பக்கங்கள்

சனி 09 2015

அவர்கள்தான் தேச பக்தர்களாம்.....!!!!!!!!


modi-cartoon
படம்-வினவு.
அவர்கள் தங்களை தேச
பக்தர்கள் என்று பறை
சாற்றிக் கொண்டார்கள்.

அவர்களின் தேச பக்தியை
தேச மக்களுக்கு வெளி
காட்ட பன்னாட்டு முதலாளிகளுக்கு
நாட்டை கூறு போட்டு
விற்றார்கள். அவர்களின் போலி
தேச பக்தியை எதிர்போர்களுக்கு
தேச விரோதிகள் என்று முத்திரை
பட்டம் கொடுத்து கௌரவித்தார்கள்.

அவர்கள் தங்களை தேச
பக்தர்கள் என்று காட்டிக்
கொண்டார்கள். கூறு போட்டு
விற்ற தேசத்தின் வளர்ச்சிக்காக
 வேலை வாய்ப்பை பெருக்குவோம்
என்று முழங்கினார்கள்.-- ஆனால்
அடிமை வேலை செய்ய வேண்டும்
 என்று உத்தரவு போட்டார்கள்

அவர்கள் தங்களை தேச
பக்தர்கள் என்று பீற்றிக்
கொண்டார்கள். தேசத்தில்
தொழில் வளர்ச்சியை அதிகப்
படுத்துவதற்க்காக தொழிலாளர்
சட்டத்தை திருத்தினார்கள். அதோடு
அந்த தேசத்தின் தொழிலாளர்
உரிமைகளை ஒழித்துக் கட்டினார்கள்.

அவர்கள் தாங்கள்தான் உன்மையான
தேச பக்தர்கள் என்று மார் தட்டினார்கள்
அந்த மார்தட்டின் ஊடே  தேசத்தின்
முதுகெலும்பு விவசாயிகள் என்றார்கள்.
அந்த முதுகெலும்பு விவசாயிகளின்
நிலத்தை புடுங்குவதற்கு வஞ்சமாகமாய்
நில எடுப்பு சட்டம் கொண்டு வந்தார்கள்.

இன்னும்அவர்கள் தாங்கள்தான்
இந்தநாட்டின் தேச பக்தர்கள்
என்று  கொக்கரித்தபடி 56
இஞ்ச் மார்பை காட்டிக்கொண்டு
பெருமையோடு வலம் வருகிறார்கள்.


வெள்ளி 08 2015

மரணத்தைப் பற்றிய புரட்சியாளர்களின் பார்வை,



ninaivu-koorthal
படம்-வினவு.
படிக்க----நூல் அறிமுகம்



 தோழர் லெனின்:


போல்ச்விக் கட்சியின் மத்தியக்குழு ஸ்மோல்னி இன்ஸ்டிடியூட் என்ற இடத்தில் இயங்கி கொண்டிருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நாட்களில் லெனின் தலைமறைவாக இருப்பார். போல்ச்விக் கட்சிக்கு சோவியத்துகளில் பெரும்பாண்மை இல்லாத காரணத்தினால் ஆயுதந்தாங்கிய எழுச்சியை தொடங்குவதா? வேண்டாமா? என்று ஒரு தடுமாற்றம்  மத்தியக்குழு உறுப்பினர்களுக்கே இருக்கும். லெனினோ  ஆயுத எழுச்சியை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியக் குழுவுக்கு கடிதம் அனுப்பிக்  கொண்டே இருப்பார். இருப்பினும் மத்தியக்குழு அவர் கருத்தை ஏற்றுக் கொள்ளாது.

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு மிக்கது. உடனே நான் மத்தியக் குழுவை நேரில் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று புறப்படுவார்.லெனின். அவருடைய பாதுகாப்புக்கு பொருப்பான தோழர் அதனை ஆட்சேபிப்பார். அதனை லெனின. நிராகரித்து வெளிக் கிளம்புவார். காரணம் புரட்சி எழுச்சியை உடனே தொடங்க வில்லை என்றால். இன்னும் சில பத்தாண்டுகளுக்கு புரட்சி தள்ளி போய்விடும். அந்த இழப்பை ஒப்பிடும்போது என்னுடைய உயிர் பெரிது அல்ல.. என்றார் லெனின்.

