பக்கங்கள்

சனி 29 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-95.

 நடப்பு    இப்படிண்ணே...!!!!. அது  மட்டும் எப்படிண்ணே???




Image result for அறிவாளி










அண்ணே..
அறிவாளிக்கும்அறிவிலிக்கும்
என்ன வித்தியாசம்ண்ணே

எதுக்கு கேக்குறேன்னா..
 சனங்கள்  எவ்வளவோ
போராட்டம் நடத்தியும்
ஆளுறவனுகளும் சரி
ஆட்சி நடத்துறவனுகளும்
 எல்லா பயல்களும்
 மொள்ளமாரி முடுச்சவிக்கியா
இருக்கிறது சனங்களுக்கு
 நல்லா தெரிந்து
இருந்தும் திரும்பவும்
அவனுகளே ஆட்சிக்கு
வரான்களே அது
எப்படிண்ணே....அத
தெரிஞ்சுக்கதான்ணே  கேட்கிறேன்


அறிவாளிக்கும்அறிவிலிக்கும்
என்ன வித்தியாசம்முனு


வெள்ளி 28 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-94.

பயன் பட்டதும்மில்லை! பயன்பட போவதும்மில்லை.......!!!!




Image result for கள்ள உறவு தீர்ப்பு







நல்ல உறவோ
கள்ள உறவோ
அப்போதும் சரி
இப்போதும் சரி
எப்போதும் சரி
இந்த சட்டம்
ஞாயம் தர்மம்
எல்லாம் மக்களு்க்கு
பயன்பட்டதும் இல்லை
இனிமேலும் பயன்பட
போவதும் இல்லை
ஆணோ பெண்ணோ
சகி்ப்பு தன்மை
இருந்ததால் சகித்துக்
கொண்டு வாழ்ந்தார்கள்
சகிப்பு தன்மை
இல்லாதவர்கள் தற்கொலை
செய்து செத்தார்கள்
வீராதி வீரரும்
வீராங்கனைகளும் கடுங்
கோபம் கொண்டு
கொலை செய்து
சிறை கொட்டடியில்
வாழ்நாளை கழிக்கிறார்கள்

ஒரு சிலருக்கு
வயிற்றுப் பசியால்
தவிக்கும் போது
சரியான நேரத்தில்
உணவு கிடைக்காது
காமப் பசியால்
அல்லாடும் போது
அதற்கு வசதியும்
வாய்ப்பும்  இருக்காது
இயற்கையை எதிர்த்த
போராட்டம்தான் அன்றும்
இன்றும் என்றும்.....

மீண்டும் தொடரும் இம்சைகள்-93.

இப்படியும் இம்சைகள்...!!!!!!!!


Related image










பகலெல்லாம் அலைந்து
திரிந்தும் இரவில்
 தூக்கம் வராமல்
புரண்டு புரண்டு
படுத்தேன் தூக்கம்
 வருவதாக இல்லை
புரண்டபடியே சுவரில்
மாட்டி இருந்த
கடிகாரத்தை பார்த்தேன்
அதுவும் ஓடாமல்
நின்றுவிட்டது எழுந்து
வெளியே வந்து
பார்த்தால் ஒரே
கும்மிருட்டு திரும்பி
வந்து படுக்கையில்
பார்த்தால் சிற்றெறும்புகள்..
இப்படியும் இம்சைகள்!!!!

புதன் 26 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-92.


செத்த பொணம் பேசுமோ...????











மாப்பில...இன்னிக்கு செய்தி பாத்தியா மாப்பில...

“இல்லீயே...மாமா.... என்ன விசேசம் மாமா...”???

“அது ஒன்னமில்ல மாப்பில....இந்த ஆதார் கார்டு இருக்குல..”

“ஆமா இருக்கு...சொல்லுங்க மாமா”

“ ஆதார் அட்டய..... நீட், தேர்வுக்கு, சிம் கார்டுக்கு, பேங்க்கு எல்லாம்  இனி கொடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாங்கே மாப்பில.....”

“ அட போங்க..மாமா....அந்த அட்டைய வாங்கி எல்லா வேலையையும் முடிச்சுபிட்டு சொல்லி என்ன பிரயோசனம்  மாமா..” செத்த பிறவு பொணத்த எரிச்சா..என்ன..? பொதைச்சா என்ன ? மாமா...”

“அட.. இது எனக்கு தெரியாம போச்சு மாப்பில... கடசி நாளு வேற குறிப்பிட்டு  இந்த அட்டைக்காக எச்சரிக்க எல்லாம் செய்தது நீங்க சொன்ன பிறகுதான் மாப்பில ஞாபகத்துக்கு வருது மாப்பில..”

“ இப்பவாவது வந்திச்சே மாமா..?  ஏன்டா என்ன பொதைச்சிங்க..? ஏன்டா என்ன எரிச்சிங்கன்னு   செத்த பொணம் எந்திரிச்சு. கேட்காவா போகுது மாமா...”

“அது எப்படி மாப்பில... கேட்கும்... அதான் செத்த பொணமாச்சே மாப்பில...” “நீ.சொல்றது கரெட் மாப்பில...”. 


செவ்வாய் 25 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-91

ஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு...



Image result for ராமர் பாலம்









இலங்கைக்கு கடத்தப்பட்ட
தன் மனைவியை
மீட்டு வர
ராமன் பாலம்
கட்டினான் என்பதை
பரப்புவது ஆத்திகம்..


 பாலமே இல்லாமல்
ராவணன் சீதையை
 எப்படி இலங்கைக்கு
கடத்தினான் என்று
கேட்பது நாத்திகம்..

ஞாயிறு 23 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-90

சுதந்திரம் என்பது என்ன..?




Related image












சுதந்திரம் என்பது
என்ன?.........பேச்சுரிமை
எழுத்துரிமை, கூட்டம்
கூடும் உரிமை
அநியாயத்தை கண்டு
போராடடும் உரிமை
 அந்தப் போராட்டத்தில்
கைது  சித்ரவதை
சிறை போன்ற
நடவடிக்கை இல்லாமல்
இருப்பதே சுதந்திரம்
சொல்லிக் கொல்லப்படும்
நடப்பு சுதந்திரம்
அப்படியா இருக்கிறது.
ஒப்பிட்டு பாருங்கள்..
சொல்வதற்கு  எவ்வளவோ
இருக்கிறது...............................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...