பக்கங்கள்

வியாழன் 24 2013

சாதிவெறிக்கு அரசனானவர்.கல்விக்கு தந்தையான அவலம்......

படம்.சர்வதேசியவாதி

இந்த அரசர் குமார் புதிய  சாதிவெறி கூட்டமைப்பில் இருப்பவர். இவர் திராவிட விழிப்புணர்ச்சி கழகத்தை களைத்துவிட்டு தேசிய பார்வர்டுபிளாக் என்ற கட்சியை தொடங்கியவர். இத்தோடு தன்பெயரை நியுமராலசிப்படி  பி.டிஅரசகுமார்  என்று  பெயரை மாற்றிக் கொண்டவர்.

படித்தவன் பாடம் நடத்தி சம்பாதிக்கிறான். படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்தி கொள்ளை அடிக்கிறான் என்ற பழமொழி இவர்க்கும் பொருந்துமாம்.

எஸ.எஸ.எல்சி வரை படித்த இவர் விராலிமலையில் ஒரு நர்சரி பள்ளி நடத்தும் தொழிலை தொடங்கினார். அது நல்ல லாபமாக நடக்கவே, பல ஊர்களில் அடுத்தடுத்து பல  தொழில் பள்ளி கிளைகளை துவங்கினார்.

இதோடு.சைடு தொழிலாக, நர்சரி பள்ளி தொழில் தொடங்குவதற்க்கான ஆலோசனை களையும் வழங்கிவந்தார். கூடவே.தமிழ்நாடு நர்சரி பள்ளிகள் சங்கம் ஒன்றை ஆரம்பித்து.அதற்கு இவரே தலைவரனார். இந்தச் சங்கத்தால் பணமழை இவர்க்கு கொ்ட்டோ கொட்டுன்னு கொட்டியது.

மேலும் பணத்தை குவிக்க எண்ணி,பலரிடம் நர்சரி பள்ளி துவங்க அங்கீகாரம் வாங்கித் தருகிறேன் என்று பலரிடம் இலட்ச இலட்சமாக பணத்தைக் கறந்தார்.

தமிழகத்தில் பல கல்வி தொழில் நிறுவணங்களில் இவரும்,இவர் குடும்பத்தாரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

நர்சரி பள்ளி தொழில் தொடங்குவதற்க்காக இலட்சம் இலட்சமாக கொடுத்து ஏமாந்தவர்களின் புகாரால்  பண மோசடி வழக்கில் இந்த கல்வித் தந்தை திருச்சி மத்திய சிறையில் ஒய்வெடுத்து வருகிறார்.

இவரின் வழியிலே சென்ற  இவரது கட்சியின் தலைவர் எஸ்.ஆர் தேவரும் புதுக்கோட்டை சிறையில் ஓய்வெடுத்து வருகிற வேளையில்,காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மருமகன் செல்வராசுவின் புகரால் மீண்டும் சிறையில் ஓயவெக்க அணுமதிக்கப்பட்டுள்ளார்

சிறை. இருப்பவர்களுக்கு ஓய்வு அறை!!! இல்லாதவர்களுக்கு கொட்டடி!!!

புதன் 23 2013

போதையில் தப்பிக்க மறந்த தம்பதி......!!




தமிழ்நாட்டில் காவேரி பாக்கம் என்ற ஊர், அந்த ஊருக்கு அடுத்த ஊர் அய்யம்பேட்டைசேரியை ச் சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி வள்ளியம்மாள்.

இவர்கள் இருவரும் ஒருநாள் டாஸ்மாக்கின் மீது ஆசைப்பட்டனர். அந்த ஆசையை பூர்த்தி செய்வதற்க்காக,தங்கள் இருவருடன் மேலும் இருவரை சேர்த்துக்கொண்டு கடப்பாரையுடன் இரவில்  டாஸ்மாக் கடைக்கு சென்றனர்

டாஸ்மாக் கடைக்கு அருகில் சென்றவர்கள். ஏற்கனவே,கடையில் பெரிய பூட்டு போட்டு பூட்டியிருப்பதை அறிந்திருந்ததால, கொண்டுவந்த கடப்பாறையைக் கொண்டு டாஸ்மாக் கடையில துளையிட்டனர்.

துளை வழியாக அங்கியிருந்த 24 மது பாட்டில்களையும் எடுத்தனர். 24 மது பாட்டில்கள் கிடைத்த சந்தோசத்தில். மது பாட்டில்களை கணவனும் மனைவியுமாக போட்டி போட்டு காலி செய்தனர்.

