துவிட்டு  சுவாமிஜி..வீரமாய் கர்ஜனை செய்து அன்றே பொய்யுரைத்தார்.


நன்றி!:-

-இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.

Product Description

இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...