 |
இந்த படம் சமத்துவத்தை அழிக்கும் படம்
|
இது ஒரு
வண்ண ஓவியம்
இது என்ன
செய்துவிடும் மனிதர்களுக்கு
ஏழைகளின் துயரத்தை
போக்கி விடுமா..?
இழி பிறவிகளின்
இழிவுகளைத்தான் துடைத்திடுமா..
இந்த ஓவியத்தை
வீட்டுச் சுவற்றில்
மாட்டி தெய்வமென
வழிபடும் கூட்டத்தின்
இல்லாமையைத்தான் நீக்கிடுமா..???
அநியாயம் செய்யும்
துப்பு கெட்ட
ஆட்சியாளர்களையும்
அதன் படைகளையும்
தண்டித்து விடுமா..???
ஒரு உயிர்
என்றால் தின்பதும்
கழிப்பதும“ உழைப்பதும்
இயற்கையில் நடப்பது
நியதி அந்த
ஒவியத்தில் உள்ள
கடவுளார்களுக்கு இயற்கை
நியதிதான் உண்டா...??
கடவுள் பக்தன்
படைத்துள்ள படையலைத்தான்
உண்ண முடியுமா..?????
பக்தனுக்கு எதுவும்
செய்ய வேண்டாம்
அவன் வீட்டில்
வீசும் காற்றில்
பட படக்காமல்
இருக்கத்தான் முடியுமா...?????
கடவுள் என்று
வண்ணங்களால் படைத்து
விட்டான் ஒருவன்
அவனுக்கு இந்தக்
கடவுள் என்ன
செய்திட முடியும்..??
இதனை கடவுள்
என்று நம்புகிற
முட்டாள் மனிதர்கள்
சமூகத்தில் இருக்கும்
வரை மனிதர்களிடையே
சமத்துவத்தை படைக்க
முடியாது ஆகையால்
கடவுள் என்று
பொய்யுரைக்கும் அந்தப்
படத்தை தூக்கி
எறியுங்கள் தூரமாய்.........