பக்கங்கள்

சனி 24 2011

மேளமில்லாம...தாளமில்லாம.....தமிழக உள்ளாட்சி தேர்தல் கூத்துகள்

அய்யா,ராமதாசு ஒரு உருது மொழியை அதாவது
உறுதி மொழியை வெளியிட்டார். இனிமேல் திமுக
,அதிமுகவுடனோ ஒருக்காலும் கூட்டணி இல்லை
தமிழ் இன மான உணர்வு உள்ளவர்களுடன்தான்
கூட்டணி.இதில் தமிழ் இன.மான உணர்வுள்ள
விடுதலை சீறுத்தைகள் கூட்டணிக்கு வந்தால்
ஏற்றுக் கொல்வோம். அதுவும் வராவிட்டால் தனித்
தே போட்டியிடுவோம். எங்களைப்போல் தமிழகத்தில்
தனித்து போட்டியிட தமிழகத்து கட்சிகளுக்கு தை..தை
தகிரியம்உண்டா? என்று கேட்டுவிட்டு அந்தத் தகிரி
யத்துடன் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலை
வெளியிட்டார்.

குடிகாரன் பேச்சு,விடிந்தால் போச்சு.என்றகதையாக
சிறிது நாட்கள் அய்யாவின் தண்டவாளம் தெரியும்
அதுவரை பொருத்தருள்க.

ஏற்கனவே,அய்யா அதிமுகவோட எந்தக்காலத்திலும்
கூட்டணி வைக்க மாட்டேன் என்று சத்தியமடித்து
சொன்னதை அய்யாவு சொன்ன கதையாக மறந்து
விட்டுடனும்.

பெரியாரின் தொப்பள் கொடி உறவு காங்கிரசு இளங்கோ
செத்தாலும் திமுக வுக்கு எதிராகத்தான் பேசுவார்.என்ப
தாலும்,சென்ற சட்டசபை தேர்தலில் அதிக சீட் கேட்டு
கழுத்தறுப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும்
ஆத்தாவின் நிலப்பறிப்பு வழக்கிலிருந்து தற்காத்து
கொள்வதற்கும் தனித்தே போட்டியிட வேட்பாளரின்
பட்டியலை வெளியிட்டு.ஆத்தாவின் போலீசுக்கு பயந்து
ஓடிஒளிந்து முடங்கி கிடந்த தம்பிகளை உள்ளா ஆடசி
தேர்தலை பயன்படுத்தி கொள்ள வேண்மென்று அருமை
தம்பிகளை உசுப்பேற்றியுள்ளார்

அண்ணனின் தனித்த அறிவிப்பால் இந்தியாவின் தலை
நகரமான வாசிங்டனில் உலகம் சுற்றும் தேசத்துரோகிகளின்
காங்கிரசும் தனித்தே போட்டியிடுகிறது.

ஊரு ஊராக அலையும் அரசீயல் அனாதை புரட்சிபுயலும்
கொள்கை முழக்கத் சத்தத்தோடு உள்ளாட்சியாலாவது
தனித்து வர உள்ளே வர முயலுகிறார்.

எமஜியாரின் ரெங்கநாயகியோ,நோண்டாமல் நோகமால்
கிடைத்த சட்டசபை புதையல் மாதிரி உள்ளாட்சி புதைய
லும் தமக்கே என்று மமதையில். தேசிய முற்போக்கு
மேடடூரில் மேட்டூர் அணை இருக்கிறது.என்பது மாதிரி
புகழ்மாலை சூட்டினாலும் பிற்போக்காகி கழட்டிவிட்டு
தனக்கு சுக்கிரதிசை நிகழ்வதால் தனித்தே குதித்து
விட்டது.

அகில இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நாளும்
புரடசி தலைவிக்கு புகழ் மாலை சூட்டிபுரட்சி செய்து
ஓய்ந்துவிட்ட இடது வலதுகள் அவர்களின் சித்தாந்த
சித்துகளின்படி தாயின் காலடி மண்ணே! புரட்சியின்
தளம் என்று முடிவெடுத்தாலும் பாமக திமுக மதிமுக
தேமுதிக காங்கிரசு எல்லாம் தனித்தனியாக களத்தில்
நிற்பதால் புரட்சி வெற்றிடையாதே! என்று முழிக்கின்
றன.

