பக்கங்கள்

சனி 20 2014

வெள்ளையம்மாளுக்கு தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச..மாதிரி..

படம்-www.noolulagam.com
அந்தப் படத்தின் பெயர்  என்ன என்று தெரியவில்லை.... அந்தப் படத்தில் எம்ஆர் வாசு மனோரமாவிடம். வந்து..

“என்ன..ராக்கம்மா..மாமானுக்கு கஞ்சி தண்ணி ஊத்துறது” என்று கேட்பார்.

அதைக் கேட்டு, “கஞ்சி தண்ணி என்ன, கோழி அடிச்சு கறிச்சோறே போடுறேன்”ன்னு மனோரமா சொல்வார்.

அட, மச்சான் மேலே இம்புட்டு ஆசய வச்சுகிட்டா..,அன்னிக்கு அந்தப்பயல(பக்கொடாகாதர்) அந்த அடி அடிச்ச என்று  வாசு சொன்னபோது
அதுக்கு மனோரமா சொல்வார். “ வெள்ளையம்மாளுக்கு தெரிஞ்சா  ஊருக்கே தெரிஞ்ச மாதிரி. அதுக்காகத்தான் அப்படிச் செஞ்சேன் என்பார்.

“ நா... ஒரு மடப்பய இதக்கூட தெரியாம இருந்திட்டேன் என்பார் வாசு

 இந்தப் படத்துல வந்த நகைச்சுவை மாதிரி  ” வெள்ளைமாளிகை அதிபரான ஓ...பாமாவுக்கு பகவத்கீதை பொத்தகத்தை கொடுத்தது இந்த ஒலகத்துக்கே கொடுத்த மாதிரி....

 அந்த பொத்தகத்தை வெள்ளை மாளிகை அதிபர்..ஓ..பாமா ஏற்றுக் கொண்டது இந்தக ஒலகமே பகவத்கீதையை ஏற்றுக் கொண்ட மாதிரி...

அதனால்தான்  “பகவத்கீதை”உலகமே ஏற்றுக் கொண்ட பொத்தகம் என்று கிராம பூ..பூசாரி சங்க அல்லக்கையிலிருந்து. ஆர்எஸ.எஸ் வரையிலான பரிவாரங்கள் எல்லாம் “பகவத்கீதை” பொஸ்தகத்தை தேசிய  புஸ்ஸ்தகமாக விற்கச் சொல்லி கடை விரித்துள்ளன....

வெள்ளி 19 2014

மார்கழி மாத பஜனை அல்ல.....

மார்கமி மாதம் வந்துவிட்டால் அயோக்கியர்கள் எல்லாம் ஒரு மாதத்துக்கு யோக்கியர் வேடம் தரித்துவிடுவார்கள்.

மார்கழி மாதம் முழுவதும், விரதமும் பஜனையும் துர்ள் கிளப்பும்,அதிகாலையில் கோயில்களில் ஒலி பரப்பும் ஒலிக்கும் 

அந்த மார்கழி மாத பஜனை அல்ல பட்டுக் கோட்டையாரின் இந்தப் பாடல்..


புதன் 17 2014

உலகில் தைரியசாலிகள் நிறைந்த இரண்டாவது நாடு

படம்--ennaachi.tumblr.com


சாதிவெறி,மதவெறி, மூடநம்பிக்கை போன்ற  பழக்கவழக்கங்கள் கொண்ட காட்டுமிராண்டிகள் நிறைந்த நாடான இந்தியா

உலகத்திலே சாவுக்கு அஞ்சாத தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் வரிசையில்  இரண்டாவது வரிசையில் இருக்கிறது.

தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா எப்படி இரண்டாவதாக வந்தது என்று யோசித்த போது

அதற்க்கான காரணம் இதுதான். என்று தெரிந்தது.

உலகிலேயே அதிகமான செல்பேசி பயன்படுத்தும் நாடு இந்தியா.இந்தியாவில் 2013-ன் புள்ளி விபரப்படி 86.16 கோடி பேர் செல்போன் பயனாளிகள், இந்த செல்போன் பயனாளிகளுக்காக அமைக்கப்படும் செல்பேசி கோபுரங்களும் எண்ணிக்கையடங்காமல் எந்தவித விதிமுறைகளும் பின்பற்றபடாமல் அமைக்கப்பட்டுள்ளன். அமைக்கப்படுகின்றன.

செல்பேசிகளினாலும் செல்பேசி கோபுரங்களாலும், லாப வெறி பிடித்த முதலாளிகளிலாலும் ..அறிவியல் கண்டுபிடிப்பின் பயன்கள் சிறிதளவாக இருந்து அதனால் வரும், ஏற்ப்படும் பின் விளைவுகள் நிறைந்த ஆபத்துக்களை பற்றி நல்ல சமூகத்தை  விறும்பும் நல்லவர்கள் பல தடவை பட்டியலிட்டு சுட்டிக் காட்டினாலும்.

 மண்டை மயிறுக்குள் எதுவுமில்லை என்ற கதையாக... அதையெல்லாம் கேட்டும் உணர்ந்தும் இருந்தாலும், டாஸ்மாக் குடிமகன்களைப் போலவே இந்திய செல்பேசி பயனாளிகள் குறைவதாக இல்லாமல் அதிகமாகத்தான் இருக்கின்றன.

அதனால்தான் சாவுக்கு அஞ்சாத தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவதாக உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளேன்.


செவ்வாய் 16 2014

இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ........

