பக்கங்கள்

சனி 21 2012

பாம்பும் நோகாமல் தடியும் சாகாமல் ஒரு போராட்டம்

டிசம்பர் 26 தேதி திங்கள் கிழமை மாலை மூன்று மணிவாக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தாலுகா ஆபிஸிற்கு என் இடத்து சம்பந்தமாக சென்று இருந்தேன்.

அங்கிருந்த அதிகாரிலிருந்து உதவியாளார் வரை ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் கருப்பு பேட்ஜ் அண்ந்திருந்தனர். அனறையதினம் முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தமிழகமே போரடிக்கொண்டிருந்த நேரமிது அன்றைய தினத்தில் பிரதமரு மண்ணுமோகன் வேறு தமிழகத்திற்கு வருகைதந்து காரக்குடியில் ரெண்டு தனியார் மருத்துவமணையை திறந்து வைப்பதற்காக வந்திருந்தார்.

மண்ணுமோகனு வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டப்போவதாக சில கட்சிகள் அறிவிப்பு வேறு செய்திருந்ததால். பரபரப்பான நேரங்கள். இந்த நேரத்தில்   முல்லை பெரியாறு பிரச்சினைக்குதான் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்திருக்கிறார்கள் என்று அக மகிழ்ந்து .

ஆகா,பராவாயில்லையே, தமிழகத்துஉரிமையை தெரிந்து  எதிர்ப்பும் தெரிவிக் கிறார்களே! என வியப்படைந்தேன். அந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதறக்காக, அலுவலர் ஒருவரை அணுகி கருப்பு பேட்ஜ் அணிந்
திருப்பதற்க்கான விவரத்தைக் கேட்டதும்.

எனக்கு சப்பென்றாகிவிட்டது.வியப்பும் மகிழ்ச்சியும் வந்த சுவடு தெரியாமல் ஓடி விட்டது.அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதற்க்கான காரணம் இதுதான் திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் தாசில்தார் ஒருவர் மேல்அதிகாரியின் டார்ச்சலாலும்,வேலைப்பளுவாலும் மனஉளைச்சல் ஏற்ப்பட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

அவருக்கு துக்கம் தெரிவிப்பதற்க்காகதானாம் கருப்பு பேட்ஜ் அணிந்து இருக்காங்கலாம்.மாலையில் ஆறு மணிக்கு மேல்  மாவட்ட வருவாய் அலுவலர் சங்கம் சார்பாக அலுவலத்திற்கு முன்பாக இரங்கள் கூட்டம் நடக்கப்போவதாக தெரிவித்தார்.

அப்போதுதான் இரங்கலுக்கும் கருப்பு பேட்ஜ் எதிர்ப்புக்கும் கருப்பு பேட்ஜ் என்ற விபரம் புரிந்தது. என்னைப் போன்றே மனு கொடுத்து அலைந்து கொண்டு இருந்த ஒருவர், “நீங்க என்னான்னு நினெச்சு கேட்டீங்க என்றார்.

தயக்கத்துடனே, முல்லை பெரியாறு பிரச்சினையில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்காங்கன்னு கேட்டேன் என்றேன்.

சுத்த அப்பாவித்தனமா, இருக்கிறாயே என்று பார்த்தவரே,“இங்கு கூடங்குளம் அணு உலையே வெடித்து கதிர்வீச்சு வந்தாலும்  இவன்களுக்கு எந்த பாதிப்பும் வராது . அப்படியே, வந்தாலும் அப்போதும் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பார்கள் என்றார்.

அவர் சொல்வதும் எனக்கு உண்மையாகவே பட்டது. என் இடத்து விசயமாக வெள்ளிவிழாவையும் தாண்டி அய்ந்து வருடத்துக்கு மேலாக அலைந்து கொண்டு இருக்கிறேன். துாணுக்குக்கூட ஈரம் வந்துவிட்டாலும். இவர்களுக்கு வந்துவிடாது என்பதும் புரிந்தது.

புதன் 18 2012

சிறையை சம்ரோட்சனம் செய்த இந்தியாவின் மாபெரும் (துரோகத்) தலைவர்...

இணையத்தில் எழுதுகிறவர்களில் படிப்பவர்களில்எத்தனைபேர் குடியரசு இந்தியாவின் சிறைக்குள்சென்று வந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது.