இருந்தாலும் செயல் தந்திர நடைமுறைப்படி முடிந்த
வரை புரட்சி தலைவியின் காலடி மண்ணே! முடியா
விட்டால் கொள்கை முழக்கம் பின்னே என்று காத்து
கொண்டு இருக்கிறார்கள்

இப்படியாக, இதிலே சொன்னவர்களும். சொல்லாத
வர்களும் சேர்ந்து வீரமான,விவேகமான கொள்ளை
முழக்கத்தோடு புதிய ரகரகமான பிச்சை பாத்திரத்
தோடு பிச்சை கேட்டு ஊர்ஊராக,தெருத்தெருவாக
வரப்போகிறார்கள்

இப்படி பிச்சை கேட்டு வரும் பிச்சை காரர்களுக்கு
ஏகப்பட்ட கன்டிஷன் போடுவதோடு வாக்கு பிச்சை
போடும் வாக்குஆள குடிமக்களுக்கும் பிச்சை போட
ாமல் இருக்கக்கூடாதுன்னும் உத்திரவு போடுகி
றது தேர்தல் ஆனையம்

ஆக,நம்பிக்கையாலும்,பயமுறுத்துததாலும்,இரக்கப்
படுவதாலும் பிச்சையிடுவதால்(ஓட்டு போடுவதால்)
ஏழ்மை,விலைவாசிஉயர்வு, வேலைவாய்ப்பின்மை
போன்ற அநியாகங்களும்.பாவங்களும் தொலைந்து
நிம்மதி,மோட்சம்,சந்தோசம் எதுவும் வந்துவிடப்போ
வதில்லை. வாக்கஆளும் மக்களுக்கு ஏமாற்றமே
கிடைக்கும்.அறிவில தெளிவு பெற்று விழிப்படைந்து
புறக்கணிக்கிறவரைக்கும் .இந்த கூத்துக்கள் புதுப்புது
உத்திகளுடன தொடர்ந்து அய்ந்து வருடத்துக்கு ஒரு
வாட்டி வந்து கொண்டுதான் இருக்கும்

வெள்ளி 23 2011

ஆமா...மா,.....ஓ....ஆ....மா....மா.... அமெரிக்க(உலக) அதிபரின் பணி தலை சீ ...றந்ததுதான்...ஓ...பா...மா....!!!.

உலகமே அமெரிக்காவுக்குதான் என இருக்கும்போது
பேரிக்காய் அதிபர் இந்த புமிக்கே அதிபர்தானே!.
தனக்கு மீறி எந்த நாடும் தலையெடுக்க கூடாதுன்னு
எப்பபேர்பட்ட (கீழ்தரமான) வேலையையும் செய்ய
தயங்காதவர்கள்தான் அமெரிக்க அதிபர்கள்.இந்த
புமியின் அதிபர்கள் நடத்திய.கொலை,கொள்ளை,
போர்கள் முதலியனவற்றை சொன்னால் இந்த
உலகமே தாங்காது. உலகமே தாங்க முடியாதபோது
அந்த உலகத்தின் சிறந்த பணி அமெரிக்காவின்
அதிபராக இருப்பதுதான்..ஆமாமா. ஓமாமா ....
நீங்கள் சொல்வதுஉண்மைதான். ஒபாமா........

வியாழன் 22 2011

இருந்தாலும் இந்த சனங்க ரெம்ப மோசமுங்க.....

தமிழ் நாட்டிலே மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு அரும்
பாடுபட்ட தந்தை பெரியாரின் பிறந்த நாள் தினம் முடிந்து
24மணி நேரம்கூட கழியல, அதுக்குள்ள மூட நம்பிக்கை
எப்படியெல்லாம் பரப்புறாங்க .அதக்கேட்டு இந்த மூட
மக்களும் எப்படியெல்லாம் ஆட்பட்டு அடிபணிறாங்க.
அதுக்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி.

புராட்டாசி மாசம் ஞாயிற்று கிழமையில பிறந்ததால்,
ஒரு பிள்ளை ஆண் குழந்தையுள்ள குடும்பத்திற்கு
ஆகாது.என்றும். இதற்கு பரிகாரமாக விநாயகர்
கோயிலுக்கு சூடம் கொளுத்தி தேங்காய் உடைத்தால்
தோஷம் கழிந்து ஞாயிற்று கிழமையில் பிறந்த புராட்
டாசி மாதத்தின் கெடுதல்கள் நீங்கி நல்லநாளாக மாறி
விடும் என்று இந்து தீவிரவாதிகளோ,அவர்களது வலது,
இடது கைகளோ பரப்பி விட்டனர்.

