பக்கங்கள்

சனி 28 2015

“காதல்கோட்டை ” படத்தால் வந்த ஒரு விளைவு..

cinema-thirai-copy
படம்-வினவு.



எந்த லட்சியமும் வேண்டாம், அதற்க்காக போராடுவதும் வேண்டாம். காரிய வாதமே சிறந்த பண்பாடு என்ற போக்கு பரவிகிடக்கும்  இன்றைய சூழலில் நோகாமல் லாட்டரி பரிசுப் போல காதலும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்.


அன்று.... “காதல் கோட்டை” என்ற படம் வந்து 100 நாட்களை கடந்து  வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்தது.

அப்பொது அந்தப்படத்தை பார்த்த பெண்ணொருத்தி... தன் கைப் பையில் தன் முகவரியை எழுதிவைத்து....

அந்தப் பையை வேண்டுமென்றே பேருந்தில் தவறவிட்டு.... யாராவது ஒரு“ அஜித் ” அதை கண்டெடுப்பான் என்ற கனவில் மிதந்தாள்.

 அந்தப் பேருந்தில் கிடந்த பையை எடுத்தவன் ஒரு ரவுடி.. .பின்  அந்த ரவுடியின் “காதல் கோட்டை”யிலிருந்து தப்பிக்க அந்தப் பெண் போலீஸை நாட வேண்டிவந்தது..


ஆகையால் சினிமா ரசிகைகளே.... யாரும் காதலினிடம் சங்கிலியை தவற விடவேண்டாம். சங்கிலி திரும்பாது... ரசிகர்களே!!  யாரும் சங்கிலியை திரம்பக் கொடுக்க “காதலி” வீட்டுக்கு போகவும் வேண்டாம் ஆள் திரும்ப முடியாது..

நன்றி!   சினிமா: திரை விலகும் போது… -- புதிய கலாச்சாரம் வெளியீட்டிலிருந்து..

வெள்ளி 27 2015

ஒரே நாளில் கலைந்த காதல்......

படம்-Tolstoy. After the Ball. Stories.





நடன விருந்தொன்றுக்கு சென்றான் ஒரு இளைஞன். அங்கே ஒரு பெண்ணை பார்க்கிறான். பார்த்தவுடன் அவள் அழகால் கவரப்படுகிறான். அதன் விளைவாக அவளிடமும் அவளது தந்தையிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

அந்த ஆசையுடனே தன் வீடு வந்து சேர்ந்தவனுக்கு அன்றிரவு முழுவதும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

மறுநாள் காலை, அவளைப்பற்றிய நிணைவுடனே.. கடை வீதி வழியே சென்றவன்....

ஒருஅப்பாவி ஒருவரை கதற கதற அடித்து ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸ்காரன் ஒருவன் இழுத்துச் செல்வதைக் காண்கிறான்.

பரிதாபத்துடன் நெருங்கிச் சென்று அந்த அப்பாவியை பார்க்கிறான். அது அவனின்  தூக்கதை கெடுத்த..அவனின் மனம் கவர்ந்த மங்கையின் தந்தை.!!!

அந்த ஒரே  நாளில்....... அவள் மீது கொண்ட அவன் காதல் கலைந்து விடுகிறது.

வியாழன் 26 2015

அழகில்லாதவருக்கு இவ்வுலகமில்லை.......சிறுகதை.


Image result for காதல் கோட்டை
படம்- வினவு..
அந்தத் தெருவில் குடியிருக்கும்  தெரு மக்கள் எல்லோரும்   அந்த வீட்டில்  இறந்து கிடந்த பெண்ணைப் பற்றித்தான்  தங்களுக்குள் தங்களுக்கு தெரிந்த விபரங்களை குசுகுசுவென்ற சத்தத்தில் பேசிக் கொண்டு இருந்தனர்.

