பக்கங்கள்

சனி 11 2011

ஏ....ராஜாவே.....கோண மாணலா தொங்குதே...அது என்னாது?

ஒரு ஊர்ல ஒருத்தி இருந்தா, அவளுக்கு தினமும் புளியங்கா
வித்தால்தான் கஞ்சி. புளியங்கா விக்கலைன்னா அன்றைக்கு
கஞ்சி இல்லே. இப்படி கஷ்டப்பட்டு ஓடிக்கொண்டுயிருந்தது.

இப்படி இருக்கையிலே, அந்த நாட்டு ராஜா புளியங்கா காரியை
கவனிச்சுகிட்டு வந்து இருக்காரு. ஒரு நாளு.ராஜா

அய்யோ,பாவம், இப்படி புளியங்கா வித்து கஞ்சி குடிகறாளே
என்று எண்ணி இரக்கப்பட்டாரு. அந்த இரக்கத்தினால் அவளை
ராணியாக்கிட்டாரு.

இப்படியிருக்கையிலே,ஒரு நாளு,ராஜாவும் இந்த புளியங்கா
ராணியும் குதிரை கட்டிய சாரட் வண்டியில் வீதி வழியாக உலா
வந்தார்கள். அவர்கள் வரும்வழியில் நிறைய புளியமரங்களா
இருந்தன.

சாரட் வண்டியில வந்த இந்த புளியங்கா ராணியும் வைத்த கண்
வாங்காமல் பார்த்து கிட்டே வந்தவஙங்க.
ராஜாவ,ஆசையா தொட்டு, ஏங்க....ராஜாவே! அந்த மரத்தில
கோண மாணலா தொங்குதே.. அது என்னாதுன்னு கேட்டுருக்காங்க

ராஜாவும் கோண..மாணலா இருக்கிறத பாத்துட்டு. அடியே!
பேசாம வாடின்னுன்னாரு?

ராணியும் பேசாம, இருக்காம, திரும்பவும். ஏங்க ...ராஜாவே.....
கோண மாணலா இருக்கிறது என்னாதுன்னு-கொஞ்சலா
கேட்டு இருக்காங்கா.

ராஜாவுக்கு, கோபம் வந்துருச்சு,ஏலா, நீ வித்த புளியங்கா
தெரியாதாடி, திட்டி அரண்மனையை விட்டு விரட்டிட்டாரு.

ஏங்க....ராஜாவே! இந்த புளியங்கா ராணி யாருன்னு கொஞ்சம்
சொல்லிட்டு போறீங்களா?

புதன் 08 2011

மது விற்கும் அரசை நாம் ஒன்று கூடி வல்லரசாக்குவோம்



மது நாட்டுக்கும் கேடு
வீட்டுக்கும் கேடு


மதுக்கடையில் சர்க்கார்
எழுதி வைத்திருக்கும் வாசகம்


மது குடித்தால் நாட்டுக்கு
குடிக்காவிட்டால் வீட்டுக்கு


வீடு பெரிதா? நாடு பெரிதா?
நாடே பெரிது. வீடு அடுத்து.


மது குடித்து நாட்டை  
முன்னேற்றும் மது வாணர்களே!


மது பானத்தில் துருபிடித்த
இரும்பு நட்டு கிடந்ததை


குற்றமென புகராதீர்!


அது நாட்டு முன்னேற்றத்திற்கு
தடைக்கல்லாக அமையும்.


இருந்தாலும் நம் நாட்டுப் பற்றால்
தடைக்கற்களை புறந்தள்ளுவோம்.


மது விற்று தாலி அறுக்கும் அரசை
மது விற்று தாலிக்கு தங்கம் தரும் அரசை


நாம் ஒன்று கூடி வல்லரசாக்குவோம்.! Top of Form

செவ்வாய் 07 2011

சமச்சீர் கல்வி பேராசையை ஒழிக்கும்..சமத்துவத்தை படைக்கும்.




ஆசை இல்லாமல் இருக்க முடியாதுதான்.
அதுக்காக,சாமானியர்கள் பேராசைப்பட்டால்
என்னவாகும் கஷ்டமும் கவலையும் ஏற்படும்..

