பக்கங்கள்

சனி 10 2015

மூனு என்ன..மூவாயிரம் இந்துக் குழந்தைகளை உற்பத்தி பன்னிடலாம்..சாமி

rss-wants-4-babies
படம்- வினவு

ஏஞ்....... சாமி  ஒரு பிள்ளைக்கே கஞ்சி தண்ணி ஊத்த வக்கு இல்லாம தவிக்கும்போது....  வீட்டு ஆம்பளையான் எல்லாம்  அரசு சாராயக்கடையே கதின்னு கிடக்கும்போது இன்னும்  மூனு கொழந்த சாத்தியமா..சாமி


 சாமி உத்தரவுபடி    வரிசையாக அஞ்சு பொட்டையா  பிறந்து போச்சுன்னு தூக்கி குப்ப தொட்டில போட்டுட்டு திரும்பி பார்க்கமா போகுதுக..... இந்த பாழாய் போன போலீசு வேற , குழந்தைய தூக்கி போட்டுவிட்டு போனவங்கள கண்டு பிடிச்சு அவுககிட்டயே ஒப்படைச்சிருது.


பொட்ட புள்ள வேணா... ஆம்பிள புள்ள தான் வேணுமுன்னு என்னனெனமோ செய்யுறாங்கே...சாமி.

 ஏஞ்.... சாமி......  ஒங்க சாமி தானே நாலு வர்ணத்தோட  இம்மாம் பெரிய ஒலகத்த படைச்சதுன்னு மூச்சுக்கு மூவாயிரம் தடவை சொன்னீங்க......... அந்தச் சாமி தானே  இந்த மகா..... பாரதத்தை படச்சது.. அந்தச் சாமி மூலமா....

பாண்டுவின் மனைவி குந்தி தேவிக்கு, தர்மத்தின் தலைவன், வாயு, இந்திரன் மூலமா...மூனு பிறந்தது மாதிரி  இந்தக் காலத்துக்கு ஏத்தமாதி மூனு என்ன முன்னூறு  இந்து குழந்தைகள  படைக்க முடியாதங்களா..??.சாமி......

 வியாசர் வழி காட்டல்படி காந்தாரிக்கு   நூறு  ஆண்கள்   பிறந்தது மாதிரி  வியாசரிடம் வேண்டி  மூனு என்ன ...மூவாயிரம்  இந்துக்கள உற்ற்பத்தி பண்ணிடலாமே..... சாமி...... நாட்டின் வளர்ச்சியோட..இந்துக்களின் வளர்ச்சியையும் காட்டிபுடலாம்  சாமீ,,..........


பிரதமரு மோடியே... ஒரு ஆஸ்பத்திரி திறப்பு விழாவுல.... பிள்ளைாயருக்கு யானைத் தலையை மாட்டி அப்பவே  மாற்று அறுவை சிகிச்சை செய்து வெற்றி வாகை சூடியிருக்காங்கன்னு பெருமையா  சொல்லியிருக்காரு...சாமி.......

நாமதான் செவ்............வாயில கழிப்பறை கட்டுவதற்கு ராக்கெட்டுலாம் விட்டுருக்கோமே..சாமி..... பிறகென்ன சாமீ

  மனுசங்க  மூலமா... ஏற்றுமதி  இறக்குமதி பன்னிக்கிட்டு......

 சாக் ஷி மகராஜ்-படம்-http://indrayavanam.blogspot.in/


என்னங்க...சாமி.... பேசா...ம......... பார்க்கிறீங்க..... நான் சொல்றது......... சரிதானே சாமீ



...


வெள்ளி 09 2015

அந்தாளுக்கு சிலை வைத்தால் நாங்களும் எங்காளுக்கு சிலை வைப்போம்ல....

படம்-http://www.nakkheeran.in/


“என்னாது கோட் சேவுக்கு சிலையா“??..... அந்தாளு நாட்டுக்கு என்ன செய்தாரு...???

அந்த ஆளு காந்தீய சுட்டு.....நாட்ட காப்பத்திருக்காருப்பா.........


அப்போ...அந்த காந்தி.....யாரு?? ......

யப்பா..... இப்படியெல்லாம் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. அது கோட்சேவின் வாரிசுகளுக்கு பிடிக்காத விசயம். வந்தமோ..... சொல்றத கேட்டோமா, படிச்சோமான்னு  இருக்கனும்.... புரியுதுங்களா....???

புரியுதுங்கோ.............!!! 

