பக்கங்கள்

சனி 11 2013

முப்பரிமாணப்புரட்சி(3D பிரிண்டிங்)- பாமரனுக்கு எப்படி இருக்கும்......-


  
அமெரிக்க கல்லூரி மாணவன் ஒருவன் 3டி பிரிண்டரில் உருவாக்கிய கைத்தூப்பாக்கியை  வெற்றிகரமாக இயக்கி பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கானாம்.

இதனால் ஏற்ப்படபோகும் தாக்கம் எந்த நாட்டையும்.எந்தத் தொழிலையும் விட்டு வைக்காதாம்.டிஜிட்டல் அமைப்பை முப்பரிமாணத்துக்கு நீட்டிப்பதால் எந்தப் பொருளையும் இருந்த இடத்திலே அதிவேகமாக உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்பாக முப்பரிமாணப்புரட்சியானது செல்வத்தில் கொழிக்கும் மிதக்கும் பண முதலைகளுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த முயந்சியின் பயனாக ஆஸ்திரேலிய இஞ்சினியர் ஒருவர் உடல் உறுப்பகளை 3டி பிரிண்டரில் உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் பெரும்பாலான கடைக்கோடி  பாமரமக்களுக்கு  அது பயன்படப்போவதில்லை.

இந்த முப்பரிணாம புரட்சியின் பலன் கடைக்கோடி மக்களுக்கு அதன் பலன் எப்படியிருக்கும்.......

நடை வழி பயணம் சென்ற கணவன் மனைவியும் இரவானதால் சத்திரத்தில் தங்கியிருந்த போது உல்லாசமாக இருந்தார்களாம். உல்லாசத்தில் கணவன்  மனைவியிடம் சொன்னானாம், “ உலகமே இதில்தாண்டி இருக்குதுண்டு....

அதைக்கேட்ட, அருகில் படுத்திருந்த ஒருவன் அந்தக் கணவனிடம்,  “காணாமல் போன என்ஆடு இருக்குதான்னு, கொஞ்சம் பாத்து சொல்லுங்க என்று கேட்டானாம்.

 கடைக்கோடி பாமரனுக்கு முப்பரிமாண புரட்சி பயன்பாடு இப்படித்தான் இருக்கும்,,

ஒருநாள் வாழும் குழந்தைகள்................


பிறந்து 24 மணி நேரத்துக்குள் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தீயாவில்தான் அதிகமாக இருப்பதாகவும்,ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து9 ஆயிரம் குழந்தைகள் பிறந்த ஒரு நாளுக்குள் இறந்து விடுவதாக  “உலகில் அம்மாக்களின் நிலமை என்ற தலைப்பில் ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக “குழந்தைகள் பாதுகாப்புஎன்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

ஒருநாள் வாழும் குழந்தைகள் விசயத்தில்  ஒலக முன்னணியில் வல்லரசு இந்தியா ----  வல்லரசு ரசிகர்கள்,மற்றும் விசில் அடிச்சான் குஞ்சுகள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

வியாழன் 09 2013

வட்டிக்கடையில் ஆய்வு செய்த மத்தியகுழுவின் அசத்தல் நடிப்பு!!


தெரிந்ததை தெரியாதவன் போல் காட்டிக் கொள்பவனை செத்தான்டா நடிகன் என்று சொல்வது சொல்வடை

அந்த சொல்வடையை உண்மையாக்கி இருக்கிறார்கள் தென்மாவட்டத்துக்கு வந்து ஆய்வில் ஈடுபட்டு கொண்டிருக்கும் மத்தியக்குழு.

தென்மாவட்ட வறட்சியை பார்வையிட்டு விசாரனை செய்துவரும் மத்திய ஆய்வுக்குழு,கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தபோது.விவசாய கடன்கள் அனைத்தும் நகைகள் அடமானத்தின் பேரிலேயே வழங்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து.

அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்தபோது.தேசிய,கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் நகைகளை அடமானம் வாங்கித்தான் விவசாயக்கடன் வழங்கப்படுவதாக தெரிந்தவடன்
விவசாயத்திற்க்காக கடன்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் ஒரு லட்சம்வரை கடன் வழங்கப்படவேண்டுமாம். ஆனால் தமிழகத்தில் மட்டும் இப்படி வழங்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்களாம்.

கொடுத்த பணத்தை மோசடி செய்து,ஜாலியாக வேறு கிரகத்துக்கு ஒடிப்போகும் தொழில் பண முதலைகளுக்கு கூப்பிடாமல் வலியச் சென்று கடன் கொடுக்கும் வங்கிகள்.

பஞ்சத்திலும்,வறட்சியிலும்,விலைவாசி ஏற்றத்திலும் பரிதவிக்கும் பஞ்சை பராரிகள். வாங்கிய கடனை அடைக்காமல்.மோசடி செய்து ஈழ அகதிகள்போல் கப்பலில் வெளிநாட்டுக்கு ஒடிவிட்டால் வாங்கிய கடனை வசூலிக்க முடியாதல்லவா? அப்பேர்ப்பட்ட பரந்த மனசு தெரியாமல் நடித்த மத்திய குழுவினர் சிறந்த அசத்தல் நடிகர்கள்தான்.

புதன் 08 2013

பாவம் போக தானம் செய்யும் வள்ளல்கள்!


கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்னு சிலரைச் சொல்வார்கள். இது மாதிரி எடுத்து எடுத்து சிவந்த கரங்கள்னு யாரையும் சொல்வதில்லை.

நாட்டிலுள்ள பெரும் பணக்காரங்களிலிருந்து புதிதாய் முளைத்த திடிர் பணக்காரர்கள் வரை தங்களுடைய வள்ளல் தனத்தை காட்டுவதற்க்காக சில தொண்டுகளையும், சேவைகளையும் செய்வார்கள். இது யாணையின் பசிக்கு சோளப்பயிர் போட்ட கதையாகத்தான் இருக்கும்.

இதே போல்தான் அரசும், அரசை ஆளும் அதிகாரிகளும், அரசியல் கட்சிகளும், தானம் செய்வார்கள்.  ஏழைகள் எப்படி உருவாகுகிறார்கள், யாரால் உருவாக்கப்படுகிறார்கள் என்ற கதையெல்லாம்  தானம்.தொண்டு செய்பவர்களுக்கு வேப்பங்காயாய் கசக்கும். இந்தக் கதையெல்லாம் இவர்களுக்கு வேண்டாதவைகள்.

தங்களுடைய பெரும் பகுதி சொத்தில் கடுகு அளவில் தானம் செய்து தங்களை வள்ளல்கள் என்றும்.இரக்கமுடையவர்கள் என்றும் காட்டிக் கொள்வார்கள்.

செய்த,செய்யப்படுகின்ற அநியாயத்தை மறைக்கின்ற செயலாக தொண்டுநிறுவனம்,அறக்கட்டளை,சேவைகள் மூலமாக பிச்சையிடுவதை தானம்,தருமம் என்று நாகரிகமாகபெயர்சூட்டிக்கொள்கின்றனர்.

ஆதாயமில்லாமல் செட்டியாரோ.அய்யரோ, ஆற்று தண்ணீரை இறைக்கமாட்டாரன்னு சொல்லும் பழமொழி இவர்களுத்தான் 
பொருந்தும்.

இப்படிபட்ட வள்ளல்கள், தங்கள் வள்ளல்தனங்களை பல்வேறு விதங்களில் செயல்படுத்துவார்கள். இதற்கு ஏகப்பட்ட சான்றுகளை உதாரணமாக கூறலாம்.

 குறிப்பாக சிலவற்றை குறிப்பிடலாம்.

1.காய்கறிகடை வைத்துள்ள அம்பானி. தன் நிறுவன ஊழியர்களுக்கு கொடை வள்ளலாக இருக்கிறராம். எப்படி என்றால். மற்றவர்களுக்கு அள்ளிதராமல் மனம் கோனாமல் அள்ளிதருவராம்,-இதை அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.

