பக்கங்கள்

வெள்ளி 06 2017

அப்படியா? அப்படி ஒரு இடம் இருக்கிறதா?

அப்படியா?
அப்படி ஒரு இடம் இருக்கிறதா?
ஒன்றுமே தெரியாதது போல
பாசங்கு செய்கிறார்கள்
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
அப்படி ஒரு இரகசிய உலகம்
இருக்கிறது என்பதை
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும்
குப்பைக் கூளத்திலும் தான் – அங்கே
சிலர் வாழ்கிறார்கள் எனபதை
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
இந்தச் சேரி வாழ்க்கை

ஒரு நரகம்
அரசின் கடைக்கண் பார்வைகூட
எங்கள்மீது பட்டதில்லை
மேன்மை தங்கிய ஜனாதிபதி
அவர்களுக்கு நான்
மனப்பூர்வமாக மரியாதை
செலுத்தவேண்டும்

என்னை அவமரியாதை செய்ததற்காக.
நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம்
உண்மைதான்!

என்னைப் பிழிந்து உழைப்பைக்
கொடுக்கிறேன்
பணப்பெட்டிச் சாவியோ
முதலாளிகள் கையில், அரசின் கையில்
நானோ அவர்கள் தயவில்
நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .
உண்மைதான்

நகரத்தில் குற்றம் பெருகித்தான் விட்டது.
கொஞ்சம் விரிசல்கள் இருந்தபோதும்
அமைப்பு நன்றாகவே இயங்குகிறதாம்
எனில், நாங்கள்?

நாங்கள் அந்த விரிசலில்
விழுந்துவிட்டோமாம்
கைதூக்கிவிட அவர்கள் முயன்றபோதும்
நாங்கள்
மேலேறிவர மறுக்கிறோமாம்.
ஓ…! அவர்கள் மாபெரும் சிந்தனையாளர்கள்
தான்!
எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்
மானத்தோடு வாழ வழிவேண்டும்
கையேந்தி வாழ்வது வாழ்க்கையல்ல
கடவுளை நம்பினேன்
அன்றாடம் உழைத்தேன்
வாழ்க்கைக்கு ஏதேனும்
உத்திரவாதம் உண்டென்று
நினைத்தேன், நம்பினேன்.

நேற்றிரவு
இன்னொரு உறக்கம் பிடிக்காத இரவு
நாளைக்கு என்ன
என்ற கவலையிலேயே
நான் உறங்கிப் போனேன்.
கனவு கண்டேன்
உறைய வைக்கும்
நீலஓளி என்னைத் திணறடித்தது
அலறி எழுந்தேன்
ஒருவேளை… ஒருவேளை…
நான் இறந்து கொண்டிருக்கிறேனோ?
– டிரேஸி சாப்மன். 

நன்றி தோழர் Laxman Manikandan

வியாழன் 05 2017

பெரியார் எனும் பகுத்தறிவுவாதி..........


எல்லோருக்கும் தெரிந்தது தான்; பெரியாரை கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பனத்தனத்தின் எதிர்ப்பாளராகவுமே பார்க்க வைத்து அவரது பல சிந்தனைகளை புதைக்கும் செயலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், இந்த தாடிக்கார கிழவர் எதை பற்றி தான் சிந்திக்கவில்லை / எதை பற்றி தான் கருத்துக்களை சொல்லவில்லையென யோசித்து பார்த்தால் ஆச்சரியத்தை விட அதிர்ச்சி தான் மிஞ்சுகிறது. 

நவீன விவசாயம், பசிக்கு மருந்து, மாற்று உணவு, கர்ப்பத்தடை, குடும்பக்கட்டுப்பாடு, திராவிடம், தேசியம், கல்வி, மறுமணம், பரீட்சை, வர்ணாசிரமம், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், சாதி, சட்டம், ஒழுக்கம், மூடநம்பிக்கை, முட்டாள்தனம் என எல்லா இடத்திலும் எல்லா களத்திலும் நம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை விட்டு சென்றிருக்கிறார் பெரியார். 

இன்றைய தேதியில், மதவெறியும், போலியான தேச பக்தியும் நம்மை கட்டியணைக்க வரும் வேளையில், இந்த கருப்பு சட்டை கிழவரின் கைத்தடியை கடன் வாங்கித்தான் அவைகளை அடித்து விரட்ட வேண்டும். 

