பக்கங்கள்

சனி 13 2014

"தோழர்" என்பதின் அர்த்தம் தெரியாதவர்களுக்கு....

"தோழர்" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். "ஐயா... அம்மா..." என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

பாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் "தோழர்".

இனிமேல் யாரையும் "மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: "தோழர்."

பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் "காமராட்" (camarade : தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.

தமிழில் புதிதாக தோழர் என்ற சொல்லைப் பயன்படுத்த தொடங்கி இருப்பவர்கள் எல்லோரும் சமத்துவமான சமுதாயத்தில் நம்பிக்கை கொண்டவர்களா? நிலப்பிரபுத்துவ பிற்போக்குத் தனங்களை நிராகரிப்பவர்களா? ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை விரும்புகிறவர்களா ? இனிமேல் யாரையும் ஐயா, அம்மா, தலைவர், தளபதி என்று அழைக்க மாட்டார்களா???

வெள்ளி 12 2014

முற்போக்கை பற்றி பிற்போக்கு பேத்துகிறது...

படம்-kalakakkural.blogspot.com
பகவான் என்று ஒரு சாரால் சொல்லப்படும்  பக்கியால் அருளப்பட்ட புராணபுரட்டான பகவத்......கீ........தை புத்தகத்தை. உலகையே ஆளும் ஓ..பா..மாவுக்கு. பரிசாக வழங்கியதால். பகவத்கீதை புனிதம் பெற்றது.


 ஓபாமாவால்  புனிதம் பெற்ற பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என இந்தியாவின் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அறிவித்தவுடனே....


 “திருக்குறளில் இருக்கும் முற்போக்குகூட பிற்போக்குக்கான பகவத்கீதையில் கிடையாது.அதனால் பிற்போக்கு பகவத்கீதையை தேசியநூலாக ஆக்கக் கூடாது” என்று  சாதிவெறி கூட்டணி தலைவர்  கலவர நாயகனான ராமதாசு  எதிர்த்தது. இது எப்படி இருக்கிறது என்றால் முற்போக்கை பற்றி பிற்போக்கு பேத்தியதாக. இருக்கிறது. இன்னும்

பகவான் ..பெண்களுடன் ஆடிய   அவதார விளையாட்டுகளை , தேசிய விளையாட்டுகளாக அறிவிக்கும்போது.. இந்த பிற்போக்கு , முற்போக்கு விளையாட்டைப் பற்றி பேத்துவதை அப்போது தெரிந்து கொள்ளலாம்.




வியாழன் 11 2014

துாய்மை இந்தியாவின் சூரப்புளிகள் சுத்தம் செய்ய வருவார்களா..??ஃ

தூய்மை இந்தியா
படம்-கார்ட்டூன் – நன்றி http://ajanrnair.blogspot.in/

துாய்மை இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடிக்கு மேல்.அந்த 100கோடிக்கு மேலான மக்களுக்கு  தேவையாகும் உணவு தானியங்கள் 60 கோடி டன்.

இந்த துாய்மை இந்தியாவில்  மூன்று நேரம் சாப்பிடும் வசதியுள்ள மக்களுடன் வசதியற்ற மக்களும் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு 600கிலோ உணவு உட் கொள்கின்றனர். இதில் சீரனமானது போக..மீதி 550 கிலோ சீரமாகாதவைகள் சிறுநீராகவும் மலமாகவும் வெளியேறுகின்றன.

இப்படி வெளியேறும் 550 கிலோ கழிவுகள். 30% சதம் சீமான்களின் வீட்டு கழிப்பறையிலும் கட்டணகழிப்பறை உள்ளிட்டவைகளிலும் 70% சதம் திறந்த வெளியிலும் கழிக்கப்படுகிறது.

இதில்  70% சதம் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படுவதால் ..இந்தியாவின் துாய்மை கெடுகிறது. செவ்வாயக்கு மங்காள்யான் அனுப்பி மார்தட்டிக் பெருமைபட்டு கொள்வதற்கு இது தடையாக இருக்கிறது.  மோ(ச)டியின் தூய்மை இந்தியாவிற்கு  இழுக்காகாகிறது..