இதனால் போதை மயக்கத்தில் சந்தோசமாக அங்கயே படுத்துவிட்டனர். இவர்களுடன்  வந்த மற்ற இருவர்கள் தமபதிகளுக்கு இடையூறு கொடுக்காமல் அங்கிருந்து  நழுவி  விட்டனர்.

காலையில் சூரியன் உதித்தது.  தம்பதிகள் இருவரும் போதை தெளியாமல் படுத்திருந்தனர். அவ்வழியே சென்ற அவ்வூர்க்காரர்கள் தம்பதிகள் மேல் இரக்கம் கொண்டு பிடித்து  வைத்துக் கொண்டு போதையை தெளிய வைத்தனர்.

செய்தி அறிந்து அலுவலக நேரத்தில் டாஸ்மாக்கின் சூப்பர்வைசர் வந்தார். பூட்டை திறந்தார், பாட்டில்களின் ஸ்டாக்கை சரிபார்த்தார். அதில் 15 ஆயிரம் மதிப்புள்ள 171 பாட்டில்கள் குறைவதாகவும். கல்லாவில் இருந்த 1.500 ரூபாயும் காணாமல் போனதாகவும் புகார் செய்தார்.

புகாரை பெற்ற போலீசு,பழைய குற்றவாளிகளையும்,ஏப்ப.சாப்பைகளையும் தேடி அலையாமல் நோகாமல் நொடுகாமல் “போதையில் தப்பிக்க மறந்த தம்பதிகளை கைது செய்தது.

போதை தெளிந்ததும் அந்த தம்பதிகளால் தப்பிக்க முடியவில்லை.......

செவ்வாய் 22 2013

வன்னியர் ஓட்டு,அந்நியர்க்கல்ல.புதிய சாதிவெறி கூட்டமைப்பு..அறிவிப்பு.!!!

சாதிக் கூட்டம்
படம். வினவு.

மீண்டும் அணைத்து சாதிவெறித் தலைவர்களையும் கூட்டி ஒருங்கிணைத்து புதிய சாதிவெறி கூட்டமைப்பை தொடங்கி உள்ளார் சாதிவெறியர்

இந்த  புதிய சாதிவெறி கூட்டமைப்பு சார்பாக பழைய முழக்கத்தையே.“ வன்னியர் ஓட்டு அந்நியர்க்கல்ல”  என்பதை தூசு தட்டி மக்களவைத் தேர்தல் பட்டியலை வெளியிட உள்ளார்.

இதனால்.தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார். கட்சியை பின்னுக்கு தள்ளி,சங்கத்தை (சாதியை) முன்னுக்கு தள்ளும் வகையில், சங்கத்தின் குரு ஓய்வுஎடுக்கும் புழல் சிறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய சாதிவெறி கூட்டமைப்பின் மூலமாக சாதிவெறித்தலைவர்கள் சிலரை போ்ட்டியிட வைக்கவும்,  முதல்வேட்பாளர் பட்டியலில்  அவர்கள் பெயர்கள் இடம் பெறவும் புதிய சாதிவெறி கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதை. கூட்டமைப்பின் தலைவர் அறிவிக்க உள்ளார்.

எனவே.அந்நியர்கள் எதுக்கும் ஓட்டுப்பிச்சை பாத்திரத்தை பத்திரமாக பாது காத்துகொள்ள எச்சரிக்கப்படுகிறார்கள்.

திங்கள் 21 2013

போலிகளை காட்டி கம்யூனிசத்தை கிண்டலடிக்கும் ஊடகங்கள்....




இந்தியாவில்  வெளிவரும் தினசரி,வார,மாதமிருமுறை,மாதமொருமுறை பத்திரிக்கைளும்,ஒளி-ஒலி பரப்பும் தொலைகாட்சிகளும்.ஆகிய எல்லோரும் ...

இந்தியாவில் கம்யூனிஸ்ட்கட்சி என்றால் வலது.இடது கட்சிகளைத்தான் குறிப்பிடுகிறார்கள். இந்த வலது இடதுகள்தான் கார்ல் மார்க்சின் சித்தாந்த்தை கரைத்து குடித்தவர்கள் போல் சிலாகித்து எழுதுகிறார்கள். காங்கிரஸ்காரர் களுக்கு,காந்தி.நேருவை காட்டியும், பாரதீய ஜனதாகட்சிக்காரர்கள், ராமனையும்,கிருஷ்னனையும் காட்டி ஓட்டு பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்துவது போல்தான் வலது.இடது கம்யூனிசஆசான்களின் பெயரை பயன்படுத்தி ஓட்டு பிச்சை எடுத்து பதவி பெற்று வருகிறார்கள்.

