பக்கங்கள்

சனி 31 2016

இரு பெண்கள் நிலை.......


பணக்கார பெண்
ஒருத்தி ஏழைப்
பெண்ணாக நடித்தாள்
காண வந்திருந்த
பணக்காரர்கள் எல்லோரும்
ஆகா..ஓகோ வென
புகழ்ந்து தள்ளினர்.

அதே மேடையில்
ஏழைப் பெண்
ஒருத்தி பணக்காரியாக
நடித்து காட்டினாள்
பணக்காரர்கள் எல்லோரும்
முனு முனுத்தார்கள்
காறித் துப்பினார்கள்.

வெள்ளி 30 2016

புல்லரிப்புக்கு.. ஒரு புல்லு வாங்கித் தரட்டுமா..தலைவரே..?

“என்ன தலைவா..நேற்று..ஆளையே  காணோம்“....

“எப்போதிலிருந்து..................

“யாரையோ  கேக்கிற மாதிரி கேட்கிற“......

“நீங்கதானே தலைவா, நேற்றிலிருந்து ஆளையே..காணோமுன்னு சொன்னீங்க..”


“நா...ன்..சொன்னது..ஒன்னத்தான்  தலைவா...”

“ சே.....என்னத்தானா......  உங்களுக்குத்தான்..தெரியுமே..? கழுத கெட்டா..கம்யூட்டருன்னு”


“ அங்கத்தான் காணோமே....”

“ஓ..... பதிவு போடாததப்பத்தி சொல்றீங்களா...தலைவரே...”

“யப்பா.....புரிய வைக்கிறதுக்குல்ல   தொண்டைத்தண்ணி போயிரும்போல...”

“ தலைவரே... நீங்க... தலைய சுத்தி மூக்க தொடாம....நேரிடியா... மூக்கத் தொட்டுயிருந்தா...இந்த மரமண்டைக்கு சட்டென பதிவாயிருக்கும்”


“ சரிச்சரி...இப்போ பதிவாகியிருக்குல்ல.... சொல்லுங்க..தலைவரே...”

“ சாமி ...கும்பிட கோயிலுக்கு போனதால..... பதிவு போடல..தலைவரே...”


“ என்னது.... சாமி  கும்பிட  கோயிலுக்கு போனீங்களா...!ஹா....ஹா.....ஹா...ஹா.ஹா.......ஹா.....” என்னா தலைவரே... எங்கிட்டயே ரீல் விடுறிங்களா...”

“ உண்மையைத்தான் சொல்றேன் தலைவரே...! இதுக்கெல்லாமா பொய் சொல்வாங்க...தலைவரே...”


“அது இல்ல தலைவரே..உங்களுக்குத்தான்..சாமி கும்பிடுவது, கோயிலுக்கு போவது பிடிக்காதே..!பொண்டாட்டி .....இருந்தாலாவது... அவுகளுக்கு துணைக்கு போனேன்னு சொல்லி தப்பிக்கலாம்..ஒங்களுக்கு அந்த கொடுப்பினையும் இல்ல... அதான் தலைவரே.....”

“ தலைவரே...நீங்க  எதை.. சாமி. கோயிலுன்னு சொல்றீங்க.”

“ஆகா....தலைவரு..கேட்கிற  ..கேள்வியப்பாரு...?????”

“ தலைவரே.... நீங்க.. மார்கழி மாத முருகன் அடிமை, அய்யப்பன் விசுவாசிகள்  கும்பிடும் சாமிகளையும். அவர்கள் செல்லும் கோயில்களை பத்தி நிணைக்கிறேன்”..


“ ஆகாகா..... தலைவரு..கரக்கெட்டா... கண்டுபிடிச்சட்டாருப்பா....”

“அடடா.., தலைவருக்கே...புரிய வைக்கனும் போலிருக்கே........”

“ என்ன..தலைவரே....யோசனை...குட்டு வெளிப்பட்டு போச்சுன்னா...”

“அது..இல்ல.. தலைவரே... நான் சொல்றத கோபப் படாம கேளுங்க..தலைவரே..”

“ சரி, சொல்லுங்க... கோபப்படல....”