போலீஸ் வந்ததும் எல்லொரும்  குசு குசுப்பதை நிறுத்திவிட்டு  விழித்த கண்ணை இமை மூடாமல் வேடிக்கை பார்ப்பதில்  செலுத்தினர். ஒருவழியாக போலீஸ் செத்து கிடந்த பெண்ணின் உடலை வண்டியில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி விட்ட பிறகுதான் தெரு வாசிகளின் னண் இமைகள்  மூடி திறந்தன.

தெரு வாசிகளின் குசு குசு பேச்சு சற்று ஓய்ந்திருந்த நிலையில் போலீசு வந்து அந்தத் தெரு வாசிகளிடம் ஒரு பெண்ணின் போட்டோவை காண்பித்து யார்? என்று விசாரித்தவுடன். திரும்பவும் குசு குசுவானது.. சற்று ஒலியுடன்.. கேட்கத் தொடங்கியது.

போட்டோவில் இருக்கும் பெண்.. அந்த வீட்டில்  வாடகைக்கு குடியிருந்தவனுடன் இருந்தவள் என்று தெரு வாசிகள்  சொன்னார்கள்.

சரி. கண்டுபிடிப்பு  முடிந்தது என்று போலீசு இரந்த வேளையில்.. போட்டோவில் இருப்பது நான். தான் சாகவில்லை உயிரோடு இரக்கிறேன் என்று ஒரு செய்தி வந்ததும்... அப்போ.... கொலையுண்ட பெண் யார் என்று தேடுதலில் இறங்கியது போலீசு....

அப்படி தேடுதலில இந்தக் கதையின் கதாநாயகன் பிடிபட்டான்..

கண்ணாலே பார்த்து வந்த காதல் நூறுடா...
விழியில் பார்க்காமல் வந்த கண்ணியமான
காதல் இதுதாண்டா-----.............................................. 
என்று காதல் கோட்டை என்ற படத்தைப்போல்  

அதே காதல் கோட்டைப்படத்தில் கதாநாயகனின் நண்பன் பேசும்..

“நானும் கல்யாணம் பண்ணிக்குவேன், நயன்தராவையும்..அனுஷ்காவையும் காதலிப்பேன்... ஏன்னா..நான் சராசரி இந்தீயன் என வசனம்போல.

 அழகில்லாதவளுக்கு இவ்வுலகமில்லை என்றுதன் பிளாஷ் பேக் கதையைச் சொன்னான் கதாநாயகன்.

ஒரு குழந்தைப் பெற்று  கணவனை பிரிந்த ஒரு பெண்ணை  திருமணம் முடித்தவன்அவன் . அவர்கள் பெண்ணின்  தாய் வீட்டில் வசிக்கிறார்கள். அவன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு  அந்த வீட்டில்வாடகைக்கு குடியிருந்து.. ஒர்க் சாப்பில் வேலை செய்து வந்த நிலையில்......

ஒருநாள் எனது செல்போனுக்கு ஒரு கால் வந்தது. .. அதில் பேசிய பெண்ணின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. ஆரம்பத்தில் சஜகமாகத்தான்  பேசி பழகி வந்தான். அது ..........

அவனுக்குள் காதலை வளர்த்துவிடடது.  அவள் குரலும் இனிமையாக இருந்ததால் ..அவள் தேவதையாகவோ...பேரழியாகவோ இருக்கலாம் என்று  எண்ணி காதல் கோட்டை திரைபபடம் போல முகம் பார்க்காமல் காதலை வளர்த்து வந்ததால். அந்தத் தேவதையான பேரழிகியின் முகத்தை பார்க்க வேண்டும் ஆவல் மேலிட்டது..

அந்த ஆவலினால் இனிமையான குரலுக்குரியபெண்ணை குடியிருக்கும்  விட்டிற்கு வரவழைத்தான்... 

அந்தப் பெண்ணும்  முகம் காண காதல் கட்டளைக்கு அடிபணிந்து.. எனக்கு நேரில் காட்சியளித்தாள். தேவதையின் காட்சியை நேரில் பார்த்த அனக்கு  பேரதிர்சிசியாக இருந்தது. அவனது காதல் கோட்டை இடிந்தது.