இவர்கள்  வெற்றி பெற்ற மாநிலத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஆளுவதாக கதைப்பார்கள். உண்மையில் வலது இடதுகள் தங்கள் ஆளும் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றி இருந்ததில்லை.

இப்படிபட்ட ஓட்டுபொறுக்கிகளான வலது.இடதை. கம்யூனிஸ்ட் கட்சி என்று மேற்படியாளர்கள் எழுதுவதும்,பேசுவதும், இன்று நேற்று அல்ல. பிரிட்டிஷ்க் காரன் ஆண்ட காலத்திலிருந்து அவனிடமிருந்து பெற்றதாக சொல்லப்படும் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை  ,  பொய்யிலே புரண்டு, பொய்யையே எழுதி வருகிறார்கள்.

புரட்சியின் மூலமே, சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்று அனுபவ பூர்வாமாக எழுதியும் பேசியும்,மக்கள் திரள்பாதையின்மூலம் பிரச்சாரம் செய்து வரும் நக்சலபாரிகள் தலைமையில் இயங்கும் மக்கள்திரள் அமைப்புகள் எல்லாம் தீவிரவாத அமைப்புகள் என்று முத்திரை குத்த தயங்காதவர்கள், அவர்களின் செய்திகளை இரட்டிப்பு செய்ய தவறாதவர்கள்.

இவர்களின் மஞ்சள் காமாலைக் கண்ணுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான. “பணத்தில் புரண்ட தோழர்” என்ற செய்தி.

எவன் தோழன்,யார் தோழர்.,டாஸ்மாக்கிலே சாரயம் குடிப்பவனெல்லாம் தோழரா..?,   ரன்னுக்கும் கந்துக்கும் வட்டிக்கு விடபவனெல்லாம் தோழரா..?கம்யூனிசஆசான்கள் சொன்ன தத்துவங்களை மறுத்து திரித்து ஓடடு பிச்சை எடுப்பவனெல்லாம் தோழரா...?? அவன் நடத்தும் கட்சிக்கு பெயர் கம்யூனிஸ்டா............???? ஊரை அடித்து பணம் சேர்த்து மெத்தையில் படுத்து புரண்டவனெல்லாம் தோழனா.....? ஆண் என்று குறிப்பிடுவதற்கும்.பெண் என்று கறிப்பிடுவதற்கும் ,ரெண்டும் கெட்டவர்களை குறிப்பிடுவதற்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. இந்த வலது இடதுகளுக்கு என்ன அடையாளம் இருக்கிறது.

உழைக்கும் மக்களின் பண்பாட்டு விதிமுறைகளை கடைபிடித்து  தவரும்பட்சத்தில் விமர்சனம், சுயவிமர்சனம் செய்து தவறுகளை திருத்தி ,உழைக்கும் மக்களான பாட்டாளிகளுக்காக தன்வாழ்வை தியாகம் செய்து  பொதுவுடமை சமுதாயம் அமைவதற்க்காக இடைவிடாமல் போராடி பணி செய்து வருபவரே,தோழர்.

இந்தியாவில் இருக்கின்ற வலது இடதுகள்.கம்யூனிஸ்ட் என்று சொல்வதற்கே அருகதையற்றவர்கள். போலிகள் என்று அவர்களின் சொல்லையும் செயலையும் வைத்தே, பலமுறை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வந்திருக்கின்றன. நக்சல்பார்களின் தலைமையிலான மக்கள் திரள் அமைப்புகள். போலிகளும், அம்பலப்பட்டு,நாறிப்போனாலும்,தங்கள் கட்சியின் பெயரை மாற்றிக் கொளவதாக இல்லை.

 இந்திய பாராளுமன்ற பன்றித்தொழுவத்தில் தாங்களும் ஒரு பன்னியாக படுத்து புரள்வதற்க்காகத்தான்  மார்கஸ்,லெனினைக் காட்டி.ஒட்டுப்பிச்சை பாத்திரத்தை ஏந்தி மாநிலத்திற்கு கொள்கை.தெருவுக்கு ஒரு கோட்பாடுன்னு பொய்யான வாக்குறுதிகளை கூறி மற்ற கட்சிகளைப்போல் பாமர மக்களை எமாற்றி வருகிறார்கள்.

இது எல்லா களவானி முதலாளி பத்திரிகை காரன்களுக்கும் தெரியாமல் இல்லை..இப்படி ஏமாற்றி வெற்றி பெற்று பதவிசுகம் அடைந்த பல பன்னிகளில்  ஒன்றைத்தான்.