“ நான்  கோயிலுன்னு சொல்வது கழிப்பறை,..சாமி கும்பிடுவது..என்பது கழிப்பறையான கோவிலுக்குள் சென்று அமர்ந்து கழிவுகளை கழிப்பதுதான் சாமி கும்பிடுவது....... நேற்று இன்னொரு தலைவர் வீட்டில் கொடுத்த விசிடேபிள் பிரியாணியை உண்டதால்  வயிற்றுக் கோளாறாகி அது பக்தியாக..சிறு நேரத்தில் பக்தி முக்தியாகி... பதிவு போடும் வேளையில் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டதால்  நேற்று பதிவு எதுவும் போடவில்லை. தலைவரே... அதனால்தான் நேற்று என்னை தாங்கள காணமுடியவில்லை...தலைவரே..........


“ அடப்பாவி ..தலைவரே..... உங்க மரமண்டைக்குள்..இவ்வளவு  ஞானம் இருக்கிறதா...  தலைவரே...!!!!”

“ ஏதோ..காலம் போன வேளையிலாவது... எனக்கு இப்படியோரு ஞானயோதம்
தோன்றுகிறதே.... அத..நிணச்சு பெருமைப் படுங்க  தலைவரே.....”


“ உடம்பெல்லாம் புல்லரிப்பதோட, ரெம்பவும் பெருமையாக இருக்குது தலைவரே..”..

“ புல்லரிப்புக்கு.. ஒரு புல்லு வாங்கித் தரட்டுமா.... தலைவரே.....”


” அத்தாடீ...... அதுக்கும்..எதாவது வச்சிருப்பிங்க  தலைவரே.....”

“ அப்ப..வரட்டுமா.... தலைவரே......இப்ப நாம..பறிமாறிக் கொண்ட அறிவ ... ..நாளை பதிவுல... பாருங்க....தலைவரே......”

”!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!...............................”


புதன் 28 2016

எனக்கு மட்டும் தானா....? இப்படி....!!!!!!

பார்க்கும் ஒவ்வொரு
தடவையும் அந்த
தொலை காட்சியில்
எம்ஜியாரும் ஜெயலலிதாவும்
ஆட்டம் போட்ட
மனியம்மாகவே காட்சி
அளிக்கிறார்கள் இது
எனக்கு மட்டும்
 தானா  இப்படி.....

செவ்வாய் 27 2016

உண்மையான கலைஞன்..


............................................

......................................
...................................











சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார்..



சபையே சிரிப்பாய் அதிர்ந்தது 

கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார்.

.பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் 

அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற

 அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் 


நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!!



அப்பாேது சார்லி சாப்ளின் சொன்னார்


ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறாேம் "என்றார்

திங்கள் 26 2016

பாரதியைப் பற்றி இவர்கள்..கூறியது..




மருதையன்--

பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.
“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.
“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.
“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.
–மருதையன்


மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.
அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.
நம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்
–வே.மதிமாறன்




ஞாயிறு 25 2016

காந்தியின் இரட்டை நாக்கு பற்றி பெரியார்



நேரு ஒரு லண்டன் நிருபருக்கு அளித்த பேட்டியில்  பொதுவுடைமை கொள்கையை தான் ஆதரிப்பதாகவும் ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடைமை எனக் கருதும் கொள்கையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அத்தகைய பொதுவுடைமை கட்சியை தான் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி பின்வருமாறு எழுதுகிறார் தந்தை பெரியார்

“இது உண்மையானால் தோழர் ஜவஹர்லாலுக்கு இந்த குணம் காந்தியாரின் சகவாசத்தால் ஏற்பட்ட குணம் என்று தான் சொல்ல வேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ்வித தந்திர மொழிகள் கூறி இரு கட்சியாரையும் ஏமாற்றி பெருமை அடைவதை அனுசரித்து வருகிறார். உதாரணமாக
“வர்ணாசிரம தர்மம் வேண்டும் அனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்,
“ராம ராஜ்யத்க்காக நான் பாடுபடுகிறேன் ஆனால் எனது ராமன் வேறு” என்பார்
“ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு”  என்பார்,
“ராஜாக்கள்,ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்,
“பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டும். ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்,
“ஏழைகள்,  தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்க கூடாது”  என்பார்,
“தீண்டாமை ஒழிய வேண்டும் .ஆனால் தீண்டப்படாதவரகள் சூத்திரர்களுக்கு சமானமாய் கருதப்படவேண்டும்” என்பார்,
தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டும்” என்பார்
இந்தப்படி எந்த விசயமானாலும் “ஆனால்” போட்டு திருப்பிவிடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.
- ஜவர்லாலும் பொதுஉடைமையும், புரட்சி – தலையங்கம் –    17.12.1933


நேரு, காந்தி, பட்டேல்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...