பக்கங்கள்

சனி 19 2016

அறிவை அடகு வைத்தவன்........

படம்-tamil.oneindia.com



கையில் செல்போனை
வைத்துக் கொண்டு
கையில் கடிகாரம்
கட்டாத வருவோர்
போவோரிடம் மணி
கேட்டு அலைந்தான்
ஒரு அறிவன்........

வெள்ளி 18 2016

உதிராத முத்து..க்கள்..

படம்-tamil.thehindu.com


நல்ல எண்ணம்
நல்ல செயல்
நல்ல வாழ்வை
கெடுக்கும்........

கெட்ட எண்ணம்
கெட்டச் செயல்
நல்ல வாழ்வை
கொடுக்கும்.....


(எப்படி என்பவர்கள்...சாராய சாம்ராஜ்ஜியத்தின்  ஐந்து ஆண்டு கால மாஃபியா ஆட்சியை நிணைவுப்படுத்திப் பாருங்கள்.)

வியாழன் 17 2016

கணனிக்கள்ளன்...!!!!


கணனிக் கள்ளன் ஹம்சா பென்டலாஜ்.

படமும் தகவலும்-Tharmalingam Kalaiyarasan

படத்தில் நடுவில் உள்ளவரின்  பெயர் ஹம்சா பென்டலாஜ். வங்கிகளை "கொள்ளையடித்து" ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த நவீன ராபின் ஹூட். அல்ஜீரியாவை சேர்ந்த 27 வயது கணிப்பொறி வல்லுநர். 217 வங்கிகளின் கணணிகளை ஹேக் செய்து 4000 மில்லியன் டாலர்களை திரட்டினார். அனைத்தையும் ஆப்பிரிக்க, பாலஸ்தீன தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்து விட்டார். SpyEye என்ற வைரஸ் அனுப்பி அமெரிக்க வங்கிகளின் கணணிகளை ஹேக் செய்துள்ளார்.



தாய்லாந்தில் கைது செய்யப் பட்ட நேரம் எடுத்த வீடியோ:













, மரண பயம் இல்லாத சிரிப்பு...







புதன் 16 2016

அருமைச் சகோதரா............

படம்..மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.


அருமைச் சகோதரர்க்கு,

வணக்கம்,      தங்கள் நலம்
எங்கள் நலம் விசாரிக்கவும்
தெரிவிக்கவும்  முடியாமைக்கு
மன்னிக்கவும்...... என்ன

இந்த அர்த்த ராத்திரியில்
போன் என்று தாங்கள்
பதற வேண்டாம் நேரடியாக
விசயத்தை சொல்லி விடுகிறேன்.

கௌவரக் கொலையிலிருந்து
தப்பித்த நாங்கள் ஆணவக்
கொலையிலிருந்து தப்பிக்க
முடியுமா...????சகோதரா..

அவரைவிட எனக்குத்தான் பயமும்
பதற்றமும் அதிகரிக்கத் தொடங்கி
இருக்கிறது...வளர்ந்து விட்ட
குழந்தைகள்  இருந்த போதும்
ஆணவக் கொலை நடக்காது
என்று என்னவர் சமாதானம்
சொன்னாலும் என் மனம் நிம்மதி
கொள்ள மறுக்கிறது  சகோதரா....

அடுத்த வேளை கஞ்சிக்கு
செத்தவனிடம் கூட சாதி வெறி
தலைக்கேறி விட்டது சகோதரா...

காசுள்ளவன் தன் சாதிகாரனுக்கு
எந்த உதவி செய்யாவிட்டாலும்
சாதி பெருமை காக்க எந்த இழி
செயலும் செய்ய தயங்குவதில்லை

ஆட்சியும் போலீசும் அவனுக்குத்தான்
பக்கபலமாய் இருக்கிறது சகோதரா....