இதனால் மதுரையிலும் அதனைச்சுற்றியிலுள்ள ஊர்
களிலுமுள்ள பாமரத்தனமும் முட்டாள் தனமும் நிறைந்த
மக்கள் தேங்காய்,சூடத்துடனும் பிள்ளையார் சிலைகளில்
அலை மோதினர்

இரவு பத்து மணிக்குள் பிராயச்சித்தம் செய்து முடித்துவிட
வேண்டும் என்று நேரம் குறித்து பரப்பிவிட்டபடியால்.
வேலைக்கு சென்று திரும்பிய மக்களும் படித்தவர்களும்
படிக்காதவர்களும்ஒரே அலை வரிசையில் சேர்ந்துவிட்ட
தால் கூட்டம் அலைமோதியது.

இப்படித்தான். முன்னோர் காலத்தில் வேலையில்லாத ஆடி
மாத காலத்தில் அச்சாபிஸ் காரன் அச்சடிப்பு வேலைக்காக
பரப்பி விட்ட கதை. அது இன்றளவும் ரவுண்டு கட்டி சூடு,
சொரனை எதுவுமில்லாம வந்துகிட்டு இருக்கிறது பாம்பு
ஒன்னு வந்ததாகவும். அந்த பாம்பு தன் அருமை பெரு
மைகளைச் சொல்லி 500க்கு குறையாமல் நோட்டீஸ் அடித்து
வெளியிடச் சொன்னதாகவும் அந்த நோட்டீசை படித்த ஒவ்
வொருத்தரும் 500க்கு குறையாமல் தங்கள் வசதிக்கு கேற்றார்
போல் அடித்து வெளியிடுமாறு தமிழில் சொன்னதாகவும்
.யாரேனும் நோட்டீசை படித்துவிட்டு அலட்சியமாக இருந்தால்
அவருக்கோ,குடும்பத்திற்க்கோ, நிவர்த்திக்க முடியாத கேடு
வரும் என்று சொல்லி இன்னாரு அலட்சியமாக இருந்ததினால்
இவ்வளவுக்கு கேடு அடைந்தாருன்னு பயமுருத்தி எச்சரிக்கை
விட்டு பாம்பு மறைந்ததாகவும் புருடா விட்டதை இந்த மக்க
ளும் ஆண் பெண் பேதமின்றி பயந்து போயி நிவர்த்தி செய்த
னர். ஒவ்வொரு அச்சாபிசுக்கும் வேலை வந்தது.

இது மாதிரி, ஜவுளிக்கடையில் தேங்கிப்போன பச்சை
சேலையைவிற்பதற்காக அதற்கும் ஒரு மூடக் கதையை
உலாவிட்டனர் இப்படி காலநேரம் பார்க்காமல் ஒவ்வொரு
சீசனுக்கும் நேரத்திற்கும் பொருந்துகிறமாதிரி பகுத்தறிவுக்கு
ஒவ்வாத மூடத்தனத்தை பரப்பி விடுகின்றனர் இந்தக்
கயவாளிக் கில்லாடிகள்

பிள்ளையார் வெளிக்கு போனார்,வேப்பமரம் அழுதது. இப்படி
ஏராளமான புருடா கதைகளை விதைப்பதும் அதைக்கேட்டு
பெருவாரியான மக்கள் பரபரப்பு அடைந்து சிந்திக்க மறுப்பது
பகுத்தறிவாளர்கள், புரட்சியாளார்கள் சொன்னால் ஏற்க
மறுபபதும் தமிழகத்தின் தீராத சாபக்கேடுகள்

பெரியார் இருந்தவரைக்கும் இப்படிபட்ட மூடநம்பிக்கைக்கு
ஆப்பு வைத்துக்கொண்டு இருந்தார். இனிமேல் பெரியார் வரப்
போவதிலலை, அவரின் பெயரை சொன்னவர்களெல்லாம்
பெரிய செல்வந்தர்களாக மாறிவிட்டதால் அவர்கள் இத்தகைய
மூடநம்பிக்கைக்கு ஆப்பு வைக்கமாட்டார்கள்

பெரியாரின் உண்மையான வாரிசுகளும் ,கம்யுனிச புரட்சியா
ளர்களும்தான் மக்களின் மூடத்திரையை அகற்றி மூடப்
பதர்களுக்கு ஆப்பு வைப்பார்கள். மக்களின் பயத்தை போக்கு
வார்கள். இது அவர்களாலதான் முடியும். தன்புத்தியோ அல்லது
சொல் புத்தியோ இல்லாதவர்கள் மூடநம்பிக்கையிலிருந்தும்
விடுபட முடியாது.

