பக்கங்கள்

சனி 07 2013

பயபுள்ள இப்பவாவது களத்துல குதிக்குமா குஜராத்தீ...............???

370வது பிரிவு குறித்து மோடியை விவாதத்துக்கு அழைக்கும் ஒமர் அப்துல்லா
இந்நேரம்காம்






பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சமீபத்தில் பொதுகூட்டம் ஒன்றில் 370 பிரிவின் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரியிருந்ததை தொடர்ந்து அப்பிரிவு சம்பந்தமாக சர்ச்சை வெடித்தது.
மோடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 370 பிரிவு குறித்து மோடியுடன் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் தாம் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ளார். மோடியை நோக்கி ஒமர் அப்துல்லா பகிரங்க விவாத அழைப்பு கொடுத்துள்ளார்.

பயபுள்ள சவாலை ஏத்துகிட்டு களத்துல குதிக்குமா??????????ஓடி ஒளியுமா..........?????

வெள்ளி 06 2013

“தெரு மறிச்சான்” என்னவென்று தெரியுமா..............???

கிராமங்களில் உள்ள ஊர்க்கோயில்களில் திருவிழா கொண்டாட தொடங்குவார்கள்.

அந்த ஊர்க்கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய வீதிகளை மறித்து தடுப்பு ஒன்று வைக்கப்படும். அந்த தடுப்புகளுடன் கூடவே ஒரு அறிவிப்பும் செய்யப்படும்

“திருவிழா முடியும் வரை,தீண்டத்தாகதவர்களும்,தாழ்த்தப்பட்டவர்களும் இந்தப் பகுதிக்குள் நுழையக்கூடாது. மீறினால் தண்டனை நிச்சயம் .என்று.

இதைத்தான் “தெரு மறிச்சான்” என்பார்கள்.

“இப்படி ஓர் அறிவிப்பை பகிரங்கமாக வைக்கும் அளவுக்கு”, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீண்டாமை கொடுமை உச்சத்தில் இருந்தது.

 இன்றும்  அதன் தொடர்ச்சி, பல்வேறு வடிவங்களில்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


பூரிக்கட்டை அடி வாங்கும் பிரபல பதிவர்......???

அவர் தமிழில் பிரபல பதிவர்.  வெளி உலகத்தில்.அதாவது வெளி நாட்டில் ஒர்க் செய்கிறார். நகைச்சுவைக்கும் மகிழ்ச்சிக்கும் ஒன்றும் குறைவில்லை.

இருப்பினும் அந்த பிரபல தமிழ்பதிவர்க்கு ஒரே சிறப்பு அப்பப்ப பூரிக்கட்டையால் அடிவாங்குவதுதான்.

கவுண்டமணி ஒரு படத்தில் வெளியே உதார்விட்டு,வீட்டிலே மணைவியிடம் கைமுறுக்கப்பட்டு செம அடி வாங்குவது மாதிரி  இல்லாமல்,

தான் பூரிக் கட்டையால் அப்பப்ப அடி வாங்குவதை ஒளிவு மறைவு இல்லாமல் கொட்டி பதிவிடுவதால், இவரைப்போல் அடி வாங்கும் ஆண்கள்  நாம மட்டும் அடி வாங்கவில்லை. பிரபலமே அடி வாங்குது என்று ஆறுதல பட்டுக் கொள்ளலாம்.

வாழ்க! பூரிக்கட்டைகள்!! வளர்க! பிரபலங்கள்.!!!

 இன்னுமா .....அந்தப் பிரபல பதிவர் யாரென்று தெரியவில்லை.........???

தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லூங்கள்.




வியாழன் 05 2013

தீயா பேரு வாங்கனும் ஓம் சக்தி சேகரு.................

சிதம்பரம் நடராஜன் கோயிலை களவானிகள் தீட்சர்களிடம் நோகாமல் ஒப்படைக்க வழிவகை செய்யும்  பார்ப்பன பாசிச ஜெயா அரசையும்.சகுனி சு.சாமி, சோ மற்றும் ஆர்.எஸ்.எஸ. உள்ளிட்ட இந்து பரிவார கும்பல்களை அம்பலப்படுத்தியும்   எதிர்த்தும் தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் துண்டு அறிக்கை கொடுத்து பிரச்சாரமும், மனித உரிமை பாதகாப்பு மையம் , உச்ச நீதி மன்றத்தில் நடத்தும் வழக்கு செலவுக்காக மக்களிடம் நிதியுதவி கேட்டும் இயக்க வேலைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த இயக்க வேலையினை புதுச்சேரி புஜதொமு தோழர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பொழுது.புதுச்சேரியின் அகில இந்திய அணைத்து திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் திருடனான ஒம்சக்தி சேகர்.