பேராசையால் விளையும் கஷ்டமும் கவலையும்
பெரும் தொழிலதிபர்கள்ளுக்கும்,பெரும் பணம்
படைத்தவாகளுக்கும்,பெரிய்ய்ய....அதிகாரிகளுக்கும்
குறிப்பாக சொல்வதென்றால் டாடா,அம்பானி,
பிர்லா,மித்தல் இவர்களை துன்பமும் கவலையும்
 ஒருதுளி கூட வாட்டாது. அண்டவும் அண்டாது.

பிறகு, யார் யாருகிட்ட பேராசையால் விளையும்
கஷ்டமும் கவலையும் கொஞ்சி குலாவும் என்று கேட்டால் நடுத்தர மக்களையும் ஏழை பாழை மக்களிடம்தான்.

தமிழ்நாட்டில் கோவை,திருப்புர்,மதுரை,தேனி விருதுநகர்
சென்னை போன்ற நகரங்களில் தனியார்மயம்-தாராளமயம்
காரணமாக தனியார் நிதி நிறுவனங்கள் புதுசு புதுசா
முளைத்தன
.
செல்போன்கள் கம்பெனிகள் விளம்பரம்
செய்யுரமாதிரி இந்த தனியார் நிறுவனங்களும் தினிசு
தினிசா விளம்பரங்கள் செய்தன

.எப்படி.?...இப்படி?

குறைந்த காலத்தில் அதிகவட்டி ஆள் பிடிக்காமல்
கஷ்டப்படாமல் வருமானம். இரட்டிப்பு வட்டி

முன்னோரு வருடங்களில், லாட்டரி சீட்டு
விளம்பரம்மாதிரி ,நீங்கள் நடந்து போகலாமா?
பஸ்ஸில் இடிபாடுகளில் பயணம் செய்யலாமா?
கூரை வீட்டில் இருக்கலாமா? லாட்டரி சீட்டு
வாங்குங்கங்கள்.அப்புறம் நீங்கள்தான் லட்சாதிபதி.

ஒரே அடியில் ஆசையுள்ள மூளையை பேராசையுள்ள
மூளையாக மாற்றிவிடுவார்கள்..சாதாரன மக்களும் நடுத்தர
மக்களும் சபலப்பட்டு ஏமாந்து போயி நிற்கிற
வரைக்கும் ஒரே லட்சாதிபதி சிந்தனைதான்.
கூட்டல் பெருக்கல்கணக்குதான்.

 இந்த அய்டெக் நிதிநிறுவனங்களும்
லாட்டரிசீட்டு மாதிரி விளம்பரம் செய்து சபலத்தையும்.
நப்பாசையையும் பேராசயையும் ஏற்ப்படுத்தி பல கோடி
 பணத்தை சுருட்டி விட்டு கம்பி நீட்டிவிட்டன
.இதில் ஒருசிலர் பிடிபட்டு சகல வசதியுடன் கம்பிக்கு
பின்னால் யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள.

பேராசையில் சிக்குண்ட மக்கள் சேமித்த பணத்தையும்
 காது,கழுத்துகளில் அணிந்திருந்த நகைகளையும்
விற்றும். அரசுடமை வங்கியில் டெபாசிட் பணத்தையும்
இடையில் முறித்தும் தனியார் வங்கிகளில் முதலீடு
செய்து காத்து இருந்தனர்.லாட்சாதிபதி கணவுடன்.

ஒவ்வொரு நிறுவணமும் தங்கள் படித்த படிப்பின்
திறமைப்படி பணத்தை ஏப்பம் விட்டன.

இனி என்ன?

யாணை வாய்க்குள் போனது திரும்பவா போகுது?
திருட்டு போன நகைகளை மீட்டு உரியவர்களிடம்
ஒப்படைக்கும் காட்சியெல்லாம் இதில்வராது.

இந்த நிதி நிறுவணங்கள் சுருட்டிய பணத்தை போர்க்
கால நடவடிக்கை எடுத்தாலும் வராது.

இந்நேரம் டாட்டா, அம்பாணி,மித்தல் பணம்
என்றால்.மொத்தத்துறையும் இறக்கிவிடப்பட்டு
இருக்கும். இவர்களின் தொழிலுக்கு எந்த தீங்கும்
வரக்கூடாதுன்னுதான் இலங்கையில் தமிழர்களையும்
விடுதலை போராட்ட வீரர்களையும் முள்ளிவாய்க்காலில்
கொன்று குவித்தார்கள்.