பேரழியாக இல்லாவிட்டாலும் அழகியாகக் கூட இல்லாததால்... அந்தப் பெண்ணை கை கழவ எண்ணினான் . தன்னுடன் நான்கு நாள் தங்கிய அந்த அழகில்லாவளிடம் படுத்து தன் காமம் முழவதையும் தீ்ர்த்துக் கொண்டான்

அவனின் ஆசையயை தீர்த்த அந்த அழகில்லாஅநதப் பெண்... தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவனிடம்  மனு போடடாள்

தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்று மனுவுக்கு பதிலுரைத்தான். அவளின் மனுவையும்  நிராகரித்தான்.

அவனால் தன் மனு நிராகரிக்கப்பட்டதை உணர்ந்த அவள்.  உன்னை நம்பி என்னை கொடுத்தேன.வாழ்ந்தால் உன்னோடுதான் வாழுவேன்.  நீ மறுத்தால்  நான் போலீசிடம் போவேன் என்றாள்.

காமப் போதை தெளிந்தவனுக்கு கோபப் போதை தலைக்கேறியது.....அழகில்லாதவளை அடித்து தள்ளிய போதும் .  கேபப் போதை வெறி யால் கியாஸ்அடிப்பின் டியூப்பால் கழுத்தை இறுக்கி..... அழகில்லாதவளை இவ்வுலகத்தவிட்டு  அனுப்பி வைத்தான்.


அழகில்லாதவளை இவ்வுலகத்தைவிட்டு அனுப்பி வைத்த மகிழ்ச்சியில் ஓடி ஒளிந்து தப்பித்தவன்.. தப்பாமல் பிடிபட்டபோது... அழகில்லாதவளுக்கு இவ்வுலகமில்லை என்ற காதலின் புனிதத்தை வாக்குமூலமாகசொன்னான்.







புதன் 25 2015

நான் அசுரன்.... எனது பாட்டன் நரகாசுரன்....

நரகாசுரன்
நரகாசுரன்



அவசரமான வேலை ஒன்றை முடித்துவிட்டு தன் வீட்டை நோக்கி நடைந்து கொண்டு இருந்தபோது...

அவருக்கு பின்னால் தன் பெயரைச் சொல்லி கூப்பிடுவது தெரிந்ததும். நடையை நிறத்தி திரும்பி பார்த்த்தார்.

டீ கடைக்கு சற்று தள்ளி நின்று  கொண்டு ஒருத்தர்..“கணேசண்ணே....கணேசண்ணே என குரல் கொடுத்துக்கொண்டே ,  கை சைகையுடன”  இங்கே வாங்கண்ணே என்று அழைத்தார்.

குரல் வந்த திசையையும்  கை செய்கையையும் கண்ட கணேசண்ணன்.. “ அட...நீயாடா..., என்றவாறு கூப்பிட்டவரை நோக்கி நடந்தார்.

என்னண்ணே.... பலமான சிந்தனையில போறீங்களா?  என்றவர்.. அண்ணே என்ன  மறந்திட்டிங்கள??...? என்று கேட்டார்.

அதெப்படிடா.....உன்ன மறக்க முடியுமா....??? ஆமா... என்ன.. இந்தப்பக்கம் என்றார்.

என் சகல...மகள... தீபாவளிக்கு..அழைச்சிட்டு வந்திருக்காங்க.......அந்த விழாவுக்கு. என்னையும் குடும்பத்தோட வரச் சொன்னாங்க.....  அதான் வந்திருக்கேண்ணே....... வந்தவுடன் வீட்டுக்கு போணேன்ணே... நீங்க வெளியில போயிட்டதா... சொன்னங்க...... இந்தப் பக்கம் வந்தப்போ...நீங்க போயிகிட்டு  இருந்தத பாத்துட்டு ஒங்கள கூப்பிட்டே்ண்ணே...என்றார்.