சொந்தப்பிரச்சினை,பொது பிரச்சினை.அரசியல்பிரச்சினை போன்ற அரசின்அடக்குமுறைகளில்ஒரு முறையாவது சிறைக்கு சென்று வந்திருந்தால்

சினிமாவில்அதுவும் தமிழ் சினிமாவில் காட்டப்படும் சிறைக்கும் உண்மையான சிறைக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளலாம்

சட்டம் எப்படி அனைவருக்கும் சமமாக இல்லையோ!அதேபோல் சிறைச்சாலையும் சமமாக இருப்பதில்லைஎன்ற உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

சிறை ஒருசிலருக்கு மாமியார் வீடாக இருக்கலாம்.அதுஎல்லோருக்கும் மாமியார் வீடாக இருந்ததில்லை.இருக்கப்போவதுமில்லை.

இப்படிபட்ட குடியரசு இந்தியாவிற்கு சுதந்திரம் என்ற ஒன்றைபெருவதற்கு முன்னால்.அந்த சுதந்திரத்தை வாங்கித்தந்தாகசொல்லப்படுகிற அந்த மாபெரும் (துரோகத்)தலைவர் ஒருவர்

ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் இருந்தபோது அவருக்கு எல்லா வசதியும் இருந்தன சிறையில்இருக்கும் உணர்வே அவருக்கு இல்லை. மாமியார் வீடுன்னுகூடவச்சுகிருக்கலாம். அவர் சாதாரன குடிமகனில்லை. தலைவருக்கெல்லாம் அவர்தான் முதன்மையான( துரோகத) தலைவராகஇந்தவர்.(துரோகத் தலைவருக்கான ஆதாரம் .பு.மா.இ.முவின்காந்தியும் காங்கிரசும்-வெளியீடு)

எரவடா சிறையில் எல்லா வசதியுடன் அந்தத் தலைவர் இருந்தபோதும் மேலும் வசதி குறைகளை தெரிந்து கொள்வதற்க்காக அந்தச்சிறையின் முக்கிய அதிகாரி ஒருவர்அவரை பார்க்க வந்தார்.

அந்தத்தலைவரிடம் வசதி சௌரியங்களை தெரிந்துகொண்டுசென்றுவிட்டார். அந்த அதிகாரி சென்ற சிறிது நேரத்தில் அந்தஅதிகாரி வந்து சென்ற இடத்தை சம்பு ரோட்சனம் செய்தார்அதாவது அந்த அதிகாரி வந்து சென்ற இடம் தீட்டு பட்டுவிட்டதால் அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்.

இப்படித்தான்.இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் சிறீரங்கத்து ரங்கநாதனின் கருவரைக்குள் சென்று சும்மாபடுத்தே காலத்தை கழித்த ரங்கநாதனை தொட்டு எழுப்பினார்கள் மகஇக,விவிமு தோழர்கள்.

தோழர்கள் எழுப்பிய போது முழிச்சு பார்க்காத ரங்கநாதன்ரெண்டு குடுமி போயி நின்றவுடன் முழிச்சு பார்த்தாரோஇல்லை குரட்டை விட்டாரோ தெரியவில்லை. தோழர்கள்ரங்கநாதனின் கருவரைக்குள் சென்று தொட்டதால் தீட்டுபட்டுவிட்டதாக சம்புரோட்சனம் செய்து திட்டு கழித்தார்கள்

திட்டுகழித்த இந்த வாரிசுகளின் முன்னோடியான அந்தத்தலைவர்தான் சிறையை சம்புரோட்சனம் செய்து திட்டுக்கழித்தார்

தான் சம்புரோட்சன்ம் செய்ததை மறைப்பதற்க்காக மற்றவர்களிடம்... வந்த அதிகாரி புாட்ஸ்காலுடன் வந்ததால் தரை முழுவதும் மண்ணாகி விட்டதென்று சப்பைகட்டுகட்டினார்.அந்தத் துரோகத்தலைவர்.




திங்கள் 16 2012

இறப்பு வரை புத்தகம் வாசித்த பிதாமகன்!




