பக்கங்கள்

சனி 01 2017

அட்ரா...சக்க.....அள்ளி வீசு ராஜா......


29.06.2017ல் குசராத்தி
காந்தியின் சபர்மதி
ஆசிரமத்தில் அன்று
“பசுக்களின் பெயரால்
மனிதர்களை கொல்வதை
அனுமதிக்க முடியாது
அகிம்சையின் நிலத்தை
சேர்ந்தவர்கள் வன்முறையை
கையில் எடுக்கக்
கூடாது  தேசப்பிதா
இத்தகைய சம்பவங்களை
ஏற்றுக் கொள்ள
மாட்டார் நாம்
அனைவரும் சேர்ந்த
போராடுவோம் என்று
பேசி முடித்தார்
ஒரு நாட்டின்
சைக்கோ அட்ரா
சக்க அள்ளி
வீசு ராஜா...
நீதான் இட்டுலர்
பரம்பரை ஆச்சே

வெள்ளி 30 2017

கிரிமினல் ஜெயாவையே டபாய்த்த கேடிகள்...


சூடான வாணலியிருந்து
தப்பித்து கொதிக்கும்
கொப்பரைக்குள் விழுந்த
கதை போல
கிரிமினல் ஜெயாவிடம்
இருந்து தப்பித்த
தமிழகம் இப்போது
சசிகலா நடராஜன்
தினகரன் திவாகரன்
ஓ.பி.எஸ் இ.பி.எஸ்
விஜயபாஸ்கர் என
நீளும் குற்றக்
கும்பலிடம் சிக்கி
மூச்சு திணறி
வருகிறது கிரிமினல்
ஜெயாவையே டபாய்த்த
கேடிகள் இவர்கள்.


வியாழன் 29 2017

பட்டுப்புடவை லெட்சுமி வசூல் வேந்தரான கதை.........


மருத்துவ பல்கலை
துனை வேந்தரானவர்
கீதா லெட்சுமிக்கு

மருத்துவ வட்டாரத்தில்
பட்டுப்புடவை லெட்சுமி
என்றவொரு பெயராம்

அப்பல்கலை கழக
மாணவ மாணவியர்
தமது ஆராய்ச்சி
கட்டுரைகளை தேர்வுக்காக
சமர்பிக்கும் போது
அதனுடன் ஒரு
பட்டுப் புடவையையும்
தட்சணையாக கொடுக்க
வேண்டும் என்பது
எழுதப்படாத விதியாம்
அந்த விதியின்
பெயரால் வந்ததுதான்
பட்டுப் புடவை
லெட்சுமி என்பது.

 அந்த பட்டுப்
புடவை லெட்சுமி
வசூல் வேந்தரானது
எப்படி ....நீட்
தேர்வு விளைவால்
பிறந்த என் ஆர் ஐயை
காரணம் காட்டி
அந்த ஒதுக்கீட்டீல்
சேர்ந்த 169 மாணவர்கள்
உள்பட பணி நியமணம்
பதவி உயர்வு இடம்
மாறுதல் ஆகியவற்றுக்கு
தனித்தனித் ரேட்
விதித்து வசூல்
செய்வதால் பட்டுப்
புடவை லெட்சுமி
வசூல் வேந்தரானார்.

திங்கள் 26 2017

மாட்டு வரி போட்ட மாட்டு மந்திரி........?????????

அண்ணே என்னண்ணே
இது அநியாமா
இருக்குது மாட்டு
வரி போட்ட
மாட்டு மந்திரியா...???

அடே ஆம்லட்டு
இது தெரியாத
ஒனக்கு சொல்றேன்
கேளு கவனமா.....

இராஜஸ்தான்னு ஒரு
நாடு அங்கே
ஆளுது பா.ஜ.க
அரசு அந்த
அரசு மாட்டுக்கு
என ஒரு
மாட்டு மந்திரிய
போட்டு இருக்கு
அந்த மாட்டு
மந்தியின் பெயரு
கோபால மந்திரி

ஆ... மாட்டு
மந்திரி கோபால
மந்திரியா..என்னண்ணே

ஊட..ஊட
வாய தொறக்காதே
எனக்கு சொல்ல
வர்ரது மற்ந்து
போகும்டா பயலே..