உன் மாமானார்.. மாமியாரோடு ராசியாகியாச்சா.... என்று கேட்டார் கணேச அண்ணன்.

மொதக் குழந்த பொற்நத சில நாட்களிலே.... மனசு மாறிட்டாங்கண்ணே......

“நிஜமாகவா.”....... ???

“ஆமாண்ணே”,....... ஒங்க மொழியில சொன்னா..நான்  பெரிய சாதிய ாமாறிட்டேண்ணே..

“ஒன் வீட்டுக்காரம்மா...என்ன.. சொல்லுச்சு.... அதுவும் நல்லதுக்குத்தான்... சாதியா கஞ்சி  ஊத்துது... எதுவும் பிரச்சினை செய்ய வேண்டாமுனு சொல்லிருச்சுண்ணே  என்றவர்...
. சரிண்ணே... நீங்க எப்படி இருக்கீங்க...? அம்மா வேறு  இறந்திட்டதா சொன்னங்க.... வருத்தமா இருந்திச்ண்ணே....

அம்மாவுக்கு வயசாயிருச்சுல்ல.....நான் நல்லாத்தான்  இருக்கேன்... அப்பப்ப  உடம்புக்கு முடியாமல் வந்து  போய்விடும்  அவ்வளவுதான் . சரி ...டீ குடிக்கிறீயா..... என்றார்.

இல்லண்ணே..... இப்பத்தான் டீ குடிச்சேன்.... நீங்க டீ குடிக்கிறீங்களா என்றபடி டீ கடையை நோக்கி போறவரை  தடுத்து நிறுத்தி....

வேண்டாம்டா......நான் எந்தக் காலத்தில் டீ குடிச்சேன்...டீ வேணான்டா......உனக்காக    வேனா   ஒரு பிஸ்கட் ......

“ இன்னும் அப்படியே தான் இருக்கீங்களா   ....ண்ணே..”

மற்றவர்களுக்கு எப்படியோ, “ எனக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்டா..” என்றார்..


“அப்போ...தீபாவளியையும் கொண்டாடி இருக்க மாட்டிங்க.....ண்ணே...

சும்மா வே தீபாவளிய கொண்டாட மாட்டேன்... இந்த தீபாவளியக்கு முன் என் தாயாரும் இறந்துவிட்டதால்.....யாருககும் . எதுவும் இல்ல...”  “தீபாவளி”  ” குறித்த கட்டுக்கதைதான் உனக்கு தெரியுமில்லடா...” 

“..அது ..என்ன... கதைண்ணே............

“சொல்றேன்  கேட்குறீயா.....”??ஃ

 “ சொல்லுங்கண்ணே....”

அசுரன் ஒருவர், பூமியை பாயாக சுறுட்டிக் கொண்டு கடலுக்குள்ளாடி போயி ஒளிந்து கொண்டதால்... பிரம்மா என்பவன் படைப்புத் தொழிலை செய்ய முடியாமல் போனதாகவும், அதனால்...விஷ்னு என்பவன் பீயைத் தின்னும் பன்னி அவதாரம் எடுத்து, கடலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த அசுரனை ஒழித்து கட்டி பூமியை மீட்டதாகவும்,.. தன்னை மீட்டிய பன்னி மீது பூமிக்கு காதல் வந்து...அவர்கள் இருவருக்கும் நரகாசுரன் என்கிற பிள்ளை பிறந்ததாகவும் கூறப்படுகிற மனித அறிவுக்கே பொருந்தாத இந்தக் கட்டுக்கதையில்.... தாயைத்தவிர வேறு எவராலும் கொல்லப்பட முடியாத அந்த நரகாசுரனை அவரது தாயான  பூமி தேவியே அவரை அழித்தாகக் கூறி கொண்டாடப்படுவதுதாண்டா..... இந்தத் தீபாவளி.....