பெரியாரின் ஒட்டு மொத்த சிந்தனைகளையெல்லாம் ஒரு சிறு ட்வீட்லங்கரில் அடைத்து விட முடியாது. ஆனால் கடல் நீரை கையளவு கிண்ணத்தில் அள்ளி வந்தாலும், அது அதே கடல் நீர் தானே.

இன்றைய நாட்டு நடப்புக்கு பொருத்தமான பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை மட்டும் இங்க பதிவிடுகிறேன். இதை பதிவிடும் நோக்கம் ஒன்றே ஒன்று தான்; தயவு செய்து அவரின் கருத்துக்களை படியுங்கள், பின்பற்ற வேண்டுமென்று அவசியமெல்லாம் இல்லை, ஆனா படியுங்கள், ஏனெனில், 'நான் சொல்கிறேன் என்பதற்காக நான் சொன்ன எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்' என சொன்ன ஒரே சிந்தனைவாதி தந்தை பெரியார் மட்டும் தான்.

பெரியார் இதில் பல கருத்துக்களையும் கேள்விகளையும் எழுப்பி 70-80 வருஷங்கள் முடிந்து விட்டன. இது தான் அவர் காலங்கள் தாண்டி வாழும் சிந்தனையாளர் என்றும், நம் காலம் முடியும் வரை அந்த கிழவரின் கரம் பிடித்து நடக்க வேண்டும் என்றும் நம்மை தெளிய வைக்கும் காரணி.

இது மாட்டுக்கறிக்கு:
பூச்சிகளையும் புழுக்களையும் அழுக்குகளையும் மலத்தையும் சாப்பிடும் கோழியையும் மீனையும் மனிதர்கள் சாப்பிடும் போது, புல்லும் புண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் சாப்பிடும் மாட்டின் இறைச்சியை ஏன் சாப்பிடக்கூடாது?

இது ஜல்லிக்கட்டுக்கு:
தமிழன் தன்னை இந்தியன் என நினைத்ததால் தமிழர் வீரத்தையும் கலையையும் பண்பாட்டையும் இழந்தான்; தமிழன் தன்னை இந்து என கருதியதால் மானத்தையும் ஞானத்தையும் உரிமையையும் இழந்தான்.

இது Demonetisationக்கு:
படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், படித்த முட்டாள்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே படித்த மூடர்களாய் தான் இருப்பார்கள். 

இது Anit-Indianக்கு:
......... இந்த லட்சணத்தில் கல்வியோடு இப்ப தேசபக்தியும் புகட்டப்படுகிறது. இது அறிவு வளர்ச்சிக்கு ஆபத்தான காரியமாகும். கடவுள் பக்தி மத பக்தி போலவே இந்த தேசபக்தியும் மனிதர்களின் அறிவு வளர்ச்சியை நாசமாக்கி விடுகிறது. அதிலும் நமது நாட்டு தேசபக்தி நினைப்பதற்க்கே பயங்கரமா இருக்கிறது. இது பழைமையை பேசி பின்னாள் போக பார்க்கிறதே தவிர முன்புறம் பார்ப்பதில்லை.

காதல்:
காதலும் அன்பும் ஒருவரிடம் மட்டும் தான் இருக்கவேண்டும் என சொல்வது முரண்பாடான ஒன்று. காதல் என்பது மிக மிக அற்பமான சாதாரண விஷயம், காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்கு சிறிதும் பொருந்தாது. ( இதை சொன்ன வருஷம் 1940, நவம்பர் )

Media:
உலகில் பத்திரிக்கைகள் 2 விதமானவை, மக்கள் வாழ்க்கையை முன்னேற்ற நடத்தப்படுபவை, தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள நடத்தப்படுபவை. நாட்டில் காலிகள் அயோக்கியர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றால், அவர்களை சார்ந்திருக்கும் பத்திரிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ ஸ்ட்ரைக்:
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி தரலாம் என விவாதிக்க தான் அரசியல் திட்டத்தில் கொள்கையாக இருக்கிறதே தவிர, ஒரு முதலாளி இவ்வளவுக்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என ஏதாவது கொள்கையோ திட்டமோ இருக்கா?

No comments:
நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மையெல்லாம் அநேகமாக செத்துப்போனவர்களிடம் தானே தவிர உயிரோடு இருப்பவர்களிடம் இல்லை.

Exam:
உருப்போட்டு ஒப்புவிப்பது என்பதே எந்த படிப்புக்கும் பரிட்சையாக இருக்கக்கூடாது. அப்படியானால் அர்ச்சகனும் புரோகிதனுமே ஒப்புவிக்க முடியும். உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில் தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு வருடமும் தேர்ச்சிக்காக பரீட்சிக்க கூடாது.