கறையான் புற்றெடுக்க கருநாகம்
புகுந்த கதையாக..எந்த புற்றில் எந்த
சாதிவெறி பாம்பு இருக்கும் என்பது
எனக்கும் அவருக்கும் தெரியவில்லை
எனதருமைச் சகோதரா......



சாதிக்கு எதிரான எங்கள் காதலை
வழ வைத்த எனதருமைச் சகோதரா

கௌவரக் கொலையிலிருந்து எங்களை
காத்ததுபோல.. ஆணவக் கொலையிலிருந்தும்
எங்களைக் காத்து வாழ வைக்க
வேணும் எனதருமை சகோதரா....








 ஜட்டியோடு இவர்களை நிறுத்துவது என்பது இங்கு நிலவும், கோபத்தை மட்டுப்படுத்தும் போலீஸ் தந்திரம் இது.




செவ்வாய் 15 2016

பிச்சைக்காரன்

படம்-

ஐந்து ரூபா
கொடுத்து கழிப்பறைக்கு
போயிட்டு வந்தவன்
பெருமையாகச் சொன்னான்
இட்லி ஒத்த
ரூபா  என்று..

திங்கள் 14 2016

படுக்க..ஒரு இடம் தேடி......

படம-m.maalaimalar.com



எந்த மாவட்டம், எந்த ஊர், சொந்த பந்தம்  என எதுவும் எவரும் அவரிடம் கேட்டதில்லை. அவரும்  எவரிடமும் சொன்னதில்லை.ஒரு வேளை அவர் இந்த ஊர் என்று  நிணைத்து பார்ப்பதற்குக்கூட வழியில்லாமல் மறந்துவிட்டார்.

வயது முதிர்ந்த வயதில் யாருமற்ற அனாதை என்ற அடையாளத்துடன்தான் தமிழகத்தின் தலைநகரில் தன் வாழ்நாளை நகர்த்திக் கொண்டு வந்தார்.

அந்த தெருவில் உள்ள ஒரு  பலசரக்கு கடையின் வாசலில்தான்  இரவில் படுத்துக் கொள்வார். தஞ்சம் கொடுத்தற்க்கு பிரதிபலனாக  பகலில் அந்தக் கடைக்காரர் சொல்லும் வேலைகளை செய்து கொண்டு அவர்கள் கொடுக்கும் கூலியில் வயிற்றை நிரப்பிக் கொண்டு வந்தார். நோய் நொடி என்ற பிரச்சினை இல்லாமல் அவருடைய வண்டி ஓடிக் கொண்டு இருந்த வேளை..யில்..


நகரமே  மழையில்  ஒரு வாரமாக தத்தளித்துக் கொண்டு இருந்தது...ரோடுகள். ரோட்டில் உள்ள பள்ளங்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தாலும்.. யாரும் அதிக சிரத்தை எடுத்து முடங்கி விடாமல் இயங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

வழக்கம்போல் பலசரக்கு கடையின் வேலை நேரம் முடிந்து கடை அடைத்தபின் வழக்கமாக படுத்துறங்கும் இடத்திற்கு கடைக்காரரிடம் கேட்டு பெற்ற பழைய சாக்கை ஒன்றில் மழையில் ஈரமாகிப் போன இடத்தை துடைத்துவிட்டு , மற்றொரு சாக்கை விரித்து அசதியில் சிறிது நேரம் கண்ணயர்ந்தார்.முதியவர்

திடிரென்று கூக்குரலும் ஓலமும் சத்தமுமாய் அவரின் காதுக்கு கேட்டது முழித்து பார்த்தவர்..  வெகு வேகமாய் ஒன்று தன்னை  நோக்கிஆர்ப்பரித்து  வருவதைக் கண்டார். பதறியடித்து எழுந்திருக்க அவரால் முடியவில்லை...