என் சகல.........விஷ்னு என்ற கடவுள் மோகினி அவதாரம் எடுத்து நரகாசுரனை அழித்ததாகவுல... சொன்னாருண்ணே””...

“ஆமாடா.....ஒன்...சகல..மட்டுமில்ல.. நிறையப்பேரு.. பிஎச்டி, எம்பில், படிச்சவங்க இல்லையா...அதனால அவுக ஆய்வுப்படி ... அப்படித்தான்.வெவ்வேறு மாதிரி சொல்லு வாங்க.....சரி அதவிடு எப்படியாவது இருந்துட்டு போகட்டும்

“ உண்மை..... என்னான்னு நீங்க சொல்லுங்கண்ணே.... நீங்க சொல்வதுதான்....சரியா... இருக்கும்...


“அந்த உண்மை..இதுதாண்டா.....”..

தீபாவளி கதையின் நாயகன் நரகாசுரன்..  ஆரிய நாகரித்தை எதிர்த்து போரிட்ட மண்ணின் மைந்தன்டா....” ...“மண்ணின் மைந்தனை கொன்றொழித்த ஆரியக் ஆதிக்கக் கும்பலால் கொண்டாடப்பட்ட தீபாவளியை, நரகாசுரனின் வாரிசுகள் கொண்டாடடுவாங்களா..!!!....  அதனால்தான் சொல்றேன்.. நான் அசுரன்,..என்து பாட்டன் நரகாசுரன்” அதனால் தான் நான் தீபாவளியை கொண்டாடுவது இல்லை..இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ..பிறப்பால் அசுரன்களாக இருப்பவர்கள் எல்லோரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை..

அப்போ... நானுண்ணே....

'நீதான் ஆரி.யனாய்..மாறிவிட்டேனுன்னு சொன்னீயே.....

“உண்மைதாண்ணே....”


“ஒரு உதாரணத்துக்கு கேக்குறேண்டா........ நான்..செத்தா...நீயும் உன் பொண்டாட்டியும்  கொண்டாடுவிங்களா....????

“ எப்படிண்ணே..... சத்தியமா...கொண்டாட மாட்டோம்ண்ணே.....

உங்க காதலை வழ வச்சவன் செத்தாலே....அதனை கொண்டாட.. மறுக்கிற.....நீங்க.... ஆதி காலத்தில... நம்ம வம்சத்து தலைவனை  கொன்னு..அந்த வம்சத்தையே அழித்து  ஆரியக் கூட்டம் கொண்டாடடும் அந்த தீபாவளிய... அசுரன் வழிவந்த நாம எப்படிடா... வெட்கம் . மானம், ரோசம் என எல்லாத்தையும் உதித்துவிட்டு கொண்டாட முடியும்.....

“ ...என்னால  எதுவும் பேச முடியலண்ணே.............................”

“ சரிச்சரி, நாம பேசினத..... உன் வீட்டுக்காரம்மாவிடம்  மட்டும் சொல்லு .. உன்..சகல..உன் மாமியார்- மாானார்கிட்ட  சொல்லாதே...... ”

“ சொன்னா என்னண்ணே....”

“ சொன்னா என்னாவா.....???  அவுங்க கொண்டாடுற  தீபாவளிக்குத்தானே வந்திருக்க........““ அதோ..உன் சகல...வர்றான் ..... போய்வா.. என்று விடை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு தன்வீடு நோக்கி நடக்க ஆம்பித்தார் அசுரனாய் இருந்து ஆரியனாய் மாறிய நண்பனின்   கணேசண்ணன் என்ற அசுரன்.

செவ்வாய் 24 2015

ஆறு கை கடவுளான சிவனே......................