தோழர் பகத்சிங்:

உலகிலேயே போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம் பகத்சிங். தூக்கு மேடையேறியதுதான் பகத்சிங்கின் சிறப்பு என்று பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்த முடிவின் பின்புலத்தில் அவருடைய குழுவில் நடைபெற்ற விவாதங்கள் ரெம்ப முக்கியமானவை, அவருடைய குழுவினர் மத்தியிலேயே அரசியல் ரீதியில் முன்னேறியவரும், அமைப்புத் துறையில் ஆற்றல்மிக்கவரும், தொலை நோக்கோடு சிந்திக்கக்கூடியவரும் சிறந்த கிளர்ச்சி யாளரும் பகத்சிங்தான்.

மற்ற தோழர்கள் சொல்கிறார்கள். “நாடாளுமன்றத்தில் குண்டு வீசும் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட வேண்டாம் நாங்கள் போகிறோம். நீங்கள் போகக்கூடாது, நீங்கள் சாகும் நிலைமை ஏற்படக்கூடாது, நீங்கள் கட்சிக்கு தேவை. அந்த வேலையை நாங்கள் செய்கிறோம்” என்று வாதாடுகிறார்கள்.

பகத்சிங் சொல்கிறார், “ இது ஒரு அரசியல் நடவடிக்கை, நாம் யாரையும் கொல்லப் போவதில்லை. இது வெறும் வெடிச்சத்தத்தையும் புகையையும் உருவாக்கப் போகின்ற ஒரு குண்டு. இதில் கைதாகி நீதிமன்றத்தை, அந்த மேடையை  நம்முடைய அரசியல் கிளர்ச்சிக்கு, புரட்சி பிரச்சாரத்திற்கு, தேச விடுதலைக்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல அதற்க்கான ஆற்றல்கள் வாய்க்கப் பெற்றவனாக நான்தான் இருக்கிறேன்.. அதனால்தான் நான் இதை செய்வதன் மூலம்தான் இந்த நோக்கம் நிறைவேறும். இது மரணதண்டனைக்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும். எனினும் அது செய்யப்பட வேண்டும் என்றுதான் நான் செல்கிறேன்.. நான் இறப்பதன் மூலம்தான், இந்த அரசியல் கிளர்ச்சி பிரச்சாரத்தின் மூலம் தான்,நம்முடைய புரட்சிகர அரசியல் என்பது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் என்று விளக்குகிறார். பகத்சிங.

ninaivu-koorthal-back

தகவல் --- “  கீழைக்காற்று வெளியீட்டகம்”  
நினைவு கூர்தல்: தடுமாற்றமும் போராட்டமும்- மேற்படி நூலிருந்து.......

வியாழன் 07 2015

மக்களின் முதல்வர் ஆணைக்கிணங்க......


படம்-Jaya TV News


அண்ணன் தம்பி இருவர். ஒருவர் மாற்றி ஒருவர் நெடு நேரமாக அந்த வீதியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.  அவர்களின் வாக்குவாதம் முடிந்தபாடில்லை, இடையிடையே இருவரும் மாமன் மச்சினன் மாதிரியும் பேசிக் கொண்டனர். தாகத வாரத்தைகளாலும் திட்டிக் கொண்டனர். ஆனால் கைகலப்பு இல்லாமல்...இருந்த போதிலும் அவர்களின் பேச்சுக்கள் முடியவில்லை.

இதை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டு இருந்த அவர்களுக்கு பழக்கமான ஒருவர். என்ன விபரம் என்று தெரிந்து கொள்ளலாம். முடிந்தால் பேச்சை முடித்து வைக்கலாம் என்ற எண்ணத்தில்.  அவர்கள் அருகில் சென்று, அவர்களின் இருவரின் பெயரையும் அழைத்து, அவர்கள் நெடு நேரமாக பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டு வந்ததாக தெரிவித்து என்ன? ஏது? என்று விசாரித்தார்.

அண்ணன் காரன் சொன்னான்.   என் தம்பியான இவன் மகனுக்கு காதணிவிழா நடத்த முடிவு பண்ணி அச்சகத்துக்கு பத்திரிக்கை அடிக்க போனோம். போனோமா...? அங்க போனவுடன்  பிரிண்டிங் அடிக்கிறவன் பேரு,விபரம், இடம், தேதி, பஸ்ரூட் எல்லா த்தையும் எழுதிட்டு வந்திருக்கிங்களா என்று கேட்டான்.