அப்ப இதையும் படிங்க...........

கோட்சேவுக்கு சிலை வைத்தால்.............நாங்களும் சிலை வைப்போம் என்று  இந்திய தேசிய லீக் போஸ்டர்   நகர் முழுவதும் ஒட்டி தெரியப்படுத்தி உள்ளார்கள்.






வியாழன் 08 2015

பெண் சிங்கம் உறுமியதற்கு பதில்.???....!!!


படம்-http://inneram.com/
தமிழகத்தில் பாஜகாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது தமிழகத்தில் உள்ள ஐந்தரை கோடி வாக்காளர்களில், ஒரு கோடி வாக்களர்கள  உறுப்பினர்களைாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம். வரும் 2016-ல் பாஜகா தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக விளங்கும்.

தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்பகின்றனர். அந்த மாற்றத்தை பாஜகா தலைமையிலான அரசால் மட்டுமே கொடுக்க முடியும்  

இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜகா மீது பொய்யான குற்றச்சாட்டகளை கூறி வருகின்றனர்.

காங்கிரசார் குஷ்பு போன்றவர்களை வைத்து பாஜகாவை விமர்சனம் செய்கிறார்கள். குஷ்பு போன்றவர்கள் விமர்சனம் செய்வது  குறித்து பாஜகா ஒரு போதும் கவலைப்படாது என்று தமிழக பாஜகா தமிழிசை சவுண்டுராஜன் கூறினார்.

பெண் சிங்கத்திற்க்கான பதிலா இது..............அய்ய....!!!!

























கழுகு தாக்குதல்.....இதுதானுங்க..



பசிக் கொடுமையில.... என்னென்மோ...நடக்குதுங்க......இந்த உலகத்திலே...
இது கழுகு தாக்குதல் ங்க.....





புதன் 07 2015

தொடரும் துக்ளக் தர்பார்.....

படம்-www.yourepeat.com


முகம்மது பின் துக்ளக் அரசர் தனது தலைநகரை தில்லியிருந்து தேவகிரிக்கும் பின் தேவகிரியிலிருந்து தில்லிக்கும் மாற்றினார்.

இவரின் வழியை பினபற்றி  தமிழ்நாட்டின் மாநகராட்சி மேயரை“மாண்புமிகு மேயர் அல்லது மாண்புமிகு மன்றத்தலைவர் என்றும் மேயர் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு மன்றத்தலைவர் என்று 14.10 1996 ஆண்டுலிருந்து அழைக்கப்பட்டு வந்ததை20.10.1996ல்  ரத்து செய்யப்பட்டு. மீண்டும் பழையபடி வணக்கத்துக்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டும் போர்டிலும் எழுதப்பட்டு வந்ததை.......

தற்போது 10.12.2014 லிருந்து  வணக்கத்துக்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டு வந்ததை மீண்டும் பழைய முறைக்கே  மாண்புமிகு மேயர் என்று அழைக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய் 06 2015

காக்கையொன்று பெண் சிங்கமாக மாறியது.. ...

நான் சிங்கம்லே!... தமிழிசைக்கு குஷ்பு கொடுத்த பஞ்ச்
படம்--பெண்சிங்கம் 
அகில  உலக காங்கிரஸ் கட்சியின் 130 வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் பூந்தமல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு..முன்னால் காக்கையும் இன்னால் சிங்கமாக மாறிய நடிகை  உறுமியதாவது.

 அகில ஒலக பா.ஜ.க.வின் தமிழகத்தின் தலைவி தமிழிசை சவுந்தரராஜன் நடிகை என்றால் மோசமானவர்கள் என்பது போல் பேசிவருகிறார்.. காமராஜர் கட்சி நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க ஆளும் மத்திய அரசில் கேபினட் அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இராணி ஒரு நடிகை இல்லையா..? மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது ரஜினி வீட்டுக்கு சென்று (டீ குடிக்க என்று சாக்கு சொல்லி) சந்திக்கவில்லையா..? அவரை பா.ஜ.கவுக்கு இழுக்க முயற்சி செய்யவில்லையா...?

அதே போல ஒங்க கட்சியின் தலைவர் அமித்ஷா  சென்னைக்கு வந்த     போது
நடிகர் நெப்பொலியன் , இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுமான் உள்ளிட்ட சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் பாஜகவில் சேரவில்லையா...????

