| படம்- |
அந்தப் படத்தின் பெயர் என்ன என்று தெரியவில்லை.... அந்தப் படத்தில் எம்ஆர் வாசு மனோரமாவிடம். வந்து..
“என்ன..ராக்கம்மா..மாமானுக்கு கஞ்சி தண்ணி ஊத்துறது” என்று கேட்பார்.
அதைக் கேட்டு, “கஞ்சி தண்ணி என்ன, கோழி அடிச்சு கறிச்சோறே போடுறேன்”ன்னு மனோரமா சொல்வார்.
அட, மச்சான் மேலே இம்புட்டு ஆசய வச்சுகிட்டா..,அன்னிக்கு அந்தப்பயல(பக்கொடாகாதர்) அந்த அடி அடிச்ச என்று வாசு சொன்னபோது
அதுக்கு மனோரமா சொல்வார். “ வெள்ளையம்மாளுக்கு தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச மாதிரி. அதுக்காகத்தான் அப்படிச் செஞ்சேன் என்பார்.
“ நா... ஒரு மடப்பய இதக்கூட தெரியாம இருந்திட்டேன் என்பார் வாசு
இந்தப் படத்துல வந்த நகைச்சுவை மாதிரி ” வெள்ளைமாளிகை அதிபரான ஓ...பாமாவுக்கு பகவத்கீதை பொத்தகத்தை கொடுத்தது இந்த ஒலகத்துக்கே கொடுத்த மாதிரி....
அந்த பொத்தகத்தை வெள்ளை மாளிகை அதிபர்..ஓ..பாமா ஏற்றுக் கொண்டது இந்தக ஒலகமே பகவத்கீதையை ஏற்றுக் கொண்ட மாதிரி...
அதனால்தான் “பகவத்கீதை”உலகமே ஏற்றுக் கொண்ட பொத்தகம் என்று கிராம பூ..பூசாரி சங்க அல்லக்கையிலிருந்து. ஆர்எஸ.எஸ் வரையிலான பரிவாரங்கள் எல்லாம் “பகவத்கீதை” பொஸ்தகத்தை தேசிய புஸ்ஸ்தகமாக விற்கச் சொல்லி கடை விரித்துள்ளன....