இந்த தடையையும்  இழுக்கையும்  போக்க..தூய்மை இந்தியாவின் சூரப்புளிகள் இந்த திறந்த வெளிகளை சுத்தம் செய்ய கேமராவுடன் வருவார்களா...????

புதன் 10 2014

பாபர் மசூதிக்கு அடுத்து தாஜ்மகால்...

பாபர் மசூதி இடிப்பு
படம்-வினவு.

முன்னோரு காலத்தில் ராமர் பாபர் மசூதியில்தான் ஒன்னுக்கு அடித்தார் என்று இல்லாததை....இருப்பதாக  காட்டி..தொல்லு பொருளு ஆய்வுடன் ஒரு கதையை ஆரம்பித்து கூத்தாடி..கொண்டாடி..சூப்பர் ஹிட்டாக ஆக்கிவிட்டு..அந்த பாபர் மசூதியை ஊத்தி மூடிவிட்டார்கள்.

தற்போது பழைய படத்தின் இரண்டாம் பாகமாக.... பெரும்பாண்மை பலத்துடன் அடுத்த கதைக்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டார்கள்.

“பழமையான ஹிந்து கோயிலின் ஒரு பகுதியே தாஜ்மகால்” என்று உத்தர பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் லட்சுமி காந்த பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

தாஜ்மகால் இருக்கும் இடத்தில்தான் தேநோமகாலய கோயில் இருந்தது. அந்தக் கோயில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகலாய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்க்கான ஆவணங்கள் உள்ளன என்றார்.

இந்தக் கதையை தொடர்ந்து ..ராமனோ.. ராமனின் பரிவாரங்களோ.. தாஜ்மகாலன் ஒரு  குறிப்பிட்ட இடத்தில் கழிப்பறையாக பயன்படுத்தி வெளிக்கு இருந்ததாக..தொல்லு பொருளு..ஆய்விலிருந்து ஆவணங்கள் உற்பத்தியாகலாம்........

 இதிலிருந்து  தெரிவது உலகின் ஏழு அதியசங்களில் ஒன்றாக தாஜ்மகால் எப்படி இருக்கலாம்..

இந்து கோவிலின் ஒரு பகுதி தான் தாஜ்மகால்: உ.பி. பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை
படம்--http://www.dinamani.com/

செவ்வாய் 09 2014

இந்தாளுக்கு எதுக்குண்ணே..இவ்வுளவு பாதுகாப்பு...




இலங்கை அதிபர் ராஜபக்சே ..திருப்பதி கோயிலில் வரும் பத்தாம்“ தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். முன்னதாக அவர் நாளை திருப்பதிக்கு வருகிறார். 

இதையொட்டி இலங்கை அதிபர் வந்து செல்லும் ரேணி குண்டாவிமானநிலையம்,திருப்பதி மலைபாதைகள், ஓய்வெடுக்கும் பத்மாவதி நகரில் உள்ள விருந்தினர் மாளிகை,திருப்பதிகோயில், வராகசுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய பாதுகாப்பு பணிகளை திருப்பதி ஏஎஸ்பி சுவாமி ஆய்வுசெய்தார்--இவ்வாறு ஒருவர்  பத்த வச்ச பீடியில் புகை இழுக்க மறந்து செய்தி பத்திரிக்கையை வாசித்து முடித்தார்.

அருகில் ஓசி தீப்பெட்டி கேட்பதற்க்காக இவர் வாசிப்பதை பொருமையுடன் கேட்டு கொண்டு இருந்தவர் இப்படிக் கேட்டார்.

“ இந்தாளுக்கு எதுக்குண்ணே..இவ்வளவு பாதுகாப்பு“ என்று கேட்டார்.

பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவர். அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு “ ஓசி தீப்பெட்டி கேட்கிற ஒனக்கெல்லாம், சந்தேகம் வந்திருச்சா” என்று நிணைத்தபடி கவுண்டமணி பாணியில்  விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு கொலய செஞ்சவன. கோர்ட்டுக்கு போகயில் போலீஸ்காரன் எப்படி  அவன சூட்டிட்டு போவாங்கே..என்று தெரியுமா..? என்று கேட்டார்.

“கையில விலங்கு மாட்டிட்டு, முன்னாடியும் பின்னாடியும் ரெண்டு போலீஸ்காரங்க துப்பாக்கியுடன் போவாங்கே..” என்றார்.

“ஒரு கொல செஞ்சவனக்கே ரெண்டு  போலீஸ் பாதுகாப்புனா..... ஒரு இனத்தையே அழிச்சவனுக்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போடுவாங்கே” யோசிச்சு பாரு....???

கேள்வி கேட்டவர் பேசாமல் இருந்தார்.

மீண்டும் அவரே .பேசினார். வர்றவனக்கும்..இங்கிருக்கிறவனுக்கும் வாயும் வயிறும்தான்  வேற வேற.... ஆனா “ கொல்லும் சிந்தனை மட்டும் ஒன்னு”ப்பா என்று விட்டு.  அணைந்துபோன பீடியை திரும்ப பத்த வச்சு ..புகையை வெளியே விட்டார்.

ஓசி தீப்பெட்டி கேட்டவர். புகையை விட்டபடியே சொன்னார்.  நீங்க..சொல்றதும் உண்மைதான் “கொலகாரனையும் கொள்ளக்காரனையும் பாதுகாக்கத்தான் போலீசு இருக்குது”



தெரிந்ததும்,தெரியாததும்


முன்னோரு காலத்தில்,“ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம்,ஆகையால் ஆசையை விட்டொழியுங்கள்என்றார்.
புத்தர்.
     
அவர் சொன்னதோடு நிற்காமல் ,அரச மகுடத்தையும்,  அதன் சுக போகங்களையும் துறந்த மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்துகொண்டார் .புத்தர் அரசமகுடத்தை துறக்காமல் எண்ணற்றமாற்றங்களை செய்து மக்களைதிருத்தி வழிநடத்தியிருக்கலாம்.
     
சரி,இது நடக்குற காரியமா? முடியுமா? என்றால்,முடியும் என்றால் முடியும்.முடிந்தவரை முயற்சிப்பது.முடியும்வரை முயற்சிப்பது........என்று சொல்லும் அறிவாளிகளைத்தான் கேட்க வேண்டும். அரசவை மகுடத்தை சுமந்துகொண்டு மக்களோடு மக்களாக இருக்கமுடியுமா?.

முடியாது என்றுதான் அரசமகுடத்தை துர்க்கியெறிந்து துறவறம் ஏற்று மக்களுக்கு போதித்தார். அன்று போதித்தவை இன்று நடைமுறையில் எப்படி உள்ளது.
     
பணக்காரன் ஆசைபட்டால் இன்பம். ஏழைஆசைபட்டால் துன்பம்.ரெண்டா கெட்டான்ஆசைபட்டால் இன்பமும் துன்பமும் மாறி மாறி.   அந்தக் காலத்திலயே பேராசையும், பொறாமையும் ,இருந்த்து என்றால், விஞ்ஞானமும் நாகரிகமும் வளர்ந்து சந்திரனுக்கு தப்பு செவ்வாய்க்கு போயிருக்கிறதென்று சொல்லுகிற இந்தக் காலத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்து இருக்கும்.தியாகமும் அர்ப்பணிப்பும் அறிவியல்சிந்தனையும் எவ்வளவு குறைந்து இருக்கும். நல்ல பழக்கங்கள் கடு களவும், கெட்டதுகள் மலையளவுமாக உள்ளன.அரசனாக இருந்துகொண்டே மக்களுக்கு எந்த நன்மையும் செய்து விடமுடியாது என்று தெரிந்துதான் ஊர்ஊராக. சென்று தன்கொள்கைகளை பரப்பினார்.
     