நாங்களும் ஜேசியர் எழுதிக் கொடுத்த குறிப்புகளை கொடுத்தோம்.. வாங்கிப் படித்துப் பார்த்தவன். பிள்ளையார் சுழியை போட்டுவிட்டு .ஒங்க சாமி பேரு அதாவது எங்க கொல தெய்வத்தின் பேர சொல்லுங்க என்றான்.

நான் எங்க கொல தெய்வத்தின் பேரச் சொன்னேன். உடனே .இவன் என்தம்பி மொதல்ல அம்மா பேர போடுங்க என்றான். மொதல்ல சாமி பேர போட்டுட்டு அடுத்தாக அம்மா பேர போடுவோம்டா என்றேன். இவன் இல்ல.மொதல்ல அம்மா பேர போடு அதுக்கு பிறகு சாமி பேர போடுன்னான். இல்லடா மொதல்ல சாமி பேர போடுவோம்டா என்றேன் நான். இவன்  அம்மா பேர போடுனே்றான்  இதுதான் எங்களுக்குள்ள வாக்கவாதம்!..நீங்களே !! சொல்லுங்க... பத்தரிக்கை அடிச்சா ..மொதல்ல சாமி பேரத்தானே போடுவாங்க... அதுதானே முறை...   

எங்கே..? வந்தவர் அண்ணன்காரனுக்கு ஆதரவாக பேசி விடுவாரே என்று நிணைத்த தம்பிகாரன் சொன்னான்

அம்மாவ வச்சுத்தான் நாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கிறோம். அம்மா இல்லேன்னா நாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கவே முடியாது. எங்களை வாழ வைத்த அம்மாவுக்கு எங்களுடைய விசுவாசத்தையும் நன்றிக்கடனையும் தெரிவிக்கும்முகமாகத்தான். காதணிவிழா பத்தரிக்கையில் முதலில் அம்மா துணை என்று அம்மாவை போட்டுட்டு, அடுத்தாக சாமி பேர போடுவோம்னு நான் சொல்றேன். இவரு என்னடான்னா... மொதல்ல சாமி பேரு, அடுத்து அம்மா பேரு ன்னு ஒத்தக்கால்ல நிக்கிறாரு.. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிற பாத்து பிரிண்டிங்காரன்.எனக்கு அடுத்த வேல இருக்கு, நீங்க போயி, , ஆற..அமர யோசித்து. ஒரு முடிவு எடுத்துட்டு வாங்க அப்புறம் பத்தரிக்கை அடிக்கலாமுனு  அனுப்பி வச்சுட்டான்.. நீங்களே! சொல்லுங்க..வாழ வச்ச அம்மாவ மொதல்ல போடுறதா.... கும்பிடுகிற சாமிய மொதல்ல போடுறதா....???

தம்பிகாரனின் அம்மா பாசத்தைக் கண்டு ஒரு கணம் மெய்சிலிர்த்துதான் போனார் வந்தவர். தம்பிக்கு ஆதரவாக..அண்ணனிடம் பேசினார்.

யோவ்.... தாயின் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்லுக்கு மந்திரமில்லன்னு முன்னொர்கள் சொல்லி வைத்திருந்தது. ஒனக்கு தெரியலீயா,.... என்னய்யா...நீ.... நம்மள..பெத்து,வளத்து,பெரிய ஆளாக்கி, நீங்க இருக்கிற இந்த நிலமைக்கு கொண்டு வந்தியிருக்கிற  தாய... கோயில் கட்டி கும்பிடனுமிய்யா.... பேசமா...தம்பி சொல்ற கேட்டு, அம்மா பேர மொதல்ல போட்டு  அடியிங்கய்யா.....

அண்ணன்காரர் வந்தவர் சொன்னதைக் கேட்டதும் இடைமறித்துக் கேட்டார்.“ நீங்க எந்த அம்மாவ சொல்றீங்க....

“எந்த....அம்மாவா....? ஒங்கள பெத்து வளத்த அம்மாவைத்தான் சொல்றேன் என்றார் வந்தவர்.

அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரே சொன்னார்கள்.

“ நாசமா..போச்சு””

வந்தவர். விழித்தார். “என்னங்கடா.....இவிங்க....எந்த..அம்மாவட சொல்றாங்கே..” அண்ணன் தம்பி இருவரையும் சந்தேகத்துடன் பாரத்தார்.

தம்பிகாரன் சொன்னான். தமிழ்நாட்டுல...எத்தினி அம்மா..இருக்காங்க.... ஒரே அம்மாதாங்க.....மக்களின் முதல்வர் அம்மாதாங்க....

வந்தவர் திக் பிரமை பிடித்தவர் போல் பேசாமல் நின்றார்.“அடடா. இவிங்க  
அம்மா திருடர்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவிங்கன்னு நிணைவுக்கு வராம போச்சேன்னு தன் தலையில் லேசாக தட்டிக் கொண்டார். 

அண்ணன் காரன் மீண்டும் பேசினான். தம்பியை கவனிக்கச் சொல்லிவிட்டு, சொன்னான்.   மக்களின் முதல்வர் அம்மா மூலம்தான் நாம பணக்காரனாக ஆனோம் அதில் மாற்று கருத்து எதுவுமில்லை. இல்லேன்னும் சொல்லவில்லை.. ஆனா..நம் அம்மாவே... எல்லா வேலைகளையும் செய்வதோடு. நிற்காமல்  முடிவாக சாமியைத்தான் வேண்டிக்கிட்டு இருக்காங்க. சாமி துணை இல்லாமலா அம்மா அவர்கள் சாமியை வேண்டுகிறார்கள். நம்ம அமைச்சர் மற்றும் கட்சி பெருமக்கள் எல்லாரும் சாமியைத்தானே வேண்டிக்கிட்டு இருக்காங்க.... அதனாலத்தான் தம்பி சொல்றேன் முதலில் சாமி பேர போட்டு, அடுத்து அம்மா பேர போடுவோம். வந்தவரை பார்த்து என்னங்க நா...... சொல்றது....

அண்ணன் சொல்றது எனக்கு நல்லதா படலீங்க... நாளைக்கு அம்மா.. விடுதலை ஆகி வந்தவுடன் தேர்தல நின்னுடுவாங்க..... அதுக்கு முன்னாடி  அம்மா படத்தை போட்டு ,அம்மா துணைன்னு. பத்திரிக்கை அடிச்சா,  அது அம்மா கைக்கு போகும்போது அம்மா பாப்பாங்க...... அது எனக்கு பிறவிக்கடன் தீர்த்த மாதிரி பெருமையாக இருக்கும், அந்த பெருமைக்கு அச்சரமாக.. அம்மா அவர்கள் எனக்கும் தேர்தல்ல நிக்க எனக்கு ஒரு வாய்ப்பு அருள்வாங்க... அந்த அருளக்கு இந்த காதணிவிழா பத்தரிக்கை உதவும்... இத எத்தனிவாட்டி எடுத்து சொன்னாலும் அண்ணனின் மண்டைக்குள் ஏறமாட்டுது... நீங்கதான் அவரு மண்டைக்குள் ஏத்தனும்.

வந்தவர்..சண்டாயங்களா....!!! இதுக்குத்தான் அண்ணனும் தம்பியும் முட்டிகிட்டு இருந்தேங்கேளடா...” முனுமுனுத்தார். முகவாய் கட்டையில் கை வைத்தவாறு,இவிங்களுக்கு என்னத்த சொல்வது..களவானி(களின்) முதல்வர் ன்னு சொன்னா முன்னா..ரெண்டு பயல்களும் பாஞ்சு நம்மள கொதறிப்புடவுானுக..., எதுவும் சொல்லாம போனா..“  என்ன மயித்துக்கு எங்களிடம் பேசின”ன்னு எகிருவானுக...” எதச் சொல்லி இவிங்கிட்ட இருந்து தப்பிக்கிறது என்று யோசித்தார் வந்தவர்.

அண்ணனும் தம்பியும் மீண்டும் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஒருவழியாக வந்தவர் சொன்னார். மொதல்ல ரெண்டு பேரும் பேச்ச நிறுத்துங்கப்பா”ன்னு உத்தரவு போட்டார். அண்ணனும் தம்பியும் பேச்சை நிறுத்திவிட்டு இவரைப் பார்த்தனர்.