படம்--www.onlytamil.in

“நொறுங்கத் தின்றால் நோவு கிடையாது” என்பதானது ஒரு சான் வயிற்று டேங்கின் கொள்ளவை மீறி நிரப்புவது  நொறுங்கத் தின்னுவதாக அர்த்தம் கிடையாது.

ஆற அமற.எந்தவித பரபரப்பு இல்லாமல் நிதானமாக வாயில் ஊறும் உமிழ்நீரோடு கலந்து சாப்பிடும் பழக்கமே நொறுங்கத் தின்னுவது. இப்படி சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு உடல் எடையும் கூடாது. அசீரனப்பிரச்சினையும் ஏற்ப்படாது. இதோடு சம்மணமிட்டு சாப்பிடும் பழக்கப் பட்டவர்களுக்கு தொப்பையோ, உடல் எடையோ கூடுவதில்லை.

ஆனால்,தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது,செல்போனில் பேசிக் கொண்டே சாப்பிடுவது, புத்தகத்தை படித்துக் கொண்டே சாப்பிடுவது,நடந்துகொண்டு நின்று கொண்டு சாப்பிடுவது, மற்றும் துரிதஉணவு, நொறுக்கத்திணி சாப்பிடுவது போன்றவற்றால். எந்த பாகுபாடு இல்லாமல் எடையும் தொப்பையும் வயது வித்தியாசமின்றி வரலாம், கூடலாம்.

இவைகளை தவிர்த்தால்... இளைத்தவர்கள் எள்ளும், கொழுத்தவர்கள் கொள்ளும் சாப்பிட வேண்டிய அவசியம் இராது..

திங்கள் 15 2014

ஒரே ஷாட்டில் ஒரு நிமிட குறும்படம்.

காட் இஸ் டெட்- ராணுவத்தின் சித்ரவதைக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குடும்பத்தின் துயரை ஐ-போன்மூலம் ஒரே ஷாட்டில் ஒரு நிமிடத்தில்  சதா பிரவணன் என்பவரால் எடுக்கப்பட்ட குறும்படம்.

இந்தப் படம் பிரான்ஸில் நடந்த  மொபைல் குறும்படவிழாவில் சிறந்த படமாக 3000யூரோவும், கொரியன் சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த மொபைல் பட குறும் பட பிரிவில் 3000யூரோவும் பரிசாக பெற்றது. இந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு......



எபோலா வைரஸ் கொலையும் ஆதிக்க சாதிவெறி படு கொலையும்.




எபோலா வைரஸால் தாக்குண்டு,கடும் காய்ச்சல் காரணமாக லைபீரியாவிலள்ள மன்ரோவிய நகரச்சாலையில் மயங்கி விழுந்து கிடக்கும் சிறுமி எஸ்தர் (படம்)

சாவோடு போராடிக் கொண்டிருக்கும் அச் சிறுமியைத் தூக்குவதற்கு மனது துடித்தாலும், அருகில் சென்று தூக்கினால், தம்மையும் எபோலா வைரஸ் தொற்றிக் கொண்டுவிடும் என்ற பயத்தின் காரணமாக, 100அடி தூரம் ஒதுங்கி நிற்கும் அந்நகர மக்கள்.

இப்படி பயந்து ஒதுங்கி நின்றவர்களில் எஸ்தரின் அப்பாவும் ஒருவர். இது லைபீரியா நாட்டில்..

  ஆதிக்கச்சாதிவெறிகாட்டுமிராண்டிகளின்  தேசத்திலோ, பெற்று சீராட்டி பாராட்டி வளர்த்துவிட்ட பெண்களை சாதிமாறி காதலித்தற்க்காக சாதி வெறி கொண்டு தந்தையாலும் தாயாராலும்  படுகொலை செய்யப்பட்டு.சுவடே இல்லாமல்  சுட்டு சாம்பலாக்கி விடுகிறார்கள்.

முன்னதுக்கும் பின்னதும், பின்னதுக்கு முன்னதும் ரெம்பவும்  கொடியதாகத்தான் இருக்கின்றன.
எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி.

ஆதிக்க சாதிவெறி பிடித்த பெற்றோர்களால் எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி. 



ஞாயிறு 14 2014

கதை விட்ட கதாசிரியர்......


முதல் நாள்சூட்டிங்கில் 1000 ஜூனியர் ஆர்டடிஸ்ட்கள் நடிக்கிற சீன், நாலு வருடத்துக்கு அப்புறம் ரஜினி முதல் முறையாக கேமராமுன்னாடி நிற்கிறார்.

வெயில் கொளுத்துது,கனமான கோட், அதுக்குள்ள ஒரு சட்டை, அந்த உடையில் ஒரு சீன் எடுத்துவிட்டோம். அடுத்த சீனுக்கு டிரஸ் மாத்தனும், கேரவன் கொஞ்சம் தள்ளி இருக்கு.

கேரவனுக்கு போகலாம் சார் ”ன்னு சொன்னா, ஒரு லுங்கி தாங்கன்னு கேட்டார்

பரவாயில்லை சார்., கேரவன்ல மாத்திக்கலாம்னு சொல்றோம்.

“நான் கேரவன்ல போயி டிரஸ் மாத்திட்டு வர்ரவரை, இந்த 1000பேரும் வெயில்ல நிற்பாங்க..னு சொல்லிட்டு அங்கயே டிரஸ்.மாத்திக்கிட்டார்.--என்று.. மைசூர்படப்பிடிப்பின்போது நடந்ததாக கதை விட்டார். லிங்கா படத்தின் கதாசிரியர் பொன்குமரன்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...