2.தமிழ் நாட்டின் முதல்வரோ,  இட்லிக்கும் தயிர்சாதத்துக்கும் அலையும் தமிழர்க்கு குறைந்த விலையில் தந்து அன்னலெட்சுமியாக.அவரது கட்சிகரர்களுக்கும் துதிபாடிகளுக்கும் வள்ளலாக காட்சி அளிக்கிறார்.

3.முன்னால் முதல்வரும் திராவிட பாரம்பரியம், நானும் பொதுவுடமைவாதிதான் என்று பொய் சொன்னவரும் தன்தாயாரின் அறக்கட்டளைமூலம் கல்விக்கும்.பதிப்பகத்துக்கும் தானம் வழங்கி தானும் வள்ளல்தான் என்று தெரியப்படுத்துகிறார்.

தானம் செய்தால் பாவம் மறைந்து மோட்சம் கிடைக்கும் என்று இண்டு.முஸ்லிம்,கிறிஸ்து மூன்று மதங்களுமே ஒப்பாரி வைக்கின்றன.

ஆனால்.பாவப்பட்ட ஏழைகளுக்கோ, வள்ளல்களின் தானம்கூட சமமாக அனைவருக்கும்கூட கிடைப்பதில்லை.

திங்கள் 06 2013

போதையில் தாக்கிய போலீசுக்கு பொது மக்கள் வழங்கிய தர்ம(ம்)அடி!!


காவல் கட்டுப்பாட்டு அறையின் சிறப்பு எஸ்ஐயாக பணி ஆற்றி வருபவரும்,ஊர்க்காவல்படையில் காவலராக பணிஆற்றி வருபவரும் சேர்ந்து தமிழகத்தின் ஆறு படை வீடுகளில் ஒன்றான முதல்படை வீட்டீன் நகர்ப் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பணியின் ஒரு வேலையாக, முதல்படை வீட்டின் பேருந்து நிலையம்.மற்றும் 16கால் மண்டப பகுதிகளில் வந்த பக்தர்களையும்.பொது மக்களையும், சுற்றுலா பயணிகளையும் விசாரனை என்ற பெயரில் விசாரித்து தாக்கியுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும் தாக்கி தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்


இவர்களின் பணியில் ஆத்திரமடைந்த அப்பகுதி வியாபாரிகளும். பொது மக்களும் சேர்ந்து, பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்களை தடுத்து சிறப்பு எஸ்சைக்கும் ஊர்க்காவல் படை காவலர்க்கும் தர்ம அடி கொடுத்தனர்.


பொது மக்களின் தர்ம(ம்) அடியைப்பற்றி தகவல் அறிந்து  வந்த டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் படை  இருவரையும் பொதுமக்களின் தர்ம அடியிலிருந்து மீட்டு அழைத்து சென்றனர்.


ஞாயிறு 05 2013

ஒரு பொறுக்கி சாமியார்ஆன கதை........


ஒரு ஊரில் ஒரு பொறுக்கி இருந்தான். எந்தப் பெண்களானலும் தன்வலையில் வீழ்த்தி விடுவான். அவனைத் தட்டிக்கேடக ஊரில் உள்ள ஒரு ஆம்பிளைக்கும் தகிரியம் இல்லை.

அதனால் அந்த பொறுக்கியும் தன்னுடைய பொறுக்கி தனங்களை தொடர்ந்து  இடையூறு இல்லாமல் பாலோ செய்து வந்தான்.

ஒருநாளில் அவ்வூர்க்கு ஒரு சாமியார் வந்தார். ஊரிலுள்ள ஆம்பிளைகளெல்லாம் அந்த பொறுக்கியை பற்றி சாமியாரிடம் முறையிட்டனர். அந்த பொறுக்கிக்கு ஏதாவது தண்டனை வழங்கி, மனைவி மார்கள் தங்களைவிட்டு பிரியாதவாறு ஏதாவது செய்யுமாறும் வேண்டினர்.