பிதாமகன் என்றதும் விக்ரம்,சூர்யா நடித்து
சைக்கோ“சேது பாலா”இயக்கிய பிதாமகன்
சினிமா படம் அல்ல இது.

பகுத்தறிவு பேசி,ஆரியர்,திராவிடர் கொள்கை
முழக்கமிட்டு கடமை,கண்னியம்,கட்டுப்பாடு
பஞ்ச் டயலாக் அப்பவே பேசி,அந்த பிதாமகனின்
வாரிசுகளால் எதையும் தாங்கும் இதயம் என்று
புகழாரம்சூட்டபட்ட,டாஸ்மாக் அருந்தாத போதை
கூட்டத்தையும்,வாய் சொல் வீரர்களையும்
 பொழைப்புவாதத்தையும் சுயநலத்தையுமே
கொண்ட ஒருகூட்டத்தை வளர்த்து பெரிய
மரமாக்கி படரவிட்ட பிதாமகனைப் பற்றியது.


இத்தகைய சிறப்புகளை  கொண்டவெத்திலை
பெட்டிக்கு பிதாமகன் என்ற பட்டத்தை கொடுத்து
சிறப்பித்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த பிதாமகன் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும்
பெரும் புலமை பெற்றவரென்று ஒரு புத்தகத்தில்
படித்த ஞாபகம். இவர் தமிழ் நாட்டின் முதலமைச்
சராக இருந்தபோது நோய்வாய் பட்டதினால்

அறுவை சிகிச்சைக்காக மருத்துமனையில்
அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தில். அறுவை
சிகிச்சை செய்கின்ற வெளிநாட்டு மருத்துவர்

ஒருவர் அவரிடம் வந்து,“இன்றைக்கு உங்களுக்கு
அறுவைசிகிச்சை தயாராக இருங்கள்” என்றாராம்.

அதற்கு அந்த பிதாமகன்.சொன்னாராம்,
இன்றைக்குஅறுவை சிகிச்சை வேண்டாம்.
நாளைக்கு செய்யுங்கள் என்றாராம்.

பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவர்
பிதாமகன்என்று தெரியாத அந்த டாக்டரோ,
“ ஏன்? இன்றைக்கு நல்லநாள் இல்லீயா”?
 என்று வியப்புடன் கேட்டாராம்

அதற்கு. இந்த பிதாமகன். சிரித்துக்
கொண்டே ஆங்கிலத்தில் சொன்னராம்.
“இல்லை,டாக்டர்.ஒரு புத்தகத்தை படித்துக்
 கொண்டு இருக்கிறேன். இன்று இரவுக்குள்
 படித்து விடுவேன். அறுவை சிகிச்சையில்
நான் பிழைக்காமல் போனால்,
இந்தப் புத்தகத்தை படிக்க முடியாமல்
போய்விடும். அதற்கு என்மனம்
இடம் தரவில்லை என்றராம்.

பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவர்
இந்தபிதாமகன்என்பதுகூடதெரியாதவீடு,
மருத்துவமனை,துட்டுஇப்படியாகஇருக்கும்
அந்தவெளிநாட்டுமருத்துவர்.இப்படிபட்ட
அபுார்வமானமனிதரைஅவர்கண்டது
மில்லை.கேட்டதுமில்லை என்றாராம்.

பிறந்து,வளர்ந்து உணவுக்கு பரிதவித்து
எண்ணும் எழுத்தும் அறியாமல் உழைத்து
ஓடாகிப் போகி மறைந்து போன மக்களின்
படிப்பறிவுஇல்லாத அறைகுரை படிப்பு
உள்ள வாரிசுகள் இருக்குவரை இப்படிப்
பட்ட பிதாமகனின் புகழ் பிழைப்பு வாத
வாரிசுகளால் துாசித்தட்டி பறக்க
விட்டுக்கொண்டே இருப்பார்கள்


ஞாயிறு 15 2012

ஏமாற்றுபவர்களுக்கும் வேறு வேலை இல்லை! ஏமாறாமல் இருப்பதற்கும் வழியில்லை!

