பக்கங்கள்

சனி 25 2014

கனவில் வந்ததும்..நிஜத்தில் வராததும்..



பெருங்கூட்டம் அந்தக்
கூட்டத்திலே சிக்கிய
நான்- பாட்டுப் பாடு
வதற்க்காக தவியாய்
தவித்த வேளையிலே...

பெருங்கூட்டத்தின் மத்தியிலே
நெற்றியில் மூன்று பட்டை
நடுவிலே பெரிய பொட்டுட்ட
துறவியொருவர் மேடையிலே
வீரமாய் எழுந்து நின்றார்.

காவியுடை தரித்த வீர
துறவியைக் கண்டு
பெருங்கூட்டம் ஊளை
யிட்டு வரவேற்றது.

ஊளையிட்ட கூட்டத்தினை
கை சைகயால் சாந்தப்
படுத்திய துறவி வீரமாய்
முழங்கினார்......தப்பு
வீரமாய் கத்தினார்.

இந்துக்களே! இந்துக்களே!!
தீபாவளி பண்டிகையை
இந்துக்களாகிய நாம்
மட்டுமே கொண்டு ஆட
வேண்டும் என்ற நம்
மரபை மீறி கண்ட
வனும் கொண்டு ஆடுகிறான்.

தீபாவளி பண்டிகை வியா
பாரத்திலே..அவன் மட்டுமே
நல்ல லாபமடைகிறான்.

ஆகவே...இந்துக்களே! இந்து..க்களே!!
இந்து..க்களின் வீர மரபை
மீட்டெடுக்க..இந்துக்களாகிய
நாம் வரும் காலங்களில்...

தீபாவளியை கொண்டாடாமல்
புறக்கணிப்போம்..புறக்கணிப்போம்
புதுத்துணி வாங்காமல் புறக்கணிப்போம்
வெடி வெடிக்காமல் நிறுத்தி வைப்போம்.

பெருங்கூட்டமும் புறக்கணிப்போம்!
புறக்கணிப்போம்  !! இந்துக்கள்
அல்லாதவர்கள் லாபமடையும்
தீபாவளி பண்டிகையை புறக்
கணிப்போம் என்று வெடிச்
சத்தம ளவிற்கு  ஊளையிட்டது

அதி காலை நேரத்தில்
கேளாத செவியில் வெடிச்
சத்தம் கேட்டு எழுந்த
போது கனவு கலைந்தது
வெடிச் சத்தத்தின்.....
ஆத்திரத்தை அடக்கியவன்
மூத்திரத்தை அடக்க .....
முடியாமல் ஓடினே்ன்
விரைவாய் பாட்டு பாட....


குறிப்பு ---பாட்டுப்பாட என்பது சிறுநீர் கழிப்பதை  குறிக்கும்.


வெள்ளி 24 2014

கொழுப்பெடுத்த...வாழ்க்கை..




விலை வாசி ஊயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற எந்தவித பிரச்சனையும்  இல்லாத இவர்களின் இந்த விளையாட்டு என் பார்வைக்கு கொழுப்பெடுத்த வாழ்க்கையாகத்தான் தோன்றுகிறது

ஒரு நாள் கூத்துக்கு பிறகு திண்டாட்டம்

சிட்டுக்குருவி


 சிட்டு குருவிகனக்கா...
பல நாள் உழைத்து 
சேர்த்த பணம் ஒரு நாள்  
கூத்தில் காலியானது........

தேவைக்கு வாங்கிய
கடனுக்கு பலநாள் வட்டி 
கட்ட பரிதவித்த போதும்- 
அதை மறந்து, ஒரு நாள் 
கூத்தால் பல நாள் கட்டிய 
வட்டியும அடையாத  
முதலும் சேர்ந்து புதிய 
கடனாக எழுந்தது........

பலநாள் பார்க்காத லாபத்தை
ஒரு நாள் பார்த்தவனுக்கு
தீபாவளி  அவனுக்கு கொண்டாட்டம்

பல நாள் சேர்த்த 
பணத்தை ஒரு நாள் 
கூத்தில் இழந்தவனுக்கும்
புதிதாய் வட்டிக்கு  
வாங்கியவனுக்கும் தீபாவளி 
கூத்து திண்டாட்டம்.

இருப்பவனுக்கு தீபாவளி
பல நாள் கூத்தாகும்
இல்லாதவனுக்கு தீபாவளி
பல நாள் திண்டாட்டமாகும்








புதன் 22 2014

பன்றிகளுக்கு தினப்படி ” கட்”


http://www.vinavu.com/2013/08/09/parliament-powers-cpm-dreams/



பன்றித் தொழுவத்தில்
பன்றிகள் கூச்சலிட்டு
 கத்தி  புரண்டால்...இனி.

பன்றிகளுக்கு வழங்கப்படும்
தினப்படி ” கட்” செய்யப்படும்

கொறடா.........க்கள் முடிவு.

செவ்வாய் 21 2014

அறிவு இயலார் தா.. பாண்டியனின் கண்டுபிடிப்பு..

படம்-oosssai.blogspot.com


” வ.ஊ.சி சிறையிலிருந்து விடுதலையானபோது  அவரை அழைக்கச் சென்றவர்கள் ஏழு பேர் ” ....

“ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானபோது வரவேற்க சென்றவர்கள் ஆயிரக்கணக்கானோர்”

வியாபாரியாக மாறிய நடிகர்.........

படம்-www.naalayacinema.com


தமிழ் அமைப்புகளும் தமிழக மாணவர்கள் அமைப்புகளும்  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால்  , தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வந்த அந்தப் படத்தில் நடித்த நடிகர்.

சர்ச்சைக்குரிய அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அந்த நடிகர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொண்டார்.

“ நான் தியாகியும் கிடையாது, துரோகியும் கிடையாது” என்று.........

திங்கள் 20 2014

வேசத்துக்கு துட்டு தராமல் ஏப்பம்விட்ட கொள்ளையர்கள்


படம்-ekuruvi.com


தமிழகத்தில் அடித்த கொள்ளையால்  சிறையில்  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த கொள்ளையர்களை விடுவிக்க சொல்லி........ கொள்ளையர்களைின் பலத்தை காட்டுவதற்க்காக வெளியே உள்ள கூட்டாளி கள்

கூலிக்கு வேசம் போட்டு , கோஷமிட்டவர்களுக்கு பேசிய துட்டை தராமல் எஸ்கேப் ஆகி ஏப்பம் விட்டு விட்டார்கள். கொள்ளையர்கள்.

ஞாயிறு 19 2014

செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பிய தூய்மை நாட்டின் பெருமைகள்

படம்- தினமலர்

மழை பெய்தால் தெருவெல்லாம் குளம் குட்டையாகும்
அதில் பாய்ந்து செல்லும் நான்கு சக்கர இரண்டு சக்கர
ஹீரோ்க்களால் வீதியெல்லாம்  தெறித்த  சகதி மயமாகும்
வெயில் அடித்தால் நகரமெல்லாம் குப்பை மயமாகும்
கற்றடித்தால்  ரோடெல்லாம்  புழுதி மயமாகும்...........

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...