சினிமா:
நம்ம பெண்கள் அலங்கார பொம்மைகளாகவும், ஆண்களின் கண்களுக்கு விருந்தானத்திற்கும் முக்கிய காரணம் இந்த பாழாய் போன ஒழுக்கமற்ற சினிமா படங்களே ஆகும்.

கூவாத்தூர் ரிசார்ட்:
ஸ்தல ஸ்தாபனங்களில், சட்ட சபைகளிலும், பாராளுமன்றத்திலும், மற்ற இடங்களிலும் நமது மக்கள் பிரதிநிதிகள் நடந்துக்கொள்ளும் தன்மைகளை பார்த்தால் நமது ஜனநாயகத்தின் யோக்கியதை விளங்கவில்லையா?

நாத்திகன்:
நாத்திகன் என்பவன் கடவும் இல்லை என்பவன் என்று அர்த்தம் கிடையாது. புராண, இதிகாச, வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களே, அவற்றை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்ப்பவர்களே நாத்திகர்.

டிவி விளம்பரங்கள்:
பெண்கள் நகைகளின் மேலும் சேலைகள் மீதும் பிரியத்தை ஒழியுங்கள். இவற்றில் பிரியம் வைத்தால் ஜவுளிக்கடைகளின் அலங்காரத்திற்கு தினம் தினம் புது சேலைகள் மாற்றி நிறுத்திவைக்கப்படும் பொம்மைகள் போலத்தான் மதிக்கப்படுவீர்கள்.

பசுவதை:
இந்துக்கள் தான் பசு விஷயத்தில் மோசமாக நடந்துக்கொள்கிறார்கள். வண்டியிலும் ஏரிலும் செக்கில் பூட்டி இழுத்து அது சாகும் வரை உபத்திரவிக்கிறார்கள். பருவத்தில் காளைகளை கட்டிப்போட்டு விதர்களை நசுக்குகிறார்கள். பாலை கன்றுக்கு கொடுக்காமல், புல்லை போட்டுவிட்டு பாலை தாங்கள் குடிக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள்.

காதல் கல்யாணம்:
வாழ்க்கை துணை விஷயத்தில் காதல் மட்டும் போதாது. அறிவு அன்பு கல்வி பொருத்தம் வேலை அனுபவமெல்லாம் வேண்டும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருந்தது என்றால், அப்போதைய அறிவுக்கு அது போதும்.

பாபா ராம் ரஹீம் வகையறா:
கடவுள் தன்மை என்பது அயோக்கியத்தன்மைகள் தஞ்சமடைய பாதுகாப்பான இடமாகி விட்டது. அவர்களுக்கு தண்டனை என்பதும் சிறைச்சாலை என்பதும் காலிகள் உடலை இளைப்பாறி உடலை தேற்றிக்கொண்டு வரும் இடமாகி விட்டது.

வாமன ஜெயந்தி வாழ்த்துறவங்களுக்கு:
மாற்றான் பெண்களிடம் கிருஷ்ணன் செய்த லீலையை பற்றி வாய் பிளந்து பேசி கை தட்டி கேட்பவன், தனது வீட்டிலே கிருஷ்ணனை அதே லீலைகளை நடத்த விடுவானா?

பெரியார் கருத்துக்கள் இந்த காலகட்டத்திற்கு உதவாது என்ற கிச்சாவுக்கு சொல்லியிருக்கார்:
பழைய அபிப்ராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் பரிசோதனை செய்யப்படலாம். அப்படி பரிசோரிப்பது நடுநிலையில் தவறாமல் இருந்தால் வேண்டும். பரிசோதிக்க வேண்டுமென பேசிவிட்டு பின்வாங்குபவன் யாராயிருந்தாலும் கோழையாவான்.

இன்னமும் நமக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான சிந்தனைகளையும் நாம் கேட்கவேண்டிய கேள்விகளையும் நூறாண்டுகளுக்கு முன்பே போதித்து போய் விட்டார் இந்த சுயமரியாதைக்காரர். மோடியை நினைக்கும் போது இந்த தாடியையும் நினைக்க வேண்டுமென அதே நாளில் அவருக்கே முன்பே பிறந்திருக்கிறார் இந்த கிழவாடி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ;-) :-)

சித்தர்களுக்கு சாவில்லையென்று கதையடிப்பார்கள். 