எலியாரை வலியார் அடித்தால்
வலியாரை தெய்வம் அடிக்கும்
அப்படி ஒரு வலியாரை தெயவம் அடிக்கும் கா்ட்சியைப் பாருங்கள்

சிவ சிவனுக்கே... மரணபங்கம்..!! 
இதற்கெல்லாம் இந்து முந்துதல் காரர்கள் 
கொதித்தெழவில்லை....!! 
முக்கியமா 2.22 மினிட்ஸ உள்பட

சிவனே பிற்றி.....


நன்றி--கோட்டி

திங்கள் 23 2015

நானும் கொஞ்சம் கைதட்டுகிறேன்..முனுமுனுக்கிறேன்



                                                நன்றி! காரிகனுக்கு... என்னையும் கொஞ்சம்  ரசிக்க வைத்தற்கு................

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே 
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே 
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே 


பறந்து செல்ல நினைத்து விட்டேன் - எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் - பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் - நாணம் விடவில்லையே




ஞாயிறு 22 2015

ஏரோபிளைன் ஏறி ..டெல்லி சென்ற ஜெயா... போலீசு

Cinna Vengayam
புரட்சிபாடகர் தோழர் கோவன்

Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 3 பேர் ஆகியோருடன்.

கோவன் பாட்டை அடுத்தகட்ட லாஞ்சுக்கு எடுத்த செல்லும் ஜெயா போலீசுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

தோழர் கோவன் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தமிழக போலீசு தோழர் கோவனை போலீசு காவலில் எடுத்து விசாரிப்பதற்காக எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஐந்து நாள் அனுமதி கேட்டது. இதை ஆட்சேபித்து நாம் வாதாடியதில் நீதிபதி இரண்டு நாள் போலீசு விசாரணைக்கு அனுமதி வழங்கினார். அதனை உடனே ரத்து செய்வதற்காக விடுமுறை நாளான 7.11.2015 அன்று நமது வழக்குரைஞர்கள் மனு ஒன்றை தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

இந்த வழக்கிற்கான சிறப்பு விசாரனை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி செல்வம் இல்லத்தில் நடந்தது.

அப்போது அம்மாவின் ஏவல் போலீசு, தோழர் கோவன் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது?, இதன் உறுப்பினர்கள் யார் யார்? இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கும் தொடர்பு உள்ளது போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத அவதூறுகளை கூறி, மீண்டும் விசாரிப்பதற்கு போலீசு காவல் கேட்டது.

நமது தரப்பில் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆஜரானார். மக்கள் கலை இலக்கிய கழகம் வெளிப்படையாக இயங்கும் அமைப்பு. தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல! அடிப்படை ஆதாரம் இல்லாமல், போலீசு விசாரணைக்கு அனுமதித்தது தவறு என்று வாதாடினார்.

இதற்கு நீதிபதி, போலீசை பார்த்து ஏற்கனவே ஒரு நாள் போலீசு காவலில் விசாரித்தீர்களே ஏதாவது விவரம் கிடைத்துதா? என்றார்.

”இல்லை” என்றார்கள்.

”கோவன் இருக்கும் ம.க.இ.க. தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பு இருக்கு என்று கூறுகிறீர்கள் அதை பற்றிய ஆதாரங்களாவது இருக்கா ?” என கேட்டார் நீதிபதி.

அதற்கான ஆதாரங்களும் இல்லை என்று ஜெயாவின் போலீசு தலையை சொரிந்தது.

மேலும் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவின் கூர்மையான வாதத்தால் போலீசு பதில் இல்லாமல் பேதலித்து போய் நின்றது.

நீதிபதி, போலீசு காவல் தேவை இல்லை என்று எழும்பூர் கீழமை நீதிமன்ற போட்ட இரண்டு நாள் உத்தரவை தடை செய்தார்.

அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. அதன் தொடர்ச்சியாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் பிணை அளித்தது. 
***


‘டாஸ்மாக் மூடு’ என்ற பாடலுக்காக தேச துரோக வழக்கு என்ற காரணம் பிசுபிசுத்து போனது. இந்த கொடிய அடக்குமுறை, பாசிச ஜெயவின் வக்கிர கொடுங்கோல் ஆட்சியை உலகறியச் செய்துள்ளது.