சென்ற தேர்தலில் அம்மாவின் ஆணைகிணங்க   வாக்காளர்கள் அணைவரும், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு அம்மாவின் ஆணை பெற்றவர்களும் ஆசி பெற்றவர்களும் ஜாக்பாட் அடித்து வெற்றி பெற்றனர். அப்படி ஜெயிச்சவங்க எல்லாரும். அம்மாவின் சட்ட சபையில பதவி எத்துகிட்டவுக. என்ன சொல்லி மந்திரி பதவி ஏத்துக்கிட்டாங்கன்னு ஒங்களுக்கு தெரியுமா??

அத டீவியிலேயும், காட்டுனாங்க...போப்பர்லேயும் போட்டு இருந்தாங்க.... இருந்தாலும் உங்களுக்காகச் சொல்றேன்

“எதுக்கும் லாய்க்கு இல்லாத என்னை அமைச்சராக்கிய அம்மா”ன்னு சொல்லித்தான் மந்திரி பதவி ஏத்துகிட்டாங்க...... இது மாதிரி நீங்களும் தேர்தல்ல ஜெயிச்சு அம்மா முன்னாடி பதவி ஏத்துக்கிற போது இப்படித்தான் சொல்ல வேண்டும். அதனால..அதுக்கு அச்சாரமாக... ரெண்டு பேருக்கும் பொதுவாக  “ மக்களின் மதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க” என்று அச்சடித்து காதணி விழாவ  நடத்துங்க....

அண்ணன்காரனுக்கும் தம்பிகாரனுக்கும் வந்தவர் சொன்னது ரெம்பவும் ரெம்பவும் பிடித்துப்போய்விட்டது. “மக்களின் முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க” என்று பல தடவை சொல்லிப்பார்த்துக் கொண்டனர்.


பொருத்தமான வாசகத்தை சொன்னவரை கை குலுக்கி, டீ குடிக்க வருமாறு வற்புறுத்தியபோதும் மறுத்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்று,சிறிது தூரம் வந்து அவர்களை திரும்பி பார்த்தார்.

திருட்டு பயல்களா...ஊர் சொத்தை கொள்ளையடித்த மொள்ளமாறிகளா..??“ “களவானி முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க ” உங்க கொள்ளைய ஆரம்பிங்கடா...?உங்களுக்கு ஓட்டு போட்டவன் எல்லாம் நாசமாக்குங்கடா.... என்றார் கோபத்துடன்.

செவ்வாய் 05 2015

“ஹலோ” என்றொரு சத்தம்............

படம்-www.kalachuvadu.com

“ஹலோ” என்று
சத்தம் கேட்டு
திரும்பி போது
எதிரில் ஒருவர்
என்னை தெரியுதா?
என்றார்................

சிறிது யோசித்து
தெரியலையே என்று
உண்மையைச் சொன்னதும்
“படா”றென்று  என்
கன்னத்தில் அறைந்தார்.

நீ.... என்ன...
லூசா.... எதிரில்
நிற்கும் என்னை
தெரிய வில்லை
என்று சொல்கிறாய்..
நீ   ..... குருடா...?
என்று கேட்டார்.

நான் என்னத்தைச்
சொல்வது.எதைச்
சொன்னாலும் அறை
விழும்.... என்று
தெரிந்தது  தப்பிக்க
ஒரு வழி.......
சொல்லுங்களேன்.


ஞாயிறு 03 2015

பட்டுத் தெறித்த பார்வைகளில்..கண்டு கொள்ளாத ஒரு பார்வை..


கூலிங்கிளாஸ் கண்ணாடி க்கான பட முடிவு
படம்-mbasic.facebook.com

நீண்ட தூரம்
செல்லும் பாசஞ்சர்
ரயில் அது.

ஒவ்வொரு நிலையத்திலும்
அசைந்தாடி சென்று
நின்று,..நிழலாடி
கூத்தாடி உறவாடி
மெதுவாக செல்லும்
 அந்த ரயிலில்
திக்குத் தெரியாமல்
நானும்.................