திடிரென்று பாப்புலராகி அதன் மூலம் அம்மாவின் பாதம் தொட்டு.அம்மா காலால் தூக்கிப்போடும் எலும்புத்துண்டை கவ்விக் கொள்ள வேண்டும் என்ற எச்சிகலை தனத்தினால் தன் பரிவாரங்களுடன் வந்து அடாவடி செய்துள்ளான்.


பார்க்க   http://www.vinavu.com/2013/12/05/admk-mla-attacks-ndlf-workers/


ஆத்தாவே.......ஒவ்வொரு ஊர்லேயும்,ஒவ்வொருத்தரு மேலேயும் ஒன்னுக்கு முக்காலா அவதூறு வழக்கு போட்டு இருக்கு............ புதுச்சேரி திருடனோ.அது தெரியாமல்..............

தீய்யா பேரு வாங்கனும் ஒம்சக்தி சேகரு...................ஆத்தா..
போடும் எலும்பு துண்டை மொத ஆளா கவ்வனும் செகரு............என்ற புது தெனவெட்டுல  மப்ப காட்டுறாரு...........................

புதன் 04 2013

அதிக நாள்வாழ ஆசையா....?



என் போன்றோர்க்கு அம்மாவாகவும்,  இளைஞர்-இளைஞிகளுக்கு பாட்டியாகவும் 93 வயதிலும் 50 வகையான  யோகாசனங்களை செய்து வியக்க வைக்கிற  கோவை கணபதியை  சேர்ந்த நானம்மாளை கேளுங்கள். அதன் இரகசியத்தை,............

செவ்வாய் 03 2013

ஊருக்கு இளைத்த ஆண்டிமடத்து பிச்சைகாரர்களுக்கு எச்சரிக்கை!





சகல விதமான ஊருக்கு இளைத்த ஆண்டிமடத்து பிச்சைகாரர்களுக் கு  இந்தீய ஜன்நாய்க தேர்தல் கமிஷன் மண்டி எச்சரிக்கை!!!

நடக்க இறக்கும் ஸனநாயக ஏற்க்காட்டுத் தேர்தலில் ஓட்டுப் பட்டனை பார்ப்பதற்கும் தொடுவதற்கும் , பணமாகவோ.பொருளாகவோ, பிச்சை பெற்றாலோ...............வாங்கினாலோ............ அடுத்து பிச்சையே எடுக்க முடியாதபடியும்  ஒரு வருட ஜெயில் தண்டனையும் வழங்கப்படும்

ஆளும் கட்சியோ,ஆளாத கட்சியொ பிச்சையிடுவதற்க்காக வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 5கோடிக்கும் மேலான பணம்,தங்கம்,வெள்ளி பொருட்கள் பறி முதல் செய்யப்படும்

அவர்கள் மீது வழக்கு தொடர,முதலில் ஓலை அனுப்பி, பிறவு ஒரு வருடம் கழித்து பதில் ஓலை வராததை தெரிந்து, பத்து வருடங்கள் கழித்து வழக்கு தொடர்ந்து, இரண்டு நூற்றாண்டுகால அளவில் வாய்தா போட்டு, மூன்று நூற்றாண்டுகால அளவில் விசாரனை நடாத்தி, நான்காம் நூற்றாண்டில் சொல்லும் தீர்ப்பீன் அடிப்படையில் .ஓட்டு போடுவதற்க்காக ஆண்டிமடத்து பிச்சைக்காரர்களுக்கு பிச்சையிட்ட கட்சியின் மீது ஜன்நாய்க பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, கொள்ளையடிக்க வள்ளல்கள்  பிச்சையிடும்போது,அதை ஆண்டிமடத்து பிச்சைக்காரர்கள் பெறுவது தெரியவந்தால், அதுபற்றி 0000000
கட்டணமில்லா தொலை பேசியில் தெரிவிக்கலாம்.


(குறிப்பு..தகவல் தெரிவித்தவர் மேல் வழக்கும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படாமாட்டது)

திங்கள் 02 2013

பெரியாரின் புத்திசாலியானசிஷ்யரும்...பின் கூமுட்டைகளும்.............

படம்.மதிமாறன்
















ஒரு மாநாட்டில் பெரியார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது ஒரு பேச்சாளர். அடுக்கு சொல்லில் அலங்கார வார்த்தைகளில் பேசிவிட்டு மேடையைவிட்டு இறங்கி போய்விட்டார்.

அந்த பேச்சை கேட்ட பெரியார். தன் சிஷ்யர் சங்கரய்யாவை அனுப்பி,அந்தத் தம்பியை அழைத்து வாரும் என்றார்.

சிஷ்யர் சங்கரய்யவோ. தேடித்தேடி அலுத்து போயி, பெயரை மட்டும் தெரிந்து கொண்டு பெரியாரிடம் வந்து நின்றவர் “ அய்யா, அந்த இளைஞன் யரென்று தெரியவில்லை,அவன் பெயருகூட... மறந்து விட்டது .மன்னிக்கனும் என்றார்.