அந்தச் சாமியார் அந்தப் பொறுக்கியை சந்தித்தார்.அவனோ,அந்தச் சாமியாரை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தான்.சாமியாரே அவனிடம் பேசினார்.

“காமும் காதலும் வருகிறதா?.. என்றார்.

“ஆமாம்என்றான்.

அதற்கு வடிகால் உண்டு,..என்றார்.

பொறுக்கிசொன்னான்..அந்த வடிகாலைத்தான் எனக்கு தெரிந்த வழிகளில் தீர்த்து கொண்டு இருக்கிறேன்.

“ அந்தக் கமாத்தையும், காதலையும் உன் மனைவிடம்தான் காண்பிக்க வேண்டும்”, ஊரில் உள்ள பெண்களிடம் அல்ல,என்றார் சாமியார்.

 பொறுக்கி சிரித்தான்.

நீ சரிப்பதற்க்கான காரணம் என்ன? என்றார் சாமியார்

“ நானோ,வெளிப்படையாக பொறுக்கியா இருக்கிறேன்.என்னால் பெண்களுக்குத்தான் ஆதாயமே தவிர, நட்டம் எதுவுமில்லை. ஆனால் நீயோ, சாமியார் வேடத்தில் பொறுக்கியாய் அலைகிறாய். முதலில் உன் காமத்தையும் காதலையும் உன் மணைவிடமா செலுத்துகிறாய்.....

“நான் முற்றும் துறந்தவன்.எனக்கு மணைவி குடும்பம் என்று இருக்கக்கூடாது

அதனால்தான் வடிகால் இல்லாமல் சாமியார் வேடத்தில் தீர்த்துக் கொள்கிறாயா.....என்றான் பொறுக்கி............

“யாரோ என்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாக உன்னிடம் பரப்பி விட்டு இருக்கிறார்கள்என்றார்..சாமியார்.

முற்றும் துறந்த சாமியார்களின் லீலைகள்தான் அம்மணத்தில் ஆட்டம் போடுகிறதே......... சாமியார் என்ற பாதுகாப்பில் வருவாயோடு  ஏமாற்றி தீர்த்துக் கொள்கிறீர்கள். நான் பாதுகாப்பு இல்லமால் செலவு செய்து  நேர்மையாக தீர்த்துக்கொள்கிறேன். நமக்கு இடையிலான வேறுபாடு இதுதான்.என்றான் பொறுக்கி..

ஒருகணம் சாமியார் மவுணமாக இருந்தார். பிறகு சாமியார். சொன்னார்.

ஒனக்கு நான் சிஷ்யனாக இருக்கிறேன். என் ஆசிரமத்தில் சேர்ந்துவிடு, நான் உன்னை திருத்திவிட்டதாக  இந்த ஊரில்லுள்ள ஆண்கள் நம்பட்டும். எனக்கு பவர் இருப்பதாக பலருக்கு தெரியட்டும், நீயும் வழக்கப்போல் சாமியார் வேடத்தில்  வடிகாலை தீர்த்துக்கொள்ளலாம். நாமிறுவரும் ஆசிரத்தில்  காமத்தையும் காதலையும் வெல்லலாம்.

பொறுக்கி எதுவும் பேசாமல் தயங்கினான். 

சாமியார் சொன்னார். உனக்கு பாதுகாப்பானது சாமியார் வேஷமும் ஆசிரமும்தான். உன் லீலைகள் அம்பலத்துக்கு வந்தாலும் ஒனக்கு எந்த தீங்கும் வரப்போவதில்லை, நம் சிஸ்யர்களும் பக்தர்களும்தான்  இந்நாட்டை பரிபாலணம் செய்கிறார்கள்.

ஊரில் சாமியாரின் அற்புதங்கள் பற்றி பெருமையாக பேசப்பட்டது. பொம்பள பொறுக்கியை சாமியார் ஆட்கொண்டுவிட்டார். சாமியாரின் பெருமைகள் எந்தச் செலவுமில்லாமல் பரவியது. ஆசிரமும் நாளுக்கு நாள் விரிவடைந்து. பக்தர்களின் கூட்டமும்  பெருகியது.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...