மணி இரவு இரண்டு
தூக்க கலக்கத்துடன்
அந்த  நிலையத்தில்
ரயில் நின்றதும்

திமு திமு வென்று
ஏறினார்கள் அவர்கள்
கூட்டம் நிரம்பி
இருந்த போதும்
வழியில் படுத்து
இருந்தவகள் சிலரை
எழுப்பி விட்டு
தாங்கள் நிற்பதற்கு
ஒரு இடத்தை
பிடித்துக் கொண்டு
பயணித்தார்கள் அவர்கள்.

வந்தவர்களில் பலர்
இளைஞர்களாய் தெரிந்தார்கள்
அவர்களைக் கண்டவுடன்
அணிச்சைச் செயலாக
டாப்ஸ்யையும் துப்பட்டாவையும
 கூடவே தலை முடியையும்
சரி செய்து கொண்டேன்.

அவர்கள் கலகல
வென்று சிரித்துப
 பேசிக் கொண்டே
என்னை கவனித்தார்கள்.
 என்னருகில் நின்றவர்களும்
வழியில் நின்றவர்களும்
தங்களின் பேச்சின்
ஊடே என்னைப்
பார்ப்பதும் என்
பார்வையை தவிர்க்கும்
விதமாக என் மார்பை
பார்ப்பதுமாய் போக்கு
காட்டி என்னை
அளவெடுத்துக் ரசித்துக்
கொண்டு இருந்தார்கள்.

பட்டுத் தெறித்த
அவர்கள் பார்வையில்
என் முக கவர்ச்சியை
விட என் மார்பக
கவர்ச்சியைத்தான்
அவர்கள் விரும்பகிறார்கள்
என்பது தெரிந்தது.

ஒரு நிலையத்தில்
மெதுவாக சென்ற
ரயில் நின்றபோது
அடைத்துக் கொண்டு
இருந்த கூட்டம்
சிறிது குறைந்தது.

அந்தக் கட்டத்தில்
என்னை ரசிப்பதை
நிறுத்தி விட்டு
கிடைக்கும் இடத்தில்
உட்காரவும் தூங்கவும்
மான வேலையில்
கவனம் செலுத்தினார்கள்

பட்டுத் தெறித்த
பார்வையால் ரசித்தவர்கள்
தூக்கத்தினால் சோர்வடைந்து
விட்டதினால் நானும்
கண் அயர்ந்தேன்.

கண் அயர்ந்த
நேரத்தில் லக்கேஜ்
வைக்கும் இடத்தில்
இருந்து ஒரு
பார்வை ஒன்று
நான் படுத்திருக்கும்
அழகை ரசித்து
கொண்டு இருப்பது
எப்படியோ தெரிந்தது.

அந்தப் பார்வை
எனது பார்வையை
தவிர்க்கும் பொருட்டு
கூலிங் கிளாஸ்
கண்ணாடி அணிந்து
நிதானமாக ரசித்தது.

படுத்தபடியே கண்
விழித்து பார்த்தபோது
அந்த முகத்தை
எங்கேயோ அடிக்கடி
பார்த்தாக நிணைவு
எங்கு என்பது
நிணைவுக்கு வர
மறுக்கிறது...........

கண்களை அகலத்
திறந்து பார்த்தேன்
அந்தப் பார்வை
பட்டுத் தெறிக்கும்
பார்வையாக இல்லை.

எழுந்து அமர்ந்து
சுற்றும் முற்றும்
பார்த்தேன். எல்லாப்
பார்வையும் ஓய்ந்து
தூக்கத்தில் மிதந்து
கொண்டு இருந்தது.

அந்தக் கூலிங் பார்வை
தலையை ஆட்டாமல்
அசையாமல் என்னை
ரசிப்பது தெரிந்தது
நானும் ஆவலுடன்
அந்தக் கூலிங் கிளாஸ்
பார்வையை ரசித்தேன்.

அந்த முகம்
எனது கனவிலோ,
நிணைவிலோ வந்த
தெரிந்த முகமாகவே
எனக்கு தோன்றியது.

அழகு இருந்தும்
படிப்பு இருந்தும்
மாப்பிள்ளை வீட்டாரின்
அதிகப்படியான விலையால்
எனது திருமணமும்
தடை பட்டே வந்தது.