அது கேட்ட,பெரியார்.“ நாசமா போச்சு,....ஏன்யா......பேர கேக்கவா,இவ்வளவு நேரம். அலைஞ்ச? கூட்ட அமைப்பாளரிடம் கேட்டா தெரிஞ்சு போகுது.!! என்றார்.

பெரியார்  இருந்தப்பவே..... அம்புட்டு அறிவாளிக இருந்தானுக...........

இன்னிக்கு அவர் பெயர சொல்லியும் சொல்லாமலும்.வசதியாக அவர்  போராட்டத்தை மறைத்துவிட்டு  அவர் சேர்த்து வைத்த சொத்துக்கும் பேருக்கும் உரிமை கொண்டாடியும்  பார்ப்பானின் காலை நக்கி கழுவுறதுல புத்தி கெட்ட சிஷ்யர்களும் குட்டி குழுமானுமாக பெருகிட்டானுங்கப்ப்பா............

அதுக்கு அச்சராமா..காஞ்சி சங்கராச்சாரியாருக்குப் பாரத ரத்னாவும்,தில்லை நடராஜர்கோயிலை தீ்ட்சர் வசமும் வழங்கப் போறாங்கே

  சொன்னா .. முறத்தால புளியை விரட்டிய கூமுட்டைகளுக்கு கோபம் வேறு வருது.............................

ஞாயிறு 01 2013

“அண்ணாச்சி நீங்களா..!..!!, நல்லா இருக்கியளா”.....???...........


மேடைtuticorin-meeting-against-sand-mafia-11



கடலோர கிராம மக்கள் நீண்ட தொலைவிலிருந்து பொதுக் கூட்டத்தைக் காண வந்து கொண்டிருப்பதால், அவர்களின் வசதி கருதி கூட்டம் 5:30 மணிக்குத் துவங்கும் என்றது அறிவிப்பு. சரியாக 5:30 மணிக்கு கூட்டம் துவங்கியது.
7000 பேர் கூடிய அந்தக் கூட்டத்தில் ஒரு காட்சி...........
நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த கும்பலை நோக்கிச் சென்றோம். எப்படி கோஷம் போடுவது, என்ன கோஷம் போடுவது என்று திட்டமிடாமல் வந்திருந்தனர். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் கத்தித் தீர்த்தனர். சிலர் வைகுண்டராசன் வாழ்க என்றனர், சிலர் நாடார்களைப் பற்றிப் பேசாதே என்றனர், மொத்தம் 40 பேர் வரை இருக்கலாம். தினத்தந்தியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பொறுப்பாக வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் – புரிந்து கொள்ள முடிந்தது. அந்த கும்பலில் நின்று ஆவேசமாக கத்திக் கொண்டிருந்த ஒருவரை ஏட்டு ஒருவர் விளித்தார்,
“யேல நீ இங்கெ என்னலெ செய்த?”
“அண்ணாச்சி நீங்களா, நல்லா இருக்கியளா” என்று அவரை நெருங்கியவன், தன் கையிலிருந்த செல்போனில் எதையோ காட்டி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். பின் மீண்டும் கூட்டத்தோடு சேர்ந்து ஆவேச முகம் காட்டத் துவங்கினான். தொழில்முறை நெருக்கமாக இருக்கலாம்; நமக்குத் தெரியவில்லை.
 மீண்டும் மேடையை நோக்கித் திரும்பினோம். மேடைக்கு வலது பக்கவாட்டில் சிறு கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், “இன்னிக்கு நல்லா வசமா மாட்டுவானுவனில்லா பாத்தேன், ஓடிட்டானுவளே” என்ற தேனீர் கடைக்காரரிடம் மளிகைக் கடைக்காரர்.
 பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தோழர்களை சுட்டிக்காட்டினார், “அந்தா பாருவே கைல எந்தாம் பெரிய கம்பு வச்சிருக்காவன்னி… அந்த தெள்ளவாரிப் பயலுவ மாட்டியிருந்தா பல்லைக் களத்தி கையில குடுத்து அனுப்பியிருப்பாவ” என்று சிரிக்கத் துவங்கினார். பக்கத்திலிருந்த பலரும் அதை ஆமோதித்து சிரித்துக் கொண்டனர். மேடையில் வெவ்வேறு கடற்கரை ஊர்களைச் சேர்ந்த கமிட்டி பிரதிநிதிகளும் தலைவர்களும் உரையாற்றத் துவங்கியிருந்தனர்.

மேற்கண்டவைகள் .
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை அம்பலப்படுத்தும் போஸ்டர்கள் தூத்துகுடி நகரத்தின் சுவர்களெங்கும் முற்றுகையிட்டிருந்தன. “தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்!” – என்கிற முழக்கங்களோடு

வி.வியை எதிர்த்து வி.வியின் கோட்டையான தூத்துக்குடியில்  நடந்தஒரு பொதுக்கூட்டத்தில் நடந்த கதையில் சிறு காட்சி.

நன்றி! வினவு.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...