ஞாயிறு 18 2011

ரோட்டிலும்,தரிசு இடங்களிலும் மலம் கழித்தது அந்தக்காலம்?இப்போ ஆத்துபக்கம் ஓடுவது இந்தக்காலம்!!

முன்னுரை,தெளிவுரைமற்றும் பதவுரை.

இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி.கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலைமற்றும்தண்ணியானமலம் காளியாத்தா,மற்றும்
மாரியாத்தா,திறந்த வெளிகழிப்பிடமே பெரிய கோயில் அடுத்த தெளிவுரைகள் தங்கள்மடல் கண்டு

இது இட்டுக்கட்டிய கதையல்ல.நடந்தவை. நடந்து கொண்டு இருப்பவை. ...........

காலை பொழுது விடிந்து சற்றுவெளிச்சம் வந்தாலும் தெருவிலுள்ள ரோட்டிலுள்ள விளக்குகள் அனைக்கப்படாமல் இருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லையென்றாலும், டீக்கடையில் அய்ந்தாரு மனிதர்கள் இருந்தனர்
ஒருசில பெண்கள் தத்தம் வீடுகளின் வாசல்களை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுயிருந்தனர்.

அவருக்கு காலையில்தான் நன்றாக துாக்கம் வரும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரோ,அல்லது பின்னரோ, தாமதமாக துாங்கினாலும் காலை துாக்கம்தான் நிம்மதியான துாக்கமாக இருந்தது.

அந்த நிம்மதியான துாக்கத்தை கெடுப்பதறக்காக இயற்கையும் அவரின் தெருவிலுள்ள மக்கள் இடைஞ்சல் கொடுப்பது போல் தன் பங்குக்கு இடைஞ்சல் கொடுத்தது. அது அவரை சாமி கும்பிடுவதற்கு அதிகாலையில் எழுப்பி விடும்.ஓரளவு சமாளித்து பார்ப்பார் முடியாது. அருள் வந்துவிடும்

கட்டியிருக்கும் கையிலியால் கண்களை துடைத்துக் கொண்டு முகம் கழுவுவதற்குகூட தாக்கு பிடிக்க முடியாமல் அவசரமாக அவசரமாக எழுந்து சைக்கிளை. எடுத்துக் கொண்டு உருட்டிக்கொண்டு தெருவைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்த பின் சைக்கிளில் ஏறி ஒருசில தெருவை கடந்து விவசாயம் இல்லாமல் காய்ந்து பொட்டலாக கிடக்கும் இடத்தைத் தேடி ஓடி.,அந்த
பொட்டல் வெளியில் சாமியை கும்பிட்ட பிறகுதான் அவருக்கு பரபரப்பும். கைகால் சோர்வும் அருளும் குறைந்து சகஜ நிலமைக்கு வருவார்

இவர் சைக்கிளில் வேகமாக வயற்காட்டு பக்கம் வருகிறார் என்றால் சாமி கும்பிடுவதற்குத்தான் என்று தெரிந்து சட்புட்னுன்னு ஒதுங்கி கொள்வார்கள். சில நாட்களில் நன்றாக துாக்க கலக்கத்தில் தாமதமாக எழுந்திருக்கும் நேரத்தில் என்னதான் வேகமாக சென்றாலும் அருள் முற்றி உள்ளாடைகளிம்.
கைலிகளிலும் சாமி கும்பிட்டுவிடுவார்

உடம்புக்கு முடியதா நாட்களில் காளியாத்தா,மாரியாத்தா நிலைமை இதைவிட மோசமாகிவிடும். அவரின்மேல் அவருக்கே ஆத்திரம் வந்துவிடும்.தன் இயலாமையை எண்ணி தன்னைத்தானே மோசமாக திட்டிக்கொள்வார்

காளியாத்தா-மாரியாத்தா சாமி கும்பிட்ட நாட்களில் ஓடும்பம்பு செட்டைத்தேடி நாயாய் அலைந்து அதில் ஓடும் பம்ப் செட்டில் சாமிகும்பிட்ட துணிகளை அலசி குளித்துவிட்டுதான் வீட்டுப்பக்கம் வருவார்.