 என்ன செய்வது போன உசுருதிரும்பவா போகுது.
 சுருட்டிய பணம் திரும்ப கிடைக்கவா போகுது.
 நம்புங்கள் சுருட்டிய பணம் திரும்ப கிடைக்கும் என்று.  
ஏன்னா, நம்பிக்கைதான் வாழ்க்கையின்னு சொல்றாங்க.

.அம்பானி பிஎஸ்என்எல்க்கு நாமம் போட்ட்து
மோசடியா? சே!சே! மோசடி  இல்லீங்க. திறமைங்க!!

அது மாதிரி நிதிநிறுவணங்கள்  மோசடி பண்ணலீங்க!
தொழில் திறமையை காட்டி இருக்காங்க..
தனியார்  கல்வி நிறுவணங்களும்  இந்தத் 
திறமைக்குத்தாங்க பில்ல அதிகமா?  போடுறாங்க.
அதனாலத்தான் சமச்சீர் கல்வி வேண்டாம் .அந்தக் கல்வியால
திறமைய வளர்க்க முடியாதுன்னு கும்மாளம் போடுறாங்க..

தமிழ்நாட்டுல ஆள் மாற்றம் மூலமா ஆட்சிக்கு வந்திருக்கும் செல்வியம்மாவும் கும்மாளத்தோட கும்மாளமா?

ஆமா! சமச்சீர் கல்விமூலமா தொழில் திறமையை
வளர்க்க முடியாதுன்னு சமச்சீர்கல்விக்கு தடை போட்டுருச்சு.

சமச்சீர்கல்வி வந்தா ஆசை வரும்.ஆனால் பேராசை வராது
.பேராசை வராமல் இருந்தா ஏமாறாமல் இருப்போம்.
ஏமாறாமல் இருந்தா நாம உழைத்த,சேமித்த பணம் பறிகொடுக்க மாட்டோம்..கவலையும்,கஷ்டமும் வீடு தேடி வராது.

சமச்சீர் கல்வியால் கல்வியில் உள்ள ஏற்றத்தாழவு ஒழியும்.

ஒரு பழமொழிசொல்வார்கள் இருக்கிறவன் ஒழுங்கா இருநதா
செரைக்கிறவன் ஒழுங்காசெரைப்பானாம்..
முதலில் நாம் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டுமானால்
கல்வி அவசியம். அந்தக் கல்விக்கு
சமச்சீர் கல்வி அவசியம். வருங்கால சந்ததியர்க்கு
வழிவகை செய்யும். அந்த சமச்சீர் கல்வி திமுக
உருவாக்கியது அல்ல. நேர்மையான, நிபுனத்துவம்
வாய்ந்த பேராசையற்ற கல்வியாளர்களால்
பாடுபட்டு கொண்டு வந்தது. பாடுபட்டு வந்த
சமச்சீர் கல்வி வாழ வளர ஆதரவு தருக!!!
ஆதரவு தருக.!!!. .

ஞாயிறு 05 2011

அதனா ல..........

அன்று சொன்னார்
என் வாத்தியார்
டேய்,உனக்கு
படிப்பு வராது
அதனா ல
மாடு மேய்க்க போ!

என் தாய் சொன்னார்
மாடு எப்ப வேணாலும்
மேய்க்கலாம்
அதனா ல
படிக்கப் போ!

என் சிநேகிதன் சொன்னான்
படிப்பு உனக்கு
எட்டாக் கனி
அதனா ல
வேலைக்கு போ!

இன்று களவானி கல்வி
வள்ளல்கள் சொல்கிறார்கள.
இன்றைய செலவு
நாளைய வரவு
அதனா ல
ரொக்கத்தை
செலுத்திவிட்டு போ!

அம்மா ஆட்சியிலே
செல்வியம்மா சொல்லுது
உன் வம்சத்துக்கு
கல்வியும் கிடையாது
வேலையும் கிடையாது
அதனா ல
ரேஷன் அரிசியை இலவசமா
வாங்கிட்டு போ!!!!


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...