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே" என்று ஒரு சித்தரே பாடிய பாடல் உண்டு.

யோகமும் தியானமும் செய்து சைவம் பழகி 70 வயதில் இறந்த ரமணர் பலருக்கு மகரிஷி என்றால், அதற்கு மேலும் முப்பது வருடங்கள் மூத்திர பையை சுமந்துக்கொண்டு இந்த தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனை முன்னேற்றத்திற்கு ஓயாது உழைத்தவர் பெரியார்.

தமிழ் அழியும் வரை பெரியார் சிந்தனைகள் வாழும், பெரியாரின் சிந்தனைகள் அழியும் போது தமிழர் அழிந்திருப்பர்

புதன் 04 2017

மற்றவர் ஒதுக்கீட்டில் பயணம் செய்த இராமனுசன்...

அவர் பெயர் இராமானுஜம். தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அவரைப்போலவே மூட்டை முடிச்சுகளோடு இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள். காலை ரயில் என்பதால் காலியாக இருக்கிறது. 

தயாராக வந்திருந்த எல்லோரும் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்கிறார்கள்.
காலியாக உள்ள இடங்களில் எல்லாம் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை வரிசையாக அடுக்கிவைத்து விட்டு, காலை சாஷ்டாங்கமாக நீட்டி படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார். அவரைப் போலவே அந்த சிலரும் தூங்கத் தொடங்குகிறார்கள்.

திருச்சி ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கி காத்திருந்த சிலர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறுகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம்வேண்டும் என்பதால்,சலித்துக்கொண்டே தன்னுடைய மூட்டைமுடிச்சுக்களை எடுத்து கீழே வைக்கிறார் ராமானுஜம். மீண்டும் முனகிக்கொண்டே காலை நீட்டி படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார். லால்குடி, விருத்தாசலம் என்று சிலர் ஏறும்போதும் இந்த முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

விழுப்புரம் வந்ததும் இன்னும் நிறையபேர் டிக்கெட் வாங்கி அந்த கம்பார்ட்மெண்டில் ஏறினார்கள் . கால் நீட்டி படுத்திருந்த ராமனுஜம் இப்போது வேறு வழியின்றி எழுந்து உட்கார்ந்து கொண்டார். அப்போதும் மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் தாராளமாக உட்கார்ந்திருந்தார். " இவர்களெல்லாம் ரயிலில் வரவில்லை என்று யார் அழுதார்கள்? கண்டவர்களெல்லாம் ஏறி ரயிலின் தரத்தை குறைத்துவிட்டதாகவும் அவருக்கு வருத்தம்".

செங்கல்பட்டு வந்ததும் கூட்டம் இன்னும் அதிகமானது. தனக்கு உரிய ஒற்றை சீட்டில் அமரவேண்டிய நிலைக்கு வந்தார் ராமானுஜம். கால்நீட்டி படுத்து சொகுசாக பயணித்த தன் பயணம் தடைபட்டது அவருக்கு தீராத சோகத்தையும், சகபயணிகள் மீது அதீத கோபத்தையும் உருவாக்கியது. ஆனால் பயணிகள் எல்லோரிடமும் டிக்கெட் வேறு இருந்ததால் அவரால் பொருமுவதை தவிர எதுவும் செய்யமுடியவில்லை.

பக்கத்தில் அவருடைய பொருமலை பொறுமையாக கேட்டுகொண்டிருந்த ராமசாமி சொன்னார், உங்களுக்குரிய இடத்தை யாரும் இங்கு கேட்கவே இல்லை நண்பா. இங்கு அவரவர்கள் தங்களுக்கு உரிய இடத்தைதான் தேடி வருகிறார்கள் என்று எவ்வளவோ எடுத்து சொன்னார். ராமனுஜம் கேட்டபாடில்லை.

கூட்டம் இன்னும் அதிகமானது. இப்போது பெண்களுக்கு சிலர் தங்கள் இடங்களை கொடுக்கவேண்டி இருந்தது. அப்போதும் சிலர் முனகத் தொடங்கினார்கள். சிலர் மாற்றுதிறனாளிகளுக்கும் இடம் கொடுக்கவேண்டி இருந்தது. அப்போதும் சிலர் முனகிக்கொண்டே இருந்தார்கள்.

ரயில் சென்னை வந்து சேர்ந்தது. எல்லோரும் இறங்கி தங்கள் வீடுகளுக்கு போனார்கள். ரயிலின் இலக்கு கும்பகோணத்திற்கு மாற்றப்படுகிறது .