கொள்ளையடித்த,“பணத்தில் புரண்ட தோழர்”என்று விளித்து , செங்கொடி ஏந்திய தோழர் செய்ததாக எழுதி கடை பரப்பியிருக்கிறார்கள். அவர்களே !சொல்கின்ற இந்திய ஜனநாயகத்தின் நாண்காவது தூணுக்கு அருகதையற்றவர்கள்.

தூங்கிறவனை எழுப்பி விடலாம். தூங்குகின்ற மாதிரி நடிப்பவனை எழுப்பிவிட முடியுமா????????? “முடியும் என்பதுதான் உழைக்கும் மக்களின் பண்பாட்டில் செங்கொடி ஏந்திய செம்படையின் வரலாறு...




ஞாயிறு 20 2013

இதற்கு என்ன அர்த்தம்...???



கடந்த மூன்று நாட்களுக்கு முன் எனது கனணிக்கு வயிற்றுவலி வந்துவிட்டதுஃ அதனால், அதுவால் எந்த வேலையும் செய்ய முடியா நிலைக்கு ஆகிவிட்டது.

அந்த நேரம் பார்த்து,எனக்கும் வயிற்றுவலி வந்துவிட்டது. எனக்கு வயிற்றுவலி வந்ததன் காரணம் தெரிந்துவிட்டது.

முந்தின நாள் இரவில் பெய்த மழையில் நணைந்துவிட்டேன். விடாது மழையுடன் நானும் விடாது மழையுடன் நணைந்து குளித்துவிட்டு உணவு உண்டதில் ரேஷன் கடையில் வாங்கிய வெறும துவரம்பருப்பு கூட்டுடன்.ரசம் கலந்து சாப்பிட்டதால் மறுநாள் செமிக்காமல் வயிறு ஊதி வலி எடுக்க ஆரம்பித்தது.

வசூல் ராசாக்கல் எம்பிபிஎஸ்-ன் வசூல் சீசன் மாதமாக இருப்பதால், ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டு வைத்தியம் செய்து கொண்டும், எந்த வேலையும் செய்யாமல் வலியால் ஏற்பட்ட வயிற்றை தடவிக் கொண்டு நேரத்தையும் நாளையும் கடத்திக் கொண்டு இருந்தேன்.

இரவு வந்தது.வலியாலும், எதுவும் சாப்பிடாததாலும்,தூக்கம்
வரவில்லை.புத்தகமும் படிக்கமுடியவில்லை, கைப்பேசியையும்
நோண்ட முடியவில்லை.

படுக்கையில் புரண்டு படுப்பதும், பிறகு எழுந்து வயிற்றை அமுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருப்பதுமாக இருந்தேன. மழையும் பெய்து கொண்டு இருந்தது.

அதிகாலையில் என்னை அறியாமல் தூக்கம் வந்தது. தூக்கத்தில் கனவும் வந்தது.

கனவில்,என் தொழில் சம்பந்தமான வேலைக்கு என்னை ஒருவர்
ஒரு கம்பெனிக்கு அழைத்துச் செல்கிறார். கம்பெனி அருகில்
சென்றவுடன்,என்னை வாயிலில் நிற்கச் சொல்லிவிட்டு,அந்தநபர் கம்பெனிக்குள் செல்கிறார்.

சென்றவர்.நெடுநேரமாகியும் வராததால். நின்று கொண்டே இருந்த நான். சோர்வை  தவிர்ப்பதற்க்காக அந்த வீதிவழியே சிறிது தூரம் நடந்தேன்.

நடைபயின்று வந்த தெருவானது.திடீரென்று  பாதை மாறிவிட்டது.தெரிந்தது. எந்தப்பக்கம் செல்வதென்று தெரியவில்லை. வேறு ஒரு தெருவில் வந்தபோது.தெருவின் இருபக்கங்களிலும் ஏராளமான கடைகள்.

அந்தத் தெருவழியே வந்தபோது. ஒரு கண்ணாடி கடைக்குள் வந்துவிட்டேன.  அந்தக் கடைக்குள் என்னைச் சுற்றிலும் கண்ணாடிகள், கண்ணாடியில் என் உருவம் தெரியவில்லை. கடையை விட்டு வெளியே வரவும் பாதை தெரியவில்லை.

கண்ணாடிக் கடைக்குள் அடைபட்ட நான் வெளியே வரமுடியாமல்.கண்களை மூடி,வயிற்றை கைகளால் அமுக்கியபடி அமர்ந்திருந்தேன.

கண் முழித்தபோது விடிந்திருந்தது. வயிற்று வலி மட்டும் விடாமல் இருந்தது

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...