சரிண்ணே..சரிண்ணே

அட முட்டாப்
பயலே இப்பத்தானே
அடிச்சு சொன்னேன்
சொல்றத கேளுன்னு..

.........................

அங்கே அந்த
நாட்டிலே அய்ந்து
லட்சம் பயனற்ற
மாடுகளை பராமறிக்க
500கோடி ரூபா
தேவை படுவதாக
என  சொல்லி
அரசு பதிவாளர்
அலுவகத்தில் எல்லா
ஸ்டாம்பு கட்டணங்கள்
மீது பத்து
சதம் சர்சார்ஜ்
 என்று மக்கள்
மேல மாட்டு
வரி போட்டு
இருக்காருலே அந்த
மாட்டு மந்திரியான
கோபால மந்திரி..........
.

?????????????????????

ஞாயிறு 25 2017

உங்களால் நம்ப முடியுமா....???

ஆண் மயிலின்
 கண்ணர்துளியை
 விழுங்கித்தான்
பெண் மயில்
கருத்தரிப்பதாக
ஒரு நாட்டின்
உயர்நீதிமன்ற நீதி
பதி சாதிக்கிறார்

அது உன்மைதான்
என்று நீங்கள்
நம்பித்தான்ஆக
வேண்டும் ஏனென்றால்
சொன்னவர் உய....ர்
நீதி மன்ற நீதி
பதி யாச்சே...
நம்பவில்லை என்றால்
உங்கள் மீது
நீதியை அல்ல
நீதிபதியை அவ
மதித்தாக வழக்கு
போடப்படும்....தெரியும்ல..

..

அடுத்து மாட்டு
மூத்திரத்தில் தங்கம்
இருக்கின்றதா என்று
குஜாராத் அரசு
ஆராய்ச்சி நடத்துகிறது

மாட்டு மூத்திரத்திலா
என்று கேள்வி
எல்லாம் கேட்டு
வாய் பொளக்க
கூடாது அப்புறம்
மாட்டைச் சுற்றி
உள்ள ஈக்கள்
உங்கள் வாயில்
புகுந்து விடும்..
வாயில்  புகந்த
ஈயை விரட்ட
மாட்டு மூத்திரம்
குடிக்க வேண்டிய
நிலை வரும்



பிறகு  500
1000-ரூபாயை
செல்லாமல் ஆக்கி
விட்டால் நாட்டின்
பொருளாதாரம் புயல்
வேகத்தில் வளரும்
என்று பில்லி சூனியம்
போல பணமதிப்பு
நீக்க நடவடிக்கையை
மக்கள் மீது
ஏவினார் ஒரு
நாட்டின் பிரதமர்
அது தெரியும்தானே

ஆக சங்க்
பரிவாரம் உருவாக்க
இருக்கும் இந்து
ராட்டினம் என்பது
உலக முதலாளித்துவம்
வரையறுத்து இருக்கும்
எல்லைக் கோட்டுக்குள்
நின்றபடி பார்ப்பனியம்
ஆடுகின்ற  கோரத்
தாண்டவம்.....அது

மொத்தத்தில் சங்க்
பரிவாரம் எனப்
படுவோர் முட்டாள்
தனமும் வக்கிரம்
நிறைந்த ஆதிக்க
திமிர் பிடித்த
சினிமா வில்லனைப்
போன்ற விசித்திர
பிராணிகள் என்பதை
நீங்கள் நம்பித்தான்
ஆக வேண்டும்..

இதேபோல் கோமாதா
செண்டி மெண்டை
வைத்து பித்தம்
தலைக்கேறி ஒரு
கல்லில் பல
மாங்காய் அடிக்கும்
ஆசையில் சங்க்
பரிவாரக் கும்பல்
அக்லக்கை கொன்ற
கத்தியை உருவி
பயன்தராத மாட்டை
விற்க கூடாது
என்று இந்து
விவசாயிகளின் வயிற்றில்
குத்தி விட்டதை
உங்களால் நம்பாமல்
இருக்க முடியுமா...???????????


குறிப்பு- அக்லக்---வீட்டில் மாட்டு இறைச்சி வைத்திருந்தாக குற்றம் சாட்டப்பட்டு சங்க் பரிவார கும்பலால் கொல்லப்பட்டவர்)

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...