இப்படி பலமுறை நடந்துள்ளதால் பலமுறை எச்சரிக்கையாக இருந்து வந்தார். அவர் குடியிருக்கும் வழக்கிடைச்சொத்தில் அவருடைய தந்தைவழி பங்காளிகளுடனும்தெருநாட்டாமைகளிடமும் அடிதடியில் இறங்கி போலீஸ்
வழக்கு என்று அழைந்து சென்று விடாப்பிடியாக போராடிபணக்கஷ்டத்துடன் உறுதியாக நின்று வீட்டுக்கருகில்கோயில் கட்டி முடிக்கிற வரைக்கும் காளியாத்தா மாரியாத்தாவுக்கு பயந்து எச்சரிக்கையாகவே இருந்து வந்தார்.

அவர் குடியிருக்கும் தெருப்பகுதி மாநகராட்சியின் கடைசி வார்டாக இருந்தாலும் ,நகரத்தை ஒட்டிய கிராமாமாகத்தான் இருந்தது. அவருக்கு பதிணைந்து வயதிற்குமேல் இருக்கும்போது,அவரின் வீட்டைச்சுற்றி குட்டி ப னைமரங்கள் நிறைந்த பனங்குட்டிகளும் தென்னை மரங்கள் நிறைந்த தென்னந்தோப்புகளும் இருந்தன.

அனறைய காலங்களில் ஆண்களும் பெண்களும் சாமி கும்பிடுவதற்கு பகலில் பனங்குட்டியையும் இரவில் தென்னந்தோப்புக்கு நடுவே செல்லும் ரோட்டைத்தான் பயன்படுத்தி வந்தார்கள.அப்போதெல்லாம் எந்த சாமி வந்தாலும்  கும்பிடுவதற்கு எந்தவித சிரமும் ஏற்ப்பட்ட தில்லை. இரவில் சாமி கும்பிடும்போதுகூடசினிமா பார்த்துவிட்டு ஆட்கள் வீதி வழியாக வரும்போதுகூட எழுந்நின்று ஆட்கள் சென்றபின் சாமி கும்பிடுபதில் சிரமம்  ஏற்ப்பட்டதில்லை

இரவில் சாமி கும்பிட்ட இடத்தை பகலில் பார்த்தால் ஒரே சாமி குவியல்களாத்தான் இருக்கும். அந்த ரோட்டில் லாரி வந்தால் சனங்கள் கும்பிட்ட சாமிகள் எல்லாம் லாரி டயரில் ஒட்டி சிறிது துாரத்துக்கு
ஒரே சாமியாகத்தான் இருக்கும். செருப்பில்லாமல் நடக்கமுடியாத அளவுக்கு இருக்கும் .இதில் வாசனை வேறு துாக்கியடிக்கும்.

மக்கள் கூட்டம் வளர வளர, பனங்குட்டியும், தென்னந்தோப்பும் அழிக்கப்பட்டு பிளாட்டாக மாறி காந்திதெரு,முத்துதெருநேதாஜி தெரு என்று பல தெருவாக மாறிவிட்டன. இப்படி மாறின பிறகுதான் சாமி கும்பிடுவதற்காக கோயிலின்
அவசியம் தெரிந்தது.

அந்தத் தெருவின் ஆம்பிள நாட்டாமை மின்சார வாரியத்திலும் பொம்பள நாட்டாமையின் கனவர் பென்னரிலும்வேலை யில் இருந்ததினால் அவர்கள் மட்டுமே சொந்த மாக கோயில் கட்டியிருந்தார்கள். மற்றவர்களுக்கு சாமி
கும்பிட வழியில்லை.

அந்த தெருவைச்சுற்றி குடியிருப்பு கட்டிட வீடுகள் வந்ததினால் அவர் குடியிருக்கும் தெரு சேரியாக்கப்பட்டது.அந்த சேரி மக்களுக்காக இலவசமாக பொதுக்கோயில் (பொது கழிப்பறை) மாநகராட்சியால் கட்டப்பட்டது இந்தக் கோயில் சேரியிலுள்ள தெருமக்களுக்கு மட்டும்தான் என்பதால் கிரில்கதவு டன் சாவிபோடடு சாவிதெரு நாட்டாமைவசம் ஒப்படைக்கப்பட்டது.