என்னை யாருக்கும் தெரியாது  என்று சொல்லி இருக்கிறார் என்னை இந்த உலகத்துக்கே தெரியும் ( முதன்முதலில் எனக்குத்தான் கோயில் கட்டி வழிபட்டார்கள் என் ரசிகர்கள்) தமிழிசை. (நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது என்று இழிவு படுத்தியதை  மறந்து) தமிழக பாஜகவின் தலைவரானது தபால்காரரருக்கே இப்போதுதான் தெரியும்.

நான் காக்கை என்று மோதி பார்த்தார்.. நான் காக்கை அல்ல.. பெண் சிங்கம் என்று  உறுமிக் காட்டியதும் பயந்துவிட்டார்.












 

“பிளாக்” ல குவார்ட்டர் விற்பனை.....?????

படம்--dinaex.blogspot.com


 இன்றைய  பத்திரிக்கையில் ஒரு செய்தி!!

“பிளாக்”கில் மது ( குவார்ட்டர்) விற்பனை

அட.... பாவிகளா... “பிளாக்” கிலும்  குவார்ட்டர்  விற்க ஆரம்பிச்சுட்டாங்களா...?

ஆமா.... எந்த   ”பிளாக்”ன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்கொள்வோம்ல.....

“தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க”..................

“ ”காந்தி ஜெயந்தி,மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி அன்னிக்கி கடை அடச்சுடுவாங்கேலே........... அப்ப உதவும்லே.......

ஓ......நீங்க அந்த...... ரூட்ல..வர்ரீங்களா..........“.பிளாக்”கில வித்தவுகளத்தான் கைது பன்னி 31 பாட்டில்கள பறிமுதல் பன்னிட்டாங்கல...

ஒரு ”பிளாக்”ல மாட்டுனா..... அடுத்த “பிளாக்” ல விற்ப்பாங்கண்ணே..... கோவிக்காதீங்க. “எந்த பிளாக்”ன்னு கண்டுபிடிங்கண்ணே.,
உங்களுக்கும்.... கம்பெனி குடுப்போம்ல.ண்ணே..........

அதுக்குத்தாண்டா.லூசு நானும்,  கம்யூட்டர்ல ஒக்காந்து எந்த ”பிளாக்”கர்னு மாங்கு மாங்குன்னு தேடிக்கிட்டு இருக்கிகேன்.

 நல்லா தேடிப் பாருங்கண்ணே..... எங்கயாவது ரகசியமா  பதுக்கி வச்சு விப்பாங்கண்ணே............

                                              .............................

என்னடா..??ஃ.... கம்யூட்ர்ல தேடிக்கிட்டு இருக்கீங்க............

 “பிளாக்”ர்ல குவார்ட்டர் விக்கிறாங்க....... அது எந்த  ”பிளாக்”கர்ன்னு தேடுறோம்.

அப்படியா....!!!!!..என்னையும் உங்க குருப்புல சேத்துகிடுங்கடா.....????..


.






திங்கள் 05 2015

இது முக்கியமான செய்தியா...? ம்லே.....!!!!

முன்னாள் நடிகை மோனிகாவுக்கு (ரஹீமா)திருமணம்!
மோனிகா என்ற ரஹிமா



முன்னால் நடிகை மோனிகா என்ற ரஹீமாவுக்கும் மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர் மாலிக்கிற்கும் வருகிற 11ம்தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் திருமணம் நடைபெறுகிறது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய மோனிகா தனது பெயரை ரஹீமா என்று மாற்றிக் கொண்டார். திரமணத்திற்குப்பின் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று  கூறியது  குறிப்பிடத்தக்கது....... 


இதுதாம்லே இன்றைய முக்கிய செய்தி.........

ஞாயிறு 04 2015

இப்படியும் ஒரு பரபரப்பு......


படம்- தினக்குரல்,
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடியைப் போல்    நீதிமன்ற வளாகத்தில் ஆண் கைதி ஒருவர்  பெண் கைதியை  கட்டிப்பிடித்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.

கேரளாவின் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ,பினையில் வந்துள்ள சரிதா நாயர் வாய்தா தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்க்காக வந்தார்


அப்போது அதே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஒன்றிற்க்காக, வாய்தா தேதியில் ஆஜராகுவதற்க்காக  வந்த சதீஷ் என்பவர். 
சரிதா நாயரை  திடீரென்று கட்டிப்பிடித்தார்.

இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக செய்தி பத்திரிக்கைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...