டாஸ்மாக் என்பது தமிழக மக்கள் மீது ஜெயா அரசு தொடுத்து இருக்கும் யுத்தம். சசிபெருமாள் படுகொலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சி தான் தோழர் கோவன் கைது.

ஈழ இறுதிகட்ட போரில் சிங்கள இராணுவம், அப்பாவி தமிழ் மக்கள் மீது கொத்து குண்டுகளை வீசி கொன்றது போல இந்த ஜெ அரசு டாஸ்மாக்கை நம் மீது ஏவியுள்ளது. இந்த பேரழிவின் தாக்கம் பல பரிமாணங்களில் இருக்கிறது. மழலை மாறாத சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்று சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் குடிபழக்கத்துக்கு அடிமைப்படுத்தியது. குடிப்பது என்பது சமூக அந்தஸ்து என்ற நச்சு கலாச்சரத்தை இவர்களிடம் விதைத்துள்ளது.

டாஸ்மாக்கின் கொடுங்கரத்தின் பாதிப்பு என்பது ஆளுமை சிதைவு, தற்கொலை, சாலை விபத்து, பாலியல் வன்கொடுமை, மாணவர்கள் கல்வி பாதிப்பு, ஆதரவு அற்றவர்கள் அதிகமாகுதல், குடித்த கணவர்களால் வீட்டில் பெண்களுக்கு சித்ரவதை, கணவரை இழந்த கைம்பெண்கள் , குடும்ப பொருளதார பிரச்சனைகள், உச்சமாக குடும்ப உறவே சீரழியும் நிலை என நீண்டது. தமிழகத்தின் குடும்பங்களை மரணத்தின் வாயிலில் நிறுத்தியுள்ளது.

இத்தகைய சொல்லொண்ணா துயரங்களால் தவித்த தமிழக மக்கள், கோவனின் பாட்டை கேட்டவுடன் தங்கள் குரலாகவே பார்த்தனர். டாஸ்மாக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை தோழர் கோவனின் பாடல் துல்லியமாக வெளிப்படுத்தியது. பாடல்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனால் பல பத்தாயிரம் பேர் கேட்ட கோவனின் பாட்டு, தேச துரோக வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகளால் லட்சகணக்கானோர் கேட்டனர்... பரப்பினர். வேடிக்கை என்னவென்றால்? போராட்டம் நடக்கும் இடங்களில் போலீசார் சிலர் கூட ரிங்டோனை அவர்கள் கைப்பேசிக்காக வாங்கிக் கொண்டனர். இந்த பெருமை எல்லாம் புரட்சி தலைவிக்கே .
****


தோழர் கோவன் கைதை ஒட்டி சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக லட்சக்கணக்னோர் குரல் எழுப்பினர். ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களும், மாணவர் போராட்டங்களும், பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் போராட்டம் நடத்தினர். நமது வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனர் .

தோழர் கோவனை கைது செய்திருப்பதில் சட்ட அடிப்படை ஏதுமில்லை என்பதோடு, பொதுக்கருத்தில் அவரைக் கைது செய்தது தவறு என்பது உருவாகியபடியால் நீதிமன்றம், இத்தகைய பிணையை அளித்தது.

இந்நிலையில் மூக்கு உடைபட்ட சர்வதிகார ஜெயா அரசு, கோவன் மீது போலீசு விசாரணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் 20.11.2015 அன்று மனு செய்துள்ளது.

நடிகர் வடிவேலுவின் வீரபாகு காமெடி போல மீன்பாடி வண்டியில் ஏறி மூத்திர சந்தில் அடிவாங்கியது போதாது என்று, இப்போது ஜெயா அரசு ஏரோப்பிளேன் ஏறி டெல்லிக்கு கிளம்பியுள்ளது.

-மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...