தற்போதும் டிக்கெட் வாங்கி காத்திருக்கும் பயணிகளை ராமனுஜம் கோபமாகவே பார்த்துக்கொண்டு போகிறார்.

ராமானுஜத்திடம் யாரேனும் சொல்லவேண்டும். நீங்கள் சொகுசாக இதுவரை பயணித்தது மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் என்று !

 நன்றி!  Saravanaperumal Perumal

திங்கள் 02 2017

இதையும் நம்பும் மூடர்கள்..................


இதையும் நம்பும் மூடர்கள் நிறைந்த நாடு 

மிஸ்டு கால் கொடுத்தா நதிகள் இணையும்..!

சினிமா தியேட்டரில் தேசியகீதம் பாடினால் தேசபக்தி வளரும்...

கோமியம் குடித்தால் புற்று நேய் வராது...!!

செல்ஃபோன் கதிர்வீச்சை தடுக்க ஃபோனின் பின்புறம் மாட்டு சாணி...!!

மயில் ஒரு பிரமச்சாரி...!

பீகார் வெள்ளத்திற்க்கு ஏரிக்கரையில் இருக்கும் எலிகளே காரணம்...

தெர்மாகோல் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம்..

ஒரிஜினல் லைசன்ஸ் இருந்தால் விபத்தை தடுக்கலாம்.


ஞாயிறு 01 2017

“ முதல்வரய்யா... நான் தீவிரவாதி அல்ல....!!!!

''முதல்வரய்யா... நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’ என்று எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவர். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த மாணவர் ஒரு முஸ்லிம். இதனால், பள்ளியின் ஆசிரியர்களும் முதல்வரும் மீண்டும் மீண்டும் அவரை ‘டெர்ரரிஸ்ட்’ என வகுப்பறையில் அழைத்தனர். ஒவ்வொரு நாளும் அந்த மாணவரின் ஸ்கூல் பேக் சோதனையிடப்பட்டது. பள்ளியில் சேர்ந்து இரண்டு மாதங்களாகியும் ஒருவரும் அந்த மாணவருடன் பேசுவதில்லை. பேசக்கூடாது என்பது ஆசிரியர்களின் உத்தரவு. விளைவு அந்த இளம் மனம் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்திருக்கிறது.

கடந்த வாரம், விருத்தாசலம் அருகே முதனை என்ற கிராமத்தில் அமராவதி என்ற 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காரணம், அந்த மாணவி தலித் என்பதை குறிப்பிட்டு பள்ளியின் ஆசிரியை மோசமாக வகுப்பறையில் திட்டியதன் விளைவு. வாட்ச்மேனாக பணிபுரியும் மாற்றுத் திறனாளி தந்தையின் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளிட்ட நான்கு பிள்ளைகளில் அமராவதிதான் மூத்தவர். நண்பர்கள் சூழ்ந்திருந்த வகுப்பறையில் ஆசிரியரின் சாதிவெறிப் பேச்சு அந்த பிஞ்சு மனதை தற்கொலை பாதைக்குத் தள்ளியிருக்கிறது. 

மதவெறியும், சாதிவெறியும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதும், அது இப்போது புத்துணர்ச்சியுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் நமது பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல. பள்ளி ஆசிரியர்கள் சாதிப்பற்று கொண்டோராகவும், சாதிவெறியில் திளைத்தவர்களாகவும் இருந்தால் அது ஆதிக்க சாதி மாணவர்களின் மனங்களில் சாதியை மேலும் இறுக்கமாக்குகிறது. தலித் மாணவர்களை மேலும் ஒடுக்குகிறது. 

குறிப்பாக, சாதிவெறி கொண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியில், ஓரிரு தலித் ஆசிரியர்கள் இருந்தால் திட்டமிட்டு அவர்களை புறக்கணிக்கின்றனர். அவமானப்படுத்துகின்றனர். இந்த சூழலின் சாட்சியாக பயிலும் தலித் மாணவர்கள், தங்களுக்கு ஒரு அவமானம் நேரும்போது யாரிடம் முறையிடுவது என தெரியாமல் நிலைகுலைந்து போகின்றனர். அவர்களின் குரலை கேட்க ஒரு நாதியும் இல்லை. சாதிவெறிக்கு பொது சமூகம் வழங்கும் அங்கீகாரம் அவர்களை மேலும் அச்சத்தில் தள்ளுகிறது. 

நன்றி! 


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...