ஆர்பாரித்து காட்டாற்று வெள்ளமாய் வந்த தண்ணீர் முதியவரை முழ்கடித்தது.. பெருக்கெடுத்து ஓடி வந்த வெள்ளம்  சிறியவ்ர் பெரியவர் வசதியானவர் வசதி இல்லாதவர் என்ற  எந்தவிதமான  அந்தஸ்தும் பார்க்காமல் எல்லார் வீட்டிலும் புகுந்து  எலலோரையும் பயமுறுத்தி  அலைகழித்தது.

பெரு வெள்ளத்தில் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டி அந்தத் தெருவில் உள்ள மக்கள் எல்லோரும் பெரும் குரலெடுத்து பெரு வெள்ளத்திற்கு எதிராக அணி கோர்த்து பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்தனர்.

தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முடியாமல் மூர்ச்சையாகமல் தண்ணீருக்குள் போராடிக் கொண்டு இருந்த முதியவரை ஒரு கை பிடித்து தூக்கி பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு இழுத்துச் சென்றது..இரவு முழுவதும் எங்கும் கூக்குரல்.. அழுகை..பகலிலும் தொடர்கதையாகத்தான் தொடர்ந்தது.

விடிந்த பொழுதுதான்   செம்பரபாக்கம் ஏரியில் இருந்து பெருவெள்ளம் வந்திருக்கிறது என்ற முழுவிபரம் அனைவருக்கும்  தெரிந்தது..மாடி வீட்டு பணக்காரனும், குடிசை வீட்டு ஏழையும் தங்க..குந்த வழியில்லாம்ல் ஒரு சேர அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர்.வெட்ட வெளியில் மழை தூறல்களில் நணைந்தபடி தவித்துக் கொண்டு இருந்தனர்.

சிலரின் முன்னெடுத்த போராட்டத்தால் மாநகராட்சி பள்ளிகளில் எல்லோரும் தங்கவைக்கப்பட்டனர். மழையும் நிற்கவில்லை, வெள்ளமும் வடியாததால் எல்லோரும் வாடிய முகத்துடனே உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி. குளிரை தடுக்க வழியின்றி வாடிக் கொண்டு இருந்தனர்

பெருவெள்ளத்தில்  இருந்து காப்பாற்றப்பட்ட முதியவர்  மூச்சுதிணறாலும். ஈரத்தில் நணைந்ததால் ஏற்பட்ட குளிராலும் பாதிக்கப்பட்டார். மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த அந்தப் பள்ளிக் கூட்டத்தில படுக்க ஒரு இடம் தேடி தத்தி தத்திஅலைந்தார்.. அப்படி அலைந்தும் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருந்த அந்தப் பள்ளியில் சிறு இடம் கிடைத்தது.

அந்த இடத்துக்கு சென்று கால்களை நீட்டுவதற்குக்கூட வழியில்லாமல் முதுகை சுவரில் சாய்ந்து  நெஞ்சோடு கால்களை மடித்து வைத்த வண்ணம். தனது இறுதி மூச்சைஇழந்து கொண்டு இருந்தார்.

கூடியிருந்த மக்கள்.கூட்டம் எல்லோரும் பெரு வெள்ள பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருந்ததால்.. முதியவர் தன் மூச்சை நிறுத்தியது தெரியாமல் போய்விட்டது அவர்களுக்கு.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மனிதாபமுள்ள மனிதர்கள் உணவுப் பொட்டலம். போர்வைகள் கொடுத்துக் கொண்டு வந்தபோதுதான். அனாதையான முதியவர்..கால்களைகூட நீட்டவழியில்லாமல். அந்த முட்டின்மேல் தலை கவிழ்ந்து   பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

மனம் இருந்தும் உதவ முடியாமல் தவித்து  நின்ற மக்களுக்கு. ஆபத்துக்கு உதவுபவர்களான நகரச்சுத்தி தொழிலாளர்கள்தான் அந்த முதிய அனாதை பிணத்தின்  மடங்கி கிடந்த கால்களை நிீட்டிக்கச் செய்து தூக்கிச் சென்றனர்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...