இந்த முகத்தைக்
கண்டவுடன் ஏதோ
இனம் புரியாத
சந்தோசமும் நம்பிக்கையும்
 ஏள்ப்பட்டது என்
ஆசையும் வானில்
சிறகடித்து பறந்தது.

இன் பன்னிய பேண்ட்
முழுக்கை சட்டையுடன்
கூலிங்கிளாஸ் சகிதமாய்
தலை நரைத்தும்
இளைஞனாய் காட்சி
அளித்தார்............

நான் திருமணம்
ஆகாதவள் என்பதை
காட்டுவதற்க்காக கழுத்தை
தடவிக் காட்டினேன்.
காலில் மிஞ்சி
இல்லை என்பதை
காட்டுவதற்க்காக காலை
என் மடியில்
பட்டியலாவை மேல்
துக்கி காட்டினேன்

எல்லாவற்றையும் தலை
ஆட்டாமல் திருப்பாமல்
ரசிப்பது தெரிந்தது.
மேலும் அவர் என்னை
ரசிப்பதற்க ஏதுவாக..
தடையாய் இருந்த
டாப்ஸ்க்கு மேல்
இருந்த துப்பட்டாவை
கழற்றி விட்டேன்.

நானும் பார்த்துக்
கொண்டு இருந்த
போது எந்த சலனமும்
காட்டாமல் பார்த்துக்
கொண்டு இருந்தார்.

என் பார்வையை
தவிர்த்து தங்கள்
பார்வையை என்
மார்புகளுக்கு உள்
ஊடூறுவிச் செல்லும்
பல பார்வைகளை
கண்டு உணர்ந்த
நான்..அவர்
 பார்வையும் ஊடுறுவிச்
செல்வதற்க்கு வசதியாக
அவர் மேலிருந்து
பார்வை செலுத்துவதற்கு
தோதாக டாப்ஸ்சை
தளர்த்தி  சீட்டின்
நுனிக்கு வந்து
குனிந்து உட்கார்ந்தேன்.

பார்த்தற்கு அறிகுறியாக
கன்னத்தையும் உதட்டையும்
கைளால் தடவிக்
கொண்டு இருந்தார்.

இரண்டு மணி
நேரத்தில் இறக்கி
விட வேண்டிய
ரயில் மூன்று
மணி நேரமாகியும்
இறக்கி விடவில்லையே
என்று மற்றவர்கள்
பேசியதை கேட்டபோது
அவர் இறங்க வேண்டியது
அடுத்த நிலையம்தான்
என்பதை தெரிந்து
கொண்டவுடன் ...எனக்கு

கையும் ஓடவில்லை
காலும் ஓடவில்லை,
எப்படி அவருடன்......
செல்வது என்பதும
தெரியவில்லை.....

எல்லாக் கடவுளையும்
வேண்டிக் கொண்டேன்
என்னைக் கண்டு
கொண்ட அந்தப
 பார்வைக்கு சொந்தமான
அவருடன் என்னை
அனுப்பி  வைக்க........

நிலையத்தில் வண்டி
நின்றபோது அவர்
இறங்குவதற்கு தடையாக
 நின்று அவர்
பார்க்கும்படியாக என்
உடைகளை சரி
செய்தேன். வேறு
வழியாக இறங்கிவிட்டார்.

பதறியடித்து அவருக்கு
முன் சென்று நடை
மேடையில் அவர்க்கு
முன் நின்றேன்....

அவர் மற்றவர்களுக்கு
வாழ்த்துச் சொல்லி
விடை பெற்று
கொண்டு இருந்தார்.

கடைசி வாய்ப்பாக
நடை மேடையை
கடந்து வெளி
வாயிலை கடக்கும்
இடத்தில் அவர்
வருகைக்காக நின்ற
போதும் அவர்
நண்பர்களின்
கைகைள பற்றிய
வண்ணம் என்னை
கவனிக்காமல் என்னைக்
கடந்து சென்றார்.

எனக்கு கத்த
வேண்டும் போல்
இருந்தது........

“அட..சண்டாளா..
உனக்கு கண்
அவிந்தா போய்
விட்டது  என்று”

கத்த முடியவில்லை
அதற்குப் பதிலாக
என் கண்களிலிருந்து
தாரை தாரையாக
கண்ணீர் வழிந்தது.



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...