தெரு நாட்டாமைக்கும் அவருக்கும் இடப்பிரச்சினையில் தெருநாட்டாமை அவருடைய வழக்கிடைச் சொத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்தோடு அவர் பயன்படுத்தவும் நாட்டமை தடை போட்டுஇருந்தார் நாட்டமை.. அதனால்
முன்பகையை காரணம்காட்டி அவருக்கும் அவரின் குடும்பத்தார்க்கும் பொது கோயிலை (கழிப்பறையை) பயன்படுத்த மறுக்கப்பட்டது.

அவருடைய சகோதரியின் மகள்கள் கழிப்பறையின் சாவியைக்கேட்டால் சாவியை மறைத்து வைத்து விட்டு காணவில்லை என்பார்கள்.தெருவிலுள்ள
மற்றவர்களிடம் உண்மையா கவாக என்று கேட்டால் ஆம்பிள நாட்டாமை,பொம்பள நாட்டாமையின் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருவதால் தங்களுக்கு பிரச்சினை வரும் என்பதால் சொல்லமாட்டார்கள்
.இரு நாட்டாமைகளுக்கு சொந்தமாக கோயில் இருந்தாலும் டேங்கு நிரம்பி விடும் என்று பொதுக்கோயிக்குதான் சாமி கும்பிட வருவார்கள்.

இரண்டு மூன்று வருஷம்தான் அந்த பொதுக் கோயிலை பயன்படுத்தியிப்பார்கள். தண்ணீர் இல்லாததாலும் போதிய பராமரிப்பு இல்லாதாலும்.சாமிகளும் மலை போல குவிந்து நாற்றம் ஏற்பட்டதாலும் யாருக்கும் பயன் படாமல் போய்விட்டது..தற்போது அந்தக் கோயில்
இடிக்கப்பட்டு பாதாள சாக்கடைதிட்டத்தின் கழிவு நீரேற்று நிலையமாக ஆக்கப்பட்டது.

இப்போது அவர் அறைநுாற்றாண்டு வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்.சமிபத்தில்தான் நாண்கு தொட்டிகள் கொண்ட கழிவறையை கட்டி யள்ளார். அந்தக் கோயிலை கட்டவிடாமல் அவரின் பங்காளிகளும் தெரு நாட்டாமையும் அவர்களின் வாரிசுகளும் கொடுத்த இம்சைகளுக்கு ஆள்பலமும்  பணபலமும் இல்லாமல் போராடினார்

பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டி அனுமதி பெற்று இணைப்பு கொடுக்க முயன்ற போது இரு தெரு நாட்டாமைகளும் வாரிசுகளும் கூட்டமாக வந்து இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டனர் வேலையாட்களை மிரட்டிவிட்டனர். மநகராட்சியிடம் கேட்டபோது அது பொது பாதையென்று சான்று அளித்தனர்..ஆண் நாட்டாமையோ பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க கூடான்னு அவர்மேல் வழக்கு போட்டுள்ளார்.வழக்கும்ஒன்றோடு  மூன்றாக நிலுவையில்..........

பல்வேறு இன்னல் தொல்லைகளுக்கிடையில்சொந்தமாக கோயில் கட்டிய பிறகும் பரபரப்பும் அருளும்தீர்ந்தபாடில்லை. காலையில் எழுந்து கோயிலுக்கு
போனால் அவரின் தாயாரோ,சகோரதரியோ யாரவது கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருப்பார்கள்

திறந்வெளி கோவிலும் வீடுகளாக மாறிவிட்டதால் இருபது நிமிட வாக்கில் சைக்கிளில் ஆற்றுக்கு சென்று இயற்கையின் அவஸ்தையை போக்கி
விட்டு ஆற்றினிலே குளித்துவிட்டு நிதகமாக பரபரப்புஇல்லாமல் வீடுவந்து சேருவார். தெரு நாட்டாமைகளும் நாட்டாமையின் வாரிசுகளும் இயற்கையும் தனித்தனியாக தொடர்ந்து அவஸ்தையை கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இயற்கையோடும் இவன்களோடும் சண்டையிட்டுக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...