இன்றைய காலகட்டத்தில் நல்லவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் நல்லதுக்காக குரல் கொடுப்பவர்கள் சீர்குலைவுகாராகள் என்றும், கெட்டவர்கள் பிழைக்க தெரிந்தவர், வல்லவர், படித்தவர்கள் என்றும் மாற்றப்பட்டுள்ளனர். நல்லவர்கள் கடுகளவும் கெட்டவர்கள் மலையளவுமாக உள்ளனர்.
     
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.” -----இன்றைக்கு இவை  பொருந்துமா? உங்களுக்கு  தெரிந்த்தை சொல்லுங்கள.. நானும் தெரிஞ்க்கிறேன். “தெரிந்ததுகையளவு, தெரியாததுமலையளவு



திங்கள் 08 2014

அரசியலைப்பற்றி நடிகரும்..நடிகரைப்பற்றி அரசியல்வாதியும்..




நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை. தயங்குகிறேன். நாளைக்கு என்ன நடக்குமுன்னு எனக்கே தெரியாது. ஆண்டவன் காட்டிய வழியில் சென்று கொண்டு இருக்கிறேன்.

படம்-
நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு. திரை உலகில் அவர்கள் வளர்த்து வைத்திருக்கும் இமேஜ் ப்ளஷாக அமையும். ஆனால் நடிகர்களுக்கு அரசியலின் ஆழம் தெரியாது. இது அவர்களுக்கு மைனஸாக அமையும். இந்த இரு துருவப் புரிதலுக்கு எம்ஜியாரும், சிவாஜியுமே முன்னுதாரனங்கள்.

ஞாயிறு 07 2014

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்...

படம்-http://ta.wikipedia.org/s/48v
சொத்து குவிப்பு வழக்கில், கொள்ளைக்காரியான, வாய்தாராணிக்கு ஜாமீன் வழங்கிய  விவகாரத்தில் உச்ச மன்ற நீதிபதி மீது..சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி ஜனாதிபதியிடம் புகார் மனு  அளித்துள்ளார்.

கூடவே, மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானாந்த கவ்வுடா விடமும் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில்

சொத்து குவிப்பு வழக்கில் கொள்ளக்காரிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் சட்ட வரைமுறையின்படி ஜாமீன் தர மறுத்தது.

இதையடுத்து கொள்ளக்காரியும், கொள்ளக்காரியின் கூட்டாளிகளும் உச்சி குடுமி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இதில் உச்சி குடுமி தலைமை நீதிபதி தத்து அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜாமீன் வழங்கியது.

இந்த ஜாமீன் உத்தரவில் விளக்கமாக எதுவும் குறிப்பிடாமல்.ஒரு வரியில் உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார்.

பொதுவாக அப்பீல் செய்யும்போது வழக்கு விசாரனை நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்தியிருக்க வேண்டும். மேலும் சட்ட நெறி முறைகளை பின்பற்றாமல் ஜாமீன் கொடுக்கும்போது எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இது அனைவருக்கும் சந்தேகத்தை எற்படுத்தி உள்ளது. ஜாமீன் வழங்கியதில் ஏற்பட்ட சந்தேகத்தின் தொடர்பாக..விசாரனைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழு விசாரித்து முடிவு அறிவிக்கும்வரை “தத்து” தலைமை நீதிபதியாக செயல்படக்கூடாது. என்று தன் மனுவில் கூறியுள்ளார்.

சட்டப் போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி அவர்களுக்கு

கொலைகாரர்களும் கொள்ளைக்காரிகளும், ஆளும்  காட்டுமிராண்டிகள் நிறைந்த நாட்டில், “சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்” போலதான் ..அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய உச்சி குடுமி நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் என்பது தெரியாமலா இருக்கும்...

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...