ஏமாற்றாதே! ஏமாற்றாதே!
ஏமாறாதே! ஏமாறாதே!-ஒரு பாடல்
அடிமைப்பெண் என்ற படத்தில் எம்ஜியார்
வாயசைக்க டி.எம் சௌந்தராஜன் பாடிய
பாட்டு. அந்தப் படத்துல வாயசைச்சவரும்
அந்தப்பாட்டுக்கு ஆடட்டம் போட்ட
 ஆத்தாளும்தமிழக மக்களை கரும்புள்ளி,
 செம்புள்ளிகுத்தி ஏமாற்றியதையே
 இப்பவரைக்கும்தெரியாமல் தகிடுதத்தம்
போட்டுகிட்டுஇருக்ககையில.கூடவே பழகி
ஏமாத்துகிறவர்களைக் கண்டு ஏமாறாமல்தான்
இருக்கமுடியுமா? பெரிய்ய.....பெரிய்ய.....
ஆட்களெல்லாம்முழிக்கவச்சு ஏமாத்துறப்போ?.
சாதாரனமக்களும் அவர்களுக்கு தெரிந்த வழியில்
ஏமாற்றுவதிலிருந்து தப்பி எப்படி ஏமாறாமல்
இருக்க முடியும்...

பத்தக்கு ஒன்பது தடவை நானும் ஏமாந்து
இருக்கிறேன்.அந்த ஒரு தடவை நான்
சுதாகரிக்கஇரக்கமுள்ள ஏமாற்றுகாரர்
களால் தப்பிக்கப்பட்டுள்ளேன்.இப்படி...

செய்தித்தாளில் வந்த ஏமாற்றிய
பெண்னும் ஏமாறிய மூதாட்டியைப்
பற்றிய விடயம் ஒன்று

அரசு மருத்துமனையில் மூதாட்டி
ஒருவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை
பெற்று வந்தார்.

அந்த மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த
வார்டுக்குவந்த பெண் ஒருவர். மூதாட்டி
யிடம் பாசமாய் பேசினார்.

திரையில் கண்டதையே கண்டு மயங்கி
திரியும்நம்ம மக்கள், நேரில் பேசியதைக்
கண்டு மயங்காமல் இருக்க முடியுமா?

அப்படித்தான்.அந்த மூதாட்டியும்
அந்தப்பெண்ணின்பேச்சிலும் செய்த
பணிவிடைகளிலும் மயங்கிப்போனார்

மூதாட்டியின் கழுத்தில் கிடந்த இரண்டு
பவுன் சங்கிலியைப்பார்த்து அய்ந்து
பவுன் சங்கிலி மாதிரியில இருக்குன்னு
சொன்னதுல, நகையின் மதிப்பின்
பெருமையில் மூதாட்டிமயங்கிவிட,
பார்பதற்க்காக செயினை கழற்றி
பெண்ணிடம் கொடுக்க...........

ஆச்சரியத்தால்.மிதப்பதுபோல் பார்த்து
 தன் கழுத்தில் போட்டுகண்ணாடியில்
ரெண்டு பவுன் செயின் எப்படி அய்ந்து
பவுனாகதெரிகிறது என்று பார்ப்பதற்க்
காக கண்ணாடியைத் தேடி அந்தப்
பெண் புறப்பட்டுவிட்டார்.

பழைய நகைக்கு பாலீஸ் போட்டு புதுசா
மாத்தி தருவதாக ஏமாற்றும் வழிகளில்
வாய்ப்பிளந்து ஏமாறுவது போல்,அந்த
மூதாட்டியும் சொக்கி போய்விட்டார்.

கண்ணாடியைத்தேடிப்போன பெண்ணும்
வரவில்லை.மூதாட்டியும் நகையும்
கிடைக்கவில்லை.

இருந்த நகை போன சொகத்தில் மூதாட்டி
 மருத்துவமனைகாவல் நிலையத்தில்
புகார் செய்ய, நகையுடன் கண்ணாடியைச்
தேடிச்சென்ற பெண்ணை தேடி வருகிறார்கள்.

பின் குறிப்பு. - கண்ணாடியைதேடிச்
சென்றப் பெண் இப்படியும்சொல்லக்
கூடும்.நாடே கொள்ள போகுது.அத
தடுக்கவும்,பிடிக்கவும் துப்புஇல்ல
.இந்த ரெண்டு பவுனுக்கு என்னைய
வலைவீசி தேடுகிறார்களாக்கும்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...